Jump to content

இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம்

 
Drawing-for-poems-696x492.jpg
 41 Views

தொல்புவியில் நாமாண்ட வரலாறு மீண்டெழுத

வல்லாண்மைத் திறத்தினொடு அதிவிவேக நுண்மதியால்

பல்நாட்டு வல்லரசார் உள்ளத்தை ஊடுருவி

சல்லடையாய் சிங்களத்தைத் துளைத்தெடுத்த வேந்தனெங்கே!

 

கர்மவீரன், திடசித்தன், களங்கமில்லாத் தூயநெஞ்சன்

தந்தை செல்வா முன்மொழிந்த தமிழ் ஈழம் உருவாக்கி

தர்மநெறி தழுவியவர் நாற்படைகள் அரணமைக்க

அதர்மத்தை வேரறுத்து இனம்காத்த செம்மலெங்கே!

 

பதினெட்டு வயதினிலே விடுதலையின் கனல்மூண்டு

கதியற்றுத் தடுமாறித் தவித்ததமிழ் மக்கள்துயர்

பதியத்தன் னுள்ளத்தில் பகையொடுக்கும் ஆவேசம்

கொதித்தெழும்பத் தேசத்தைக் கைக்கெடுத்த வேந்தனெங்கே!

 

பாசமிகு உறவுகளே, தமிழீழத் தலைவர்களே

நன்றாகச் சிந்தியுங்கள் சிந்தித்துச் செயலெடுங்கள்

குருதியினில் நடைபயின்று நெருப்பாற்றை ஊடுருவி

பகைவர்தளம் தகர்த்தழித்து மண்மீட்டுக் காத்தவர்கள்

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வர் புதல்வியர்கள்

 

விண்ணுறையும் மாவீரர் கனவுகளை நாம் சுமப்போம்

சர்வதேச நாடுகளின் சதியால்நாம் அழிந்தாலும்

துவளாது நாமொன்றாய்த் தலைமகனின் உறுதியுடன்

சாத்வீகப் போர்தொடுத்து அடிமைவிலங் குடைத்தெறிவோம்

 

சந்ததியின் நலனுக்காய் எழுச்சிக்காய் சிந்தியுங்கள்

தலைவணங்காத் தமிழனவன் தமிழினத்தின் தெய்வமகன்

அஞ்சாத நெஞ்சனவன், அடக்கியாண்ட சிங்களத்து

இனவாத நெஞ்சத்துச் சண்டாளர் பாதகங்கள்

களைந்தெங்கள் இனம்காத்த வீரத்தை மறப்பீரோ

 

இராணுவத்தை வெளியேற்றி உறவுகளைக் குடியமர்த்தத்

தாமதிக்கும் காலமெல்லாம் இனமழியும் காலமன்றோ

தாயகத்தில் சிங்களவர் குடியேற்றம் தொடர்கையிலே

எங்கள்மண் முற்றாகக் கபளீகரம் செய்கையிலே

எதிர்த்தொருபோர் முன்னெடுக்கத் திரண்டெழுவீர் உறவுகளே

 

கர்ப்பத்துச் சிசுக்களொடு கருத்தரித்த பெண்களொடு

கைக்குழந்தை அன்னையரோ டிளைஞர்கள் யுவதிகள்

வளர்ந்தவர்கள் வயோதிபர்கள் வயதுவேறுபாடின்றி

முள்ளிவாய்க்கால் பலிக்களத்தில் குண்டுகளால் கொல்லப்பட்ட

கொடூரங்களுக் கோர்தீர்வு பெறுவதற்குத் திரண்டெழுவோம்

 

நீண்டகாலம் சிறைகளிலே வாடுகின்ற இளைஞர்களை

மாண்டழியும் முன்னதாக மீட்டெடுக்கும்; துணிச்சலுடன்

வீரம்மிக்க இளைஞர்களே, தலைவர்களே திரண்டெழுந்து

அகிம்சைவழிப் போராடி அடிமைவிலங் குடைத்தெறிவோம்

 

சுயநலத்தின் வேரறுத்து பிரிவினைக்கு இடங்கொடாது

ஒன்றுபட்டுக் கரமிணைத்து மனிதநேயம் வளர்த்தெடுத்து

மனோதிடத்தில் தளராது மாற்றான்பேச்சில் மயங்கிடாது

இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம்.

-மாரீசன்-

https://www.ilakku.org/இனமான-உணர்வோடு-தன்னாட்ச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதலில் வடகிழக்கு பூர்வீக தமிழர், ஈழத்தமிழராக ஒன்றிணைய வேண்டும்.

சாதிகள், மற்றும் பிரதேசங்கள் (யாழ், மட்டு, வன்னி என்பது போன்ற பிரிவுகள்) வாரியாக  பிரிந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

பிரபாகரனோ, புலிகளோ  அல்லது அவர்களின்  இடத்தில எவர் இருந்து இருந்தாலும், இந்த  முடிவே ஏற்பட்டு இருக்கும்.

இதை நான் வரலாறு ஊடாகவே விளங்கி கொள்கிறேன்.

அதே போல பிரபாகரனோ, புலிகளோ  அல்லது அவர்களின்  இடத்தில் வேறு எவர்களாலும்   வழிநடத்தப்பட்ட  போராட்டதின் முடிவானது, நாவலரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது  என்பதே இப்பொது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

அதே போல, சிங்களவரின் வரலாற்று இலக்கை, அதாவது அவர்கள் சிங்கள பௌத்தமாக ஒன்றிணைந்தது அதன் மூலம் பிரித்தானியரிடம் செல்வாக்கு பெற்றது, என்பதை தீர்மானித்தவர் அநாகரிக தர்மபால.

சிங்கள பௌத்தத்தில்,சாதிகள், பிரிவுகள் இருந்தாலும், சிங்கள பௌத்தம் என்று வரும் போது மற்ற பிரிவுகள் மழுங்கி விடும். இதை சிங்களவருக்கு  பெற்றுக் கொடுத்தவர் சிங்கள   அநாகரிக தர்மபால.

இதன் எதிர் மாறாக,    சாதிகள், மற்ற பிரிவுகள், ஈழத்தமிழர் என்பதிலும் ஓங்குவதற்கு வழிசமைத்தவர் நாவலர்.

இதை (அதாவது நாவலர் பற்றி ) இங்கே பலர் எதிர்ப்பார்கள், ஆனால் அது உண்மை.   

அதனால், முதலில் எமக்கு தேவையானவர், நவீன ஈழத்தமிழ் அநாகரிக தர்மபால.

தமிழ் நாடு சீமானின் வடிவத்தில், நவீன தமிழ் நாடு அநாகரிக தர்மபாலவை பெற்று விட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

 

தமிழ் நாடு சீமானின் வடிவத்தில், நவீன தமிழ் நாடு அநாகரிக தர்மபாலவை பெற்று விட்டது.  

காலம் பதில் சொல்லும் எப்படியென்று

11 minutes ago, Kadancha said:

இதற்கு முதலில் வடகிழக்கு பூர்வீக தமிழர், ஈழத்தமிழராக ஒன்றிணைய வேண்டும்.

சாதிகள், மற்றும் பிரதேசங்கள் (யாழ், மட்டு, வன்னி என்பது போன்ற பிரிவுகள்) வாரியாக  பிரிந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

இணைவார்கள் - இளைஞர்கள்  ஏதிர்காலத்தை நல்ல முறையில் கையாளுவார்கள் என்று நம்புவோம், நல்ல தலைமை அமைந்தால், நல் வழியில் நடத்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, உடையார் said:

காலம் பதில் சொல்லும் எப்படியென்று

நிச்சயமாக. 

சிங்கள அநாகரிக தர்மபாலவின் சித்தாந்ததின் (அது மற்ற இனத்தை  புண்படுத்தும் மற்றும் தாக்கும் தன்மை உள்ளதாயினும்)  கண்ணு க்கு புலப்படாத விளைவின் நன்மைகளை இப்போதைய சிங்களவர் அனுபவிக்கின்றனர்.

அதே போல நாவலரின்   சித்தாந்ததின் (ஈழத்தமிழருக்குள் ஒரு பகுதியினரை  புண்படுத்தும் மற்றும் தாக்கும் தன்மை கொண்ட) கண்ணுக்கு புலப்படாத விளைவின் தீமைகளை இப்போதைய இலங்கைத் தமிழர் அனுபவிக்கின்றனர்.

ஆனால், சீமான் உட் பிரிவுகளையோ (அதாவது சாதி, பிரதேசம் போன்றவை), வெளி  பிரிவுகளையோ (மற்ற இனங்களின்) புண்படுத்தாது, தாக்காது தமிழக தமிழர் என்ற சித்தாந்தத்தை  வடிவமைத்துள்ளார்.  

சீமான் இந்த தத்துவத்தை சற்றே தளர்த்த வேண்டும் என்றே நான் கருதுகிறேன், அதாவது தமிழக பூர்விகம் உள்ள மற்ற இனங்களின் தலைமுறைகளையும் தமிழர் என்று உள்வாங்கி கொள்வது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

சீமான் இந்த தத்துவத்தை சற்றே தளர்த்த வேண்டும் என்றே நான் கருதுகிறேன், அதாவது தமிழக பூர்விகம் உள்ள மற்ற இனங்களின் தலைமுறைகளையும் தமிழர் என்று உள்வாங்கி கொள்வது.

 

வேற்று இனத்தவர் சிலருக்கு கொடுத்துள்ளார் 👍- போகப் போக இன்னும் செம்மையடைவார்கள், நல்வழிகளில் சொல்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கு பார்ப்போம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை வரிகள் .. பகிர்விற்கு நன்றி தோழர் .. 👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.