Jump to content

பாலசிங்கம் கொலைமுயற்சி வழக்கு: விகேடி பாலன் மனு தள்ளுபடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கம் கொலைமுயற்சி வழக்கு: விகேடி பாலன் மனு தள்ளுபடி!

spacer.png

 

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தை கொலை செய்யும் நோக்குடன், கடந்த 1985ஆம் ஆண்டு சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் எவரும் காயமடையவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ரஞ்சன், மணைவைதம்பி ஆகியோர் இறந்து விட்டனர்.ராதாகிருஷ்ணன் அப்ருவராக மாறிவிட்டார். வி.கே.டி பாலன் மட்டும் வழக்கை எதிர் கொண்டுள்ளார்.

 

இந்தநிலையில் 30 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதாலும்,இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகவும், இந்த வழக்கில் பாலசிங்கம் உள்ளிட்ட பல முக்கிய சாட்சிகள் இறந்து விட்டதால் தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வி.கே.டி. பாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் இன்று (அக்டோபர் 23) விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அப்ருவர் உள்ளிட்ட சில சாட்சிகள் உயிருடன் இருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிலர் இறந்ததற்காகவும், தலைமறைவாக உள்ளதற்காகவும் வழக்கை ரத்து செய்ய முடியாது” என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாலசிங்கம் இறந்துவிட்டார் என்பதற்காக இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், உயிருடன் இருக்கும் பிற சாட்சிகள் மூலமாக வழக்கை நிரூபிக்க முடியும் என தெரிவித்தார்.

“நீண்ட காலதாமதம், ஆவணங்கள் காணமல் போனது ஆகியவை வழக்கை ரத்து செய்வதற்கு நல்ல காரணம் அல்ல” எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் நடைமுறையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். மேலும், அமர்வு நீதிமன்றம் ஆவணங்களை பெற்று சட்டப்படி விசாரணை நடைமுறைகளை துவங்க உத்தரவிட்ட நீதிபதி, வி.கே.டி. பாலன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

https://minnambalam.com/politics/2020/10/23/28/ltte-balasingam-Attempted-murder-case-vkt-balan-petition-dismiss

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கில் வி.கே.டி. பாலன் என்பது மதுரா பாலனா(Madura Travels).
https://en.wikipedia.org/wiki/V._K._Thanabalan

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

இந்த வழக்கில் வி.கே.டி. பாலன் என்பது மதுரா பாலனா(Madura Travels).
https://en.wikipedia.org/wiki/V._K._Thanabalan

 

ஆமைவேகத்தில் இருக்கும் நீதித்துறையில் வழக்கறிஞர்கள் பணம் பார்க்க இப்படியான வழக்குகள்  உதவும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் மீதான கொலைவழக்கு: சென்னை வர்த்தகரின் மனு தள்ளுபடி

 
c54bb0413b2f2f85a5d22660dbe2c6a3b7c8216d
 40 Views

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களை சென்னையில் குண்டு வைத்து கொல்ல முயன்றதாக மதுரா போக்குவரத்து சேவை உரிமையாளர் வி.கே.டி பாலன் மீதான வழக்கை இரத்துச் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

1980களில் சென்னை பெசன் நகரில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் 1985ஆம் ஆண்டு அவரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் குண்டு வெடிப்பில் எவரும் காயமடையவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஸ்ணன் ஆகியோருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி யைச் சேர்ந்த காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். ரஞ்சன், மணவை தம்பி ஆகியோர் இறந்து விட்டனர். ராதாகிருஸ்ணன் சாட்சியாக மாறிவிட்டார். வி.கே.டி. பாலன் மட்டும் வழக்கை எதிர் கொண்டுள்ளார்.

30 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதாலும், இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகவும், இந்த வழக்கில் பாலசிங்கம் உள்ளிட்ட பல முக்கிய சாட்சிகள் இறந்து விட்டதாலும், தனக்கு எதிரான இந்த வழக்கை இரத்துச் செய்ய வேண்டும் என வி.கே.டி பாலன் சென்னை உயர் நீதிமன்றத்தல் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.என். பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், சாட்சியாக மாறியவர் உட்பட சில சாட்சிகள் உயிருடன் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் இறந்ததற்காகவும், தலைமறைவாக உள்ளதற்காகவும் வழக்கை இரத்துச் செய்ய முடியாது என வாதிட்டார்.

https://www.ilakku.org/அன்ரன்-பாலசிங்கம்-மீதான/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.