Jump to content

ஈழத்தின் தனித்துவமான வித்துவான்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் தனித்துவமான தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகப்புகழ்பெற்ற ஈழத்தின் நாதஸ்வர ஆளுமை V.K.பஞ்சமூர்த்தி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கிய தங்க தாத்தா !!!

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எமது மண்ணின்கலையை பல வருடங்களாக பேணி பாதுகாத்துவரும்  கணபதிப்பிள்ளை இரத்னகோபால் (அண்ணாவியார்) வட்டுவாகல். இந்த யுகத்தில் எமக்குகிடைத்த கலை பொக்கிசம் இன்னும் பல்லாண்டுகாலம்  வாழ்க வாழ்க....


திலகேஸ்வரன் வல்லிபுரம் அவரது குழுவினருக்கும் எமது நன்றி....
தயாரிப்பு -தமிழன் கலைக்கூடம் வட்டுவாகல் 2020

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்,நோய் தீர்க்கும் மருந்து - நாடகம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைமுறையினரின் கலை ஆர்வம் எப்படி உள்ளது? | இன்றைய விருந்தினர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தநாள் ஞாபகம் -42 ; மலையகத்தின் முன்னோடிக் கவிஞர் சக்தீ அ. பால ஐயா- தி.ஞானசேகரன்

தி.ஞானசேகரன்

“சிங்கள இனத்தவரின் ஆதிப்பாரம்பரியமும் தோற்றமும்” என்ற கட்டுரையை எழுதியதன் மூலம் ஞானம் சஞ்சிகையுடன் இணைந்து கொண்டவர் சக்தீ பால ஐயா. அவர் சஞ்சிகையின் தொடர்வாசகனாக இருந்தது மட்டுமன்றி காலத்துக்குக்காலம் தனது கருத்துக்களையும் ஞானம் சஞ்சிகையில் பதிவுசெய்து வந்துள்ளார். நான் புறக்கோட்டைக்குச் செல்லும் வேளைகளிலெல்லாம் அவர் வசித்துவந்த டேம்வீதி அலுவலகத்திற்குச் சென்று அவருடன் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன்; ஞானம் சஞ்சிகைக் கான ஆக்கங்களை நேரில் பெற்றிருக்கிறேன்.

%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%தலவாக்கலை லிந்துலை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளை மாபோலையினை வசிப்பிடமாகவும் கொண்ட மலையகத்தின் மூத்த கவிஞர் கலாபூஷணம் சக்தீ பால ஐயா 26.07.1925ஆம் ஆண்டு அப்பாவு விஸ்வநாதன் லக்‌ஷமி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை தலவாக்கலை அரச இருமொழி பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியிலும், உயர்கல்வியை இலங்கை தொழிநுட்பக் கல்லூரியிலும் பயின்றார்.

இவர், தனது பத்தாவது வயதிலேயே ‘பாரதியின் தாக்கம்’ என்னும் தனது முதல் கவிதையை எழுதியுள்ளார். நான்காம் வகுப்பு மாணவனாக இருந்தபோதே ஷமாணவர்மலர்| என்ற இதழினையும், பின்னரான காலத்தில் ஷயுத்தமுனை| என்ற அந்நியராட்சிக்கு எதிராக பத்திரிகையினையும் 1956இல் ‘வளர்ச்சி’ என்ற கலை இலக்கிய சமூக இதழினையும், 1960ஆம் ஆண்டு ‘தமிழ்ஒளி’ என்ற இதழினையும் வெளியிட்டவர்.

படிப்பை முடித்துக்கொண்ட சக்தீ ஒரு ஓவியராகவே தனது வாழ்வைத் தொடங்கினார்; ஒரு Commercial Artist ஆகத் தொழிலை மேற்கொண்ட இவர் ஒருசில நூல்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் அட்டைப்பட ஓவியங்கள் வரைந்துள்ளார். ‘Ceylon Teachers College’ மற்றும் ‘Wood’s College of Fine Arts’ ஆகிய கலைக்கூடங்களில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றிய சக்தீயின் ஓவியக் கண்காட்சிகள் கொழும்பிலும் பிற இடங்களிலும் 1948 – 49ஆம் ஆண்டுகளில் பிரசித்தம் பெற்றன.

1956களில் வீரகேசரியில் உதவி ஆசிரியராகவும் 1970களில் தொழிற்சங்கவாதி வி.கே.வெள்ளையன் ஸ்தாபித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் இதழான ஷமாவலி| பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

1963இல் தினகரனின் கலை மண்டலம் பகுதியில் ‘மேல்நாட்டு ஓவியர்கள்’ என்னும் தலைப்பில் பல ஆக்கங்களைப் படைத்துள்ளார். அதேகாலகட்டத்தில் சுதந்திரனில் மலைநாட்டு அறிஞர்கள் என்னும் தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார்.

இவர், 1961ஆம் ஆண்டு ‘இலங்கை இந்திய வம்சாவளி பேரவை’ எனும் அமைப்பினை உருவாக்கி அதனை வழிப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1956ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஈழத்து மலையகக் கவிஞரான சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon’s Tea Garden எனும் கவிதை நூலினை தமிழாக்கம் செய்து சி.வி.யின் உணர்வுகளை தமிழர்; மத்தியில் கொண்டுசேர்த்த பெருமைக்குரியவர்.

1948இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தகையுடன் மலையக மக்களின் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மலையகத் தலைவர்கள் நடத்திய சத்தியாக்கிரகத்தில் சக்தீயும் கலந்து கொண்டார்.

1956இன் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை எதிர்த்து 1957இல் தமிழ்த் தலைவர்கள் நடத்திய எதிர்ப்புக் கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டார்.
‘தனிவழிக் கவிராயர்’, ‘மலையரசன்’, ‘ஷேமி’ ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன.

1952ஆம் ஆண்டு ‘மனோதத்துவமும் கலையும் போதனா முறையும்’ என்ற நூலையும், 1956இல் ‘சொந்த நாட்டிலே’ எனும் பாடல் நூலையும், 1997ஆம் ஆண்டு ‘சக்தீ பால ஐயா கவிதைகள்’ என்ற கவிதை தொகுப்பினையும், 2011ஆம் ஆண்டு Analysis of Ages of Lives on Earth and Dravidian cultureஎன்கின்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார்.

1981இல் பஸ்ஸுக்கடியில் விழுந்து விபத்துக்குள்ளான சக்தீ பிற்பட்ட காலத்தில் கால் ஊனமுற்ற நிலையில் சிலகாலம் இருந்தார்.

இவர், தேசிய அருங்கலைச்சபை மற்றும் அரசின் மலையகக் கலாசார மேம்பாட்டுக்குழு ஆகியவற்றின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.

இவரது கலை இலக்கியப் பணிகளுக்காக அரசாங்கம் ‘கவிச்சுடர்’ பட்டமளித்துக் கௌரவித்தது (1987). ‘தமிழ் ஒளி’ பட்டமும் விருதும் 1993இல் வழங்கப்பட்டது. இலங்கை கம்பன் கழகம் 1998ஆம் ஆண்டு ‘மூதறிஞர்’ விருதளித்தது. இவர், ‘வாழ்நாள் சாதனையாளர்’, ‘தனிவழி கவிராயர்’, ‘கலாபூஷணம்’ எனப் பல விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர். ஞானம் சஞ்சிகையின் ஆகஸ்ட் 2005 இதழில் இவர் அட்டைப்பட அதிதியாகக் கௌரவிக்கப்பட்டார்.

சக்தீ பால ஐயா 02-08-2013இல் அமரரானார்.

https://thinakkural.lk/article/88075

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரலில் பணியாற்றினேன் | எழுத்தாளர் வெற்றிச்செல்வி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.