Jump to content

`அழுக்கா இருந்ததால யாரும் உதவலைன்றதுதான் வருத்தம்!' - தொழிலாளி உயிரைக் காப்பாற்றிய பெண் போலீஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`அழுக்கா இருந்ததால யாரும் உதவலைன்றதுதான் வருத்தம்!' - தொழிலாளி உயிரைக் காப்பாற்றிய பெண் போலீஸ்

முத்து கிருஷ்ணவேணி உதவிய போது

முத்து கிருஷ்ணவேணி உதவிய போது

``மக்களோட வரிப்பணத்துல சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். அந்த மக்கள்ல ஒருத்தரோட உயிருக்கு ஆபத்துன்னா போலீஸ் வராம வேற யாரு வருவாங்க’’ என்பவரின் குரலில், அவருடைய வேலையின் மீதான பக்தி தெரிகிறது.

காக்கிச்சட்டைக்குள் ஈர மனதுக்காரர்களைச் சந்திக்கும்போது மட்டும்தான், காவல்துறை, மக்களின் நண்பன்தான் என்பது உறுதி செய்யப்படும். நேற்றுமுன் தினம் (21.10.2020), கோயம்பேட்டில் மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பெண் காவலர் முத்து கிருஷ்ணவேணியும் அப்படிப்பட்ட ஈர மனதுக்காரர்களில் ஒருவர்தான். அவரிடம் பேசினோம்.

முத்து கிருஷ்ணவேணி உதவிய போது
 
முத்து கிருஷ்ணவேணி உதவிய போது

``நான் வில்லிவாக்கம் வி 1 ஸ்டேஷன்ல காவலரா வேலைபார்க்கிறேன். நேத்திக்கு வேலை விஷயமா கோயம்பேடு மார்க்கெட் போயிருந்தப்போதான் அந்தச் சம்பவம் நடந்துச்சு. சுமை தூக்கிட்டு வந்த தொழிலாளி ஒருத்தர் வலிப்பு வந்து கீழே விழுந்துட்டாரு. வாயெல்லாம் நுரைதள்ளி, நாக்கைக் கடிச்சுக்கிட்டதால ரத்தம் வடியத் துடிச்சுக்கிட்டு இருந்தவருக்கு முதலுதவி செஞ்சுகிட்டே, மத்தவங்களை உதவிக்குக் கூப்பிட்டேன். மார்க்கெட்டுக்கு வந்தவங்க செல்போன்ல வீடியோ எடுக்கிறாங்களே தவிர, அந்த மனுஷனுக்கு உதவி செய்றதுக்கு யாருமே முன் வரலை. கொரோனா பரிசோதனை செய்யறதுக்காக அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் அந்தக் கூலித் தொழிலாளியைப் பரிசோதிச்சுப் பார்த்துட்டு, `பல்ஸ் ரேட் இறங்கிடுச்சுங்க. இனி ஒண்ணும் செய்ய முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. என்னால அதை ஏத்துக்கவே முடியலை. ஏன்னா, அந்த நிமிஷம் அவர் உயிரோடதான் இருந்தாரு. எப்படியாவது அவரைக் காப்பாத்திடணும்னு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செஞ்சேன்.

போலீஸ் டிபார்ட்மென்ட்ல முதலுதவி செய்றதுக்கு சொல்லித் தந்திருக்காங்க. அதனால, ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம், அந்தத் தொழிலாளியோட நெஞ்சுப்பகுதியில பம்ப்பிங் பண்ணிவிட்டு, ஜில்லிட்டுப்போன கை காலையெல்லாம் சூடு பறக்கத் தேய்ச்சுவிட்டுக்கிட்டு இருந்தேன். கூடவே `உங்களுக்கு ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல’ன்னு பாசிட்டிவ்வா சொல்லிட்டே இருந்தேன். அவருக்கு லேசா நினைவு வந்ததும் கையைத் தூக்கச் சொன்னேன். கையைத் தூக்கினதும் டீ வாங்கிக்கொடுத்து குடிக்க வெச்சேன். அப்புறம் ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பி வெச்சேன்.

முத்து கிருஷ்ணவேணி உதவிய போது
 
முத்து கிருஷ்ணவேணி உதவிய போது

அந்தத் தொழிலாளி அழுக்கா இருந்ததால யாருமே அவரைத் தொட்டுத் தூக்க முன் வரலை. அதுதான் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த நேரத்துல என்னைப் பத்தி ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்க விரும்புறேன். ரொம்ப நாளா உடல் வெயிட்டைக் குறைச்சு மெலியணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். வேலை நெருக்கடியில அதெல்லாம் செய்ய முடியலை. உடம்பு மெலியாம ஸ்டாமினாவோட இருந்ததாலதான், ஒத்த ஆளா ஓர் ஆம்பளையைத் தூக்கிக் கோணியில போட்டு முதலுதவி கொடுக்க முடிஞ்சது’’ என்று நிறைவாகச் சிரிக்கிற முத்து கிருஷ்ணவேணிக்குப் பூர்வீகம் திருநெல்வேலியை அடுத்த சங்கரன்கோவில். காவல்துறையில் வேலைபார்க்க வேண்டும் என்ற தீராத அவாவுடன், திருமணத்துக்குப் பிறகும் விடாமல் முயற்சி செய்து, 2005 பேட்சில் தேர்வாகியிருக்கிறார்.

முத்து கிருஷ்ணவேணி உதவிய போது
 
முத்து கிருஷ்ணவேணி உதவிய போது

``அந்தத் தொழிலாளி பேரு லட்சுமணன். இப்போ நல்லா இருக்காரு. ஓர் உயிரைக் காப்பாத்தினது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது. மக்களோட வரிப்பணத்துல சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். அந்த மக்கள்ல ஒருத்தரோட உயிருக்கு ஆபத்துன்னா போலீஸ் வராம வேற யாரு வருவாங்க’’ என்பவரின் குரலில், அவருடைய வேலையின் மீதான பக்தி தெரிகிறது.

 

https://www.vikatan.com/news/women/woman-police-officer-muthu-krishnaveni-speaks-about-how-she-saved-koyambedu-mans-life

 

பாராட்டுக்கள் சகோதரி உங்கள் சேவைக்கு 🙏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசர காலத்தில் நீங்கள் வழங்கிய அளப்பரிய சேவைக்கு பாராட்டுக்கள் முத்து கிருஷ்ணவேணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தாயே .........!    🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தொழிலாளிக்கு... மறு பிறப்புக் கொடுத்த, கிருஷ்ணவேணிக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.