Jump to content

திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு

spacer.png

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுதர்மத்தை மேற்கோள் காட்டுவதாக கூறி அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தி விட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெரியார் வலைக்காட்சியின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், "மனு தர்மத்தின் படி அனைத்து பெண்களும் கீழானவர்கள். அனைத்து பெண்களும் பரத்தையர் களாகவே படைக்கப்பட்டவர்கள். அவர்கள் பிராமண பெண்களாக இருந்தாலும் சரி கீழ்நிலை சாதிகளைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் சரி, மனு தர்மத்தின் படி அனைத்து பெண்களும் விபச்சாரிகள் என்ற அளவிலேயே பார்க்கப்படுகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவியது. சமூகத்தளங்களில் இந்து அமைப்பினரும் வலதுசாரி சிந்தனை வாதிகளும் திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (அக்டோபர் 23 ) பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளரை சந்தித்து நடிகை குஷ்பு,

 

"திருமாவளவன் மனு தர்மத்தைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார். அனைத்துப் பெண்களையும் கேவலப் படுத்தியுள்ளார். இதை திமுகவின் தலைவர் ,காங்கிரஸின் தலைவர் ஆகியோர் தட்டிக் கேட்க மாட்டார்களா? நான் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த போது நடிகை என கேவலப்படுத்தினார் காங்கிரஸ் தலைவர். நான் திமுகவிலும் இருந்திருக்கிறேன். அங்கே பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்று எனக்கு தெரியும்.

திமுக, காங்கிரஸ் தலைவர்கள் திருமாவளவனை கண்டிப்பார்களா? கூட்டணி கட்சி தலைவர் என்று விட்டு விடுவார்களா? இந்த பிரச்சனை அரசியல், கட்சி இவற்றை எல்லாம் அப்பாற்பட்டு பெண்களுக்கு மரியாதை அளிப்பது தொடர்பானது. இந்த சர்ச்சையை திசை திருப்பும் விதமாக மனுதர்மம் எரிப்பு போராட்டத்தை திருமாவளவன் நடத்துகிறார்.

திருமாவளவன் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட முடிவு பற்றி நான் பிறகு தெரிவிப்பேன்" என்றார் குஷ்பு.

நீங்கள் மனுதர்மம் படித்துவிட்டீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது நீங்கள் படித்துள்ளீர்களா என்று திருப்பிக் கேட்ட குஷ்பூ மனு தர்மத்தைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டு திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

 

https://minnambalam.com/politics/2020/10/23/35/kushboo-demand-apology-thirumavalavan-manudharma-women

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்பக்காவுக்கு தேவையில்லாத வேலை.🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-10-25-21-23-38-237-org-m

தேர்தல் வருகுது .. ஏதாவது குண்டக்க மண்டக்க கதைத்து கொண்டு இருந்தால்தான் ஊடகத்தில் பேர் வரும் ..இல்லை என்டா சனம் மறந்து போகும் .அரசியலில் இருப்பு முக்கியம் அல்லோ ..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

குஸ்பக்காவுக்கு தேவையில்லாத வேலை.🙄

அவ எப்பதான் தேவையான வேலை பாத்திருக்கிறாவு.....? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவ எப்பதான் தேவையான வேலை பாத்திருக்கிறாவு.....? 😎

முந்தாநாத்து கட்டுமரம். நேத்து கை. இன்று தாமரை.

கட்சியை மாத்தினாலும், கட்டிக்கிட்டவரை மாத்தாதவரை ஓகேதான். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒன்டை மாத்த வேணும்.அது தான் மாத்துறா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஏதோ ஒன்டை மாத்த வேணும்.அது தான் மாத்துறா.

யூ மீன் ஓடி ஆடி வேலை செய்த உடம்பு சும்மா இருக்காது...?  :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.