Jump to content

மாவீரர் புகழ் பாடுவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறையில் விளக்கேற்றி பணிகின்றோம் 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை 
முடிசூடும் தமிழ் மீது உறுதி. 
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் 
வரலாறு மீதிலும் உறுதி. 
விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கை 
வீரர்கள் மீதிலும் உறுதி. 
இழிவாக வாழோம், தமிழீழப் போரில் 
இனிமேலும் ஓயோம் உறுதி. 

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ வீரனே எங்கள் மண்ணில்

ஓ வீரனே ,,,எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
ஓ வீரனே  எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 


விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை 
வெடி குண்டு நடுவில் நின்ற   உன் தோளை 
விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை 
வெடி குண்டு நடுவில் நின்ற   உன் தோளை 
அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு 
அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு 
அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு 
அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு 

நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
ஓ வீரனே ,,,எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா

நீ அடைந்த சாவு  இங்கே உயிரானது 
நீ எரிந்த உயிர் விதை பயிரானது 
நீ அடைந்த சாவு  இங்கே உயிரானது 
நீ எரிந்த உயிர் விதை பயிரானது 
தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது 
வீரனே உனது முகம் தெரிகின்றது 
தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது 
வீரனே உனது முகம் தெரிகின்றது 

ஓ வீரனே ,,,எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா

காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் 
கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் 
காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் 
கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் 
பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் 
போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் 
பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் 
போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் 

நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா

ஓ வீரனே ,,,எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தொன்று விழுந்தாலே பாடல் வரிகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தோழர்களின் புதை குழியில் மண் போட்டு செல்கின்றோம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மண்ணே தாயக மண்ணே விடை கொடு தாயே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம் (2)

கடலினில் சிங்கள படகினை உடைத்தோம்
தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம்

அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு
ஆனாலும் மண் மீது பெரும் பாசம் உண்டு
ஆறடி மண் கூட எமக்காக கேளோம்
தமிழ்த்தாயின் துயர் தீர்க்க மகிழ்வோடு சாவோம்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம்

சாவினை தோள்மீது நாங்கள் சுமப்போம்
சாவிற்கும் அஞ்சாமல் சாவிற்குள் வாழ்வோம்
தமிழனின் சாவுகள் வரலாறு படைக்கும்
தமிழீழ தாயவள் விலங்குகள் உடைக்கும்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம்

ஊரதில் வெடியோசை வான்வரை கேட்கும்
உலகத்தின் திசையெங்கும் எம்சேதி தாக்கும்
காற்றாகி எம்உடல் நீராகி கரையும்
தமிழர்தன் உணர்வோடு என் உயிர் கலக்கும்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம் 

கடலினில் சிங்கள படகினை உடைத்தோம்
தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதம் பூத்திடும் போதில்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.