Jump to content

CSK எனும் மனுதர்மம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2.5 ஓவரிலேயே சரணடைந்த சி.எஸ்.கே😂

2.5 ஓவரிலேயே சரணடைந்த சி.எஸ்.கே

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

சிறிய கிரவுண்ட் என்பதால் அதிக ரன்கள் குவிக்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். போட்டி தொடங்குவதற்கு சற்று முன்புதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல்நிலை சரியில்லாமல்  விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அப்பாடா!!! ஒரு அதிரடி பேட்ஸ்மேன் இல்லை என சிஎஸ்கே வீரர்களுடன் ரசிகர்களும் பெருமூச்சு விட்டனர்.


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஏற்றார் பொல்லார்ட். டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார் பொல்லார்ட். இந்தத் தொடர் முழுவதுமே பீல்டிங் தேர்வு செய்த அணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்து 170 ரன்களுக்கு மேல் அடித்தால் ஜேஸிங் செய்வது கடினம் என்பது தெரிந்தும் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்ததால் ரசிகர்கள் மனதிற்குள் பொல்லார்ட் தவறு செய்து விட்டார் என நினைத்தனர்.

வாழ்வா? சாவா? போட்டியில் சென்னைக்கு அணிக்கு சற்று வழியை திறந்து விட்டார் என மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்கப் போகிறார் என்பதை சென்னை ரசிகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.

சென்னை அணி 170-க்கு மேல் அடித்துவிடும் என நினைத்து டி.வி.க்கு முன் சிஎஸ்கே ரசிகர்கள் விசில் போட உட்கார்ந்தனர்.

ஏற்கனவே அனுபவ வீரர்கள் சொதப்பியதால் இந்த போட்டியில் இருந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என டோனி கூறியிருந்தார். அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட், என். ஜெகதீசன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கினார். இதுவரை விளையாடாமல் இருந்த பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிரும் அணியில் இடம் பிடித்தார்.

டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் களம் இறங்கி பவர் பிளேயை உற்சாகப்படுத்துவார் என நினைக்கையில் டோனி கெய்க்வாட்டை களமிறக்கினார். அப்போதே சிஎஸ்கே ரசிகர்கள் ஜர்க் ஆகினர். ஏற்கனவே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிய ருத்துராஜ் கெய்க்வாட், தொடக்க வீரரகாக களம் இறக்கப்பட்டதும் கூடுதல் நெருக்கடியை சந்தித்தார்.

முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இவரின் ஸ்விங் பந்தை எதிர்கொள்ள திணறிய இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் ஐந்தாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது சாம் கர்ரனை களம் இறக்கியிருக்க  வேண்டியதுதானே என ரசிகர்கள் முணுமுணுத்தனர். தொடர் தோல்வியால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் டோனியின் இந்த முதல் தவறு முற்றிலும் தவறாக அமைந்தது.

 
ராயுடுவை வீழ்த்திய சந்தோஷத்தில் டிரென்ட் போல்ட்
 

அடுத்து அம்பதி ராயுடு பும்ரா வீசிய 2-வது ஓவரின் 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார். ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்து அதன்பின் நீக்கப்பட்ட ஜெகதீசன், இன்று நான் யார்? என்பதை நிரூபிக்க களம் இறங்கினார். ஆனால் பும்ராவின் பந்தில் சிக்கி முதல் பந்திலேயே நடையை கட்டினார்.

3-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் ஐந்தாவது பந்தில் சிஎஸ்கே-யின் நங்கூரம் என அழைப்படும் டு பிளிஸ்சிஸ் 1 ரன்னில் வெளியேறினார். கண்ணை மூடி திறப்பதற்குள் 2.5 ஓவரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 4 பேர் 3 ரன்கள் எடுப்பதற்குள் பெவிலியன் திரும்பியதால், 2.5 ஓவரிலேயே சென்னை அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது.

ஒருவேளை சாம் கர்ரன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டிருந்தால் ஒருமுனையில் நிலைத்து நின்று போட்டியை மாற்றியிருக்கலாம்.

ஜடேஜா 7 ரன்னிலும், வழக்கம்போல எம்எஸ் தோனி 16 ரன்னிலும் நடையை கட்ட, 30 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே. சாம் கரன் கடைசி வரை போராடி 52 ரன்கள் அடிக்க பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையுடன் பந்து வீசும் அளவிற்கு 114 ரன்கள் அடித்தது.

சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர், சாம் கர்ரன் என பந்து வீச்சாளர்கள் இருந்ததால் ரசிகர்கள் தங்களது நம்பிக்கையை விடாமல் இருந்தனர்.

ஆனால் தொடக்க வீரர்களாக சென்னையின் பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டி அடித்து துவம்சம் செய்து சிஎஸ்கே ரசிகர்களின் நம்பிக்கை குழி தோண்டி புதைத்தனர்.

12.2 ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வீழ்த்தியது இஷான் 37 பந்துகளில் 68 ரன்கள் 37 பந்துகளில் 66 ரன்களும், டி காக் 46 ரன்களும் அடித்தனர்.

தீபக் சாஹர், ஹசில்வுட் பந்து வீச்சு எடுபடாத போதிலும், நியூ பால் உள்பட போட்டி முழுவதும் சாம் கர்ரனை பந்து வீச அழைக்காதது ஏன்? என்பது டோனிக்குதான் வெளிச்சம்.

இந்த முறையும் பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்தமாக சொதப்ப, பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது சிஎஸ்கே.

ஒரு சதவீதம் கூட ஈடுகொடுக்க முடியாமல் போனது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

https://www.maalaimalar.com/news/sports/2020/10/24113447/2006736/CSK-surrendered-in-25-overs.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CSK  இம்முறை play off இற்கு  கூட போகாதது மிகப்பெரிய சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CSK மட்டுமல்ல மொத்தமாக 4 அணிகள் வெளியேற வேண்டும்.

ஆனால் CSK கடைசியாக வராதது சந்தோசம்... உங்களுக்காக

On 28/10/2020 at 22:19, Eppothum Thamizhan said:

CSK  இம்முறை play off இற்கு  கூட போகாதது மிகப்பெரிய சந்தோசம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

ஆனால் CSK கடைசியாக வராதது சந்தோசம்

வயசாளிகள் என்றாலும் கெத்து😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

வயசாளிகள் என்றாலும் கெத்து😜

அது.....😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.