Jump to content

ராஜபக்க்ஷ வீட்டு நவராத்திரி! ஏன்? எதனால்? எதற்காக?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவம் என்ற கோட்பாடு தலை தூக்காது அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எத்தனை காலமாக கிந்தியாவை ஏமாற்றுகின்றார்கள், கிந்திய கொள்கை வகுப்பாளர்கள் அடி முட்டாள்களாக இருக்கின்றார்கள், அல்லது தெரிந்தும் நடிக்கின்றார்களா

Link to comment
Share on other sites

 

1 hour ago, உடையார் said:

எத்தனை காலமாக கிந்தியாவை ஏமாற்றுகின்றார்கள், கிந்திய கொள்கை வகுப்பாளர்கள் அடி முட்டாள்களாக இருக்கின்றார்கள், அல்லது தெரிந்தும் நடிக்கின்றார்களா

இந்திய வெளிவிவகார கட்டமைப்பு பல்வேறு குறைபாடுகளின் காரணமாக ஒரு பின்தங்கிய நிலையில இன்னும் உள்ளது. இந்த கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளை ஆசிய கொள்கை (Asian Policy) என்ற சஞ்சிகையில் 2009ம் ஆண்டில் டேவிட் மார்க்கலி (Developing India’s Foreign Policy “Software”) ஆராய்ந்திருந்தார். பின்னர் 2019ல் இதே விடயம் பற்றி விரிவான ஆய்வை (India's Foreign Policy Capacity) கான்டி பாஜ்பால் நடத்தியிருந்தார். இந்த இரு ஆய்வுகளும் இந்திய வெளிவிவகார கட்டமைப்பில் மனித வளம், அறிவு வளம், உள்ளக வெளியக தொடர்புகள்/பிணைப்புகள் என பல்வேறு மடத்தில் குறைபாடுகளை கொண்டுள்ளதாக குறிப்பிட்டு அவற்றை இலகுவில் சரிசெய்ய பல்வேறு உள்ளக ரீதியான தடைகள் இருப்பதாக எழுதியுளார்கள். ஒருவித கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒரு கட்டமைப்பை மாற்ற பல ஆண்டுகள் எடுக்கும். அதட்கு ஏற்ற சிறந்த தலைமை வேண்டும். இதனால் தான் இந்தியா விடயத்தில் எண்கள் கனவுலக நம்பிக்கைகள் சாத்தியமாக சந்தர்ப்பம் குறைவு என்று நான் கணித்துள்ளேன். இந்த குறைபாடுகளை இலங்கை மிகசமர்த்தியமாக தனக்கு அனுகூலமாக பயன்படுத்துகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக தமிழின அடிப்படையில் இந்தியா ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்து,  தமிழ் இனம் என்ற உணர்வின் கீழ் தமிழ்நாட்டில் தேசிய எழுச்சி வரக்கூடாது என்பதனால் முடித்தும் வைத்துவிட்டது.  இவ்வளவு கவனமாக இருக்கும்  கொள்கை வகுப்பாளர்கள் இந்துத்தவ எழுச்சியை தமிழ்நாட்டிலும்,     அதன் மூலம் ஈழத்தமிழர் மத்தியிலும் உருவாக்கினால் ஒன்றில் தமிழர்களுக்கு இந்துத்துவ அடிப்படையில் ஒரு தீர்வு வரும் அல்லது முழு இலங்கையும் இந்துத்துவ கலாச்சார நாடாக மாறும்.  

இந்தியாவின் இந்துத்துவ கொள்கையை முன்னெடுக்கும் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களை தமிழர்களின் அரசியலை தலைமைதாங்க வைப்பது நல்லது போலிருக்கு😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் தலை கீழாய் நின்டாலும் இலங்கை அமைதியாக இருப்பதையும் அபிவிருத்தி அடைவதையும் இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவம் என்ற கோட்பாடு தலை தூக்காது அல்லவா?

ஓம் ஓம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சைவத்துவம் எழுச்சி அடையும்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் ரகுலும் தமது விஜயதசமி சரஸ்வதி பூசை தசரா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் ஓம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சைவத்துவம் எழுச்சி அடையும்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் ரகுலும் தமது விஜயதசமி சரஸ்வதி பூசை தசரா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்கள்

 

இந்தியாவில் எந்த கட்சி  வந்தாலும் இலங்கைக்கு விமோசனம் கிடையாது அது இந்த மோட்டு சிங்களவனுக்கு ஒரு போதும் புரியப்போவதில்லை நம்மடைய அரசியல்வாதிகளுக்கும் பதவி முக்கியம் இலங்கையில் இருந்து இந்திய தூதரகம் என்று அடித்து மூடப்படுகிறதோ அன்றுதான் விடிவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்தியாவில் எந்த கட்சி  வந்தாலும் இலங்கைக்கு விமோசனம் கிடையாது அது இந்த மோட்டு சிங்களவனுக்கு ஒரு போதும் புரியப்போவதில்லை நம்மடைய அரசியல்வாதிகளுக்கும் பதவி முக்கியம் இலங்கையில் இருந்து இந்திய தூதரகம் என்று அடித்து மூடப்படுகிறதோ அன்றுதான் விடிவு 

பிரேமதாச காலத்துக்கு கூட்டிக்கொண்டு போறியள் போல கிடக்கு...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் ஓம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சைவத்துவம் எழுச்சி அடையும்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் ரகுலும் தமது விஜயதசமி சரஸ்வதி பூசை தசரா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்கள்

 

நீங்கள்! இனிமேல் நிறுத்தி...நிதானித்து....யோசிச்சு கதைக்க வேணும் கண்டியளோ.
நான் என்னமோ சொல்ல நீங்கள் எங்கையோ போய் நிக்கிறியள்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பிரேமதாச காலத்துக்கு கூட்டிக்கொண்டு போறியள் போல கிடக்கு...😁

டெல்லியை பொறுத்தவரை இலங்கை நிலையான ஆட்சியை பெற்று அதிவிரைவான  பொருளாதார நாடாக மாறக்கூடாது அதே நேரம் தமிழர்களுக்கும் எந்த தீர்வும் கிடைக்க கூடாது தீர்வை பற்றி எவ்வளவும் கதைக்கலாம் இறுதியில் தீர்வு கிடைக்க கூடாது அதை காட்டியே தமிழகத்தை அடக்கணும் எப்பவுமே தன்னை சார்ந்த ஒரு நாடாக வைத்திருக்கவே டெல்லி முடிவு அந்த முடிவுக்கு ஏட்ப இங்கு எவ்வளவு பேர் செத்தாலும் அவர்களுக்கு கவலையில்லை இன்னும் இன்னும் கூடிய குழப்பங்களை சிக்கல்களை ஏற்படுத்தி கொண்டே இருக்கணும் மறவன்புலவும் இந்திய இணைத்தூதரகமும் யாழில் இருக்கையிலே வடகிழக்கில் புத்த விகாரைகள் அடாத்தாக கட்டப்படுகின்றன அப்ப  எண்ணத்துக்கு மறவன்புலவு ?

சுதந்திரம் பெற்று இதுவரைகாலமும் இந்தியா  இலங்கையில் செய்த உருப்படியான காரியம் என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

 

சுதந்திரம் பெற்று இதுவரைகாலமும் இந்தியா  இலங்கையில் செய்த உருப்படியான காரியம் என்ன ?

காந்தி தாத்தாவுக்கு சிலை கட்டினது. நேரு மாமாவின்ரை வாழ்கை வரலாறு புத்தகம் படிக்க தந்தது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kuna kaviyalahan said:

புதிய பதிவு போடமுடியாமல் பழைய வீடியோ வந்து நிக்கிறது.  என்ன செய்வது? 

அழித்து  பாருங்கள் முடியாவிடில் வேறு பிரவுசரில் லொக்கின் பண்ணுங்கள் சரிவரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kuna kaviyalahan said:

புதிய பதிவு போடமுடியாமல் பழைய வீடியோ வந்து நிக்கிறது.  என்ன செய்வது? 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.