Jump to content

விடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு - தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு - தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக, இலங்கை
24 அக்டோபர் 2020
ராஜபக்ஷ ஆட்சியில் சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக் கோரி பிப்ரவரி 11, 2020 நடந்த போராட்டம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ராஜபக்ஷ ஆட்சியில் சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக் கோரி பிப்ரவரி 11, 2020 நடந்த போராட்டம்.

அம்பாறை - அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் 33 வருடங்களின் பின்னர் ஆரம்பித்துள்ளது.

அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து, இரு வாரங்களுக்குள் விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, பதில் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவிக்கின்றார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை நடத்துமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

அம்பாறை - அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு ஜுன மாதம் 2ஆம் தேதி பௌத்த பிக்குகள் அடங்களாக 33 பேர் கூட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகவே கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மூன்று தசாப்த யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பல்வேறு கூட்டு படுகொலைகள் நடத்தப்பட்ட போதிலும், குறிப்பாக 33 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை மாத்திரம் விசாரணை செய்வதற்கு எடுத்த தீர்மானம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை 1984 ஆம் ஆண்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இலங்கை 1984 ஆம் ஆண்டு

தமிழர்கள் கூட்டாக பல்வேறு சந்தர்ப்பங்களில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு நியாயம் கோரி போராடி வருகின்ற போதிலும், அந்த சம்பவங்களை விசாரணை செய்யாது, பௌத்த பிக்குகளின் படுகொலை சம்பவத்தை மாத்திரம் விசாரணை செய்வது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

தமிழர்களின் படுகொலை விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முக்கிய பல வழக்கு விசாரணைகளை வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேலை தொடர்புக் கொண்டு வினவியது.

அரந்தலாவ படுகொலை சம்பவத்தை 33 வருடங்களின் பின்னர் விசாரணைக்கு எடுப்பதானது, புரியாத புதிராகவே உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமைக்கு, பதிலடியாகவே இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவே தான் கருதுவதாக அவர் கூறுகின்றார்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என கூறும் சட்டத்தரணி, குறித்த இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அரந்தலாவ சம்பவத்தை விடவும் மிக மோசமான பல படுகொலை சம்பவங்கள் தமிழர்களுக்கு நடந்தேறியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த வழக்கு விசாரணைகள் எடுக்கப்படுமாக இருந்தால், நீதி கிடைக்காது தற்போதும் நிலுவையிலுள்ள தமிழர்களின் வழக்கு விசாரணைகளும் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.

தமிழர்களை படுகொலை செய்த பல முக்கிய வழக்குகள் இன்றும் விசாரணை செய்யப்படாது உள்ளதாக சட்டத்தரணி குறிப்பிடுகின்றார்.

இலங்கை 1992 ஆம் ஆண்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இலங்கை 1992 ஆம் ஆண்டு

சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேசத்தின் தலையீடு காரணமாக, ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட போதிலும், அந்த விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டவில்லை என சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவிக்கின்றார்.

இதன்படி, திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் போன்ற சில விசாரணைகள் நடத்தப்பட்டு, முடிவடையாது உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படாது, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரிகள் பின்னரான காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் நினைவூட்டியிருந்தார்.

இந்த முக்கிய வழக்குகளை எல்லாம் விடுத்து, அரந்தலாவ சம்பவத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதானது, பௌத்த பிக்குகளின் படுகொலை என்பதற்காக மாத்திரமே என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவே, அரந்தலாவ பிக்குகள் படுகொலை சம்பவத்திற்கான விசாரணைகளை மீள ஆரம்பிக்கின்றனர் எனவும் அவர் கூறுகின்றார்.

அரந்தலாவ படுகொலை விசாரணைகளை நடத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதைவிட மிகவும் கூடுதலாக தமிழர்களின் படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தமிழர்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சுதந்திர இலங்கையில் முதன்முறையாக 1956ஆம் ஆண்டு ஜுன் மாதமே நடத்தப்பட்டதாகவும் சட்டத்தரணி நினைவுப்படுத்தினார்.

Rathnavel
 
படக்குறிப்பு,

ரத்னவேல்

அம்பாறை - இங்கினியாகல பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட நிலையில், 150 தமிழர்கள் 1956ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழரசு கட்சி கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தியமைக்கு பதிலடியாகவே இந்த படுகொலை நடந்தேறியதாகவும் அவர் கூறியிருந்தார்.

அன்று முதல் நடந்தேறிய படுகொலை சம்பவங்களை சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் பட்டியலிட்டு குறிப்பிட்டார்.

01. வவுனியா - சாம்பல்தோட்டம் பகுதியில் 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

02. யாழ்ப்பாணம் - சுன்னாகம் போலீஸ் நிலையத்தில் 19 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

03. முல்லைத்தீவு - புதியமலை பகுதியில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

04. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

05. மணலாறு பகுதியில் எண்ணற்ற தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.

06. மன்னார் நகரில் 45 தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

07. கொக்குலாய் பகுதியில் 100ற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

08. மன்னார் - வட்டக்கண்டல் பகுதியில் 17 சிறுவர்கள் உள்ளடங்களாக 57 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

09. அம்பாறை - உடும்பன்குளம் பகுதியில் 103 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

10. திருகோணமலையில் 94 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

11. குமுதினி படகில் பயணித்த 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

12. யாழ்ப்பாணம் - நவாலி சென் பிட்டர்ஸ் தேவாலயத்தில் தங்கியிருந்த 100ற்கும் மேற்பட்டோர் வான் தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்டனர்.

13. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

14. செஞ்சோலை சிறார்கள் உள்ளிட்ட 54 பேர் வான் வழித் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு பல சம்பவங்களை சட்டத்தரணி மேற்கோள்காட்டி, தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை நினைவுபடுத்தினார்.

தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.

சட்ட மாஅதிபர் அரசாங்கத்திற்கு மாத்திரம் சார்பாக செயற்படாது, சுதந்திரமாக பொதுவான ஒருவராக செயற்பட வேண்டும் என சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் கோரிக்கை விடுக்கின்றார்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-54674812

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தனித்தனியாவின் புலிகள் தடி பற்றிய தீர்ப்பாயத்தின் சட்ட நிர்ணய கருதினால் வந்த வினை.

பல தமிழருக்கு புரியாத வேடிக்கை, பிரித்தானிய அரசின் (British establishment) ஒரு பகுதியே  இந்த திட்டத்தை சொறி சிங்களத்திற்கு முன்மொழிந்து இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.