Jump to content

அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டில்  முஸ்லிம் கட்சிகள்: கூட்டமைப்பு விசனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டில்  முஸ்லிம் கட்சிகள்: கூட்டமைப்பு விசனம்

(ஆர்.ராம்)
முஸ்லிம் சகோதரர்களின் தேசிய கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.  மு.க.வின் தலைமை தவிர்ந்த ஏனைய நான்கு உறுப்பினர்களும் அ.இ.ம.க. தலைமை மற்றும் ஒரு உறுப்பினர் தவிர்ந்த ஏனைய இருவரும் 20ஐ ஆதரிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சிகலந்த வியப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

spacer.png

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரணியில் உள்ள தமிழ்பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளியிடுவதற்கு இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற தரப்புக்கள் 20ஐ நிச்சயம் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டினை கூட்டமைப்புடன் இணைந்து உறுதியாக எடுத்திருந்தாகவும் கூறியிருந்தார். 

இந்நிலையில், 20ஆவது திருத்தச்சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின்போது மு.க மற்றும் அ.இ.ம.கா ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு வெளியிட்டிருந்தனர். இவ்வாறான மாறுபட்ட நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தமிழ்பேசும் தரப்புக்களின் தலைவர்களுடன் ஜனநாயகத்திற்கு எதிரான 20ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக எதிர்ப்பது என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. அதில் முழுமையான உடன்பாட்டினையும் எட்டியிருந்தது. 

இவ்வாறான நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆதரவளித்தார்கள். அந்த செயற்பாடு கூட்டமைப்பிற்கு அதிர்ச்சிகலந்த வியப்பினை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த கட்சிகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக 20ஐ எதிர்த்திருந்தாலும் அவர்களின் உறுப்பினர்கள் மறுபட்ட நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றார்கள்.

விசேடமாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதிமன்றில் 20இற்கு எதிராக வழங்குதாக்கல் செய்து அதில் ஆஜராகியபோது 18ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்து செய்த பாவத்தினை கழுவுவதற்காகவே 19ஆவது திருத்தத்தினை ஆதரித்ததாகவும், தற்போது 20ஆவது திருத்தம் மீண்டும் வந்திருக்கின்றது நிலையில் அதனை பாராளுமன்றில் நிறைவேற்றி ஜனநாயகத்திற்கு பாதகத்தினை ஏற்படுத்தும் நிலைமைகள் இருப்பதால் உயர்நீதிமன்றம் தலையீடு செய்து அதனை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். 

அத்தகைய நிலையில் அவர் 20இற்கு எதிராக தனது கட்சியின் முழுமையான பலத்தினை பயன்படுத்துவதற்கு தவறிவிட்டார். அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையும் முழுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்த தவிறிவிட்டது. 

முஸ்லிம் கட்சிகளின் இந்த மாறுபட்ட செயற்பாடானது அவர்களின் அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவதாகவே இருக்கின்றது. குறிப்பாக அக்கட்சிகளின் தலைமைகள் இந்த விடயத்தில் மக்களை முட்டாள்களாக கருத்தாது உரிய தெளிவுபடுத்தல்களை உடன் செய்ய வேண்டும் என்றார்
 

 

https://www.virakesari.lk/article/92926

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

அதில் முழுமையான உடன்பாட்டினையும் எட்டியிருந்தது. 

நீங்கள் உடன்பாடுகள் போட்டால் பேச வேண்டுமா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் முதல், ரிசாத் வரை, அதாவுல்லா முதல், ஹிஸ்புல்லா வரை செய்த பெரும், ஊழல்கள், மோசடிகள் மேற்படியான் கையில் உள்ளது.

ரிசாத்துக்கு நடந்தது தமக்கும் நடக்கும் என்ற பயம்.

மேலும், கிழக்கில், பிள்ளையான், வியாளேந்திரன், கருணா, வடக்கே அங்கஜன், டக்ளஸ்... மேற்படியான் மடியில்.

அதால முந்திக் கொண்டு, கேட்காமலே.... கையை தூக்கியாச்சு.

பூணைக்கும் ஒரு காலம் வரும் தானே.🤗

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.