Jump to content

சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை?

  • விக்னேஷ்.அ 
  • பிபிசி தமிழ்
computer programming in sanskrit

பட மூலாதாரம், METAMORWORKS VIA GETTY IMAGES

 

(இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் மூன்றாம் பாகம் இது.)

கணிப்பொறி அறிவியல் அல்லது பொறியியலை பள்ளியிலோ கல்லூரியிலோ பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே கணினியைக் கையாள முடியும் எனும் நிலையும் சமீப ஆண்டுகளில் மாறியுள்ளது. 

கணிப்பொறிகளைக் கையாள்வது பற்றிய அறிவு பரவப் பரவ, அது பற்றிய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பலவும் பரவத் தொடங்கின. 

அவற்றுள் மிகவும் பிரபலமான புரளி சமஸ்கிருதம்தான் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது. 

மென்பொருட்கள் கணினிக்காக உருவாக்கப்பட்ட நிரல்மொழிகளின் குறியீடுகள் மூலமே உருவாக்கப்படுகின்றன எனும்போதும், சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது சமூக ஊடகங்கள் வலுப்பெற்ற காலத்துக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. 

ஆனால், சமஸ்கிருத மொழியின் குறியீடுகள் மூலம் உருவாக்கப்பட்ட மென்பொருள் என்றோ, சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டு மென்பொருட்கள் நிரல் செய்யப்படுவதற்கான வழிமுறை என்னவென்றோ இதுவரை யாரும் தெளிவுபடுத்தவில்லை. 

நிரல் மொழிகளுக்கு பதிலாக சமஸ்கிருதம் மூலமாகவோ, வேறு ஏதேனும் மொழிகளின் மூலமாகவோ மென்பொருட்களை உருவாக்க முடியும் என்பது இதுவரை சாத்தியப்படவில்லை. 

இந்தப் புரளி எப்படித் தொடங்கியது? 

1985இல் வெளியான AI Magazine எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த சஞ்சிகையில், அமெரிக்காவில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் (Research Institute for Advanced Computer Science) எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ், 'சமஸ்கிருதம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அறிவை வெளிப்படுத்துதல்' (Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence) எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். 

மனிதர்கள் பயன்படுத்தும் வாக்கியக் கட்டமைப்புகளை உள்ளீடுகளாக கணினியில் செலுத்தினால் அதை அவ்வாறாகவே புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற மொழி குறித்து அந்தக் கட்டுரையில் அவர் விவரித்துள்ளார். 

உதாரணமாக 'ஆசிய கண்டத்தில் எத்தனை நாடுகள் உள்ளன?' என்ற கேள்வியை நீங்கள் கணினியிடம் கேட்டால், அதைப் புரிந்துகொண்டு, அதற்கான பதிலை கணினி உங்களுக்கு வழங்க ஏற்ற மொழி உள்ளதா என்பதே அதன் சாராம்சம். 

computer coding

பட மூலாதாரம், GETTY IMAGES

 

"கணினி புரிந்துகொள்ளும் வகையில் வாக்கியக் கட்டமைப்பை ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் கொண்டுள்ளன. 1,000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியை உடைய சமஸ்கிருத மொழி அத்தகைய வாக்கியக் கட்டமைப்பை கொண்டுள்ளது," என்று ரிக் ப்ரிக்ஸ் குறிப்பிடுகிறார். 

இன்றைய நிலை என்ன? 

ரிக் ப்ரிக்ஸ் இந்தக் கட்டுரையை எழுதிய ஆண்டு 1985. கூகுள், யாஹூ போன்ற தேடுபொறிகள் எதுவும் இணையத்தில் அறிமுகம் செய்யப்படாத காலம் அது. 

ஆனால், இப்போது தமிழ், ஆங்கிலம், மலையாளம் என எந்த மொழியில் உள்ள வாக்கியத்தை உள்ளீடாகக் கொடுத்தாலும் அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் முடிவுகளை வழங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 

மனிதர்கள் பேசும் மொழிகளை அந்தக் கட்டமைப்பிலேயே (language syntax) செயற்கை நுண்ணறிவைக் கொண்டு கணினிகளால் புரிந்துகொள்ள முடியாது என்று கருதப்படுவது மொழியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் செய்யப்பட்டுள்ள பல ஆய்வுகளை புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளன என்று தனது கட்டுரையில் ரிக் ப்ரிக்ஸ் விவரிக்கிறார். 

ஆனால், அவர் குறிப்பிட்டுள்ளபடி சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின் கட்டமைப்பு மட்டுமே செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற வகையில் இல்லை. எல்லா மொழிகளின் கட்டமைப்பையும் கணினிகள் தற்போது புரிந்து கொள்கின்றன.

சோஃபியா
 
படக்குறிப்பு, 

 

உதாரணமாக 'ஜப்பானின் தலைநகரம் எது' அல்லது 'What is the capital of Japan' என்று எந்த மொழியில் நீங்கள் கூகுள், யாஹூ போன்ற தேடு பொறியில் தேடினாலும் டோக்கியோ நகரம் பற்றிய தகவல்கள் உங்கள் கணினியின் திரையில் பட்டியலிடப்படும். காரணம் இரு மொழிகளையும், அவற்றின் வாக்கியக் கட்டமைப்புகளையும் தேடு பொறிகள் புரிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இப்போது மனிதர்களுடன் உரையாடும் அளவுக்கு திறன் உள்ள ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. 

அந்த அடிப்படையில் பார்த்தாலும் மென்பொருட்களை உருவாக்க மட்டுமல்லாது, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் சமஸ்கிருதம் அல்லது வேறு எந்த ஒரு மொழியைச் சார்ந்தும் இல்லை என்றும், மனிதர்கள் பேசும் எந்த ஒரு மொழியையும் உள்ளீடாகக் கொடுத்து அதே மொழியில் கணினி அல்லது ரோபோ போன்ற இயந்திரத்திடம் இருந்து பதிலைப் பெரும் வகையில் நிரல்மொழிக் குறியீடுகள் மூலம் செய்ய முடியும் என்பதும் தெளிவாகிறது. 

மனித மொழி - இயந்திர மொழி 

கையாள்பவர் பிறப்பிக்கும் உத்தரவுகளை கணினி நிறைவேற்றச் செய்யும் மென்பொருட்களை உருவாக்க நிரல்மொழிக் (programming language) குறியீடுகள் (coding) பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த நிரல் மொழிகள் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன எனும்போதிலும், தமிழ், வங்கம் போன்ற வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. 

உதாரணமாக C அல்லது C++ போன்ற நிரல் மொழிகளில் 'Print' என்று வழங்கப்படும் கட்டளை, 'எழில்' என்ற பெயரில் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள நிரல் மொழியில் 'பதிப்பி' என்று வழங்கப்படுகிறது. 

நிரல்மொழிக் குறியீடுகள் மனிதர்கள் பேசும் எந்த மொழியில் இருந்தாலும் அந்தக் குறியீடுகள் பணிக்கும் வேலையைப் புரிந்துகொண்டு அவற்றைக் கணினிகள் மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் நிறைவேற்றியே வருகின்றன. 

சமஸ்கிருத எழுத்துகள் மற்றும் எண்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

சமஸ்கிருத எழுத்துகள் மற்றும் எண்கள்

ஆங்கிலம் தவிர்த்த மொழிகளில் கணிப்பொறி ஆராய்ச்சி அதிவேகத்தில் நடந்து, அதே வேகத்தில் பயன்பாட்டில் மாற்றங்களும் நடந்துவரும் சூழலில் உலகில் எழுத்து வடிவம் உள்ள அனைத்து மொழிகளிலும் நிரல்மொழிகள் உருவாக்கப்படவில்லை என்றாலும் பெரும்பான்மையாக தொழில்நுட்பப் புழக்கத்தில் இருக்கும் மொழிகளில் கணினிகளுக்கான நிரல் மொழிகள் எதிர்வரும் ஆண்டுகளில் உருவாக வாய்ப்புண்டு. 

அது நிகழும்போது கணினிக்கு ஏற்ற மொழி என்ற குறிப்பிட்ட ஒரு மொழி இருக்காது. 

நிரல்மொழிக் குறியீடுகளை கணினி இயந்திர மொழியாக மாற்றி (machine language), எந்தச் செயலைச் செய்யுமாறு பணிக்கப்படுகிறதோ அதைக் கணினி செய்கிறது. 

அது கூகுளில் எதையாவது தேடுவதாக இருக்கலாம், கூட்டல் கணக்குக்கு விடை சொல்வதாக இருக்கலாம், உங்களுக்குப் பிடித்த பாடலை இசைக்கச் செய்வதாகவும் இருக்கலாம்.

இந்தக் கட்டளைகளை கணினிக்கு புரிந்துகொள்ள வைக்க நிரல் மொழிகளால் மட்டுமே முடியும். கணினி அல்லது ரோபோ போன்ற வேறு இயந்திரம் எதையும் மனிதர்கள் பேசும் மொழிகளைப் பேசவோ, எழுதவோ வைக்க வேண்டுமானாலும் நிரல்மொழிகளே தேவை. 

ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், மாண்டரின் என மனிதர்கள் பேசும் மொழிகளின் சொற்களைக் கொண்டு நிரல் மொழிக் குறியீடுகள் உருவாக்கப்படாவிட்டால் எவ்வளவு இனிமையான, கவித்துவமான மனித மொழியில் சொன்னாலும் அது இயந்திரத்துக்குப் புரியாது.

 

 

https://www.bbc.com/tamil/science-50850117

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.