Jump to content

தமிழ் அரசு கட்சிக்குள் குழு செயற்பாடு தொடர்ந்தால் கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள்: இரகசியமாக கூடி ரெலோவிற்கு அங்கீகாரமளித்தது தலைமைக்குழு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசு கட்சிக்குள் குழு செயற்பாடு தொடர்ந்தால் கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள்: இரகசியமாக கூடி ரெலோவிற்கு அங்கீகாரமளித்தது தலைமைக்குழு!

October 25, 2020
spacer.png

 

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன்- சி.சிறிதரன் கூட்டு தொடர்ந்து கூட்டமைப்பு செயற்பாடுகளிற்கு எதிராக செயற்பட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய தமிழ் தேசிய அணியொன்றை உருவாக்க தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு நேற்று (24) அங்கீகாரம் அளித்துள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு நேற்று வவுனியாவில் கூடியது.

வழக்கத்தை போல ஆர்ப்பாட்டங்களின்றி காதும் காதும் வைத்ததை போலவே இந்த தலைமைக்குழு கூடியது.

 

இதன்போது, எட்டு தலைமைக்குழு உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.

கட்சியின் தேசிய மாநாடு நடந்து 2 வருடங்களாகும் நிலையில், நவம்பர் 2ஆம் திகதிக்கு முன்பாக தேசிய மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மாநாட்டை நடத்துவதில்லையென தீர்மானிக்கப்பட்டது.

விரைவில் கட்சியின் வெற்றிடமாக உள்ள பதவிகளை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், கோடீஸ்வரன் ஆகியோர் வகித்த பொதுச்செயலாளர், தவிசாளர், உப பொருளாளர் பதவிகளிற்கு ஆட்களை நியமிப்பதென முடிவாகியது.

 

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ரெலோவிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பொறுப்புக்களிற்கு எதிராக அண்மை நாட்களாக எம்.ஏ.சுமந்திரன்- சிறிதரன் கூட்டணி செயற்பட்டு வருவது குறித்து ஆராயப்பட்டது.

கூட்டமைப்பிற்குள் உரிய அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில், கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது. பின்னர் இது குறித்து நீண்ட வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

 

அதன்படி, கூட்டமைப்பிற்குள் உரிய அங்கீகாரம் தரவில்லையென்றால் ரெலோ கூட்டமைப்பிலிருந்து விலகலாமென தலைமைக்குழு அங்கீகரித்தது.

spacer.png

 

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுடன் பேசி இதற்கு தெளிவான முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளுடன் பேசி, வலுவான முன்னெடுப்பை ரெலோவே மேற்கொள்ளுமென தீர்மானிக்கப்பட்டது.

 

இதேவேளை, எதிர்வரும் 3ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இது குறித்து ஆராயவுள்ளதால், 3ஆம் திகதிக்கு பின்னர் இந்த விவகாரத்தில் இநுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது.

 

 

http://www.pagetamil.com/152841/

Link to comment
Share on other sites

இரகசியமாக கூடி முடிவெடுத்ததை யாரப்பா பேப்பரில் போட்டது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

இரகசியமாக கூடி முடிவெடுத்ததை யாரப்பா பேப்பரில் போட்டது? 

கிருபன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2020 at 18:40, கிருபன் said:

ரெலோ கூட்டமைப்பிலிருந்து விலகலாமென தலைமைக்குழு அங்கீகரித்தது.

விலகி.......?  டக்கியுடன் இணையலாம் என அனுமானிக்க முடிகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.