Jump to content

கிழக்கு மாகாண மக்கள் விழித்தெழும் நேரம் இது’-மட்டு.நகரான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண மக்கள் விழித்தெழும் நேரம் இது’-மட்டு.நகரான்

October 25, 2020
 
 
Share
 
 
IMG_0142-696x522.jpg
 53 Views

தமிழ் தேசிய போராட்டத்தில் இழப்புகள் என்பது எண்ணிலடங்காது. கடந்த 35வருட காலத்தில் நாங்கள் பெற்றுக்கொண்டதைவிட இழந்தது அதிகம். வடகிழக்கு இந்த இழப்புகளில் மீள்வதற்கான வழிவகைகள் இன்றி இன்றும் தடுமாறி வருவதை நாங்கள் உணர முடிகின்றது.

இந்த இழப்புகளில் அதிகமான இழப்புகளை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டிருந்தது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முஸ்லிம்கள், சிங்களவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறையிலும் தமிழர்கள் பல இழப்புகளை எதிர்கொண்டனர்.

கிழக்கு மாகாணம் என்பது, தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம். இன்று இலங்கையில் ஆதிக்குடிகளாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான பல ஆதாரங்கள் வெளிப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணம் முற்றுமுழுதான தமிழர்களின் ஆளுகைக்குள் இருந்த மாகாணமாக இருந்தபோதும், இன்று தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியான மாகாணமாக இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் தமிழர்களின் பாரம்பரிய பூமியான கிழக்கு மாகாணத்தினை நன்கு திட்டமிட்ட வகையில் காலங்காலமாக அபகரிப்பதற்கு சிங்கள,முஸ்லிம்கள் எதற்காக இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றார்கள் என்பதை தமிழர்கள் சரியாக கவனிக்கத் தவறி விட்டனர் என்பதே உண்மையாகும். இதன் காரணமாகவே இன்று தமிழர் நிலங்களின் பெரும்பகுதிகள் அபகரிக்கப்பட்டு விட்டன. இதுவரைக்கும் தமிழர்கள் தங்களது பகுதிகளை பாதுகாப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இந்த அபகரிப்புகள் எதற்காக முன்னெடுக்கப்பட்டன, அவற்றினை தடுப்பதற்காக நாங்கள் என்ன நடவடிக்கைகள் முன்னெடுத்தோம் என்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

கிழக்கு மாகாணம் என்பது கடல்வளம் ஒரு பகுதியாகவும், நீர்வளங்கள் கொண்ட குளங்களை ஒரு பகுதியாகவும்; நிலங்கள், காடுகள் என அனைத்து வளங்களைக் கொண்ட பகுதியாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தினை தமிழர்கள் வளமிக்க ஆட்சியை நடாத்தக் கூடியதாகயிருந்தது. அதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை கண்டியை ஆட்சி செய்த பல மன்னர்கள் தங்களது ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இந்த நாட்டுக்கு வந்த வெள்ளைக்காரர்களும் கிழக்கினை தங்களது ஆளுகைக்குள் கொண்டுவந்து, ஆட்சி செய்துள்ளனர்.

இத்தனை வளங்கள் கொண்ட கிழக்கு மாகாணத்தின் எஞ்சியுள்ள தமிழர்களின் நிலங்களையும் தமிழர்கள் பாதுகாக்க தவறினால், எதிர்காலத்தில் தமிழர்கள் அடையாளமிழந்த நிலையில் செல்வது மட்டுமன்றி எதிர்கால சமூகம் வெறும் அடையாளத்தினை தொலைத்த வறுமையில் உள்ள சமூகமாக மாறும் நிலையுருவாகும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாகவுள்ள பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே காணப்படுகின்றது. திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வளமிக்க காணிகள், வளமிக்க பகுதிகள் சிங்கள-முஸ்லிம்களினால் அபகரிக்கப்பட்டு விட்டன. இன்று ஓரு சில ஆலயங்களுக்கு மன்னர்களினால் பட்டயம் வழங்கப்பட்ட காணிகளே மீதமாகவுள்ளன. தமிழர்களின் இருப்பாக இருந்த காணிகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட வகையில் அபகரிக்கப்பட்டு விட்டன.

நாங்கள் எமது வளங்களையும், எமது காணிகளையும் முறையாக பயன்படுத்தப்படாது விட்டமையாலேயே எமது வளங்களை ஏனைய சமூகங்கள் இலகுவில் அபகரிக்க முடிந்தது. தமிழர்கள் தங்களது வளங்களை முறையாக பேணாத காரணத்தினாலேயே இவ்வாறான நிலையேற்பட்டது. யுத்தத்தினை ஒரு காரணமாக கொண்டாலும், யுத்ததிற்கு பின்னரான காலத்தில் எமது வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கையெடுத்தோம் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

இன்று இந்தியாவும், சீனாவும் திருகோணமலையில் காணிகளை கோருகின்றது என்றால், அவர்கள் பெருமளவான பணத்தினை இங்கு கொண்டுவந்து வீணாக்க அவ்வாறு கோரவில்லை. அவர்களுக்கு தெரியும் இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி தமது நாட்டுக்கு கொண்டுசெல்ல முடியும் என்று; ஆனால் அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்த நாங்கள் அது தொடர்பில் சிந்திக்க தவறும் நிலையே காணப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் வளங்களை இழந்து கிழக்கு மாகாணத்தினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் கொழும்பில் அடுக்குமாடி வீடுகளையும், சொத்துகளையும் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தினை கிழக்கில் முதலிடுவதில் காட்டுவதில்லையென்ற கவலை நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இன்று கிழக்கு மாகாணத்தில் பணம் படைத்த சிங்களவர்களும், முஸ்லிம்களில் உள்ள பணம் படைத்தவர்களும் தமது பணத்தினைக் கொண்டு காணிகளை கொள்வனவு செய்து, தொழிற்சாலைகளையும் சுற்றுலா விடுதிகளையும் அமைக்கும் நிலையினை மாற்றுவதற்கு எந்த தமிழரும் முயற்சிக்கவில்லையென்ற கவலை நீண்டகாலமாக இருந்து வருகின்றது.

இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் அறுவடை செய்யும் நெல்லும், பெறப்படும் பாலும் தெற்கிற்கும் முஸ்லிம்களிடமும் செல்கின்றது. அதன் காரணமாக அவர்கள் தனவந்தர்களாகி காலப்போக்கில் தமிழர்களின் விவசாய நிலங்களையும் சொத்துகளையும் தங்கள் வசமாக்கும் நிலையே இருந்து வருகின்றது. விவசாயிகளின் கஸ்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்களது கைங்கரியத்தினை மிகவும் சூட்சுமமான முறையில் செயற்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தினை எதிர்வரும் காலங்களில் பாதுகாத்து எஞ்சியுள்ள தமிழர்களின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க வேண்டுமானால், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகளவான முதலீடுகளை செய்ய வேண்டும். வடக்கில் இன்று அதிகளவான தமிழர்கள் பல்வேறு முதலீடுகளை முன்னெடுத்துள்ள நிலையிலும் கிழக்கில் அந்த நிலை மிகவும் குறைவானதாகவே உள்ளது.

இன்று பல வளங்கள் தமிழர்களிடம் உள்ளது. அவற்றில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் தமிழர்களின் வறுமையினை நீக்க முடியும். வேலைவாய்ப்பினை ஏற்படுத்த முடியும், தமிழர்களின் இருப்பினை பாதுகாக்க முடியும். எதிர்வரும் காலங்களில் அவற்றினை தமிழர்கள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இன்றும் கிழக்கு தமிழர்கள் உள்ளார்கள்.

https://www.ilakku.org/கிழக்கு-மாகாண-மக்கள்-விழ/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.