Jump to content

தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?


Recommended Posts

தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். 

இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர்,  ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமானது. அவ்வகையில் ஓக்டோபர் மாத நினைவுகள் மகத்தானவை தான். 

இன்று, அந்தப் புரட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டியிருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.  இப்போது ‘எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன’ என்ற பழைய பல்லவியை, திரும்பத் திரும்பக் கேட்கிறோம். ஆனாலும், இன்றும் இலங்கையின் வடபுலத்தில் புரையோடிப் போயுள்ள ஒரு சமூகப் பிரச்சினை சாதியம் சார்ந்தது. நுழையமுடியாத கோவில்கள், பிடிக்க முடியாத வடங்கள், பாட அனுமதியில்லாத தேவாரங்கள் எனக் கடந்த சில ஆண்டுகளில், எத்தனையோ உதாரணங்களைக் கண்டிருக்கிறோம். இனியாவது, பேசாப் பொருளைப் பேசத் துணிவோம். 

அண்மையில், இதே ஒக்டோபர் மாதத்தில், கிளிநொச்சியின் பெரிய பரந்தனில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில், பாடசாலை மாணவனுக்கு, அவனது சாதிய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, தேவாரம் பாடும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இது தனித்த நிகழ்வல்ல. 

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம், கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால், முன்புபோல இன்றும் தமிழ்ச்சமூகத்தில் தகர்க்கப்படாத அம்சமாக இருப்பது சாதியமே. தமிழ் மக்கள், சொல்லொணாத் துயரங்களைக் கடந்த 40 ஆண்டுகளில் அனுபவித்துள்ளார்கள். உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள், அகதிமுகாம் வாழ்க்கை என எல்லாவற்றிலும், அதற்கும் மேலாக, விடுதலைப் புலிகள் தலைமைப் பாத்திரமேற்ற போராட்டத்திலும், சாதியம் தகர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. 

இலங்கைச் சமூக அமைப்பின் அசைவியக்கத்தில், சாதியம் ஒரு கூறாக நிலைத்து, நீடித்து வந்துள்ளது. குறிப்பாக, இலங்கைத் தமிழர்களிடையே சாதியமும் அதன் உடன்பிறப்பான தீண்டாமையும், தீவிரமான சாதிய முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் இருந்து வந்துள்ளன. 

இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டமொன்று, இதே வடபுலத்தில் வெற்றியடைந்த கதையை, அடுத்த தலைமுறைக்குச் சொல்லியாக வேண்டும். 1966ஆம் ஆண்டு ஒக்டோபரில், வடபுலத்தில் புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை உண்டாக்கி இருக்கின்றன. 

1966-71 வரையான காலப்பகுதியில், நடத்தப்பட்ட கடுமையான போராட்டங்களால், இலங்கையின் வடபுலத்தில் பொது இடங்களில், தீண்டாமை ஒழிக்கப்பட்டதுடன் சாதியத்தின் தீவிரமும் பலமான எதிர்வினைகளின் மூலம் பலமிழக்கச் செய்யப்பட்டது. ஈழத்தமிழர் வரலாற்றின் சில முக்கியமான பக்கங்களை, இப்போராட்டங்களும் அதுசார்ந்த அரசியல் நிலைப்பாடுகளும் நிரப்பியுள்ளன. ஆனால், இன்றும் ‘அடக்கி வாசிக்கப்படுகின்றது’, ‘இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது’ என்றவாறாகவே, இந்த வரலாறு இருந்து வந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையின் பெயரால், இந்த மறைப்புகள் நியாயப்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால், இவை கட்டாயம் பேசப்பட வேண்டியவை. 

மனிதனை மனிதன், சாதியத்தின் பேரால் ஒடுக்குகின்றதும், புறந்தள்ளுகின்றதுமான ஒரு சமூகம், அரசியல் விடுதலைக்கு இலாயக்கற்றது. சமூக விடுதலையை பெறாத, சமூகநீதியை வலியுறுத்தாத ஒரு சமூகம், அரசியல் விடுதலையைப் பெற்றுவிட முடியாது. அகஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவராமல், புறஒடுக்குமுறைகளின் பேரால், ஈழத்தமிழ்ச் சமூகம் அகஒடுக்குமுறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ச்சியாகப் பணயிக்க முடியாது.  

செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குழுவினருக்கான அடையாளத்தை மட்டுமின்றி, அரசியல், பொருளாதாரம், சமூகப் பண்பாட்டு விடயங்களை, அவர்கள் மறுதலிக்க முடியாதவாறு தீர்மானிக்கின்ற சமூகக் கட்டமைப்பாகச் சாதியம் தோற்றம் பெற்றது. இது, கீழைத்தேய குழு வாழ்க்கை முறையின் பாதகங்களின் ஒன்றாகும். 

இச்சமூகக் கட்டமைப்பு, தேசிய அரசுகளின் தோற்றத்துடன், எவ்வாறு அரச அதிகாரக் கட்டமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது என்பதைப் பார்த்தால், தேசிய அதிகாரத்தின் உருவாக்கமும் நிலைப்பும் சாதியக் கட்டமைப்புகளுக்கூடாக இயங்குவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஏனெனில், இந்தப்பிரிவுகள் சமூகங்களில் நிலைப்பதை, ஏகாதிபத்திய உலகமயமாதல் விரும்புகிறது. தமிழ் மக்களின் அரசியலும் போராட்டமும் வாழ்க்கையும் பண்பாட்டுக் கூறுகளும், சாதியத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டவையாகவும் அதனடிப்படையில் வழிநடத்தப்படுபவையாகவே இன்றும் இருக்கின்றன. இதன் பின்புலத்தில், 1960களில் நடந்த சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை நினைவுபடுத்தல் தகும். 

அஹிம்சை வழியில் போராட்டம், சத்தியாக்கிரகம் எனத் தமிழ்த் தேசிய அரசியல், பயணித்துக் கொண்டிருந்த காலத்தில், மக்களின் பரந்துபட்ட எழுச்சியுடன், வடபுலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கப்படக் கூடாத பக்கங்களை உடையன. 

சுமார், ஐந்து (1966-71) வருடங்கள் நீடித்த வெகுஜனப் போராட்டங்கள், சாதியத் தீண்டாமையை உடைத்தெறிந்தன. தேநீர்க் கடைகள், கோவில்கள், பாடாசாலைகள், பொது இடங்களில் சமத்துவமும் ஜனநாயகமும் நிலை நாட்டப்பட்டன. சட்டரீதியாகவும் சட்டமறுப்பாகவும் ஆயுதங்களைக் கையாண்ட அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களில், 15 பேர் தமது இன்னுயிர்களை இழந்து, தியாகிகள் ஆகினர். 46 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற ஒக்டோபர் எழுச்சியும் அதன் பாதையிலான போராட்டங்களும், பெறுமதிமிக்க அனுபவங்களையும் பட்டறிவுகளையும் தந்துள்ளன. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம், பின்னடைவைச் சந்தித்திருக்கும் இன்றைய சூழலில், அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களின் அனுபவங்கள், மிகக் கனதியும் பெறுமதியும் மிக்கவையாகும்.

சாதிய மறுப்பே, இன்றும் யாழ். உயர்சாதியினரின் ஆயுதமாக இருக்கிறது. அவர்கள் இன்றும், பழைமைவாதத்தையும் சாதியத்தையும் கொண்டிருப்பவர்களைத் தூக்கி நிறுத்திப் புகழ் பாடுகிறார்கள். அதேவேளை, அவற்றுக்கு எதிரான கருத்துக்களை நிராகரிப்பதுடன், இருட்டடிப்பும் செய்கிறார்கள். உதாரணமாக, பொன்னம்பலம் இராமநாதனைப் போற்றிப் புகழுவோர், அவரது தம்பியான அருணாசலத்தைக் கவனிப்பதில்லை. காரணம், தனது சூழலையும் மீறிய வகையிலான சமூகச் சார்புக் கருத்துகளை, அருணாசலம் முன்வைத்தமையே ஆகும். 

அவ்வாறே, எஸ்.ஜே.வி செல்வநாயகம் சாதியத்தை ஒழிக்கப் பாடுபட்டார் என்று கூறும் தமிழ்த் தேசியவாதிகள், அவரது காலத்தில், கண்ணெதிரே இடம்பெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி வாயே திறப்பதில்லை. சாதியம், இழிவாகவும் ஒடுக்கு முறையாகவும் இருப்பதையிட்டுத் தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பிரச்சினை இல்லை. அதை அம்பலப்படுத்துவதும் எதிர்த்துப் போராடுவதும் தான், அவர்களுக்குப் பிரச்சினையாகிறது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், இச்சாதியம் இப்போதும் பேணப்படுவதைக் காணலாம். இவை, வளமான ஒரு சமூகத்தின் நற்கூறுகளல்ல. 

சாதியத்தின் தாக்கம் என்பது, ஒடுக்கப்பட்ட சாதியினரின் பிரச்சினைகள் தான். ஆனால், அதற்கு எதிரான போராட்டங்களும் தீர்வுகளும் அவர்களுக்குரிய பிரத்தியேகமான நிகழ்ச்சி நிரலல்ல. சாதியம் என்பது, இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள விசேட சமூகக் கட்டுமானமாக நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும், இலங்கையின் சாதியக் கட்டமைப்பு, இந்தியக் கட்டமைப்பிலும் வேறுபட்டதாகும்.

இலங்கையிலும் வடக்கு, சாதியக்கட்டமைப்பு கிழக்கிலிருந்து வேறுபடுவதுடன் சிங்கள, மலையகத் தமிழ் மக்களிடமும் முஸ்லிம்களிடமும் வித்தியாசமான சாதியம் இருப்பதை அவதானிக்க முடியும். ஆனால், ஒடுக்கப்படும் சாதிகளும் ஒடுக்கும் சாதிகளின் ஆதிக்கமும் அரசியலிலும் பொருளாதார சமூகப் பண்பாட்டு அம்சங்களிலும் நிறுவனப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான அம்சமாகும்.

தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் என்ற பொதுவான கோஷத்துக்குள், சாதியம் முற்றாக தகர்க்கப்படாது மறைக்கப்படுகிறது; மறைந்து கொண்டுள்ளது. பொதுவாக, தேசிய அரசுக்கான  அல்லது சுயாட்சிக்கான போராட்டம் என்பதால் மட்டும், அதற்குச் சாதியத்தைத் தகர்க்கும் வலிமை வந்து விடுவதில்லை. ஏனெனில், தேசிய அரச அதிகாரம் கொலனித்துவ, ஏகாதிபத்திய அதிகாரம் ஏகாதிபத்திய உலகமயமாதலின் ஆதிக்கம் ஆகியன வேறுவேறு விதங்களில், சாதிய சமூகக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொள்கின்றன. 

சமூக மாற்றத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டங்களே, உண்மையான சாதியத் தகர்ப்பைக் கொண்டிருக்க முடியும். அதற்கான கொள்கை நடைமுறைகளே, வெறும் சுலோகங்களையும் வார்த்தைகளையும் விட, அர்த்தம் நிறைந்ததாகும். போராட்டங்களின் பொதுவான போக்கும் எதிர்பார்ப்பும் ஆயுத நடவடிக்கைகளும் சாதியமைப்பை வலுக்குறைந்துள்ளதாகத் தோன்றினாலும், அது உண்மையல்ல என்பதை, இன்று நடைமுறையில் காண்கிறோம்.

போர் ஓய்ந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. கடந்த பத்தாண்டுகளில், சாதியம் மீண்டும் முனைப்புப் பெற்றுள்ளது. அதனிலும் மேலாக, இப்போது அது வெளிவெளியாகத் தென்படுகிறது. நாங்கள் மீண்டும் பழைய காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். வடபுலத்தில் இன்னொரு தீண்டாமை ஒழிப்பு, வெகுஜன இயக்கத்துக்கான தேவை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இன்றும் பேசாப் பொருளாய், பேச விரும்பாத ஒரு பொருளாய் சாதியம் தமிழ்ச்சமூகத்தில் இருக்கிறது. எமது மனங்களில் ஆழப்பதிய வைக்கப்பட்ட எண்ணங்களில் இருந்து, நாம் வெளிவரல் வேண்டும். சமூகநீதி குறித்துப் பேசாமல், செயலாற்றாமல் தமிழ் மக்களின் விடுதலை என்று பேசுவது பயனற்றது. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்ச்-சமூகத்தில்-சாதியம்-பேசாப்-பொருளை-பேச-நாம்-துணிவோமா/91-257440

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.