Jump to content

தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன்

October 26, 2020
 
 
Share
 
 
880fbeb4-acca-4e57-8c6f-e4c71d5d74f9-696
 36 Views

ஈழத்தமிழினத்தின் தாயகம், ‘தமிழீழம்.’ இது இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் புத்தளம், சிலாபம் மாவட்டக் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய 20,000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது. இந்த தமிழர் தாயக நிலப்பரப்பிற்கும் சிங்களவர் வாழும் நிலப்பரப்புக்கும் இடையே பெரும் காட்டுப் பிரதேசம் எல்லையாக இருந்தது.

கி.பி. 1500ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழர் தாயகப் பகுதிகள் ஈழத்தமிழர்களால் ஆளுகை செய்யப்பட்டது. சிங்களவர் பகுதிகள் சிங்களவர்களால் ஆளுகை செய்யப்பட்டது. கி.பி.1796ஆம் ஆண்டில் இலங்கைத் தீவை ஆக்கிரமித்த பிரித்தானியர்கள், தமது ஆளுகை வசதிக்காக 1832ஆம் ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகளையும் சிங்களவர் தாயகப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒற்றையாட்சி முறைக்கு கீழ் கொண்டு வந்து ஆளுகை செய்தனர். இந்த நிலை 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது வரை தொடர்ந்தது.

இலங்கை சுதந்திரம் அடைந்த போது, தமிழர் தாயகப் பகுதிகள் சிங்கள அரசின் ஆளுகைக்கு கீழ் கொண்டுவரப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, இலங்கையை ஆண்ட சிங்கள பௌத்த இனவாத அரசுகள், தமிழர் தாயகத்தைச் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எணணக்கருவைச் சிதைக்கும் சிங்களக் குடியேற்றத் திட்டங்களைப் பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் தமிழ் மொழியை அழித்து, தமிழர் வரலாற்றைத் திரித்து கலை பண்பாட்டைச் சீரழித்து, தமிழர் தாயக பூமியை சிங்கள பூமியாக மாற்றி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் இறையாண்மையையும் மறுக்கும் நிலையை உருவாக்கச் சிங்கள அரசுகள் முற்பட்டுள்ளன. இதை அடைவதற்கு சிங்கள அரசுகள் பல்வேறுபட்ட சூழ்ச்சிச் செயற்றிட்டங்களை  நிறைவேற்றி வந்துள்ளன. அத்துடன் நிறைவேற்றியும் வருகின்றன. இந்த வழியில் ஈழத்தமிழினத்தின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீர்குலைத்து அரசியல் உரிமையைக் கேள்விக்குறியாக்கிப் பலவீனப்படுத்தச் சிங்கள அரசுகள் திட்டமிட்டுள்ளன.

  • தமிழர் தாயக எல்லைகளை கைப்பற்றும் திட்டங்கள்
  • தமிழர் தாயகப் பகுதிகளைத் துண்டாடும் திட்டங்கள்
  • தமிழர் தாயத்தின் கரையோரப் பகுதிகளைச் சிங்களமயப்படுத்தும் திட்டங்கள்
  • ஈழத்தமிழர் வரலாற்றைத் திரிவுபடுத்தும் திட்டங்கள்
  • தமிழர் தேசியத்தைச் சிதைத்து, அரசியல் உரிமையை மறுக்கும் திட்டங்கள் எனப்

பல்வேறு செயற்றிட்டங்களைச் சிங்கள அரசுகள் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டங்களைச் சுலபமாக நிறைவேற்றும் வகையில் வாய்ப்பான சூழ்நிலைகளும் உருவாக்கப்பட்டன.

eelam_map002.gif

*தமிழர் தாயகத்தை இராணுவமயப்படுத்தல்

*தமிழர் தாயக மாவட்டத்தின் பொறுப்பாக சிங்கள அரச அதிகாரிகளையும் இராணுவ அதிகாரிகளையும் நியமித்தல்

*தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள பௌத்த விகாரைகளை உருவாக்குதல்

*தமிழர் தாயகப் பகுதிகளுடன் சிங்களப் பகுதிகளை இணைத்தல்

*தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து சிங்களவர் பாராளுமன்றப் பிரதிநிதிகளாகச் செல்லும் நிலையை ஏற்படுத்துதல் என்ற அடிப்படையில் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துதல்

*இந்த நிலைமைகள் யாவும் ஈழத்தமிழினத்தின் வாழ்வு நிலைகளையும் வாழ்வு இயக்கங்களையும் மாற்றியமைத்தன. ஈழத்தமிழினத்தின் எழுச்சியையும் அரசியல் உரிமையையும் பலவீனப்படுத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு மாற்றங்களைத் தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தியுள்ளன.

*ஈழத்தமிழர்கள் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

*தமிழர் தாயகத்தில் ஈழத்தமிழரின் இனவிகிதாசாரம் குறைந்து சிங்களவரின் இனவிகிதாசாரம் அதிகரித்துள்ளது.

*தமிழர் தாயகப் பகுதிகளில் விகிதாசாரத் தேர்தல் முறைகள் மூலம் தமிழர் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைந்து, சிங்களவர் பிரதிநிதித்துவமும் சிங்களக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*தமிழர் தாயகத்தின் வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

*ஈழத்தமிழினத்தின் பொருளாதார வாழ்வு தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

*தமிழர் தாயகத்தின் பகுதிகளில் தமிழ்ப்பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.

*தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மாவட்டங்களும் சிங்களப் பிரதேசச் செயற்பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

*தமிழர் தாயகத்தின் மொத்த நிலப்பரப்பில் 40 வீதத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்பு முற்றுமுழுதாகச் சிங்களமயப்படுத்தப்பட்டுள்ளது.

*ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவின் உள்ளகத்தினுள்ளும்  புலம்பெயர்ந்து வெளியகத்தில் சர்வதேசத்திலும் வாழ்ந்து வந்தாலும், ஒரே சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையே கொண்டுள்ளனர். இந்தச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை சிறீலங்கா அரசு அழிக்க நினைக்கிறது. ஈழத்தமிழினம் ஒன்றிணைந்து, தனது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைப் பலப்படுத்த வேண்டும். இதற்கான செயற்பாடுகளை ஈழத்தமிழினம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இதற்காக

*ஈழத்தமிழினம் ஒன்றிணைந்து தம்மைப் பலப்படுத்த வேண்டும்

*ஈழத்தமிழர்கள் தமது சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும்

*தமிழர் தாயகப் பகுதிகளையும் எல்லைகளையும் காக்கும் செற்றிட்ட வடிவங்களை உருவாக்கி அவற்றை மேற்கொள்ள வேண்டும்

*ஈழத்தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தி, எதிர்காலச் சந்ததியினர் அவற்றை அறியும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

*இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களைப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.

*ஈழத்தமிழர்கள் தமது செயற்பாடுகளை நிறுவனமயப்படுத்தி தமிழர் தாயகத்தின் கிராமங்களில் அமைப்புக்களைக் கட்டமைத்துப் பலப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

*ஈழத்தமிழர்களின் அரசியல் அமைப்புகள் யாவும் ஒன்றிணைந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

*கடந்த காலங்களில் ஈழத்தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சிங்கள இனவாதத்தின் அடக்குமுறைகளையும், தமிழினத்தின் அவலங்களையும் தமிழர் தொன்மை, உரிமை என்பவை பற்றி பன்னாட்டு அரங்கில் தொடர்ச்சியான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்..

*தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் நிறுவனமயப்படுத்தலுக்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

*சர்வதேச ரீதியாக ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை எடுத்துரைத்து, தமிழர்களின் அரசியல் உரிமையையும், இறையாண்மையையும் நிலைநாட்டிடவேண்டும்.

 

https://www.ilakku.org/தமிழர்-தாயகம்-தமிழீழம்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.