Jump to content

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு.

October 25, 2020

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு.
ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்ட நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கிவைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவிருந்த போதிலும் கொவிட் – 19 தொற்று பாதுகாப்பு நடைமுறையினைக் கருத்திற்கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது 199 பேருக்கான நியமனங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியவாறாக ஐந்து பேர் வீதம் உள்வாங்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொலிசாரின் பாதுகாப்பு குறித்த அலுவலகத்தைச் சுற்றி அதிகரித்து காணப்பட்டது. குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட நியமனதாரிகளும் அவர்களது பெற்றோரும் குறித்த நியமனம் கிடைத்தமையினையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், அத்தோடு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் தமது மனப்பூர்வமான நன்றிகளை இதன்போது தெரிவித்தனர்.

5793432B-E0C5-4981-91EB-F0678BD033C7-300EAB0AC55-2B74-4DDE-80CB-793FE7EECB41-3001EDA7EB2-027F-4CF3-BC4F-E7D417488EB5-300A9ADCBFD-C149-4CC9-9188-8CA297C758E3-300BF71C25B-F35D-492E-BB02-3BDA76CC8E83-3009AC8843E-42A2-426D-88DB-FBB4F14C269E-300

 

https://www.meenagam.com/?p=16055

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு.

October 25, 2020

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு.
ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்ட நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கிவைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவிருந்த போதிலும் கொவிட் – 19 தொற்று பாதுகாப்பு நடைமுறையினைக் கருத்திற்கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது 199 பேருக்கான நியமனங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியவாறாக ஐந்து பேர் வீதம் உள்வாங்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொலிசாரின் பாதுகாப்பு குறித்த அலுவலகத்தைச் சுற்றி அதிகரித்து காணப்பட்டது. குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட நியமனதாரிகளும் அவர்களது பெற்றோரும் குறித்த நியமனம் கிடைத்தமையினையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், அத்தோடு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் தமது மனப்பூர்வமான நன்றிகளை இதன்போது தெரிவித்தனர்.

5793432B-E0C5-4981-91EB-F0678BD033C7-300EAB0AC55-2B74-4DDE-80CB-793FE7EECB41-3001EDA7EB2-027F-4CF3-BC4F-E7D417488EB5-300A9ADCBFD-C149-4CC9-9188-8CA297C758E3-300BF71C25B-F35D-492E-BB02-3BDA76CC8E83-3009AC8843E-42A2-426D-88DB-FBB4F14C269E-300

 

https://www.meenagam.com/?p=16055

 

நல்லவேளை மட்டக்களப்பில்  அபிவிருத்திக்கு போட்ட வாக்குகள் மூலம் 199 பேருக்கு வேலையாவது கிடைக்குது, அம்பாறையில் கலையரசன் வயிறு புடைக்க கத்துவது மட்டும் நடக்குது, ஏற்கனவே 20 க்கு வாக்களிக்கும் போது ஒரு டீலிங்குடன் தான் வாக்களித்திருப்பினம் முஸ்லீம் அரசியல்வாதிகள் அதை வைத்து இருப்பதையும் பிடுங்குவினம், கூத்தமைப்பு அப்புக்காத்துமார் அவரை நீக்குங்கோ இவரை நீக்குங்கோ அப்புறம் சேர்ந்து அரசியல் பண்ணலாம் என்று அரிவரி பையன் போல காமெடி பண்ணிக்கொண்டு இருக்கினம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு.

நல்ல விடயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

நல்லவேளை மட்டக்களப்பில்  அபிவிருத்திக்கு போட்ட வாக்குகள் மூலம் 199 பேருக்கு வேலையாவது கிடைக்குது, அம்பாறையில் கலையரசன் வயிறு புடைக்க கத்துவது மட்டும் நடக்குது, ஏற்கனவே 20 க்கு வாக்களிக்கும் போது ஒரு டீலிங்குடன் தான் வாக்களித்திருப்பினம் முஸ்லீம் அரசியல்வாதிகள் அதை வைத்து இருப்பதையும் பிடுங்குவினம், கூத்தமைப்பு அப்புக்காத்துமார் அவரை நீக்குங்கோ இவரை நீக்குங்கோ அப்புறம் சேர்ந்து அரசியல் பண்ணலாம் என்று அரிவரி பையன் போல காமெடி பண்ணிக்கொண்டு இருக்கினம்   

அக்னி, வாக்கு போடாட்டிலும் கிடைக்கும். இது சாதாரணமாக அரசாங்கம் குடுக்கிற வேலை அதுக்கு வியாழனை வைச்சு படம் காட்டுப்படுது வடக்கிலை டக்கி மாதிரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வாதவூரான் said:

அக்னி, வாக்கு போடாட்டிலும் கிடைக்கும். இது சாதாரணமாக அரசாங்கம் குடுக்கிற வேலை அதுக்கு வியாழனை வைச்சு படம் காட்டுப்படுது வடக்கிலை டக்கி மாதிரி

வடக்கில் கதை வேறு ,கிழக்கில் இதுவரை காலமும் இப்படி நடக்கவில்லை ,
கிழக்கில் கூத்தமைப்பு தேசிக்காய்களை கிழக்கு மக்கள்  பாராளுமன்றம் அனுப்பி வாய் பார்த்துக்கொண்டிருக்க, ஹிஸ்புல்லாவும் ,ஹபீட் நசீரும் , ஹரீசும் முஸ்லிம்களுக்கே இந்த வேலைவாய்ப்புக்களை ரணில் அரசு அமைச்சர்களை கூட்டிக்கொண்டு வந்து வழங்கி வைத்தனர் 
அதுமட்டுமல்ல போட்டிப்பரீட்சையில் தமிழர்கள் அதிகமாக வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தால்  
உடனே போட்டிப்பரீட்சை முடிவுகளை ரத்து செய்து மீள நடத்துவது,தமிழர்களுக்கு பரீட்சை நிலைய நுழைவுசீட்டு பிந்தி கிடைக்கக்கூடியதாக அஞ்சல் செய்வது இப்படி அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை , மட்டக்களப்பு படுவான்கரை பக்கம் வாங்கோ அங்கே  இருக்கும் தமிழ் பாடசாலைகளுக்கு காத்தான்குடியிலிருந்து வரும் சிற்றூழியர்களை காட்டுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதுமே 

நல்லது கெட்டது  என்ற  இரண்டு  தான்  உண்டு

ஒருவன் எனது  கட்சிக்குள் வந்துவிட்டால்  அவனுக்கு நல்லது  செய்ய  வழிவிடுவேன் என்பதே தவறான உதாரணம்  தானே???

இதை  வரவேற்றால் அடுத்த  தலைமுறைக்கு நாம்  எந்த  பாதையை முன்  மொழிகின்றோம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

மட்டக்களப்பு படுவான்கரை பக்கம் வாங்கோ அங்கே  இருக்கும் தமிழ் பாடசாலைகளுக்கு காத்தான்குடியிலிருந்து வரும் சிற்றூழியர்களை காட்டுகிறேன் 

படுவான்கரைக்கு ஆத்தைக் கடந்து எழுவான்கரையில் இருப்பவர்கள் போவதற்கே பின்னடிக்கும்போது அங்கு போகக் கூடியவர்களுக்கு வேலை கிடைக்கும்தானே.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

படுவான்கரைக்கு ஆத்தைக் கடந்து எழுவான்கரையில் இருப்பவர்கள் போவதற்கே பின்னடிக்கும்போது அங்கு போகக் கூடியவர்களுக்கு வேலை கிடைக்கும்தானே.🤔

அவர்கள் எல்லாம் ஒன்றும் ஆத்தையும் குளத்தையும் கடந்தவர்கள் அல்ல, உந்த சிற்றூழியர் நியமனம் எல்லாம் மாகாண சபை நியமனம், கூத்தமைப்பு பேயன் பலாக்காயை பார்த்தது போல் அவிஞ்சு கொண்டு நிக்கைக்க முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் அடிச்ச சிக்ஸர்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2020 at 00:51, வாதவூரான் said:

அதுக்கு வியாழனை வைச்சு படம் காட்டுப்படுது வடக்கிலை டக்கி மாதிரி

சரியாகச் சொன்னீர்கள். மாகாண சபைத் தேர்தலுக்கு அடிக்கல். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.