Jump to content

‘விஜய் சேதுபதி அண்ணா மன்னித்து விடுங்கள்’: பாலியல் மிரட்டல் விடுத்த நபர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘விஜய் சேதுபதி அண்ணா மன்னித்து விடுங்கள்’: பாலியல் மிரட்டல் விடுத்த நபர்!

spacer.png

 

நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் 800 என்ற தலைப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே விஜய்சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. இந்நிலையில் முத்தையா முரளிதரன், படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகிக் கொண்டார். இந்த சூழலில் விஜய்சேதுபதி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ரித்திக் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு, அதில் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து மிக மிக வக்கிரமான வார்த்தைகளுடன் பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பதிவுக்கு, இயக்குநர் அமீர், திமுக எம்பி கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பெண்கள் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுபோன்ற வக்கிர எண்ணத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்தை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்த நிலையில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், அந்த நபர் மீது சைபர் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. எனவே, அவரை இன்டர்போல் உதவியுடன் பிடிக்க தமிழக போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

 

இந்த சூழலில், இலங்கையை சேர்ந்த ஐபிசி தமிழ் ஊடகம் அந்த நபரை பேட்டி எடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட வீடியோவில் அந்த நபர், “விஜய்சேதுபதி பற்றியும் அவரது மகள் பற்றியும் தவறாக பேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை பிரஜை நான்தான். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். இதற்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்று எனக்கு தெரியும். சின்ன குழந்தையை பற்றி தவறாக பேசிவிட்டேன். வாழ்நாளில் யாரையும் அப்படி பேசியது இல்லை. நான் ஏன் அப்படி பேசினேன் என்றால், கொரோனா காரணமாக எனக்கு வேலை போய் விட்டது. அதுமட்டுமின்றி இலங்கையில் நடந்த போரை பற்றி அவருக்கு எல்லாம் தெரிந்தும் அவர் நடிக்க ஒத்துக் கொண்டதாலே அப்படி ஒரு ட்வீட்டை போட்டுவிட்டேன். இதுபோன்ற தவறை இனி செய்ய மாட்டேன். இதற்காக நான் உலகில் வாழும் அனைத்து தமிழர்களிடமும், விஜய் சேதுபதி அண்ணனிடமும், அவரது மகள் என் தங்கை மாதிரி அவரிடமும், விஜய் சேதுபதி மனைவியிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தம்பியாக நினைத்து என்னை மன்னித்து விடுங்கள். வேலை கிடைக்காத ஒரு விரக்தியில் இவ்வாறு செய்து விட்டேன். எனக்கு, அப்பா, அம்மா. தம்பி என ஒரு குடும்பமே உள்ளது. வெளியில் எனது முகம் பெயர் தெரிந்தால் என் வாழ்க்கையே வீணாகப் போய்விடும். எனவே தயவு செய்து மன்னித்து விடுங்கள் விஜய் சேதுபதி அண்ணா” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

https://minnambalam.com/entertainment/2020/10/26/61/actor-vijaysethupathy-daughter-threat-apology

 

Link to comment
Share on other sites

கண்டிப்பாக சைபர் குற்றங்கள் தொடர்பாகவும் குழந்தைகள் மீதான பாலியல் அச்சுறுத்தல் தொடர்பாகவும் தண்டனை வழங்கப்பட வேண்டியவர். இவரது டுவிட்டர் கணக்கு அழிக்கப்படும் முன் இவரால் மற்றவர்களுக்கு போட்ட ருவீட்டுகளிலும் மிக மோசமான வக்கிரமும் படு ஆபாசமும் நிறைந்து இருந்தன.

குழந்தைகள் மீதான வக்கிரப் பார்வை கொண்டு தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டால் மட்டும் சரியாகி விடாது - அதுவும் மாட்டுப்பட்ட பின்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெத்த தாயையே தகாத வார்த்தைகளால் பேசி.. பாடல்பாடி ரசிக்கும்.. மேற்கு நாடுகளில் வாழும் நம்மவர்கள்.. இவனை தண்டிக்கக் கேட்பது மிக அபந்தம்.

இந்த இளைஞன் தன் இனத்திற்கு எதிராக செயற்படுகிறார் என்ற செய்தி அறிந்து தனது செயலின் தாக்கம் புரியாமல் செய்த தவறுக்கு இன்ரர்போல் அளவுக்கு போய் தேட வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் ஒரு கொலையை செய்துவிட்டு இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்கிளசை கூட பிடிக்க இப்படி ஒரு முஸ்தீபு எடுக்கவில்லை.

அதுபோக.. ஈழத்தில் இத்தனை ஆயிரம் குழந்தைகளைக் கொன்றவர்கள் எல்லாம் சர்வ சுதந்திரமாக நடமாட அவர்களுக்காக அறிக்கை விட்டு காப்பாற்றும் முரளிதரன் போன்றவர்களுக்கு நிழல் வடிவம் கொடுப்பது எவ்வளவு தவறு என்பதையும்.. இந்த இளைஞனின் செயற்பாடு மறைமுகமாக நிச்சயம் விஜய் சேதுபதிக்கு உணர்த்தி இருக்கலாம்.

எதுஎப்படியோ.. எச்சரிப்பது தவறு தான். ஆனால்.. கொலைகாரர்களை எல்லாம் தப்பிக்க வகை செய்யும் நபர்களை விட.. இந்த இளைஞனின் செயல் சிறுகுற்றமே. தன் இனத்தின் மேலான பற்றுதலில் உந்துதலால் விளைந்த ஒரு குற்றம். அவன் தன் தவறுணர்ந்து திருந்த ஒரு சந்தர்ப்பம் அளிப்பது சிறப்பு. கட்டாயம் அல்ல.

சிந்திக்க விஜய் சேதுபதி. பல்லாயிரம் தமிழ் சிறுவர் சிறுமிகளை வேட்டையாடிய ஒரு இனப்படுகொலைக்கு ஒத்தூதும் முரளிதரனுக்கு நிழல் வடிவம் கொடுக்க நினைத்தது எவ்வளவு தவறு என்பதையும் இந்த வேளையிம் இன்ரர்போல் கொண்டு இந்த இளைஞனை தேடுபவர்களும் சிந்தித்துப் பார்ப்பது மிக அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் மீதான தமிழ் ஊடக வெளிச்சத்தினை திசை திருப்ப, நடந்த வேலை.

போலீசார் நெருங்க போவதில்லை. நெருங்கினாலும், இவர் தான் அந்த பதிவின் சொந்தக்காரர் என்றும் உறுதியாகப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்லைனில் மிரட்டல் விட்டவர் கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், குற்றம் செய்ததாக கண்டறியப்பட்டால் தண்டிக்கப்படவேண்டும்.

ஐ.பி.சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்றும் கண்டறியப்பட வேண்டும்.

நீதித்துறை, காவல்துறையை தற்போது ஐ.பி.சி தனது கையில் எடுத்துள்ளதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.