Jump to content

மீண்டும் வரும் ‘கொரோனா’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வரும் ‘கொரோனா’

-அனுதினன் சுதந்திரநாதன்

கொரோனா வைரஸ் பரவுகையின் தாக்கம், இலங்கையில் அசுர தாண்வம் ஆட ஆரம்பித்து இருக்கிறது. பல இடங்களில், தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

அடுத்த நிமிடமே, நாம் வாழும் சூழல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனேயே, ஒவ்வொரு வினாடிகளையும் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை நாம், பாதுகாத்துக் கொள்வதில் காட்டிய அலட்சியமும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, வென்றுவிடுவோம் என்கிற மமதையில், இலங்கை அரசாங்கம் விட்ட தவறுகளுமே, இன்றைய சூழ்நிலையில், வீரியம் கொண்டிருக்கும் வைரஸ் பரவலைத் தடுக்க முடியுமா என்கிற கேள்வியை, எழுப்பி இருக்கிறது.  

2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், ஒட்டுமொத்த நாடுமே, முழுமையான முடக்கத்துக்குள் உட்படுத்தப்பட்டதை ,அத்தனை இலகுவில் மறந்திருக்க முடியாது. ஆனாலும், ‘வருமுன் காக்க வேண்டும்’ என்பதற்காக, பல பொருளாதார இழப்புகளையும் தாங்கிக்கொண்டு, அந்த முழுமையான முடக்கத்தை, அரசாங்கமும் மக்களும் சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தார்கள். 

ஆனால், இம்முறை, அதே பொறுப்புணர்வை யாரிடத்திலும் பார்க்க முடியவில்லை. இதனால், கொரோனா வைரஸின் தாக்கத்துடன் இணைந்த பொருளாதார இழப்புகளுக்கு, முகம்கொடுக்க வேண்டிய மிக இக்கட்டான சூழ்நிலைகள், எம்மைச் சூழ்ந்து கொண்டுள்ளன என்பதே உண்மை.

திறந்த பொருளாதாரச் சூழ்நிலையில், எல்லா நாடுகளினதும் சரி, எல்லா வியாபாரங்களினது தொடர்புகளும் சரி, ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கின்றன. இதன் விளைவாக, பொருளாதாரத் தாக்கங்கள், ஒருவரை மாத்திரம் பாதிப்பதாக இருக்காது. ஒருவரோடு தொடர்புபட்டு இருக்கும், ஒவ்வொருவரையும் பாதிப்பதாகவே இருக்கப்போகிறது.

உதாரணமாக, கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக, பல நாடுகளும் முடங்கிப் போயுள்ளன. அந்த நாடுகளிலுள்ள பல்வேறு நிறுவனங்களும், தங்களது தொழில்முறை செயற்பாடுகளை நிறுத்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளன. எனவே, தன்னிடம் இருக்கக்கூடிய தொழிலாளர் வளங்களைக் காப்பாற்றக் கூடியவகையில், தன்னிடம் இருப்பிலுள்ள நிதியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும். 

எனவே, தற்சமயத்தில் செயற்பாட்டில் இருக்கக்கூடிய செயற்றிட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை நிறுத்த முற்படும். இது, வெளிநாட்டில் இருக்கக்கூடிய குறித்த நிறுவனத்தில், தங்கி இருக்கக்கூடிய இலங்கை நிறுவனத்தையும் விரைவாகப் பாதிக்கச் செய்யும். குறித்த, வெளிநாட்டு நிறுவனத்தின் திட்டங்களில் வேலை செய்யும் இலங்கையின் நடுத்தர வர்க்கத்தினர், வேலையற்ற நிலையில், ஏனைய செயற்றிட்டங்களுக்கு மாற்றப்பட முடியாமல், தங்களது வேலைகளை இழக்க நேரிடலாம். 

இந்த வேலையிழப்பு, வேலையிழந்த அந்த நபரை மட்டும் பாதிக்கப்போவதில்லை. அந்த நபரையும் அவரது குடும்பத்தையும், இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையும். காரணம், குறித்த குடும்பங்களில் வருமான மூலம் தடைப்படும்போது, அந்தக் குடும்பங்களால் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து, ஏனைய செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அது, இலங்கையில் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இன்னுமொருவரை, மறைமுகமாகப் பாதிக்கச் செய்யும். இது, நாட்டின் பணப்பாய்ச்சலைக் குறைப்பதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளும் மிகப்பாரதூரமான அளவில் பாதிக்கப்படும்.

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f022660ad4.jpg

தற்போதைய நிலையில், அதிக நாள்களாக முடக்க நிலையிலிருக்கும் கம்பஹா மாவட்டத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களும் உருவாகி இருக்கிறார்கள். அரசாங்கம் ஆட்சியிலிருப்பதற்கு,  பெரும்பான்மை வாக்குகளை வாரி வழங்கிய மாவட்டமாக கம்பஹா இருப்பதால், மிகவிரைவாகவே அவர்களுக்கான நிதி திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த விளைந்திருக்கிறது. 

இதுவே, ஒட்டுமொத்த இலங்கையும் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை உருவாகின்றபோது, ஏனைய இடங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதார நிலைக்கும், இதுபோல விரைவாக, இந்த அரசாங்கத்தால் செயற்பட முடியுமா?

கோட்டாபய, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதுமே, பொருள்கள், சேவைகளுக்கான வரிகளைக் குறைத்ததுடன், அரசாங்கத்துக்கு வருமான மூலமாக இருக்கக்கூடிய, பல்வேறு வருமான வரிகளையும் குறைத்திருந்தார். இதன் நோக்கம், மக்களின் கைகளில் மாதாந்தம் கிடைக்கின்ற பணத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமாக, கொள்வனவுச் சக்தியை அதிகரிக்க எதிர்பார்த்ததுடன், இதன் மூலமாக, இழந்த வருமான வரியின் ஒருபகுதியை ஈடுசெய்துகொள்ளவும் எதிர்பார்த்தார்.

ஆனால், தற்போதைய நிலை, இதற்கு எதிர்மாறாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கம், வறிய, நடுத்தர மக்களின் நாளாந்தச் செலவினங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது. ஒவ்வொரு சுய தொழிற்றுறையாளனுமே, பாதிப்பை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதிலும், மிகப்பெரும் வருமான மூலமாக இருக்கக்கூடிய சேவைத்துறை, சுற்றுலாத்துறை இரண்டுமே, மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.  

இதன்காரணமாகத்தான், இந்தப் பொருளாதாரம், ‘பிரமிட்’ கட்டுமானம்போல, ஒருவரில் மற்றொருவர் தங்கியிருப்பதாக முன்னரே கூறியிருந்தேன். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைவருக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதி ரீதியான இழப்புகளும் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

எனவே, இந்த நிதி நெருக்கடியைத் தவிர்த்துக்கொள்ளவும் இந்தப் பொருளாதார பிரச்சினைகளைத்  தவிர்த்துக்கொள்ளவும் என்ன மாதிரியான விடயங்களைச் செய்யவேண்டும் என்பதே, மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.

அப்பட்டமாக உண்மையைச் சொல்லவதாக இருந்தால், இந்த நிதியியல் சரிவிலிருந்தோ, பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தோ ஒழிந்துகொள்ள முடியாது. நிச்சயமாக, பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். 

ஆனால், புத்திசாதுர்யமாகச் செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில்,  இந்தப் பாதிப்புகளைக் குறைக்கக் கூடியதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பித்துக்கொள்ள, சமூக இடைவௌி என்ற செயற்பாட்டை இறுக்கமாகப் பின்பற்றுகின்றோமோ? நிதியியல் ரீதியாக, எதிர்காலத்தில் நெருக்கமாக தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது, கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. இதன்மூலமாக, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ள வணிகங்களில், நிதிச் சுழற்சி ஆரம்பிக்கப்படும். 

இது, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், வேலைகளை இழந்தோருக்கு மீளவும் வேலைகள் கிடைக்கச் செய்கின்ற செயற்பாட்டுடன் ஆரம்பித்து, மீளவும் ஒரு சுழற்சி அடிப்படையில், இந்தச் செயற்பாடுகள் ஒரு ஸ்திரமான நிலைக்குச் செல்ல உதவியாக இருக்கும். இந்தப் பொருளாதார மீட்பு முறையை, வெறும் ஒற்றைப் பந்திக்குள் சுருக்கமாக அடக்கிவிட்டாலும், இந்தச் செயற்பாடுகள் இடம்பெற்று, பொருளாதா ஸ்திரநிலை ஏற்படுவதற்கு, வருடங்கள் பல ஆகலாம். இந்தக் காலத்தைக் குறைப்பதென்பது, தனிமனிதனால் முடியாத ஒன்றாகும். கூட்டு முயற்சியாக, அனைவருமே இணையும்போதுதான், இந்த நிலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

முதலாளித்துவ பொருளாதாரத்தில், நீங்கள் யாருமே பாதுகாப்பாகவில்லை என்பதை, இந்தக் கொரோனா வைரஸ் பரவல், இலங்கையில் நுழைந்த 2020இன் முற்பகுதியிலேயே உணர்ந்திருப்போம். இம்முறை, இந்தப் பொருளாதார நிலைவரத்துடன், நமது அலட்சிய போக்குக்கு மத்தியில், நமக்குள் ஊடுருவியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த வேண்டியதாக இருக்கும்.

மிக இக்கட்டான சூழலை, எதிர்வரும் சில வாரங்களுக்கு, முகம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. நமது பாதுகாப்பில் எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ, அதுபோல , நம் பொருளாதாரம் தொடர்பிலும் சிரத்தையோடு சிந்திப்போம்.இல்லையெனில், நாளைய வாழ்க்கையை வாழ, ஏதுமற்ற நிலையைக் கொண்டவர்களாக, நாம் மாறியிருக்கக்கூடும். 

 

http://www.tamilmirror.lk/வணிகம்/மீண்டும்-வரும்-கொரோனா/47-257495

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து நியுசீலன்ட், அவுஸ்ரேலியாவில் உள்ளவர்களை தவிர  மற்றவர்கள் எல்லாம் இப்போது மிகவும் பயந்து போய் தான் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கோத்தபாயவாலைதான் இந்த கொரோனாவை கட்டுபடுத்த முடிஞ்சது எண்டு இஞ்சை கொஞ்சப்பேர் துள்ளிக்கொண்டு திரிஞ்சினம். ஆனால் இண்டைக்கு கொழும்பிலை இருக்கிற ஆக்களை கேட்டால் கொரோனா உக்கிரமாய் கூத்தாடுது எண்டு சொல்லினம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

ஏதோ கோத்தபாயவாலைதான் இந்த கொரோனாவை கட்டுபடுத்த முடிஞ்சது எண்டு இஞ்சை கொஞ்சப்பேர் துள்ளிக்கொண்டு திரிஞ்சினம். ஆனால் இண்டைக்கு கொழும்பிலை இருக்கிற ஆக்களை கேட்டால் கொரோனா உக்கிரமாய் கூத்தாடுது எண்டு சொல்லினம்.

எண்ணத்துக்கு கோத்தாவை  கொரனோ  விடயத்தில் திட்டுகிரண் என்று விளங்காமல் கொள்ளுப்பட்டவை இதுகளுடன்  100 முறை விளங்கப்படுத்தியும் விளங்காத கூட்டம் இப்ப பலிகடா நம்ம வடகிழக்கு தமிழ் சனம்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

எண்ணத்துக்கு கோத்தாவை  கொரனோ  விடயத்தில் திட்டுகிரண் என்று விளங்காமல் கொள்ளுப்பட்டவை இதுகளுடன்  100 முறை விளங்கப்படுத்தியும் விளங்காத கூட்டம் இப்ப பலிகடா நம்ம வடகிழக்கு தமிழ் சனம்தான் .

மலையகமும்.. மிக மோசமாக, பத்திக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
வேண்டுமென்றே... தமிழர் பகுதிகளில் பரப்பினார்களா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

மலையகமும்.. மிக மோசமாக, பத்திக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
வேண்டுமென்றே... தமிழர் பகுதிகளில் பரப்பினார்களா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. 

சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு
*நன்றாகக் கேளுங்கள்.. இதை கூறுவது இலங்கையில் ஒரு சிறந்த மருத்துவர், ஒரு ஜோக்கர் அல்ல.*
*( சில விஷயங்களை கன்னத்தில் அறைந்ததை போல் கூறியுள்ளேன்.. வேறு வழியில்லை )*
உங்களுக்கு சுனாமி தெரியும். அதன் அவல நிலை உங்களுக்குத் தெரியும்.அனுபவம் இருக்கிறது .. தன்னுடைய குடும்பத்தின் மரண அளவு தெரியும் .. அன்புக்குரியவர்களின் இறப்புகளைப் பார்த்துள்ளோம் , குடும்பத்தோடு இறந்தவர்களை கண்டுள்ளோம்.. அதே போல் உயிர்களும் உடமைகளும் எவ்வளவு அழிந்து சென்றன என்பதைப் கண்களால் கண்டுள்ளோம். இன்னும் மறக்கவில்லை..
ஈஸ்டர் தின தாக்குதல் எப்போது என்பது உங்களுக்குத் தெரியும், ஒரு சில நொடிகளில் எங்கள் சொந்த மக்கள் எவ்வாறு துண்டுகளாக உடைந்தார்கள் என்பதை கண்ட நீங்கள் , தங்கள் அன்பு மகள் துண்டுகளாக இருப்பதை பார்த்த அம்மாக்கள் மற்றும் அப்பாக்கள் இருக்கிறார்கள் ..
தங்கள் பெற்றோர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு துண்டுகளாக உடைந்திருப்பதைக் கண்ட குழந்தைகள் உள்ளனர். சுற்றுப்பயணத்திற்கு வந்து குடும்பங்களை இழந்து திரும்பிச் சென்ற வெளிநாட்டினரை அறிவோம்..
இது இரண்டில் ஒன்று மறுபடியும் நிகழும் எனின் உங்களுக்கு அது ஒரு நகைச்சுவையா ??
நீங்கள் கடலுக்குப் போவீர்களா ??
நீங்கள் தேவாலயத்திற்குச் செல்வீர்களா?
ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் … இப்போது வரப்போவது இது இரண்டையும் போன்றதொரு அழிவு அல்ல.. *இது போன்றவற்றோடு ஒப்பிட முடியாத அளவு பாரதூரமானது*..
பயமுறுத்தவில்லை. தயாராகுங்கள். பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காக கூறுகிறேன்.
முன்னெப்போதையும் விட இலங்கையில் அதிகமான மக்கள் இறந்து போவர்.. போரின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தோற்கடிக்கப்படும்.
ஆனால் நீங்கள் இன்னும் கவலைப்படவில்லை… ஏன்???
முந்தைய இரண்டு சம்பவங்களை போன்ற அனுபவம் உங்களுக்கு இல்லை என்பதால் …
இத்தாலி உலகின் சிறந்த வைத்திய பிரிவைக் கொண்ட நாடு, ஆயினும் இன்று அந்நாடு முழுவதும் பாழாகிவிட்டது …
சீனாவில் மக்கள் 20 லிட்டர் வெற்று நீர் பாட்டிலை வெட்டி தலையில் இருந்து மறைத்து ,நாய் பூனைகளுக்கும் கூட முகமூடி அணிவித்து இதில் இருந்து பிழைத்தனர்..
இலங்கை மக்களால் அத்தகைய தியாகத்தை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா … ?? இந்த முகமூடி அணிய முடியாது, அரிக்கிறது , மூச்சு விட முடியவில்லை என புலம்பித் திரிபவர்கள் !!
இந்த நேரத்தில் இலங்கை இத்தாலியின் அளவைக் கடந்துவிட்டது …
தொலை காட்ச்சி, பத்திரிகை செய்திகளுக்கு ஒரு வரம்பு உள்ளது – அரசாங்கம் சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு … ஆனால் உண்மை அதுவல்ல. நாங்கள் இப்படியே இருப்போமானால் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கையின் பாதி பேர் இறந்து போக கூடிய நிலைமை ஏற்படும் ..
அது குறிப்பாக எம் முட்டாள் தனத்தினாலும் ,தலை கனத்தினாலுமே ஆகும்..
இதிலிருந்து தப்பிக்க சில விஷயங்கள் மட்டும் செய்தால் போதும் .. தயவு செய்து
01.நாங்கள் இராவணனின் தலைமுறை, இது சிங்கள பெளத்த நாடு என கூறிக்கொண்டு திரிய வேண்டாம்.. வைரசிற்கு இது எதுவும் தெரியாது .. அது மேட் இன் சைனா.
2. அரசாங்கத்தினால் சில நேரங்களில் உண்மையைச் சொல்ல முடியாது.. சொன்னால் எங்கள் நாட்டு மக்களின் நிலை என்னவாகுமென அவர்கள் அறிவர்.. அதனால் அவர்கள் கூறுவதை மட்டுமே மலை போல் நம்பி கோட்டா அவர்கள் இருப்பதால் பிரச்சினை இல்லை , உலகின் சிறந்த ஆர்மி இருப்பதால் நோ ப்ரோப்லம்ஸ் என கூறி கொண்டு திரிய வேண்டாம்..
வைரஸுக்கு அவர்களில் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது..
அரசாங்கத்தை குறை கூற வேண்டாம். இதை அரசாங்கத்தால் மட்டும் தடுக்க முடியாது.. நீங்களும் நானும் தடுக்கவில்லை என்றால்.., இது எம் செயற்பாடுகளை பொறுத்தே உள்ளது..
03. முகமூடி, கையுறை அணிந்தால் , மற்றவர்கள் உங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்காதீர்கள்..உங்கள் குடும்பத்தை வாழ வைப்பது அவர்கள் அல்ல.
மற்றவர்கள் அணிவார்கள் என்றால் பரவாயில்லை இல்லையென்றால் கிச் கிச் போல் இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்களும் உங்கள் முழு குடும்பமும் நிச்சயமாக இறந்துவிடுவீர்கள் … ( இப்படி சொல்றத தவிர வேற வழி இல்ல )
உங்க வீட்டில் ஒருவர் இறந்தால் தான் இவற்றை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றால் .. இதை கண்டு கொள்ளாதீர்கள் )
04. இன்னும், காரணங்களை உருவாக்கி கொண்டு நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால் …
தேவாலயத்திற்கும், போதி பூஜைக்கும் ,தன்சல் , சுற்றுலாவிற்கு சென்றால் மட்டுமல்ல. சாலையில் உள்ள ஒரு பஸ்ஸில் ஏறி இறங்கினால் போதும் …
நீங்கள் இன்னும் அதை செய்து கொண்டு இருந்தால் , உங்கள் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை நீங்களே கொல்லப் போகிறீர்கள். உங்கள் முழு குடும்பமும் இன்னும் ஒரு மாதத்திற்குள் மண்ணின் கீழ் இருக்கும்.
05. நம்புவதாயின் நம்புங்கள்..
நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உலகின் அதிக மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நாடென இலங்கை விருது எடுக்கும்..
முகமூடி போட முடியாது – மூச்சுத் முட்டுகிறது – அரிக்கிறது – கிச் கிச் போன்றது … இது போன்ற முட்டாள் கதைகளை கூற வேண்டாம், மற்றவர்கள் அணியும் வரை காத்திருக்க வேண்டாம் … எல்லோரும் இன்னொருவர் அணியும் வரை காத்திருந்தால் யாரும் கடைசிவரை அணிவதில்லை..
வேலைக்குச் செல்ல வேண்டாம். லீவு தரவில்லை எனின் நின்று விடுங்கள் வீட்டில் இருங்கள்…வேலை போய்விடும்… வருமானம் நின்றுவிடும்.ஆனால் நீங்களும் உங்கள் குடும்பமும் உயிர் வாழ்வீர்கள்…
உங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால்.., நீங்கள் போகும் பஸ்ஸில் ,வீதியில் , வேலை தளத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸை வீட்டிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுப்பீர்கள் …
அவசர பயணம் செல்வதாயின் முகமூடி மற்றும் கையுறைகளை கட்டாயமாக அணியுங்கள். வீட்டிற்கு வந்து முதலில் கைகளைக் கழுவுங்கள். சுத்தமாக இருங்கள். துணிகளைப் வெயிலில் போடுங்கள்…
06. வீட்டிலேயே இருங்கள்.. அவ்வளவு தான்… கஷ்டம் தான் வேறு வழியில்லை .. இவ்வளவு காலமாக படிக்காத புத்தகத்தைப் படியுங்கள்.. படம் ஒன்றை பாருங்கள். யாரையும் வீட்டிற்கு வர விடாதீர்கள். கோபப்பட்டாலும் பரவாயில்லை ..
வைரஸை எடுத்து கொண்டு உங்களை கொலை செய்ய வருவார்கள்..அது அவருக்கும் தெரியாது அனால் அதுதான் உண்மை.. வீட்டிலேயே சத்தமில்லாமல் இருந்து விடுங்கள்.. இல்லையெனில் ஸொரி மச்சான் திரும்பி போய்விடு என அனுப்பி விடுங்கள். கோபப்பட்டால் பிறகு சமாதானம் செய்து கொள்ளலாம் .. அதை பற்றி நினைக்க தேவையில்லை..
உங்களால் அதை செய்ய முடியாது என்று எனக்கு தெரியும். உங்களால் ஒருவரை விட்டு குறைந்தது 3 அடி தூரத்தில் கூட இருக்க முடியாது என்று..
இறுதியாக, நான் கூறுகிறேன் …
இறப்பதாயினும் கொஞ்சம் மரியாதையாய் இறந்து போக வேண்டும்.. மதிப்பிற்குரிய விதத்தில். இதில் இறப்பதெனின் இறப்பவரின் பெயர் கல் வெட்டில் பொறிப்பதை விட்டும் குறைந்தது சவப்பெட்டி கூட கிடைக்காது புதைப்பதற்கு…
செய்ய வேண்டியதெல்லாம் தெரிந்து கொண்டே …
இந்த வைரஸால் அநியாயமாக அழிந்து போக வேண்டாம்.
இன்று நமக்குத் தெரியாவிட்டாலும், இது நாடு முழுவதும் பரவப் போகிறது. எனவே, அன்பாக கூறுகின்றேன், கவனமாக இருங்கள்.. இன்னும் ஒரு சில நாட்களுக்கு..
இன்று , நாளை அதை நீங்கள் செய்ய முடியாவிட்டால், உங்களால் ஒருபோதும் முடியாது …
(இதைச் சொல்வதற்கு வேறு வழியில்லை – மனதை தைரியபடுத்தி கொள்ளுங்கள்.. கவனமாக இருங்கள்… )
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை நினைத்து பயந்தமோ அது அங்கு நடக்க தொடங்கி விட்டது .வடகிழக்கு தமிழ் மக்களுக்கு இதை எப்படி ஒரு விழிப்புணர்வாய் சொல்ல முடியுமென்பதுதான் சிந்தனை .

இனிமேலாவது அரசாங்கம் சொல்லும் கதைகளை கிளிப்பிள்ளை போல் பிரிண்ட்  பண்ணும் வீரகேசரியையும் உள்ளூர் பத்திரிகைகளையும் மேய்ந்து போட்டு மந்தைகள் போல் அரசுக்கு சார்பாக கதைப்பவர்கள் சிந்திக்கனும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் இலங்கையின் கொரனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பல மேற்கு நாடுகளை விட பல மடங்கு சிறந்தது. இதற்கு கோத்தாவின் இரும்புக் கரம் குறித்த பயம் காரணமா? இருக்கலாம், ஆனால் முக்கிய காரணம் இலங்கையில் இருக்கும் பொதுச் சுகாதார ஊழியர்களும் மருத்துவர்களும் முழுமையாக விஞ்ஞானத்தை நம்பி, பின்பற்றுகின்றனர்.  அனேக இலங்கை மக்களும் சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை விட பிரிண்ட் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி நடக்கின்றனர். 

பொருளாதாரம் அடி வாங்கும், கேஸ்கள் கூடும், மரணங்கள் நூற்றுக் கணக்காக வரலாம். ஆனால் பெருமாளின் vision அவரது தலைக்குள்  இருக்கும் காட்சி மட்டுமே!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்படுத்தல் முகாமிற்கு செல்ல மறுத்து கழிவு நீர் கால்வாய் வழியே தப்பியோடிய 18 பேர்!

By sharmi -
9e82a184-s.jpg

இலங்கையில் அடுத்தடுத்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதோடு, முக்கிய சில பகுதிகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலே பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 18 பேர் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய மறுத்து கழிவு நீர் கால்வாய் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்ட  நபர்களிடம் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 49 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பேலியகொட மீன் சந்தை இணைப்பாளர்களில் பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்ல மறுத்த 18 பேர் சந்தைக்கு அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் குதித்து அடுத்த கரைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு தப்பியோடியவர்களை பிடிப்பதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனினும் தப்பியோடியவர்களில் சிலர் தாம் தமது தவறை உணர்ந்தாக கூறி மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்தோடு, தப்பிச் சென்றவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://samugammedia.com/public-apology-to-duminda-silva-release-tamil-political-prisoners-too-mano/?fbclid=IwAR0Yov7cr6dkyUS4fLCyVb95xCagPVuSKiSTDKMaN0Cuh5P7GjusLicq2Yw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் வளர்ந்த  நாடுகளே சமாளிக்கமுடியாது திண்டாடும் போது  வரவு  செலவு  திட்டத்தில் கூட குறை நிறைப்பை  தவிர  வேறு ஒன்றையும் ஒருமுறை  தானும் காணாத சிறீலங்கா  எல்லாம் சமாளித்துவிடும்  என்பதெல்லாம் மிகத்தவறான கணிப்பு.

உண்மைகளை  மறைத்து வெளி  உலக  தொடர்புகளை  துண்டித்து  இன்னும் எத்தனை  நாளைக்கு???

அடுத்த வரவு செலவுத்துண்டு  விழும் தொகைக்கு பிச்சைக்கு  எங்கு  போவது????

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் வளர்ந்த  நாடுகளே சமாளிக்கமுடியாது திண்டாடும் போது  வரவு  செலவு  திட்டத்தில் கூட குறை நிறைப்பை  தவிர  வேறு ஒன்றையும் ஒருமுறை  தானும் காணாத சிறீலங்கா  எல்லாம் சமாளித்துவிடும்  என்பதெல்லாம் மிகத்தவறான கணிப்பு.

உண்மைகளை  மறைத்து வெளி  உலக  தொடர்புகளை  துண்டித்து  இன்னும் எத்தனை  நாளைக்கு???

அடுத்த வரவு செலவுத்துண்டு  விழும் தொகைக்கு பிச்சைக்கு  எங்கு  போவது????

விசுகர், "கிண்டினவன் பொங்கலை விட தண்டினவன் பொங்கல் அதிகம்" என்றொரு சிலேடை மொழி ஊரில் கேள்விப்பட்டிருப்பீங்கள். அதனால் தான் சிறி லங்கா போல உதவியிலும் நீண்டகாலக் கடனிலும் ஒடும் நாடுகள் ஒரு நாளும் பொருளாதார சரிவினால் மூழ்கிப் போவதில்லை! 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

விசுகர், "கிண்டினவன் பொங்கலை விட தண்டினவன் பொங்கல் அதிகம்" என்றொரு சிலேடை மொழி ஊரில் கேள்விப்பட்டிருப்பீங்கள். அதனால் தான் சிறி லங்கா போல உதவியிலும் நீண்டகாலக் கடனிலும் ஒடும் நாடுகள் ஒரு நாளும் பொருளாதார சரிவினால் மூழ்கிப் போவதில்லை! 

உங்களுக்கு பக்கத்தில தான் வெனிசுலா என்ன நடந்தது என்றாவது தெரியுமா ?

இவ்வளவுக்கும் சொறிலங்கா போல் இல்லை மிகையான எண்ணெய்  வள இருப்பு கொண்ட நாடு இப்ப அதிகூடிய பணவீக்க நிலையில் உள்ளது .

அநேக மக்கள் ஒரு நேர உணவுக்கு அல்லாடும் நிலை .

அப்படியான ஒன்றைத்தான் சொறிலங்காவில் வர கோத்தாவுக்கு உடுக்கு அடியாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு பக்கத்தில தான் வெனிசுலா என்ன நடந்தது என்றாவது தெரியுமா ?

இவ்வளவுக்கும் சொறிலங்கா போல் இல்லை மிகையான எண்ணெய்  வள இருப்பு கொண்ட நாடு இப்ப அதிகூடிய பணவீக்க நிலையில் உள்ளது .

அநேக மக்கள் ஒரு நேர உணவுக்கு அல்லாடும் நிலை .

அப்படியான ஒன்றைத்தான் சொறிலங்காவில் வர கோத்தாவுக்கு உடுக்கு அடியாக்கும் .

வெனிசுவெலாவுக்கும் சிறிலங்காவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சுப் பாருங்கோ, ஏன் சிறி லங்காவுக்கு அந்த நிலை வராதென்று விளங்கும்!

வெனிசுவெலா மட்டுமா? சிம்பாப்வே, ஓரளவுக்கு சூடான், எத்தியோப்பியா, கொங்கோ என ஒரு பெரிய பட்டியலே இருக்கு. 

என்ன வித்தியாசம் சிறிலங்காவில?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

வெனிசுவெலாவுக்கும் சிறிலங்காவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சுப் பாருங்கோ, ஏன் சிறி லங்காவுக்கு அந்த நிலை வராதென்று விளங்கும்!

வெனிசுவெலா மட்டுமா? சிம்பாப்வே, ஓரளவுக்கு சூடான், எத்தியோப்பியா, கொங்கோ என ஒரு பெரிய பட்டியலே இருக்கு. 

என்ன வித்தியாசம் சிறிலங்காவில?

இந்த சுமத்திரன் போல் பதில் வேண்டாம் உங்களால் விளங்கப்படுத்தமுடியாது தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லிவிட்டு போவது நல்லது அதை விட்டு எங்களிடம் போட்டு வாங்க வேண்டாம் நீங்கள்  தான் பதில் கருத்து எழுதும்முறை  என்ன வித்தியாசம் சிறிலங்காவில் உங்களுக்குதெரியவில்லையா ?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

வெனிசுவெலாவுக்கும் சிறிலங்காவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சுப் பாருங்கோ, ஏன் சிறி லங்காவுக்கு அந்த நிலை வராதென்று விளங்கும்!

வெனிசுவெலா மட்டுமா? சிம்பாப்வே, ஓரளவுக்கு சூடான், எத்தியோப்பியா, கொங்கோ என ஒரு பெரிய பட்டியலே இருக்கு. 

என்ன வித்தியாசம் சிறிலங்காவில?

1 - சிறிலங்கா ஒரே நேரத்தில் பலவீடுகளை கையாளும் திறமை  வாய்ந்தது

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இந்த சுமத்திரன் போல் பதில் வேண்டாம் உங்களால் விளங்கப்படுத்தமுடியாது தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லிவிட்டு போவது நல்லது அதை விட்டு எங்களிடம் போட்டு வாங்க வேண்டாம் நீங்கள்  தான் பதில் கருத்து எழுதும்முறை  என்ன வித்தியாசம் சிறிலங்காவில் உங்களுக்குதெரியவில்லையா ?😀

ஓம் பெருமாள் எனக்கும் தெரியவில்லை, அதனால் தான் உங்களிடம் அறிந்து கொள்ளலாம் என்று கேட்டேன், உங்களுக்கே தெரியவில்லையென்றால் யாரிடம் போவது?😭 

(அது சரி மேலே விசுகர் நச்சென்று போட்டிருக்கிறார் ஒரு பதில் பார்த்தீர்களா?, இனியாவது ஐந்து வித்தியாசங்கள்?) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

1 - சிறிலங்கா ஒரே நேரத்தில் பலவீடுகளை கையாளும் திறமை  வாய்ந்தது

அவர் வித்தியாசத்தை தேடுகிறார் அவர்குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் சைனீஸ் Debt-trap எனும் கடன் பொறி மூலம் பஞ்சத்தில் கொண்டுபோன  நாடுகள் .சிறிலங்கா சைனாவிடம்  வாங்கிய கடன் என்ன செய்யும் என்று சொல்லவே தேவையில்லை அந்த நாடுகளை பார்த்தாலே தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அவர் வித்தியாசத்தை தேடுகிறார் அவர்குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் சைனீஸ் Debt-trap எனும் கடன் பொறி மூலம் பஞ்சத்தில் கொண்டுபோன  நாடுகள் .சிறிலங்கா சைனாவிடம்  வாங்கிய கடன் என்ன செய்யும் என்று சொல்லவே தேவையில்லை அந்த நாடுகளை பார்த்தாலே தெரியும் .

நான் உதாரணம் காட்டிய போதே சீனக் கடனும் முதலீடும் பெறும் நாடுகளைத் தான் போட்டேன்! இருந்தாலும் இலங்கை இவையெல்லாவற்றிலிருந்தும் வித்தியாசங்கள் கொண்டது, அவர் சொன்ன பதில் சரி. திறமையான கல்விப் பெற்ற ராஜதந்திரிகள் தான் அந்த பல வீடுகளை ஒரே நேரத்தில் சமாளிக்க காரணம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

ஏன் சிறி லங்காவுக்கு அந்த நிலை வராதென்று விளங்கும்!

உங்களுக்கு தெரியும் என்றுதான் மேல் உள்ள கருத்தில் சொல்லியுள்ளீர்கள் நீங்கள்  தான் சொல்லும் முறை .

டிவியில் கொடுத்த பேட்டியை ஒளித்தது போல் இங்கு ஒளிக்கேலாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்களுக்கு தெரியும் என்றுதான் மேல் உள்ள கருத்தில் சொல்லியுள்ளீர்கள் நீங்கள்  தான் சொல்லும் முறை .

டிவியில் கொடுத்த பேட்டியை ஒளித்தது போல் இங்கு ஒளிக்கேலாது .

நானே சொல்லி விட்டால் எப்படி உங்கள் மனதில் தங்கும்? எனவே தான் நீங்களே தேட வேண்டும்! எனக்குத் தெரியாது என்று வைத்துக் கொண்டு தேடுங்கள், அது தானே உங்களுக்கு மகிழ்ச்சி தரும்? 

ரிவி பேட்டியெல்லாம் எதற்கு ? உங்களால் தேட முடிந்தால் அதை நீங்களே கண்டு கொள்ளலாம்!(ஆனால் பாதியில் தூங்கி விடுவீர்கள், பார்க்க ஆரம்பித்தால்! உங்கள் ஏரியா அல்ல அதில் இருப்பது!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நானே சொல்லி விட்டால் எப்படி உங்கள் மனதில் தங்கும்? எனவே தான் நீங்களே தேட வேண்டும்! எனக்குத் தெரியாது என்று வைத்துக் கொண்டு தேடுங்கள், அது தானே உங்களுக்கு மகிழ்ச்சி தரும்? 

அப்ப  சொறிலங்கா வெகுவிரைவில் வங்குரோத்து தான் உங்களை போல் ஆட்கள்  உடுக்கு அடிக்குமட்டும்  வந்ததும் தான்தான் அடுத்த லீ  என்று கனவு கண்டுகொண்டு இருக்குது எங்க போய்  முடியுது என்று பார்ப்பம் .

4 minutes ago, Justin said:

ரிவி பேட்டியெல்லாம் எதற்கு ? உங்களால் தேட முடிந்தால் அதை நீங்களே கண்டு கொள்ளலாம்!(ஆனால் பாதியில் தூங்கி விடுவீர்கள், பார்க்க ஆரம்பித்தால்! உங்கள் ஏரியா அல்ல அதில் இருப்பது!)

அந்த இணைப்பை தர  பயமாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அப்ப  சொறிலங்கா வெகுவிரைவில் வங்குரோத்து தான் உங்களை போல் ஆட்கள்  உடுக்கு அடிக்குமட்டும்  வந்ததும் தான்தான் அடுத்த லீ  என்று கனவு கண்டுகொண்டு இருக்குது எங்க போய்  முடியுது என்று பார்ப்பம் .

அந்த இணைப்பை தர  பயமாக்கும்.

நான் தான் சொன்னேனே, யாழில் தேடி, கிடைப்பதை வைத்து யாழுக்கு வெளியே தேடும் இயலுமை கொஞ்சம் இருந்தாலே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இணைப்புக் கிடைத்து விடும்! அது உங்களுக்கு முடியாது என்பதும் தெரியும், எனவே நான் மிகவும் பயந்து போய் இருக்கிறேன் என்று தேற்றிக் கொள்ளுங்கோ! 

இனி எதிர்வுகூறல்களைச் செய்யும் போது கொஞ்சமாவது வாசித்து விட்டு, வரலாற்றை அறிந்து விட்டு இங்கே எதிர்வு கூருங்கோ! அல்லது இப்படியே சிரிப்புக் காட்டிக் கொண்டிருக்கப் பழக வேண்டியான்! 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கள் அங்கு மிஞ்சி இருக்கும் தமிழ் மக்களும் வெளியில் வந்த பின் கொண்டாடி பழி தீர்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

இனி எதிர்வுகூறல்களைச் செய்யும் போது கொஞ்சமாவது வாசித்து விட்டு, வரலாற்றை அறிந்து விட்டு இங்கே எதிர்வு கூருங்கோ! அல்லது இப்படியே சிரிப்புக் காட்டிக் கொண்டிருக்கப் பழக வேண்டியான்! 😎

இங்கு எதிர்வு கூறல் சொல்லி கவலைப்படுவது மலையக வடகிழக்கு தமிழ் மக்களை நினைத்து *********   உங்களின் ஸ்ரீலங்கா விஜயம் நாலு பேர் பொறாமைப்படும்படி ****** பெருமையுடன் போய்  வருவதுக்கு .எங்களுக்கு கொரனோ வால்  ஒரு தமிழ் உயிரும்  போகக்கூடாது அதுதான் முக்கியம் .

டொட் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

ஆனால் இண்டைக்கு கொழும்பிலை இருக்கிற ஆக்களை கேட்டால் கொரோனா உக்கிரமாய் கூத்தாடுது எண்டு சொல்லினம்.

மகிழ்ச்சியாக இருக்கிறதோ
உங்கள் நாடு யேர்மனியில் கொரோனா வைரஸ் அழிந்து கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நாடு என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறதாமே

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.