Jump to content

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும்! – புலவர் நல்லதம்பி சிவநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும்! – புலவர் நல்லதம்பி சிவநாதன்

October 26, 2020
 
 
Share
 
 
54d7e697-57ab-4f0f-8d3d-0dd9af0007d5-696
 81 Views

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடலிலும், அது பற்றிய தெளிவாக்கக் கருத்தியல் அணுகுமுறைகளிலும், ஆய்வுலகச் செல்நெறி, செய்நெறி செயற்பாடுகளிலும் ஈர்ப்போடு  ஈடுபட்ட ஒருவனாக இக்கட்டுரைத் தொடரினை எழுத முற்படுகின்றேன்!

ஒரு பொறியியற் கட்டட தலைமைத்துவ மேலாண்மைத்துறைத் தொழிலனுபவத்தோடு மட்டுமன்றி, ஒரு மொழி, கலை, கவிதை, இலக்கிய, வாழ்வியல் வரலாற்று மாணவனாகவும், படைப்பாளியாகவும், புலமைத்துவப் பற்றாளனாகவும்,  அரங்க, கலை ஆற்றுகையாளனாகவும்,  தமிழர் சமுதாயப் பங்காளியாகவும் கடந்த ஐம்பது – அறுபது தசாப்தங்களாக இயங்கிய அனுபவத்தோடு – குமுறல் – ஆழ்கடலுக்குள் என்னுயிர் முன்னோர் ‘சத்தியம் சாகாது’, ‘காவியச் சலங்கைகள்’ ஆகிய படைப்புகளின் நூலாசிரியனென்ற உரிமையோடும் இக்கட்டுரையின் கருப்பொருளையும், பேசு பொருளையும் அணுக முயல்கின்றேன்!

எல்லாவற்றிற்கும் மேலாக எனது முன்னோர் மீது நான் கொண்ட மாறாத பற்றும் நம்பிக்கையோடு… இந்தியாவின் முக்கிய பகுதிகள்… தென்கிழக்காசியாவின் சில முக்கிய நாடுகள் மற்றும் ஒருசில ஆபிரிக்க, அரேபிய நாடுகளென யான் செய்த பயணங்களினூடும்.. தமிழர் தொல்லியல் வரலாற்றுத்துறையில் நீண்டகால இலக்கிய வரலாற்று வாழ்வியல் பண்பாட்டு ஈடுபாடும், அகழாய்வு அனுபவமும், அறிவாற்றலும் கொண்ட அறிஞர் பெருமக்களுடன் நான் ஏற்படுத்திக் கொண்ட உறவு நிலையினூடும், நான் பெற்ற பயில்நெறிப் பட்டறிவும்தான் என்னை எனது பின்னணியில் நின்று வழிநடத்துகின்றது என்பதனை நான் ஈண்டு பதிவு செய்ய விரும்புகின்றேன்!

இலக்கிய நுகர்வும், வாழ்வியல் நுழைவும், பண்பாட்டுப் பதிவுப் புரிந்துணர்வுமற்ற ஓர் ஆய்வுப் புலத்தினை விட்டு மேலோங்கி எழுந்து, இன்று  உலகப் பரப்பில் வியாபித்து நிற்கின்ற தமிழர்  தொல்குடி வரலாற்றுத் தேடலை உச்சிமோந்து வரவேற்கின்ற ஒரு பூரிப்புடன் எனது எழுத்தோவியத்தை வரைய முனைகின்றேன்!

எமது முன்னோரின் கல்லோவியங்களைச் சொல்லோவியங்களோடு இணைத்துப் பார்க்கின்ற  செப்பேடுகளை  எமது முன்னோர்  செப்பிய ஏடுகளுடன் ஒப்பீடு செய்ய வல்ல உய்த்துணைர்வும்  உள ஈடுபாடும் கொண்ட ஓர் ஆய்வுலகச் சமுதாயம் இன்று உதயமாகியுள்ளது கண்டு உணர்வு பொங்கி நிற்கின்ற ஒருவனாக எனது எழுத்தினை இங்கு பதிவு செய்கின்றேன்!

சங்க இலக்கியங்களிற் பொதிந்து கிடக்கும் எமது முன்னோர் அறிவியல் சான்றுகளை பலவோர் உண்மைத்துவத்தைச் செல் நெறியினை – புலமைத்துவச் சொல் நெறியினை – இனங்காணுகின்ற ஓர் தொல்லியலின் சிந்தனையாக்கத்தைக் கண்டு சிலிர்த்து நிற்கும் ஒருவனாக எனது விரல்களை நகர்த்துகின்றேன்!

எனது இளமைக் காலத்தில் எனது தாயக வாழ்வின் போது எமது மூதாதையர்கள், முன்னோர்களின் வரலாறு பற்றியும், வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்கள் பற்றியும் பேசியும், எழுதியும், கற்றும், கற்பித்தும் வந்த அனைவரும் தங்கள் கருத்தியற் கோட்பாடுகள்  யாவற்றையும் மேற்குலக ஆய்வாளர்கள், அறிஞர்களின் சிந்தனைச் செல்நெறியை அடித்தளமாக வைத்தே கட்டியெழுப்பி வந்ததை நான் அறிந்தும், தெரிந்தும், உணர்ந்தும் வந்துள்ளேன்!

எமது வாழ்வியல் பண்பாட்டு வழிபாட்டு மரபுகளை  இலக்கிய செழுமைகளை ஒரு ‘அநாகரீகப் பழங்குடி’யின் நம்பிக்கையாகப் படம் பிடித்துக் காட்டிய ஒரு கல்விக் கொள்கையை நேரிற் சந்தித்தவன் நான்!

ஆனால் இன்றோ நீரிலும் நிலத்திலும் பாரின் திசைகள் அனைத்திலும் படர்ந்து, பரவி, ஊடுருவி நிற்கின்ற உயரிய நாகரீகத்தின் – பழங்குடிப் பூர்வீகத்தின் வாரிசுகள் நாமென நெஞ்சு நிமிர்த்தி நிற்கின்ற ஓர் ஆய்வுலகத்தினை அரவணைக்கின்ற அற்புத அனுபவத்தின் பூரிப்பில் நிற்கின்றேன்!

கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக இலண்டனிலிருந்து இயங்கி வருகின்ற தமிழவையின் ‘தேடலும் கூடலும்’ என்னும் இணையவழி மெய்நிகர் அரங்கில் சமகால அறிவியல், தொல்லியல், பண்பாட்டு, வாழ்வியல் பரப்புகளை ஓர் ஒப்பியல் அணுகுமுறையில் யாம் உரைத் தொடர்களை நிகழ்த்தி வருவதன் விளைவாக தொல்லியற் களப்பணியும், கல்விப் பணியும், ஆய்வுப் பணியும் ஆற்றுகின்ற ஆளுமைகளையும், அனுபவங்களையும் கேட்டும், உணர்ந்தும் வருகின்றோம்.

‘உய்த்துணர்வையும்’ , மெய்ப்பொருள் காணும் ‘மெய்யறிவையும்’ துணையாகக் கொண்டு தமது இலக்கிய நுகர்வின் புலமைத்துவப் பண்டுபுகளோடு  வரலாற்றுத் தரவுகளை, தகவல்களை  உற்று நோக்கவல்ல பலரைச் சந்திக்கின்ற அவரோடு கூடிச் சிந்திக்கின்ற வாய்ப்பினை இன்றைய தொழில்நுட்பமும் ‘கொரோனா’ முடக்க நிலையும் எமக்கு அளித்துள்ளது!

இன்னல்கள் – இழப்புகளின் மத்தியிலும் – நன்மைகளையீட்டலாமென்ற இச் சூழலில் – ‘தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் நேற்றும் இன்றும்’ என்னும் இக்கட்டுரைத் தொடரை எழுத விளைகின்றேன்!

இவை எனது தனிப்பட்ட மற்றும் சமுதாய அனுபவங்களின் பிரதிபலிப்பாகவும் எனது தேடல்களின் தெளிவுரையாகவும் அமையுமென்று உறுதிபட நம்புகின்றேன்!

சத்தியம் சாகாது – அது

தீயிலும் வேகாது!

நித்தியமாயிருக்கும் – அது

நீதியின் வழிநடக்கும்!

  • சத்தியம் சாகாது நூலிலிருந்து

“அன்பே தமிழ்! அதிலே தமிழ்!“

எனது பார்வையில் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும்

  • புலவர் நல்லதம்பி சிவநாதன்
  • (தேடல் 1)

1970களின் பிற்பகுதியில் ஒரு பொறியியற் பட்டப்படிப்பு மாணவனாகக் கல்வி பயின்ற காலங்களில் தமிழர் தொல்குடி வரலாறு வாழ்வியல் பற்றிய தேடலில் ஆழமான ஈடுபாட்டுடன் இயங்கிய அனுபவம் எனக்கு உண்டு!

அக்காலங்களில் இலண்டனிலுள்ள நூலகங்கள் மற்றும் இவை பற்றிய ஆய்வு நூல்கள், கட்டுரைகள், சொற்பொழிவுக் குறிப்புகள் எனப் பலவகையான உசாத்துணை மூலகங்களை தேடித் தேடி அலைந்து தகவல்களையும், தரவுகளையும் சேகரித்து வந்திருக்கின்றேன்!

கிழக்குலகத்திலும், மேற்குலகத்திலும் தமிழர் தொல்குடி சார்ந்த தகவல்களையும், தரவுகளையும் தேடுகின்ற போதெல்லாம் எனக்கு பலவித ஏமாற்றங்களும், விரக்தியும், வேதனையுமே விளைந்த கணங்கள் பற்பல!

‘திராவிடம்’ என்ற சொற்பதத்தினுள் தமிழர் தொல்குடி வரலாறு தொடங்கியும், தொக்கியும் நின்றதேயொழிய தமிழர் தொன்மையைத் துலக்கிய வெளியீடுகள் மிக மிக அரிதாகவே அக்காலகட்டத்தில் எனது கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டின எனலாம். அதுவும் தொழில்நுட்பம் பெரிய அளவில் விரிவடையாத ஒரு காலத்திலேயே நான் எனது தேடலை அறிவியல் ரீதியாக ஆரம்பித்திருந்தேன்.

நான் இலண்டனிலே பொறியியற் கல்வியை மேற்கொண்ட காலங்களில் ‘கணினி’ என்பதே ஒரு ‘நெல் ஆலை’  இயந்திரம் போலக் காட்சி தந்தது. அதனுடைய பயன்பாடு மற்றும் அறிவியலில் அதன் வகிபாகம் இவற்றினை முழுமையாகக் கண்டு கொள்ள முடியாத ஒரு சந்ததியாகவே நாம் அப்போது எமது கல்விப் பயணத்தை ஆற்றி வந்தோம்.

மேலும் அக்காலத்தில் கைத்தொலைபேசியின் பாவனையும் எம்மிடையே அறிமுகமாகியிருக்கவில்லை. வெளிப்படையாகக் கூறினால், பணப்புழக்கமும் கூட அன்றிலிருந்த எமது வாழ்க்கைச் சூழலில் மிக மிக அரிதாகவேயிருந்தது.

‘Pablic Telephon Booth’ அதாவது ‘பொது மக்கள் தொலைபேசிக் கூண்டுகள்’ தான் எமக்கான தொடர்பு சாதனமாக இருந்து வந்தது. ஒரு தேவை குறித்தும் உறவு குறித்துமே தொலைபேசித் தொடர்பாடலை நாம் மேற்கொள்வதுண்டு.

இச்சூழலில் எமது தாயக நிலங்களான இலங்கை, இந்தியாவில் கூட தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு எம்மிடம் அப்போது பெரிய அளவில் பணக் கையிருப்பு இருப்பதில்லை. எம்மில் பலர் இரவு வேலை செய்தே கல்விப் படிப்பினை மேற்கொள்ள வேண்டிய சூழலில் இருந்திருக்கிறோம். தவணைக் கட்டணம் கட்டுவதென்பதே ஒரு பயங்கர அனுபவமாகக் கண்ட பிறநாட்டு மாணவர்கள் நாம். வாடகை அறையின் பலத்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரு தொலைக்காட்சி கூடப் பார்க்க முடியாத ஒரு மாணவச் சந்ததியில் வாழ்ந்தவர்களுள் நானும் ஒருவன்.

குளிப்பதற்கும் கூடிக்குலாவுவதற்கும் எமது கல்வி நிறுவனங்களின் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தியே எமது மாணவ வாழ்க்கையை நாம் ஓட்டிக் கொண்டிருந்தோம். எனவே இவ்வாறான ஒரு சூழலில்தான் நான் எனது தேடல்களை ஆரம்பித்தேன் எனலாம்.

எனினும் இவ்வாய்வுத் தேடலைத் தொடர்ந்தும் ஒரு பல்கலைக்கழக வாளாகம் கட்டமைக்கப்பட்ட ஆய்வு அணுகுமுறையில் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமையினால் நான் அவ்வப்போது எனக்குக் கிடைத்த தகவல்களையும், தரவுகளையும், குறிப்புகளாகவும், குறுங் கட்டுரைகளாகவும் பதிவு செய்து கொண்டே வந்தேன்.

இதன் மத்தியில் எனது பொறியியற் பட்டப்படிப்போடு எனது தமிழ் மொழி, கலை, கவிதை, இலக்கியம், பண்பாடு, தாயகம் சார்ந்த எனது பணிகளையும், பங்களிப்புகளையும், படைப்பாக்கங்களையும் ஆற்றி வந்ததன் விளைவாக எனது தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடலை முழுமையான ஒரு மனக்குவிப்போடு தொடரும் சூழல் என்னைச் சுற்றி உருவாக்கம் பெறவில்லை.

1979இல் எனது பொறியியற் படிப்பு நிறைவுக்கு வந்த போது, நான் நீர்பாசனப் பொறியியலிலும் ஒரு மேலதிக பட்டப்படிப்பினை மேற்கொண்டு அதனை நிறைவு செய்து விட்டு 1981இல் லிபியாவிற்கு பொறியியல் – நிலவியல் சார்ந்த தொழில் வாய்ப்பினைப் பெற்றுப் பயணித்தேன். லிபியாவில் ஒரு பல்லினக் கலாச்சார சூழலில் நான் பெற்ற அனுபவங்களைத் தொடர்ந்து 1983இன் இறுதிப் பகுதியில் இலண்டனிற்கு மீண்டும் வந்த போது எனது தேடலைத் தொடரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

தொடர்ச்சியாக இது பற்றிய வாசிப்புகளை மேற்கொண்டதன் விளைவாக மேன்மேலும் பல நூற்றுக் கணக்கான குறிப்புகளையும், குறுங் கட்டுரைகளையும் பதிவு செய்து கொண்டே வந்தேன்.

தொடரும்….

 

https://www.ilakku.org/தமிழர்-தொல்குடி-வரலாற்று/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும் (தேடல் 2)

 
74901817-1d57-4450-b983-aaa71cc65b75-1-6
 88 Views

தமிழர் தொல்குடித் தேடலை ஊக்குவித்த உளவியற் காரணிகள்:

1950, 60, 70களில் எமது தாயக நிலங்களில் தமிழர் தொல்குடி வரலாறு பற்றிய தெளிவான தரவுகளையோ, தகவல்களையோ யாம் எமது இளமைக் காலங்களிற் பெறுவதற்கான வாய்ப்புகள், வசதிகள், சூழல்கள் பெரிதாக இருந்ததில்லையென்றே கூறவேண்டும்!

இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையில், தமிழர் தேச, தேசியச் சிந்தனைகள் யாவும் முற்றுமுழுதாக சிங்களப் பேரினவாதத்தினின்றும் எம்மை விடுவிக்கும் இலக்கோடும், நோக்கோடும் கருத்தரிப்புற்றுக் கட்டியெழுப்பப்பட்டு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒருகாலத்திலேயே எனது இளமைக்காலம் தாயகத்தில் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டு வந்தது! இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்களின் இறைமையையும், இருப்பையும் தக்கவைக்கின்ற ஒரு தேச, தேசியம் சார்ந்த அரசியல்  இயக்கமே எமது இரத்த ஓட்டத்தில், எண்ண அலைகளில், இருதயத்துடிப்பில் கலந்து வியாபித்து நின்றதனை நமது சமகாலத்தில் வாழ்ந்த மாணவ உலகம் ஒருபோதும் மறுக்காதென உறுதியாக நம்புகின்றேன்!

எனக்கு ஏழு வயதாக இருந்தபோது, 1956இன் தனிச்சிங்கள மசோதாவின் மூலம் எம்மீது திணிக்கப்பட்ட சிங்கள மொழித்திணிப்பும் சரி, அதனைத் தொடர்ந்து 1958இல் நிகழ்ந்து பலதமிழ் மக்களின் உயிர்களை மிகமிகக் கொடூரமான முறையிற் காவுகொண்ட இனவெறிப் படுகொலைகளும் சரி, எமது பிஞ்சு இதயங்களில் ஒரு சிங்களப் பௌத்த அரச பயங்கரவாதத்திற்கெதிரான தேச, தேசிய உணர்வியக்கத்தியக்கத்திற்கான உளவியலுக்குள் இழுத்துச் சென்றதனால், ஒரு கசப்புநிலை கடந்த துன்பவடுக்கள் தொடாத சமநிலைப்பட்ட அறிவியற் பார்வையுள்ள ஒரு தமிழர் தொல்லியல் வரலாற்றுத் தேடலை எம்மால் எமது பள்ளிக்காலங்களிலோ அல்லேல் கல்லூரிக் காலங்களிலோ எதிர்கொள்ள முடியவில்லை!

1956இனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகத் தமிழர்களாகிய யாம் இலங்கைத்தீவில் அனுபவித்து வந்த அரச ரீதியான, அரிசியல் ரீதியான, இன, மத, மொழி, கல்வி, பொருளாதார ரீதியான புறக்கணிப்புகள், புறந்தள்ளல்கள், அவமானங்கள், அவதூறுகள், அலட்சியங்கள், அச்சுறுத்தல்கள், அங்கலாய்ப்புகள், எச்சரிக்கைகள், ஏய்ப்புகள், ஏமாற்றங்கள் என இவையனைத்தும் எமக்கான ஒரு பாதுகாப்புள்ள தேச தேசிய உருவாக்கத்தை நோக்கிய ஒரு தேடற் பயணத்திலேயே எம்மை ஈர்த்தும், ஈடுபடுத்தியும் வந்ததெனலாம்!

இவ்வாறான ஓர் அரசியற் பின்னணியில் எம்மை எமது தேசம் தேசியம் பற்றிய விழிப்புணர்வுக்கு உட்படுத்திய அரசியற் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ஒருசிலர் இருந்ததன் விளைவாக யாம் தமிழையும், தமிழரையும் ஓர் உரிமைப் போராட்டக் கோணத்திலேயே எமக்குள் ஏந்தியவாறு எமது வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பப் படிகளில் ஏறி வந்தோம்!

இரத்தத் திலகமிட்டு வரவேற்று உணர்வுபூர்வமான ஒரு சனநாயக நெறிப்பட்ட தேச தேசிய அரசியற் கலாச்சாரமே எம்மை அன்றைய காலத்தின் தேவை நோக்கி வழிநடத்தியதன் விளைவாக ஓர் ஆழமான தொல்லியல் வரலாற்றுத் தேடலை யாம் நாடவில்லையென்றே கருத முடியும்!

இந்நிலையில், இலங்கையிற் தமிழர்களின் தோற்றம் பற்றியோ, அவர்களது வரலாற்று பண்பாட்டு வாழ்வியற் தடயங்கள் பற்றியோ எமக்குத் தெளிவுபடுத்துவதற்குக்கூட யாரும் முன்வந்ததாகக் கூறுவதற்கில்லை!

உண்மையில் எமது முழுமையான தாயகப் பிரதேசங்களையும் அவற்றின் கிராமங்கள், ஊர்கள், சிற்றூர்கள் பற்றியும் எமது தமிழர் தேச விடுதலைப் போராட்ட காலங்களுக்கு முன்னர் நாம் கொஞ்சமாவது அறிந்திருந்தோமோவெனில் அதற்கான பதில் இல்லையென்றே என் போன்றவர்களிடமிருந்து வருமென நம்புகின்றேன்!

எமது இளமைக் காலத்தில், வடக்கு மாகாணத் தமிழர்களாகிய எமக்கும், கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்குமிடையிற்கூட குறிப்பிடத்தக்க இணைப்பும், புரிந்துணர்வும் இருந்ததாக என்னாற் கூறமுடியாது! எமது பார்வையில் இலங்கையின் தமிழும் தமிழர் வரலாறும், வாழ்வியலும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததென்றே நினைக்கத் தூண்டுகிறது!

ஏன் வன்னி, மன்னார் போன்ற பிரதேசங்கள் பற்றியே எம்முட் பலர் பெரிதாக அறிந்திருந்தோமென்று சொல்வதற்கில்லை!

எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு ஓரிரு தடவைகளே போயிருக்கிறேனென நினைக்கிறேன்! கிளிநொச்சி உருத்திரபுரம் பத்தாம் வாய்க்கால் மாகாவித்தியாலயத்தில் நான் ஆசிரியனாகப் பணிபுரிந்த காலங்களிலே எனக்கு ஏற்பட்ட கல்வி, கலை, கவிதை, இலக்கியப் பிரயாணங்களின் அனுபவங்களினூடாக ஒருசில வன்னிப் பிரதேசங்களிலுள்ள ஊர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததேயன்றி, இவற்றிற்கு அப்பால் ஒரு தேச வரலாற்றுத் தேடலாக இவற்றை நான் கருதியதேயில்லை!

கிளிநொச்சியில் நான் கற்பித்த காலங்களில், என்னுடன் கவிஞரும், இன்றைய திரைப்பட நடிகருமான வ.ஐ.ச.செயபாலன்,  மட்டக்களப்பைச் சேர்ந்த கலியுகன் மற்றும் முத்துசிவன் ஆகிய இளங்கவிஞர்கள் கூடிக் கவியரங்க நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வந்தோம்! இக்காலங்களில், அரங்குகளிற் கருத்தரங்கங்களும் செய்து வந்ததன் விளைவாக மட்டக்களப்பிலிருந்து திமிலைத் துமிலன் மற்றும் ராஜபாரதி என ஒரு சிலரையும் நாம் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது!

அரசியற் களத்தில் நாமெல்லோரும் ஆவலோடும் ஆர்ப்பரிப்போடும் எதிர்பார்த்துக் கேட்டு மகிழ்ந்த சொற்பொழிவாளராக திரு ராஜதுரை அவர்களோடு நான் நேசித்து நெஞ்சு விட்டுப்பழகிய கவிஞர் காசி ஆனந்தன் ஆகிய இருவரும் மட்டக்களப்புடன் எம்மை இறுகப் பிணைத்தவர்களெனக் கூறமுடியும்!

எனவே இலங்கையிற் தமிழர்களின் ஆதிக்குடி வரலாற்றை அன்றைய நிலையில் அறிவதற்கான கல்வி, சமூக மக்கள் தொடர்புச் செல்நெறியை எம்மாற் கண்டுகொள்ள முடியவில்லை என்றே கூறலாம்!

இலங்கையில் அன்றைய காலத்தின் தமிழிலக்கிய ஏடுகள், இதழ்கள், சஞ்சிகை, ஊடக,  வெளிப்பாடுகள்கூட எமது தொல்குடி வரலாறு பற்றியோ, எமது இன அடையாளம் பற்றியோ பெரிதும் பேச முயன்றதாக எனக்கு ஞாபகமிலலை!

இலங்கை வானொலியில் அவ்வப்போது ஒருசில கிராமிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகுவதைக் கேட்கும் வாய்ப்புக் கிடைக்க நேரின் இவற்றின் வழியாக ஒருசில தகவல்கள் காற்றிற் தவழ்ந்து வந்து செவிவழியேறி மனதிற் காட்சியாக விரிவதுண்டு!

அக்காலங்களில் வீட்டில் வானொலிப் பெட்டி வைத்திருப்பதென்பதே ஓர் அரிய விடயமாக இருந்ததையும் நாம் மறப்பதற்கில்லை! ஏனக்கு இன்றும் பசுமையாக இருக்கிறது, நான் எனது சிறுவயதில் எமது ஊர்ச் சந்தையிலுள்ள ஒரு கடையின் முன்னால் நின்று அக்கடையிலிருந்து வானொலியிலெழும் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுச் சுவைத்து இன்புறுவதுண்டு! நான் கொழும்பிலிருந்த காலங்களில் இலங்கை வானொலியில் எங்கள் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் (காசி அண்ணா) ‘நாளைய சந்ததி’ எனும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார்! அதிலே நானும் பற்குபற்றியுள்ளேன்! இந்த நிகழ்ச்சியை நான் பம்பலப்பிட்டியிலுள்ள ஒரு உணவுக் கடையின் முன்னால் நின்றே முதன்முதலாகக் கேட்டேன்! இதனை நான் கூறுவதற்குக் காரணமென்னவென்றால், நாம் வாழ்ந்த எமது தேசத்தின் அமைப்புப் பற்றியோ, அதனது நிலவரைபு பற்றியோ, அதன் வளங்கள் பற்றியோ கலை, கவிதை, இலக்கியப் பண்பாட்டுப் பரிணாமம் பற்றியோ, அதன் தொல்குடி வரலாறு பற்றியோ, அல்லேல் அதன் தேச உருவாக்கம் பற்றியோ நாம் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாதவர்களாகவே ஒருகாலத்தில் நாம் வாழ்ந்து வந்துள்ளோமென்ற உண்மையைப் பதிவு செய்வதற்காகவே!

அன்றைய காலகட்டத்தில் தம்மைக் கற்றவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும், அன்று கல்விமான்கள், அறிஞர்களென அரசாலும் கல்விப் பீடங்களாலும் கலை இலக்கியப் பிதாமகர்கள், அவதானிகள், அபிமானிகள், அனுமானிகளாலும்  அங்கீகரிப்பட்டவர்களும் எமது சந்ததிக்குக் கையளிக்க முயன்றதெல்லாம் ருசியாவிலும், சீனாவிலும் தான் சொர்க்கமிருக்கிறதென்பதையும், அங்குதான் மக்கள் சுதந்திரமாகவும், உரிமைகளோடும் வாழ்கிறார்களென்பதையும் அங்கு தான் கவிதை, இலக்கியங்களெல்லாம் மானிடத்தின் உயர்வு நோக்கி ஊற்றெடுக்கின்றன என்பதையும் வலியுறுத்துகின்ற, முற்றுமுழுதாக ஏற்றுக்கௌ்ளுகின்ற ஒரு கருத்துருத்துவாக்க  கல்வி, கலை இலக்கிய வாழ்வியல் சமூக பொருளியல் அரசியல் சித்தந்தாத்தையே என்று கூறின் அது மிகையாகாது!

எமது முன்னோரின் இலக்கியங்களையும், அவற்றின் செய்யுள்களையும், அவற்றை யாத்த புலவர்களையும் ஒரு பொய்மைக் கோலமாகச் சித்தரித்த பெருங்கைங்கரியத்தை ஆற்றியவர்களுட் பலரை நாம் இந்த வட்டத்திலேயே சேர்க்க முடியும்! சித்தர்கள் ஞானியர் பனுவல்களையும், தமிழர் மருத்துவ, சோதிட, வானியல், வணிக, வரலாற்றுப் பதிவுகளையும் கடற்கோள்கள், பற்றிய புலவர் பதிவுகளையும் உதாசீனம் செய்த பலரை நான் சந்தித்திருக்கிறேன்!

(தொடரும்)

-புலவர் நல்லதம்பி சிவநாதன்-

 

https://www.ilakku.org/தமிழர்-தொல்குடி-வரலாற்ற-2/

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும் (தேடல் 3)

54d7e697-57ab-4f0f-8d3d-0dd9af0007d5-696
 37 Views

எனது இளமைக் காலத்தில் சங்க, இலக்கியங்களைச்  சாடியவர்களை தரிசித்தவர்களையெல்லாம் அரங்குகளிலும், ஏடுகளிலும், இதழ்களிலும் நான் சந்தித்துள்ளேன்!

தமிழர் தொல்குடி வரலாற்றை நம்பியவர்களும், சங்க இலக்கியங்களை நேசித்தவர்களும் அன்றைய இலங்கையின் கல்வி, கலை, இலக்கிய உலகின் ‘புத்திசீவிகளின்’ முன்னால்  அனுபவித்த சவால்களையும் நேரிற் கண்ட சமுதாயத்தில் வாழ்ந்தவன் நான்!

புலவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்களென்றும், கவிதைக்கு உணர்ச்சி தேவையில்லையென்றும் வாதித்த பேராசிரியப் பரப்புரைகளின் மூலம், சங்க இலக்கியங்களின் உண்மைத்தனம் அன்று முற்றுமுழுதாக அறிவியற் பரப்பிலிருந்து அகற்றப்பட்டதை நேரிற் கண்ட அனுபவம் எனக்குண்டு!

தமிழர்களை வந்தேறு குடிகளாய் வரையறுத்தவர்கள், சிங்களப் பௌத்த அரசியல்வாதிகளும், மதவாதிகளும் மட்டுமல்ல, நம்முட் சிலரும்தான் என்ற உண்மையை நாம் ஒருபோதும் மறுப்பதற்கில்லை!

தொல்குடி மரபுக்கலைகளைக்கூட சாதி, இடம், குறிச்சி பார்த்து எடைபோட்ட இழிவு நிலையின் சொந்தக்காரர்களும் நாமே என்பதை மறந்து விடக்கூடாது!

கூத்து வடிவங்களையும், குலவழிபாடுகளையும், கலை இலக்கியப் பதிவுகளையும் கூடச் சாதி, இட, மத வேறுபாட்டுக் கண்களினூடு பார்த்த ஒருசமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது!

எனவே தமிழர் தொல்குடி வரலாறு பற்றிய தேடலுக்கான உளவியற் பாங்கும் பரப்பும் தோற்றம் பெற்றது எனது இளவயதிலென்றே எண்ணத் தூண்டுகிறது!

எனது பிறந்த ஊரான வட்டுக்கோட்டையில் கலையும், கவிதையும், பாட்டும், கூத்தும் எனப் பல்வகையாலும் பல்வழிகளிலும் தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டு வாழ்வியல் விழுமியங்களை யாம் தொடர்ச்சியாக நுகர்ந்து, பகிர்ந்து சுவைத்துச் சுமந்து வாழ்ந்த போதிலும், தமிழர் தொல்லியல் சார்ந்த, வரலாறு சார்ந்த கல்வியையோ, விழிப்புணர்வையோ எமது இளமைக்காலங்களில் அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு எமக்குப் பெரிதாகக் கிட்டியதில்லை!

ஆகமிஞ்சிப் போனால், எமது கல்லூரி விழாக்களிலும், ஏனைய பொதுமக்கள் கூடுகின்ற கலைவிழாக்கள், கொண்டாட்டங்களிலும் தமிழகத்திலிருந்து அக்காலங்களில் வருகை தந்திருந்த தமிழறிஞர் பெருமக்கள் வரிசையில் கி.ஆ.பெ.விசுவநாதம், ம.பொ.சிவஞானம், அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜெகநாதன், குன்றக்குடி அடிகளார், வெள்ளை வாரணனார் ஆகியோரும் மற்றும் எமது தாயகத்தின் தமிழறிஞர்களின் வரிசையில் வித்துவான் வேலன், வித்துவான் வேந்தனார் க.கி.நடராஜன், வித்துவான் ஆறுமுகம் (ஸ்கந்தவரேதயாக் கல்லூரி) ஆசிரியர் சிவராமலிங்கம்   (யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி) ஆகியோரும் தமிழிலக்கியங்களினூடு தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று விழுமியங்களைப் பேசக் கேட்டிருப்போமேயொழிய இதற்கு மேலாக தமிழர் தொல்லியல் பற்றிப் பேசிய பலர் திராவிடக் கொள்கையைப் பற்றிய நம்பிக்கையையே மிகவும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்கள்!

இதற்கு அடுத்த தளத்தில் எமது பல்கலைக்கழகப் பரப்பில் தமிழர் தொன்மை பற்றிப் பேசியும், எழுதியும் வந்த பலரின் பார்வைகள் ஒரு மேற்குலக ஆய்வாளர்களின் வழிமொழிவாகவும், நாத்திக மாக்சியக் கோட்பாடுகளின் எதிரொலியாகவுமே எம்மை வந்தடைந்தன எனலாம்!

இந்நிலையிற் தமிழகத்திலிருந்து எழுந்த ‘திராவிடம்’ பற்றிய கூச்சலும், கூப்பாடுகளும் இப்பதத்தினுள்ளேயே தமிழர் தொல்லியல் வரலாற்றைப் புதைத்து மூடிமறைத்து விட்டதையும் நாம் புறக்கணிப்பதற்கில்லை!

நான் செய்த தவமோ என்னவோ இல்லை என் பிறப்புவழி யானடைந்த பேறின் பலமோ. எமது முன்னோரின் வாக்குகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் ஒருபோதும் எனது அகப்பீடத்திலிருந்து அகற்ற முடியாதவனாகவே வளர்ந்து வந்தேன்!

ஒரு முதுதமிழ்ப் புலவனுக்கும் எனது ஒன்றரை வயதில் நிகழ்ந்த அவனது மறைவின் பின்னரும் அப்புலவனது சத்திய ஒளியையும், புலமைத்துவ சக்தியையும்  என்னுள் விருத்தி செய்து வியாபிக்க வைத்த என் தெய்வத் தாய்க்கும் பிள்ளையாகப் பிறந்ததன் விளைவாகவும் மட்டுமன்றி, நான்  எனது கல்லூரிக் காலங்களிற் சந்தித்த எனது ஆசான்கள் வழி பெற்ற தற்தேடலின் விளைவாகவும் நான் என் முன்னோர்களின் முகங்களை என்னுட் தொடர்ச்சியாகத் தரிசித்து வந்தேன்!

குறிப்பாக எனக்கு இதுவிடயத்தில் எனது கல்விக் காலத்தில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் ஊக்கமும், உந்துசக்தியும், உத்வேகமும் அளித்த அமரர் திரு கைலாயநாதன் அவர்களுக்கு நான் என்றென்றும் கடப்பாடுடையவனாகவேயிருக்கிறேன்!

தமிழர்களுடைய இன அடையாளத்தைப் பூர்வீகத்  தொல்குடி சார்ந்த தொல்லியற் சான்றாதாரங்கள் வழியாகத் தேடும் ஆய்வியற் போக்கு இன்றிருப்பது போல அன்று இருக்கவில்லையென்பதை நாம் ஒருபோதும் புறக்கணித்துவிடக் கூடாது!

எனவே என்னுடைய சொந்தத் தேடலின்  அனுபவத்திற் தொல்குடித் தமிழர் அறிவியல் வாழ்வியல் பண்பாட்டு வரலாற்றுத் தரவுகள் பதிவுகள், தகவல்களில் நான் கண்ட – காண்கின்ற ஆய்வு அணுகுமுறைகளிலுள்ள மாற்றங்களைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்மாகும்!

தமிழர் தொல்குடித்தேடலை ஊக்குவித்த உளவியற் காரணிகள்:

ஆங்கிலப் புலமையும், அந்நிய அரசியல் இலக்கிய ஆளுமையும் கொண்டவர்களுக்கு முன்னால் தமிழ்த்தேசிய உடையோடு தமிழ்க் கல்வியைக் கற்பித்த ஆசிரியர்களை இந்தப் புத்திசீவிகளின் கூட்டம் எவ்வாறு நோக்கியதென்பதை நாம் பல இடங்களில் அவதானித்திருக்கிறோம்!

குறிப்பாக மேற்குலக ஆய்வாளர்களும், அறிஞர்களும் பதிவு செய்த, அல்லது பகருகின்ற வரலாற்றுத் தத்துவங்களையும், காலக்கணிப்பீடுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் மனோநிலை நம்மிடை உலவிய பேரறிஞர்கள் பலருக்கு அன்று இருந்ததை எவரும் மறுத்துவிட முடியாது!

காரணம் நவீன அறிவுலகம் எல்லாவற்றிற்கும் சான்றாதாரங்கள் கேட்கிறது! அதுவும் பௌதீகச் சான்றாதரங்கள் கேட்கிறது! அப்போது தான் உங்கள் தொல்குடி வரலாறு பற்றி நாம் நம்புவோம் என்று வெகுவாக அடம்பிடிக்கிறது! விசித்திரமென்னவென்றால், இதில் ஒருவித நியாயமும் இருக்கிறது!

நகைச்சுவையென்னவென்றால், கேட்பவருக்கு அறுநூறு ஆண்டு வரலாற்றுப் பின்னணிகூட இல்லை! அவர்தான் உலக பூர்வீகக்குடிகளின் தொல்குடி வரலாற்றைப் பதிவு செய்யும் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருக்கிறார்! என்செய்வது! எமக்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி இருப்பதை நாம் ஆழமாக உணர்கிறோம்! இதற்கான வரலாற்று ஆவணப் பதிவுகளாக எமது இலக்கியங்கள் சான்று பகர்கின்றன! புலவர்களின் ஒவ்வொரு பதமும் சத்தியத்தின் ஓசையாக எம்முள் ஒருசிலருக்கு மட்டும் செவிகளிற் கேட்கிறது!

இவ்வாறான ஓர் இக்கட்டான சூழலில் முக்கடற்கோள்கள் பற்றியும், கடலில் மூழ்கிய தமிழர் தொல்குடி நாகரீகம் பற்றியும் பேசுவதையே சுத்தப்பட்டிக்காட்டுத்தனமாகக் கருதிய பலர், நம்மிடையே அன்று வலம் வந்திருக்கிறார்கள்!

எனது தனிப்பட்ட அனுபவத்தில் எனது ஊரின் கலை, நாட்டுக்கூத்து, நாடக இயக்கங்கள் இவற்றுடன் எமது மண்வாசனையை எமக்குத் தொடர்ச்சியாக ஊட்டி வந்த நடிகமணி வைரமுத்து, கலைமாமணி சின்னமணி மற்றும் பாசையூர் நாடகக் குழுவினர் ஆகியோரின் ஒப்பற்ற இசை நாடகங்கள் மற்றும் கதாப்பிரசங்கம், வில்லுப்பாட்டு, கவியரங்கம், நாடகம் எனும் அவைக்காற்று கலைகளினூடு எனது முன்னோர்கள் பற்றி நான் அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்ட அற்புதமன அபரிமிதமான விடயங்கள் அனைத்தும் என்னைத் தமிழ்த் தேச தேசிய தெய்வச் சிந்தனைகளோடும், செல்நெறியோடும் பிணைத்து வளர்ந்தன என்றால், அது மிகையாகாது!

குறிப்பாக அக்காலங்களிற்றான் தமிழகத்தில் திராவிடக் கொள்கைகளுக்கு எதிரான தமிழ்நாட்டுக்கான தமிழ்த்தேசிய எழுச்சிக் குரலை சிலம்புச்செல்வர் ம.பொ.சி போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் நிகழ்த்தி வந்தார்கள்!

இது இவ்வாறிருக்க, எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தாரின் கூற்றுக்களையும், கொள்கைகளையும் அடியொற்றி, அணிவகுத்த பாரம்பரியம் கொடிகட்டிப் பறந்த காலமொன்று அன்று இருந்துள்ளது! உலகத் தொல்குடி வரலாறு பற்றிய காலக்கணிப்புகள் கூட எம்மீது பிறராற் திணிக்கப்பட்வையாகவே நான் எனது இளமைக்காலத்திலிருந்தே உணர்ந்து வந்திருக்கிறேன்!

இதற்கான இன்னுமொரு காரணத்தையும் நான் ஈண்டு பதிவுசெய்யவேண்டியுள்ளது!

எம்மடையே மலிந்து கடந்த சாதி சமய இடஆணாதிக்க ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக எம்முள் வந்து நுழைந்து கொண்ட நாத்திக மாக்சிய சோசலிச வாதப்பிரதி வாதங்களும் அரசியல் சமூக அலைகளும் எமது தொல்குடிவரலாற்றுத் தேடலுக்கான சூழலைச் சூனியமாக்கன என்றே கருதத் தூண்டுகிறது!

ஆயிரமாயிரமாண்டு காலங்களாகத் தமிழர் தொல்குடியிடம் நிறைந்து கிடந்த அறிவியல் வளங்களை தேச தேசிய தெய்வ வழிபாட்டு வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்களையெல்வாம் முற்றுமுழுதாக விழுங்கிக்கொண்ட பலவீனங்கள் சூழ்ந்த ஓரினமாகப் பரிணாமமெடுத்த ஒரு நாத்திகவரலாற்றின் விளைவுகள் பல!

தொழிலேற்றத்தாழ்வுகள் மூலம் வரையறுக்கப்பட்ட சாதிப் பெயர்க்குறியிடுகளையும், ஊர் குறிச்சிப் பிரிவுகளையும் ஆதிக்க அரண்களையும் அணுகுமுறை முரண்களையும் சூடிக்கொண்டு சூளுரைத்த  ஒருமக்களாக எமது தமிழர்குடி தன்னைத்தானே அழித்துக்கொள்ள நின்ற ஒருகாலகட்டத்திற்றான் நாத்திகமும் அந்நிய தத்துவ ஏற்புடைமைக் கலாச்சாரமும் மதமாற்றங்களும் இனஅடையாளத் தேய்வும் தேக்கநிலையும் உருவாக்கம் பெற்றன என்பது எனது தாழ்மையான கருத்தாகும்!

ஆலயங்கள் சமயபீடங்கள் ஊர்மன்றங்கள் நகர்மன்றங்கள் ஆட்சிமன்றநங்கள் அமைச்சுகள்  கல்விப்பீடங்கள் என இவற்றையெல்லாம் ஊடுருவி நின்ற தொழில் சார் சாதிமயப்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் எல்லைக்கோடுகளுமே எமது வரலாற்றுத்தேடலிற்கான வரம்புகள் வாய்க்கால்களை உடைத்தெறிந்தன் என் நான் எனது இளமைக்காலத்தில் இனங்காணத் தொடங்கினேன்!

தமிழர்தொல்குடி வரலாற்றை அவர்தம் வாழ்வியல் பண்பாட்டு விழுமிய்ஙகளைப்  பிரதிபலித்த அவற்றின் விம்பங்களாக விளங்கிய இலக்கியங்களைக் குடைந்து அவற்றினுள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த மானிடவழுக்களைத் தேடியடைந்து அவற்றை இழுத்துவந்து உரைச்சித்திரங்களாகவுத் எழுத்தோவியங்களாகவும் காட்டிய மேதாவிகளால் ‘மூளைக்கழுவல்’ செய்யப்பட்ட ஒரு மாணவ சமுதாயம் எமது மண்ணில் விருத்திசெய்ப்பட்டது ஒரு கசப்பான உண்மையாகும்!

ஒட்டுமொத்தமாகத் தமிழர் தொல்குடி வரலாற்றை எமது முன்னோர்களின் வாழ்வியல் பண்பாட்டோடு அத்தொல்குடியின் பல்லாண்டுகால உலகியல் இயல்பியல் அனுபவத்தோடு… ஈடுபடுத்தும் ஆற்றலும் ஆளுமையும் அனுபவமுமற்ற அதாவது அவற்றை ஆழமாக ஞான நிலையிலும் பேரறிவு நிலையிலும் பேரன்புநிலையிலும் அகநிலையிலும் புறநிலையிலும்  ஆன்மிக நிலையிலும் பிரதிபலிக்கின்ற பண்டைத்தமிழிலக்கியங்களோடு ஒப்பிடடுப்பார்க்கும் அனுபவமோ அக்கறையோ பொறுப்புணர்வோ அற்ற ஓர் ஆய்வுலகின் ஆதிக்கத்திற்றான் எமது தமிழர்தொல்குடி வரலாறு பற்றிய செல்நெறியும் சொல்நெறியும் அன்று இருந்து வந்துள்ளதை நான் உணர்ந்திருக்கிறேன்!

ஆங்கிலத்திற் சரளமாகப் பேசத்தெரிந்தவரே.. மற்றும் ஆங்கில இலக்கியங்களை நன்கு மனப்பாடஞ்செய்து அரங்குகளிலும் நிகழ்வுகளிலும் ஆற்றுகையும் அளிக்கையும் செய்யவல்லவரே கற்றவர் எனும் நம்பிக்கை ஊட்டப்பட்டு மேற்குலகப் பல்கலைக்கழ்கத்திற் கற்றவரே ‘படித்தவர்’  எனும் பார்வை பரவவிடப்பட்ட காலம் ஒன்று எமது தாயகங்களில் இருந்துள்ளது என்பதை என்போன்ற பலர் தமது அனுபவத்திற் கண்டிருப்பர்!

இதைவிட மிகவும் வேடிக்கையான விடயம் ஒன்றுண்டு!

எமது தாயகநிலங்களுக்கு அந்நியர்கள் வந்ததாற்றான் நாம் அறிவு பெற்றோம் என உறுதியாக நம்பிய பலர் நம்மிடையே ஒருகாலத்தில் இருந்திருக்கிறார்கள் என்றால் அது பொய்யான கூற்றாகாதென நம்புகின்றேன்!

தமிழிலக்கியங்களிற் புதைந்து கிடந்த அறிவியல் நுணுக்கங்களையோ அல்லேல்  பூகோளப்பரப்பிலும் அதனடியிலும் பரவிக்கிடந்த கல்லறைகள்  நடுகற்கள் கட்டடங்கள் வணிக வரலாற்றுச் சின்னங்களையோ கல்வெட்டுகள் செப்பேடுகளையோ தேடிச்செல்லக்கூடிய ஓர் கல்விப்பண்பாட்டைக் கூட நாம் எமது இளவயதிற் சந்திக்கவில்லை!

தமிழில் மேற்படிப்புப் படிப்பதற்குக்கூட வெளிநாடு சென்றவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்!

அரங்க இலக்கியங்கள்  என்று வந்தபோதும் கூட தமிழ் மொழியிலான படைப்பாக்கச் செல்நெறியை நிராகரித்துத் தழுவல்களையே தஞசமடைந்தவர்களும் இருக்கிறார்கள்!

 தமிழர்களை வந்தேறுகுடிகளாய் வரையறுத்தவர்கள் சிங்களப்பௌத்த அரசியல்வாதிகளும் மதவாதிகளும் மட்டுமல்ல நம்முட் சிலரும்தான் என்ற உண்மையை நாம் ஒருபோதும் மறுப்பதற்கில்லை!

தொல்குடிமரபுக்கலைகளைக்கூட சாதி இடம் குறிச்சி பார்த்து எடைபோட்ட இழிவுநிலையின் சொந்தக்காரர்களும் நாமே என்பதை மறந்து விடக்கூடாது!

கூத்து வடிவங்களையும் குலவழிபாடுகளையும் கலை இலக்கியப் பதிவுகளையும் கூடச் சாதி இட மத வேறுபாட்டுக் கண்கனினூடு பார்த்த ஒருசமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது!

எனவே தமிழர் தொல்குடி வரலாறு பற்றிய தேடலுக்கான உளவியற் பாங்கும் பரப்பும் தோற்றம் பெற்றது எனது இளவயதிலென்றே எண்ணத் தூண்டுகிறது!

தமிழர்களுடைய இனஅடையாளத்தைப் பூர்விகத் தொல்குடிசார்ந்த தொல்லியற் சான்றாதாரங்கள் வழியாகத் தேடும் ஆய்வியற் போக்கு இன்றிருப்பது போல அன்று இருக்கவிலலையென்பதை நாம் ஒருபோதும் புறக்கணித்துவிடக்கூடாது!

எனவே என்னுடைய சொந்தத் தேடலின்  அனுபவத்திற் தொல்குடித்தமிழர் அறிவியல் வாழ்வியல் பண்பாட்டு வரலாற்றுத் தரவுகள் பதிவுகள் தகவல்களில் நான் கண்ட காண்கின்ற ஆய்வு அணுகுமுறைகளிலுள்ள மாற்றங்களைப் பதிவுசெய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்!

-புலவர் நல்லதம்பி சிவநாதன்-

(தொடரும்)

https://www.ilakku.org/தமிழர்-தொல்குடி-வரலாற்ற-3/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் – இன்றும் – (தேடல் 4) – புலவர் நல்லதம்பி சிவநாதன்

 
unnamed-696x522.png
 13 Views

இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளா?

1956இலிருந்தே சிங்களப் பௌத்த பெரும்பான்மை தொடர்ச்சியாக முன்வைத்து வந்த வாதங்களுள் ஒன்று, இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளே என்பது தான்!

இதனைத் தான் சிங்கள மக்களுக்குப் போதித்து வந்தது சிங்களப் பௌத்த இனவாதப் பீடங்கள். இவை கல்விப் பீடங்களாக இருக்கலாம், மதபீடங்களாக இருக்கலாம், இல்லை அரசியல், பொருளாதார பீடங்களாக இருக்கலாம். இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் இவ்வாறான ஒரு பிரச்சாரக் கருத்தியலையே எமது பாலப் பருவத்திலும், சிறுவர் பராயத்திலும் பேசியும், எழுதியும், போதித்தும் வந்தன.

தமிழர்கள் சிங்களருக்குப் பின்னர் வந்து குடியேறியதன் விளைவாகவே இவர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறினார்களெனவும், குறிப்பாக இலங்கையின் பிடரிப் பக்கமாகக் கடல் வழியே வந்து குடியேறினரெனவும் சிங்களப் புத்திசீவிகளும், மதவாதிகளும் பிரச்சாரம் செய்து வந்தனர். இதனடிப்படையிற்றான் இலங்கைத் தீவு சிங்களர்க்கே என்ற வாதம் சிங்கள மக்களினால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தியல் தத்துவமாகப் பரவி வந்தது.

உண்மையில் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய ஆக்கிரமிப்புக்களினால் சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்பெற்ற தமிழர் ராசதானிகள் பற்றியும், ஆண்ட மன்னர்கள் பற்றியும், எமது தொல்குடி வரலாறு பற்றியும் ஆழமாகவும், வரலாற்று ஆதாரங்களோடும் அறியக்கூடிய ஒரு வாய்ப்பற்ற தேசிய இனமாகவே நாம் அப்போது இருந்தோம் என்பதில் எனக்கு எதுவித ஒளிவுமறைவுமில்லை.

இலங்கையின் பிடரிப் பக்கம் அதாவது வடமராட்சி, வடமத்திய கிழக்கிலங்கைக்கும் தென்னகத்திற்குமிடையிலான பூர்வீக நிலவியல் –பண்பாட்டு வாழ்வியல் – தொல்லியற் தொடர்புகளைப் பற்றி சிந்திப்பதற்கான எதுவித தூண்டுதலும், உசாத்துணைகளும் எமக்கு அப்போது இருக்கவில்லையென்றே கூற முடிகிறது.

நான் முன்னர் குறிப்பிட்டது போல ஆங்கிலக் கல்வி கற்றவர்களும், மேற்குலக ஆய்வுகளையே தமது உயிர்மறைகளாக ஏற்றுக் கொள்ளப்படுபவர்களையும் நம்புகின்ற ஓர் அப்பாவித்தனமான அறிவியல் – கல்விப் பண்பாடே நம்மிடை அக்காலங்களிற் காணப்பட்டது எனலாம்.

எனவே இந்நிலையில் இலங்கையின் பூர்வீகக் குடிகள் சிங்களவர்கள் தானென எம்முள் சிலரும் வாதிக்கக் கேட்டுள்ளோம். இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களாக இருந்திருந்தால், ஏன் பிறமாகாணங்களில் தமிழர்கள் குடியேறியிருக்கவில்லை என்று வாதிப்பவர்களும் நம்மிடையே இருந்துள்ளார்கள்.

நாகர் – இயக்கர் வரலாறு பற்றியெல்லாம் எமது பள்ளிப் பாடங்களில் அங்குமிங்குமாக ஒருசில தகவல்களை அறிந்திருப்போமேயொழிய அவை பற்றியும் எமக்குப் பெரிய தெளிவு நிலை அப்போது இருக்கவில்லை.

இதில் இன்னுமொரு சுவாரசியமான விடயமென்னவெனில், அக்காலங்களில் க.பொ.த (சாதாரணம்) வகுப்பிலேயே எமது உளவியலில் ஒரு பெரிய பிளவு ஏற்படுத்தப்பட்டு விடுவதுண்டு. “நீ விஞ்ஞானப் பிரிவிற்குள் நுழையப் போகிறாயா? இல்லை கலைப் பிரிவிற்குள் நுழையப் போகிறாயா?” என்ற கேள்வி எம்முன் பூதாகரமாக எழுந்து நிற்பதுண்டு. மொழி, கலை, இலக்கியம், அரசியல், சரித்திரம், வரலாறு என்ற பரப்புகளெல்லாம் கலைப்பிரிவிற்குள் அடங்கி விடும். சூழலில் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களைப் பொறுத்தவரை, இவை பற்றிய அறிவுத் தேடல்களோ, தெளிவுகளோ கிடைக்கின்ற வாய்ப்புகள் பெரும்பாலும் இருப்பதில்லை.

தமிழர் சமுதாயத்தைப் பொறுத்தவரை, தமது பிள்ளைகள் விஞ்ஞானப் பிரிவில் படித்துப் பட்டம் பெறுவது ஒரு மேலதிகமான கௌரவமிக்க சாதனையாக எண்ணினார்களேயொழிய கலைப்பிரிவினைப் பெரிய அளவில் அவர்கள் கவனமெடுக்கவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. ஏன் இப்போதும் இந்நிலை மாறிவிட்டதெனக் கூறுவதற்கில்லை. இதற்கான இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்துள்ளது.

தொழில் வாய்ப்பு என்று வரும் போதும் பொருளாதாரத்திற் பின்தங்கிய குடும்பச் சூழல் என்று வரும் போதும் அக்காலங்களில் பெற்றோர்கள் விஞ்ஞானப் பிரிவினையே முதன்மையான ஒரு “தப்புதற்கான தந்திரோபாயமாக (Escaping Strategy) மேற்கொள்ளும் ஒரு கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார்களென்பதையும் நாம் புறக்ணித்துவிட முடியாது.

தனது பிள்ளை ஒரு வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ, கணக்காளராகவோ வரவேண்டுமெனப் பிரார்திக்கின்ற பெற்றோர்களையே அன்றைய காலகட்டத்தில் எம்முன் உலவினர் என்பது ஒரு உண்மையாகும்.

பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை என்பது எமது பெற்றோர்களையும், அவரது பிள்ளைகளையும் பொறுத்தவரையில் ஒரு சாதனைக் களமாகவே அப்போது இருந்து வந்தது.

எனினும் 1956இன் சிங்கள மொழித்திணிப்பு, பின்னர் 1970இன் ஆரம்பகாலங்களில் நிறைவேற்றப்பட்ட தரப்படுத்தல் என்ற இரண்டு சிங்களப் பௌத்த இனவெறிச் செயற்பாடுகளின் விளைவாகப் பலவித மாற்றங்களையும், அழுத்தங்களையும் அனுபவித்தமை பலரும் அறிந்ததே. தமிழர் தேச தேசிய உணர்வுகளை ஊற்றெடுத்துப் பாய வைத்த சமகால வரலாற்றின் மைந்தர்களாகவே இவற்றை எம்மால் காணமுடியும்.

எனக்கு நல்ல ஞாபமிருக்கிறது. அக்காலத்தில் க.பொ.த(உயர்தரம்)  வகுப்பிற் படிக்கும் ஒரு மாணவனையோ, மாணவியையோ ஒரு வயோதிபப் பாட்டனோ, பாட்டியோ கண்டவுடன் கேட்கும் கேள்விகளுள் ஒன்று நீர் “art’ ஓ “சயன்ஸ்“ ஓ என்பதாகும்.

எனவே மொழியறிவு, இலக்கிய அறிவு, பண்பாட்டு – வாழ்வியல் வரலாற்றறிவு கல்வி மட்டத்தில் ஒருவர் பெறுவதானால், அவர் கலைப்பிரிவு மாணவராக இருக்க வேண்டிய சூழலே அக்காலங்களில் இருந்து வந்ததெனக் கூறலாம்.

இதற்கு அப்பால் மொழியிலும், கலையிலும் இலக்கியத்தில் பண்பாடு, வாழ்வியல் வரலாற்றிலும் அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்களுள் பலர் தமிழர் தேசியப் பற்றுள்ளவர்களாகவும், ஆர்வலர்களாகவும் ஆற்றுகையாளர்களுமாகவே இருந்துள்ளனரென நான் அவதானித்து வந்துள்ளேன்.

நான் விஞ்ஞானக் கல்வியைத் தேர்வு செய்திருந்த போதும், எனது பாலப்பருவத்தின் ஈர்ப்புகள் ஆர்வங்கள், தொடர்புகள், ஆற்றல்கள், ஆளுமைகளின் வழி எனது முன்னோர் பற்றிய தேடலும், எமது தேச, தேசிய தெய்வ மரபுகள், தொன்மைகள் பற்றிய பிணைப்பும் என்னுள் ஒரு உயிரொளியாகவே சுடர்விட்டு வந்ததை என்னால் உணர முடிந்தது.

இதற்கு மேலாக எனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்புகள் – அனுபவங்கள் என்னை எமது தொல்குடி வரலாற்றோடு இறுகப் பிணைத்து வந்துள்ளதை ஒரு வரப்பிரசாதமாகவே நான் கருதுகிறேன்.

சிங்கள மொழித் திணிப்பு இனக் கலவரங்கள் தமிழ் மொழிக் கல்வி, தரப்படுத்தல் இவற்றினூடு பயணித்த அனுபவம் 1984இல் தமிழாராய்ச்சி மாநாட்டு இரவு வரை என்னுடன் தொடர்ந்து வந்துள்ளது.

1970 – 71களில் கொழும்பில் கற்ற போதும், கிளிநொச்சி – உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் ஓர் ஆசிரியனாகப் பணியாற்றிய போதும் நான் சிங்களப் பௌத்த இனவெறியின் அகோர முகங்களைச் சந்தித்தவன்.

குறிப்பாக கிறிநொச்சியிற் கல்வி கற்பித்த காலங்களிற்றான் ஆனையிறவுப் பாலத்தில் சிங்கள இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட சோதனைச் சாவடிகளை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பயணிகளுள் ஒருவனாக நான் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக இருந்து வந்தேன்.

நாம் பயணிக்கும் பேருந்துகள் மறிக்கப்பட்டு, இராணுவத்தினால் சோதிக்கப்படும் கணங்கள் ஒரு ஞானியையும், கொலைகாரனாக மாற்ற வல்லது. எமது பெண்கள், தாயார், தங்கையர், தமக்கையர் மற்றும் முதியோர் பட்ட இன்னல்களை நான் நேரிற் கண்டிருக்கிறேன்.

அக்கணங்களிலெல்லாம் நாம் இலங்கையின் பூர்வீகக் குடிகளா? இல்லை வந்தேறுகுடிகளா என்ற கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டேயிருந்தன.

தொடரும்..

 

https://www.ilakku.org/தமிழர்-தொல்குடி-வரலாற்ற-4/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் – இன்றும் – (தேடல் 4) – புலவர் நல்லதம்பி சிவநாதன் இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளா?

 
unnamed-1-696x522.png
 1 Views

1956இலிருந்தே சிங்களப் பௌத்த பெரும்பான்மை தொடர்ச்சியாக முன்வைத்து வந்த வாதங்களுள் ஒன்று, இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளே என்பது தான்!

இதனைத் தான் சிங்கள மக்களுக்குப் போதித்து வந்தது சிங்களப் பௌத்த இனவாதப் பீடங்கள். இவை கல்விப் பீடங்களாக இருக்கலாம், மதபீடங்களாக இருக்கலாம், இல்லை அரசியல், பொருளாதார பீடங்களாக இருக்கலாம். இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் இவ்வாறான ஒரு பிரச்சாரக் கருத்தியலையே எமது பாலப் பருவத்திலும், சிறுவர் பராயத்திலும் பேசியும், எழுதியும், போதித்தும் வந்தன.

தமிழர்கள் சிங்களருக்குப் பின்னர் வந்து குடியேறியதன் விளைவாகவே இவர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறினார்களெனவும், குறிப்பாக இலங்கையின் பிடரிப் பக்கமாகக் கடல் வழியே வந்து குடியேறினரெனவும் சிங்களப் புத்திசீவிகளும், மதவாதிகளும் பிரச்சாரம் செய்து வந்தனர். இதனடிப்படையிற்றான் இலங்கைத் தீவு சிங்களர்க்கே என்ற வாதம் சிங்கள மக்களினால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தியல் தத்துவமாகப் பரவி வந்தது.

உண்மையில் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய ஆக்கிரமிப்புக்களினால் சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்பெற்ற தமிழர் ராசதானிகள் பற்றியும், ஆண்ட மன்னர்கள் பற்றியும், எமது தொல்குடி வரலாறு பற்றியும் ஆழமாகவும், வரலாற்று ஆதாரங்களோடும் அறியக்கூடிய ஒரு வாய்ப்பற்ற தேசிய இனமாகவே நாம் அப்போது இருந்தோம் என்பதில் எனக்கு எதுவித ஒளிவுமறைவுமில்லை.

இலங்கையின் பிடரிப் பக்கம் அதாவது வடமராட்சி, வடமத்திய கிழக்கிலங்கைக்கும் தென்னகத்திற்குமிடையிலான பூர்வீக நிலவியல் –பண்பாட்டு வாழ்வியல் – தொல்லியற் தொடர்புகளைப் பற்றி சிந்திப்பதற்கான எதுவித தூண்டுதலும், உசாத்துணைகளும் எமக்கு அப்போது இருக்கவில்லையென்றே கூற முடிகிறது.

நான் முன்னர் குறிப்பிட்டது போல ஆங்கிலக் கல்வி கற்றவர்களும், மேற்குலக ஆய்வுகளையே தமது உயிர்மறைகளாக ஏற்றுக் கொள்ளப்படுபவர்களையும் நம்புகின்ற ஓர் அப்பாவித்தனமான அறிவியல் – கல்விப் பண்பாடே நம்மிடை அக்காலங்களிற் காணப்பட்டது எனலாம்.

எனவே இந்நிலையில் இலங்கையின் பூர்வீகக் குடிகள் சிங்களவர்கள் தானென எம்முள் சிலரும் வாதிக்கக் கேட்டுள்ளோம். இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களாக இருந்திருந்தால், ஏன் பிறமாகாணங்களில் தமிழர்கள் குடியேறியிருக்கவில்லை என்று வாதிப்பவர்களும் நம்மிடையே இருந்துள்ளார்கள்.

நாகர் – இயக்கர் வரலாறு பற்றியெல்லாம் எமது பள்ளிப் பாடங்களில் அங்குமிங்குமாக ஒருசில தகவல்களை அறிந்திருப்போமேயொழிய அவை பற்றியும் எமக்குப் பெரிய தெளிவு நிலை அப்போது இருக்கவில்லை.

இதில் இன்னுமொரு சுவாரசியமான விடயமென்னவெனில், அக்காலங்களில் க.பொ.த (சாதாரணம்) வகுப்பிலேயே எமது உளவியலில் ஒரு பெரிய பிளவு ஏற்படுத்தப்பட்டு விடுவதுண்டு. “நீ விஞ்ஞானப் பிரிவிற்குள் நுழையப் போகிறாயா? இல்லை கலைப் பிரிவிற்குள் நுழையப் போகிறாயா?” என்ற கேள்வி எம்முன் பூதாகரமாக எழுந்து நிற்பதுண்டு. மொழி, கலை, இலக்கியம், அரசியல், சரித்திரம், வரலாறு என்ற பரப்புகளெல்லாம் கலைப்பிரிவிற்குள் அடங்கி விடும். சூழலில் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களைப் பொறுத்தவரை, இவை பற்றிய அறிவுத் தேடல்களோ, தெளிவுகளோ கிடைக்கின்ற வாய்ப்புகள் பெரும்பாலும் இருப்பதில்லை.

தமிழர் சமுதாயத்தைப் பொறுத்தவரை, தமது பிள்ளைகள் விஞ்ஞானப் பிரிவில் படித்துப் பட்டம் பெறுவது ஒரு மேலதிகமான கௌரவமிக்க சாதனையாக எண்ணினார்களேயொழிய கலைப்பிரிவினைப் பெரிய அளவில் அவர்கள் கவனமெடுக்கவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. ஏன் இப்போதும் இந்நிலை மாறிவிட்டதெனக் கூறுவதற்கில்லை. இதற்கான இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்துள்ளது.

தொழில் வாய்ப்பு என்று வரும் போதும் பொருளாதாரத்திற் பின்தங்கிய குடும்பச் சூழல் என்று வரும் போதும் அக்காலங்களில் பெற்றோர்கள் விஞ்ஞானப் பிரிவினையே முதன்மையான ஒரு “தப்புதற்கான தந்திரோபாயமாக (Escaping Strategy) மேற்கொள்ளும் ஒரு கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார்களென்பதையும் நாம் புறக்ணித்துவிட முடியாது.

தனது பிள்ளை ஒரு வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ, கணக்காளராகவோ வரவேண்டுமெனப் பிரார்திக்கின்ற பெற்றோர்களையே அன்றைய காலகட்டத்தில் எம்முன் உலவினர் என்பது ஒரு உண்மையாகும்.

பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை என்பது எமது பெற்றோர்களையும், அவரது பிள்ளைகளையும் பொறுத்தவரையில் ஒரு சாதனைக் களமாகவே அப்போது இருந்து வந்தது.

எனினும் 1956இன் சிங்கள மொழித்திணிப்பு, பின்னர் 1970இன் ஆரம்பகாலங்களில் நிறைவேற்றப்பட்ட தரப்படுத்தல் என்ற இரண்டு சிங்களப் பௌத்த இனவெறிச் செயற்பாடுகளின் விளைவாகப் பலவித மாற்றங்களையும், அழுத்தங்களையும் அனுபவித்தமை பலரும் அறிந்ததே. தமிழர் தேச தேசிய உணர்வுகளை ஊற்றெடுத்துப் பாய வைத்த சமகால வரலாற்றின் மைந்தர்களாகவே இவற்றை எம்மால் காணமுடியும்.

எனக்கு நல்ல ஞாபமிருக்கிறது. அக்காலத்தில் க.பொ.த(உயர்தரம்)  வகுப்பிற் படிக்கும் ஒரு மாணவனையோ, மாணவியையோ ஒரு வயோதிபப் பாட்டனோ, பாட்டியோ கண்டவுடன் கேட்கும் கேள்விகளுள் ஒன்று நீர் “art’ ஓ “சயன்ஸ்“ ஓ என்பதாகும்.

எனவே மொழியறிவு, இலக்கிய அறிவு, பண்பாட்டு – வாழ்வியல் வரலாற்றறிவு கல்வி மட்டத்தில் ஒருவர் பெறுவதானால், அவர் கலைப்பிரிவு மாணவராக இருக்க வேண்டிய சூழலே அக்காலங்களில் இருந்து வந்ததெனக் கூறலாம்.

இதற்கு அப்பால் மொழியிலும், கலையிலும் இலக்கியத்தில் பண்பாடு, வாழ்வியல் வரலாற்றிலும் அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்களுள் பலர் தமிழர் தேசியப் பற்றுள்ளவர்களாகவும், ஆர்வலர்களாகவும் ஆற்றுகையாளர்களுமாகவே இருந்துள்ளனரென நான் அவதானித்து வந்துள்ளேன்.

நான் விஞ்ஞானக் கல்வியைத் தேர்வு செய்திருந்த போதும், எனது பாலப்பருவத்தின் ஈர்ப்புகள் ஆர்வங்கள், தொடர்புகள், ஆற்றல்கள், ஆளுமைகளின் வழி எனது முன்னோர் பற்றிய தேடலும், எமது தேச, தேசிய தெய்வ மரபுகள், தொன்மைகள் பற்றிய பிணைப்பும் என்னுள் ஒரு உயிரொளியாகவே சுடர்விட்டு வந்ததை என்னால் உணர முடிந்தது.

இதற்கு மேலாக எனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்புகள் – அனுபவங்கள் என்னை எமது தொல்குடி வரலாற்றோடு இறுகப் பிணைத்து வந்துள்ளதை ஒரு வரப்பிரசாதமாகவே நான் கருதுகிறேன்.

சிங்கள மொழித் திணிப்பு இனக் கலவரங்கள் தமிழ் மொழிக் கல்வி, தரப்படுத்தல் இவற்றினூடு பயணித்த அனுபவம் 1984இல் தமிழாராய்ச்சி மாநாட்டு இரவு வரை என்னுடன் தொடர்ந்து வந்துள்ளது.

1970 – 71களில் கொழும்பில் கற்ற போதும், கிளிநொச்சி – உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் ஓர் ஆசிரியனாகப் பணியாற்றிய போதும் நான் சிங்களப் பௌத்த இனவெறியின் அகோர முகங்களைச் சந்தித்தவன்.

குறிப்பாக கிறிநொச்சியிற் கல்வி கற்பித்த காலங்களிற்றான் ஆனையிறவுப் பாலத்தில் சிங்கள இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட சோதனைச் சாவடிகளை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பயணிகளுள் ஒருவனாக நான் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக இருந்து வந்தேன்.

நாம் பயணிக்கும் பேருந்துகள் மறிக்கப்பட்டு, இராணுவத்தினால் சோதிக்கப்படும் கணங்கள் ஒரு ஞானியையும், கொலைகாரனாக மாற்ற வல்லது. எமது பெண்கள், தாயார், தங்கையர், தமக்கையர் மற்றும் முதியோர் பட்ட இன்னல்களை நான் நேரிற் கண்டிருக்கிறேன்.

அக்கணங்களிலெல்லாம் நாம் இலங்கையின் பூர்வீகக் குடிகளா? இல்லை வந்தேறுகுடிகளா என்ற கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டேயிருந்தன.

தொடரும்..

 

https://www.ilakku.org/தமிழர்-தொல்குடி-வரலாற்ற-5/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் – இன்றும் – (தேடல் 5) – புலவர் நல்லதம்பி சிவநாதன்

unnamed-3-696x522.png
 90 Views

இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளா?

கிளிநொச்சியில் நான் ஆசிரியனாகப் பணியாற்றிய காலங்களில், பளையிலிருந்து கிளிநொச்சி வரையிலான எனது அன்றாடப் பேருந்துப் பயணத்தின் போது எனக்கு ஏற்பட்ட ஆனையிறவுப் பாலச் சோதனைச் சாவடி அனுபவங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை.

ஒரு நாட்டின் இராணுவக் கலாச்சாரத்தை அதுவும் ஓர் இனவெறியின் கோர முகம் தாங்கிய, மானிடத்தை மதிக்காத மக்களை அலட்சியப்படுத்தி, அவர்களை அச்சத்தின் பிடியில் நடுங்க வைக்கின்ற ஓர் இராணுவக் கலாச்சாரத்தை நேரிற் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதே இக்காலத்திற்தான். என் போன்ற மிகவும் காருண்யக் கொள்கைகளை நம்பி வாழுகின்றவர்கள் எதிர்கொண்டு அனுபவித்து, கஸ்டங்களையும், கனங்களையும் நான் கண்டதே இக்காலத்திற்தான்.

குறிப்பாக இளம் பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள் இராணுவத்தின் பார்வைக்கும்,  அவர்களது அதட்டல்களுக்கும் ஆளாகும்போது, அவர்கள் ஏதோ அடுத்த தேசத்துப் பிரஜைகள் போன்ற ஓர் உணர்வுக்கு உட்படுவதை நான் பல தடவைகளில் கண்டு பொருமியிருக்கிறேன்.

நான் சிறுவனாகவும், இளைஞனாகவும் இருந்த காலங்களில் சங்கானைக் காவல் நிலையத்தைக் கடக்கும் போது, ஏதோவொரு பயம் எம்மைச் சூழ்ந்து கொள்ளத் தவறுவதில்லை. இத்தனைக்கும் ஒரு தவறும் இழைக்காத போதுகூட ‘பொலிஸ்காரன்’ என்றாலே பயப்படுகின்ற ஒரு சந்ததியில் வளர்ந்த இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

பொலிஸையோ, இராணுவத்தையோ எதிர்த்துப் பேசும் வல்லமையோ, வாழ்க்கைப் பின்னணியோ இல்லாத பயந்தாங் கொள்ளிகளாகவே நாம் இருந்தோமென்பதை என்னால் மறந்துவிட முடியாது.

இரவில் தனியே போவதற்கு அஞ்சியவன் நான். ஒரு நாயைக் கல்லால் அடிப்பதற்குக்கூடத் துணிவற்று, நாய், பூனை, புறாக்களின் துன்பம் கண்டு விழிநீர் வடித்த அனுபவங்கள் எனக்கு உண்டு. ஒரு பூச்சியையோ புழுவையோ நசுக்கும் சுபாவமோ, மனோபாவமோ அற்ற ஒரு பண்பாட்டில் என் தாயால் வளர்க்கப்பட்டவன் நான். புறாவினைக் கூண்டில் அடைக்க முயன்றதற்காக என் தாயால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவன் நான்.

1970களின்  முற்பகுதியில் எனது கொழும்பு வாழ்வின் போது யாழ்ப்பாணம் –கொழும்பு தொடருந்திற் பயணம் செய்யும் வேளைகளிலெல்லாம் சிங்களப் பௌத்த இராணுவ முகங்களையும், இவை சார்ந்த ஏனைய காடைத் தனங்களையும் நான் சந்தித்துள்ளேன். எனினும்.. இத்தனைக்கு மத்தியிலும் என்னால் சாதாரண சிங்கள மக்களையோ அல்ல பௌத்த மதத்தையோ – புத்தரின் அன்புக் கொள்கைகளையோ வெறுக்கும் உளப்பாங்கினைப் பெறமுடியவில்லை. யாரையும் வெறுக்கும் கலாச்சாரத்தை எமது பள்ளிக் காலத்திலோ, கல்விக் காலத்திலோ நாம் பெறவில்லை.

நான் முன்னர் குறிப்பிட்டது போல 1956இன் சிங்கள மொழித் திணிப்பு, 1958இன் கொடிய இனக்கலவரம் எனத் தொடர்ந்து இழைக்கப்பட்ட பல அநீதிகளை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அதனைப் பின்னின்று நிகழ்த்திய சிங்கள இனவாதக் கட்சிகள், அவற்றின் தலைமைகள், அரசுகள், ஆட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள், ஊடகங்கள், கூலிப்படைகள் என இவற்றின் மீது எனக்கு வெறுப்பும் அதிருப்தியும், விரக்தியும் விளைந்ததேயொழிய, சாதாரண சிங்கள மக்கள் மீது எதுவித காழ்ப்பும், கசப்பும் உருவாகவில்லை. ஏவி விட்டவர்களையும், ஏவப்பட்டவர்களையும் இனங்காணும் ஓர் உணர்வு நிலை எமக்கு எப்போதும் இருந்தது.

எனது இளமைக்காலக் கவிதை, கலைப் படைப்புகளில் எமது சொந்த இனத்தில் காணப்பட்ட சமுதாயச் சீர்கேட்டுக்கெதிராகவே எமது படைப்புகள் யாவும் இருந்து வந்தன எனலாம். சாதி, சமய, இட ஏற்றத் தாழ்வுகள் மலிந்த ஒரு சமுதாயமாக திகழ்ந்த தமிழர் சமுதாயத்தினைத் தட்டியெழுப்புகின்ற ஒரு தாகமே பல இளங் கவிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் இதயங்களில் இடம்பிடித்தன என்றால் அது மிகையாகாது.

பெண்ணடிமை, சீர்வரிசைக் கொடுமை, தீண்டாமை என்னும் தீச்சுவாலைகள் பற்றிக் கொண்ட ஒரு தாழ்வுற்ற சமுதாயமாகவே இலங்கைத் தமிழ்ச் சமுதாயம் தன்னை இயக்கி வந்தது ஒரு மிகவும் கசப்பான வரலாற்று உண்மையாகும்.

சமபந்தி போசனங்கள், ஆலயப் பிரவேசங்கள், கலப்புத் திருமணங்கள் என்னும் தலைப்புகளின் கீழ் தமிழ்த் தேசிய வாதம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

இதன் விளைவாக, திராவிடக் கொள்கை, மாக்சிசக் கொள்கை, நாத்திகக் கொள்கை, மதமாற்றங்கள் எனப் பற்பல பக்க விளைவுகள் எம்மிடை வந்து புகுந்து கொண்டன. இதன்வழி தமிழ்த் தேசியத்தின் தமிழர் தொல்குடி வரலாற்றின் ஆணிவேர்கள் நீரின்றிக், காற்றின்றி, நிலத்தின் வளமின்றி வாடிவந்தன. ஒருமுனையில் சிங்களப் பௌத்த இனவாத அரசியல், மறுமுனையில் தமிழ் சமுதாயச் சீர்கேட்டுக்கெதிரான அறச் சீற்றம். இவற்றின் மத்தியில் ஈழத்தமிழினம்.

உண்மையில் கூறப் போனால், நாம் சிங்கள மொழியைக் கற்காமல்போனதற்குக் காரணம், சிங்கள மொழி மீதோ, சிங்கள மக்கள் மீதோ நாம் கொண்ட வெறுப்பல்ல. சிங்கள மொழித் திணிப்பின்மீதும், சிங்களப் பௌத்த இன, மத வெறியர்களின் சட்டத்திற்கும், சனநாயகத்திற்கும் அடிப்படை மனித உரிமைகட்கும் எமது தேச, தேசிய தெய்வ இறைமைகட்கும் எதிரான கெடுபிடிகள், கொடூரச் செயல்களின் மீது நாம் கொண்ட அதிருப்தியும், அருவெருப்புமே என்று கருத முடியும்.

அறியாமையும், ஆற்றாமையும், ஆதிக்க வெறியும் கொண்ட சிங்களத் தலைமைகளை அகிம்சை முறையில் சனநாயக முறையில் சமரச, சமத்துவக் கோட்பாடுகள் மூலம் கையாளலாம் என்ற குருட்டு நம்பிக்கையுடன் தான் நாமும், அக்காலத்தில் வாழ்ந்து வந்தோம்  என்பதே ஒரு வரலாற்று உண்மையாகும்! தமிழர்கள் தோலில் செருப்புத் தைப்பேன் என்றவர்கூடச் சிங்கள அரசியற் கூடாரத்தில் வலம் வந்த ஒரு வரலாறு உண்டு.

இதேவேளை, தமிழர்களிற்கான உரிமைகளை அவர்களது நியாயமான கோரிக்கைகளை வழங்குவது சிங்கள அரசுகளின் முக்கிய பொறுப்பும், கடமையும் என வலியுறுத்திய சிங்கள இடதுசாரியமைப்புகளு, அக்காலத்தில் எம்முட் பலரை ஈர்த்து வந்துள்ளன என்பதனை ஈண்டு குறிப்பிட்டேயாக வேண்டும்! எனினும் இந்த நல்ல உள்ளங்களின் கொள்கைகளை சிங்களப் பெரும்பான்மையின் அரசியற் கலாச்சாரம் ஏற்றுக் கொண்டதாக இல்லை. தமிழர்களோடு நெருங்கிப் பழகிய அதுவும் நட்பு நிலையில் – உறவு நிலையில் நெருங்கிப் பழகிய சிங்கள மக்களாலும் ஊடக நிறுவன சக்திகளாலும்கூட தமிழினத்திற்கு எதிரான – எமது தேசிய இறைமைகட்கு எதிரான – தமிழர் தம் தொல்குடி வரலாற்றுத் தொன்மைக்கும், தொடர்சிக்கும் எதிரான கூச்சல்களையும், கூப்பாடுகளையும், குற்றங்களையும் தடுக்கவோ, தணிக்கவோ முடியவில்லை! இதன் பின்னணியில்.. எவராலுமே முடியாததால், சிங்கள இனவாத அரசியலைப் பொறுத்தவரை எமது இளமைக்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளேயென்ற வாதமே வலுப்பெற்று வியாபித்து நின்றதெனலாம்.

இந்நிலையில்தான், கல்விக் கொள்கைகளிற் தரப்படுத்தல் என்னும் தீப்பந்தம் தமிழின சந்ததியின் மீது எறியப்பட்டது. பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை தமிழர்களின் கல்வித் தகைமைகள், திறமைகள் ஆற்றல்கள் இவற்றில் பற்றிய தீ ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டதெனலாம். அரசியல் மொழிக்கான ஒரு மாற்றம் தேவையெனும் நிலை ஈழத் தமிழர்கள் மத்தியில் முகிழ்த்து முனைப்படைந்தது.

1972 என நம்புகிறேன்! நான் அப்போது கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் கற்பித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாட் காலை யாழ்ப்பாணம் பஸ்தரிபில் நின்று கொண்டிருந்தேன்.

(தொடரும்….)

 

https://www.ilakku.org/?p=37816

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 6 – புலவர் நல்லதம்பி சிவநாதன்

Capture-9.jpg
 37 Views

தமிழர் தாயகத் தன்னாட்சிப் பிரகடனமும்,தமிழ்த்தேசிய எழுச்சியும்

யாழ்ப்பாணம் பஸ்தரிப்புநிலையமும் அதனைச்சுற்றிய தெருக்கள் வீதிகளும்ஒருகாலத்தில், ஒருசெய்திப்பரப்பு மையமாகச் செயற்பட்டதுண்டு!

நீலநிற அங்கியுடன் தமது அங்கியின் முன்னும் பின்னுமாக ‘வைரமாளிகை’ எனும் எழுத்துக்களைப் பதித்தவாறு தமது கமிபீரமான குரலில் மிகவும் நகைச்சுவையும், நளினமும் கலந்த சுவாரசியமான தொனியில் லொத்தர் சீட்டுகளை விற்றவாறு பதிரிகைகளில் வந்த அன்றாடத் தலைப்புச் செய்திகளை அறிவித்தவாறு சுற்றிவருவார் சற்று உயரமான கருமாநிறமுள்ள ஒரு முதுமைத் தோற்றமுள்ள பெரியவர்! ‘கோகிலாம்பாள் கொலைவழக்கு நடந்த காலங்களில் இவர்தான் யாழ்ப்பாணப் பயணிகளின் நடமாடும் செய்தி நிலையமாக இயங்கிவந்ததைப் பலரும் அறிவர்!

இலங்கை அரசியல் பற்றிய செய்திகளையும் அவர்மூலம் அறிவதில் ஒருவித மகிழ்ச்சியும், நெகிழ்சியும் எமக்கு ஏற்படுவதுண்டு! சுதந்திரன், தீப்பொறி போன்ற பத்திரிகைகளில் வரும் தலைப்புகளை இவர் வாயாற் கேட்பதில் ஒருசுகமும், சுவையும் இருக்கும்!

அன்றும் தமிழர் அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கியக் கூட்டமைப்பு உருவாக்கம் பெற்ற செய்தி யாழ்ப்பாண நகரப் பயணிகள் செவிவழி நுழைந்து மக்கள் மத்தியிற் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியது.

14.05.1972இல் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் தலைமையிலான ஓரமைப்புக் கட்டமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து 22.05.1972 இல் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தேச அரசபை (National State Assembly) யின் ஆரம்ப விழாவினை தமிழ்ப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் புறக்கணித்த செய்தி எமது செவிகளுக்கு எட்டியது.

இதுவே இலங்கையில் தமிழ்த் தேச, தேசிய வரலாற்றின் அரசியல் முன்னெடுப்புக்களில் முதன்மையானதாகப் பலராலும் கருதப்பட்டதெனலாம்.

1969, 70, 71களில் ஆங்காங்கே முகிழ்த்தெழுந்த தமிழ்த் தேச விடுதலைப் போராட்ட அலைகளுடன் 1972இல் தமிழர் அரசியல் பயணத்தின் புதிய போக்கும் எமது தாயகத்தின் எதிர்காலம் பற்றிய ஒரு புதிய பாதையையும், பயணத்தையும் திறந்து வைத்தன என்றே நம்ப வைக்கின்றன.

தங்கத்துரை, குட்டிமணி, சத்தியசீலன், பிரபாகரன், சிறீசபாரத்தினம் என்ற பெயர்களும் தமிழர் மாணவர் பேரவை போன்ற இளைய தலைமுறையினரின் தலையெடுப்புகளும் எமது தேச, தேசிய வரலாற்றில் இடம்பிடிக்கலாயின.

1972, 1973 களில் சிங்கள பௌத்த இனவெறி, அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் பற்றிய செய்திகள் இலங்கைத் தீவில் பொதுவாகவும், தமிழ் மக்களிடை குறிப்பாகவும், வேகமாக அடிபடத் தொடங்கின.

1973 புரட்டாதி மாதம் மல்லாகத்தில், தமிழர் ஐக்கிய முன்னணியினால் அதன் 12ஆவது மாநாட்டில் தமிழர் தன்னாட்சிப் பிரகடனம் செய்யப்பட்டதென நினைக்கிறேன். ஓர் இறையாண்மையுள்ள, தன்னாட்சித் தகைமையுள்ள தேசமாகத் தமிழர்கள் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, தந்தை செல்வா அவர்களைத் ‘தேசத்தின் தந்தை’ எனத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு இயங்க முற்பட்டனர்.

உண்மையில் தந்தை செல்வா அவர்களே ‘தமிழ் மக்களுக்கான தாயகம்’ என்னும் கொள்கையினை ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில் இணைத்துக் கொண்டவர் என்றும்  கூறுவோர் உண்டு.

‘சமஷ்டி’ ஆட்சி பற்றிப் பேசி, அகிம்சைப் போராட்டங்களை நடத்தி, பற்பல உடன்படிக்கைகளை மேற்கொண்டு அத்தனையும் சிங்கள பௌத்த அரச பயங்கரவாதத்தின் முன்னர் தோற்றுப் போனதன் விளைவாக, தனிநாட்டுப் பிரிவினை கோரிக்கைக்கு தமிழினம் தள்ளப்பட்ட அதேவேளை, தொடர்ச்சியான இனக்கலவரங்கள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், இராணுவ நகர்வுகள், பொலிஸ் அடாவடித்தனங்கள், காடையர் கொட்டங்கள் எனவும் சிங்கள மொழித் திணிப்பு, தரப்படுத்தல் போன்ற அதர்ம அரச நடவடிக்கைகள், தீர்மானங்கள், திட்டங்கள் எனவும் சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் சொத்துப் பறிப்புகள் எனவும் தொடர்ச்சியாக நிகழ்வுற்ற கொடுமைகளால் விரக்தியும், வெறுப்புமடைந்த இளைய சந்ததியினரின் ஆயுதப் போராட்ட உணர்வுகளும் தலைதூக்கத் தொடங்கின.

1972 அல்லது 1973 என நினைக்கிறேன். யாழ்ப்பாண நகர மண்டபத்தில் ஒரு கூட்டத்தில் நானும் பா்வையாளனாகக் கலந்து கொண்டேன். எனது பக்கத்தில் எமது தாயகத்தின் உணர்ச்சிக் கவிஞரும், எனது அன்புச் சகோதரருமான காசி ஆனந்தன் அவர்கள் தரையில் அமர்ந்திருந்தார்.

தந்தை செல்வா அவர்கள் மிகவும் ஆழமான நெஞ்சுறுதி மிக்க  அதேவேளை உருக்கமான ஒரு உரையை ஆற்றியதைக் கேட்டு நாம் அனைவரும் கண்கலங்கினோம். “இரத்தம் சிந்தியாவது எமது மக்களை மீட்போம்” என்ற தொனியல் அவர் பேசியது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு புல்லையும் நசுக்கும் தன்மையற்ற ஒரு மென்மையான மனிதர். ஒரு தலைவர். இரத்தம் சிந்தியாவது தனது இனத்தை மீட்க வேண்டுமெனக் கூறிய பொழுது, அவரது உள்ளம் எத்தகைய வேதனையில் தோய்ந்திருக்க வேண்டும் என்பதை எம்மால் உணர முடிகிறது.

“தமிழ் மக்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்றும் இந்தத் தேசத் தந்தை தான் கூறியதாக நாம் அறிகிறோம்.

இவற்றை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை எமது தேசத்தினை, தேசியத்தினை, தேச, தேசிய வரலாற்றினை நாம் பேணிப் பாதுகாப்பதற்காக நாம் தொடர்ச்சியாக எடுத்த நகர்வுகள், முயற்சிகள், முனைப்புகள், முகங்கொடுப்புகள் அனைத்தையுமே முறியடித்து, எம்மை ஏதிலிகளாகவும், பாதுகாப்பற்ற பரதேசிகளாகவும், நலிவுற்ற அகதிகளாகவும் ஆக்க முயன்ற ஓர் அரச பயங்கரவாத ஆதிக்க வெறியாகவே சிங்களப் பௌத்த பெரும்பான்மையை எதிர்கொண்டு வந்துள்ளோம் என்றால் அது மிகையாகாது.

நான் முன்னர் குறிப்பிட்டது போல, அடித்தவனையும் திருப்பியடிக்கக் கூசும் சந்ததியிற் பிறந்த ஒரு சமுதாயத்தின் கையில் ஆயுதத்தினை ஏந்த ஆணையிட்ட அரசே, சிங்கள பௌத்த இனவாத அரசாகும்.

தாயையும், தாரத்தையும், சேயையும், சிறுவரையும், தங்கைகளையும், தம்பிகளையும், அண்ணன்களையும், அக்காமாரையும், ஊர்களையும், உறவுகளையும் துடிதுடிக்கப் பறிகொடுத்த ஒரு மக்களின் மனப் போராட்டத்தின் விளைவல்லவா எம் மண்ணில் எழுந்த ஆயுத விடுதலைப் போராட்டம்.

1972, 73, 74களில் நான் கிளிநொச்சியில் ஆசிரியனாகக் கடமையாற்றிய காலங்களில் செவியுற்ற செய்திகள் ஏராளம். அப்போதுகூட நாம் அரசியல் கட்சிகளையே நம்பியிருந்தோம். அவர்கள் பின் நிற்பதே அறிவுடைமை என்று அவர்களோடு பயணித்தோம்.

எனினும் இலங்கையைப் பொறுத்தவரை நாடாளுமன்றப் பிரிதிநிதித்துவத்தினை மையமாகக்கொண்ட பாராளுமன்ற சனநாயக அமைப்பு அங்கு வாழ்கின்ற வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் வாழ்வியற்பண்பாடு, வழமைகளும் விழுமியங்களும் வழிபாட்டுச் செழுமைகளும் கொண்ட ஒரு தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைகளையோ இல்லைப் பாதுகாப்பையோ ஒருபோதும் வழங்கப் போவதில்லையென்ற ஓர் எண்ணப்பாடு, ஓர் உணர்வுநிலை, ஓர் உறுதிப்பாடு   எமது தாயக மக்களிடை அரசியல் பொருளாதார சமூக நிலைகளில் ஊன்றி, உருவாகி வேகமாகப் பரவத் தொடங்கியதெனலாம்! மனதளவில்  மௌன மொழியில் மக்கள் சனநாயகத்தின்மீதான நம்பிக்கையைப் படிப்படியாக இழக்கத் தொடங்கிய காலம் இதுவெனலாம்! இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களை அழித்து ஒழித்துக்கட்டுவதே சிங்களப் பௌத்தத்திற்கான அவர்தம் மதபீடங்களுக்கான கட்சி அரசியல் வெற்றிக்கான சனநாயக நெறி என்ற ஒருபார்வையே நிதர்சனக்காட்சியாக வெளிப்பட்டு விரிவடைந்து செயற்படுத்தப்பட்டதைத் தமிழினம் நன்குணரத் தொடங்கியது!

அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு ஊடுருவல்களின் விளைவாக எமது தமிழினம் படிப்படியாக இழந்த வரலாற்று அரச ஆட்சி இறைமையை, தேச தேசியப் பாதுகாப்பு உரிமைகளை அடிப்படை மனித உரிமைகளை மீட்பதற்கான மொழியும் வழியும் இதுவல்ல என்ற மனோநிலை எமது இளைய சமுதாயத்தின் மத்தியில் வெகுவாக உருவாக்கம்பெறத் தொடங்கியதெனலாம்!

கல்விகற்று அதன்மூலம் பட்டமும் பதவியும் பெற்றுத் திருமணவாழ்வு கண்டு குடும்பவாழ்வினை  அனுபவிப்பதே வாழ்வின் குறிக்கோள் என நம்பிய ஈழத்தமிழ் மக்களிடையே தாய் மொழ்க்காகவும், தாயகத்தின் விடுதலைக்காகவும் தமது உயிரையும் பணயம் வைப்போமெனும் ஒரு சந்ததி உதிப்பதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கின! தமிமீழம் எனும் பதம் வலுப்பெற்று ஒரு விருட்சமாக வளரத் தொடங்கிய காலமும் இதுவே!

‘இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளல்ல! இவர்களே அத்தீவின் வரலாற்றுக் குடிகள்’ என்ற உண்மையைத் தேடும் முயற்சிகளுக்கான புறச்சூழலும் அகச்சூழலும் உருவாக்கம் பெறத் தொடங்கின!

Capture-1-3.jpg

இக்காப்பின்னணியிற்றான்  1974 சனவரி மாதம் மூன்றாம் திகதியிலிருந்து பத்தாம் திகதி வரை தமிழர்க்கான ஒரு பெருங் கொண்டாட்டம். தமிழுக்கான ஒரு பெருவிழா நடைபெறுவதற்கான திட்டங்கள், தமிழுள்ளங்களால் தமிழறிஞர்களால் தீட்டப்பட்டன.

ஆம்! ‘நான்காம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு’ எங்கள் உள்ளங்களை நிறைத்தது. எத்தனை எதிர்பார்ப்புகள்! ஏற்பாடுகள்!  எத்திசை திரும்பினும் இதே பேச்சு!. இதே மூச்சு! எண்ணற்ற ஆயத்த வேலைகள் ஆரம்பமாகின. எனினும் தடைகள், தடுப்புகள், தவிர்ப்புகள், எனச் சவால்களும் எழுந்தன.

(தொடரும்)

 

https://www.ilakku.org/?p=39817

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்- நேற்றும் இன்றும்- தேடல் 7 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

54d7e697-57ab-4f0f-8d3d-0dd9af0007d5-696
 14 Views

தமிழ்த்தேசிய எழுச்சியின் உயிரேடு!

நான்காவது உலகத்தமிழராய்ச்சி மாநாடு!

எங்கும் இதே பேச்சு! எதிலும் இதே கூற்று! எங்கள் தமிழுக்கோர் எழுச்சிவாரமெனப் பொங்கியதெம்முள்ளம்! பெருகியது தமிழ்வெள்ளம்!

இப்பேரெழுச்சி கொடியிலிருந்த சிங்கத்திற்குச் சீற்றத்தைக்  கொடுத்திருக்க வேண்டும்! அன்றைய பிரதமராகவிருந்த சிறிமாவோ அம்மையாரின் ஆட்சிக்கு அரிப்பையும், எரிச்சலையும் ஊட்டியிருக்க வேண்டும்! நெருப்பையும், நெருடலையும் அவர்கள் முகாமுக்குள் மூட்டியிருக்க வேண்டும்!

சிறீமாவோவின் சிங்களப் பௌத்த அரசின் சிரசு சிலந்திவலை கட்டத் தொடங்கியது! தம்மோடு கூடிநின்ற ‘தமிழ்க் கூட்டாளிகளையும், கூலிப்பாட்டாளிகளையும்’ உரசி உள்வாங்கத் தொடங்கியது! ஏற்கனவே இவர்களோடு கூடிக்குலவி… ஆடிப்பாடி… அரவணைத்து… ஆட்சியில் அருகிருந்த அரசியல்வாதிகள் மட்டுமன்றி… இப்பின்னல் வலைக்குட்  சிக்கியவர்கள் பட்டியலில் ஒருசில பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள் என்ற செய்திகளும் அவ்வப்போது தமிழ்மக்கள் மத்தியிற் கசிந்தவண்ணதே இருந்தன! இவர்களின் பெயர்களை இலங்கைத் தமிழர் வரலாறு நிச்சயம் பட்டியல் செய்யாமல் விடாது!

இந்தவொரு பின்னணியில்… சிறீமாவோ அம்மையாரின் அரசு மாநாட்டிற்கு உலகநாடுகளிலிருந்து வரவிருந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆற்றுகையாளர்கள்… ஆளுமைகள்… ஆர்வலர்கள்… உணர்வாளர்கள்…. ஊடகவியலாளர்கள்… ஆகியோரின் வருகைகளைத் தடுப்பதற்கும்… மாநாட்டின் ஏற்பாட்டார்களை… இணைப்பாளர்களை… இயங்குசக்திகளை அச்சுறுத்தி.. ஒறுத்து… ஒடுக்கி… அடக்கியாளுவதற்கும்… தம்மமாலியன்றவரை… பற்பல முயற்சிகளை எடுத்துவந்ததை எமது தமிழ்ச்சோலைகளிலும், தோட்டங்களிலும் பறந்து திரிந்துவந்த ஊர்க்குருவிகளும் தீர்க்கதரிசிகளும் எமது மக்களுக்கு உடனுக்குடன் தெரிவித்துவந்தன!

‘விசா அனுமதி வழங்குவதில் எத்தகைய அழுத்தங்களைக் கொடுக்க முடியுமோ…எத்தகைய நிபந்தனைகளை விதிக்க முடியுமோ… அத்தகைய அழுத்தங்களையும், நிபந்தனைகளையும் அம்மையாரின் அரசும் அதன் சிரசும் அதன் அங்காளி பங்காளிகளும் அளித்தும் ஆற்றியும் வந்தனர் எனலாம்!

 ‘தனிச்சிங்கள மசோதா’ அல்லது சிங்கள மொழித் திணிப்பின் வழி… தமிழ் மொழியுரிமையழிப்பு’ மூலம்… சிறீமாவோ அம்மையாரின் துணைவர்… எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா அவர்கள் செய்த இலங்கைத் தமிழர்களுக்கெதிரான இனஅழிப்பின் முன்மொழிவினை… ‘நான்காம் உலகத்தமிழ் மாநாட்டிற்கான கடுமையான எதிர்ப்பின் மூலமும் இம்மாநாட்டின் பத்தாம் நாளில் நிகழ்த்திய அரசபயங்கரவாத நடவடிக்கை மூலமும் அம்மையார் அவர்கள் வழிமொழியத் தலைப்பட்டார் எனவும் கருதமுடியும்!

எது எவ்வாறிருப்பினும்… இம்மாநாட்டை இத்தனை எதிர்ப்புகளின் மத்தியிலும் செம்மொழியாம் தமிழ்மொழியின் இறைமையும்…. இலங்கைத்தமிழ் மக்களின் தாய்மொழி மீதான ஒப்புவமையற்ற உன்னதமான தமிழ்ப்பற்றும் உலகத்தமிழரின் வற்றாத தமிழுணர்வும்… பேராசிரியர் வித்தியானந்தன்… தனிநாயகம் அடிகள்… கட்டடத்துறை நிபுணர் துரைராஜா போன்றோர் தலைமையில்… இம்மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடந்தேற வைத்தன!

இம்மாநாடு பற்றிய உண்மைச் சம்பவங்களையும் அவைபற்றிய தகவல்களையும்…

‘Fourth International conference Seminar of Tamil Studies, Jaffna, SriLanka, / January 1974’ edited by Dr Kopalapillai Mahadeva (IATR Srilanka National Unit, Colombo. VolI 3.070pp) மற்றும் பல பலசமூக வலைதலங்களிலும் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்!

தமிழகத்தின் தமிழ்ப் பேரறிஞர்கள் டாக்டர் சாலை இளந்திரையன்… அவரது துணைவியார் டாக்டர் சாலினி இளந்திரையன் ஆகியோர்..’தமிழ் மாநாடு’ எனும் தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பொன்றினை எழுதித் தந்துள்ளனர்!

இம்மாநாடு எனது தனிப்பட்ட வாழ்விலும் மிகவும் ஆழமான உளவியற் தாக்கங்களையும் உணர்வுசார் மாற்றங்களையும் விளைவித்தது என்பதை ஈண்டுவிளக்குவது அவசியமென எண்ணுகின்றேன்! ‘வாழ்வா? சாவா?; எனனும் விளிம்பில் நான் நின்ற கணங்களை… அந்த மகத்தான அனுபவத்தினை ‘நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாடு’ எனக்கு அருளியது என்பேன்! எனக்கு மேல் ஒரு சக்தி… ஓராற்றல் இருந்து எம்மை இயக்குகிறது… என்ற ஆழமான நம்பிக்கையை எனது உயிரின் ஆழத்தில் ஊன்றியது இம்மாநாடே! ‘பராசக்தி! பராசக்தி’ என்று எனது ஞானகுருவான பாரதி மட்டுமா நம்பினான்! நானும் தான் நம்பி அவளே சரணென அவள் காலடியிற் கிடந்து இக்கணம்வரை கதறியழுகிறேன்!

நான் முன்னர் குறிப்பிட்டது போல…இக்காலகட்டத்தில்… கிளிநொச்சி உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் ஆசியரியனாகப் பணியாற்றிய யான் அப்போதெல்லாம் கவியுலகோடும் பத்திரிகையுலகோடும் கலையுலகோடும் நெருக்கமான உறவுகொண்டவனாக இருந்து வந்திருக்கிறேன்!

கூத்து, வில்லுப்பாட்டு, கவியரங்கம், கருத்தரங்கம், நாடகம், ஊடகம் என எனது தமிழ் சார்ந்த அனுபவங்கள் நட்பு… உறவுநிலைகள் என்னை எப்போதும் விழிப்போடும் வீச்சோடும் வைத்திருந்தன எனலாம்! எனது பெற்றோரின்  தவவாழ்வும்… மகாகவி பாரதியின் கவிதாசக்தியின் தாக்கமும்… என்னை எனது சிறுவயிதிலிருந்தே ஆக்கிரமித்து ஆண்டுகொண்டதன் விளைவாகவோ என்னவோ… மேலும் எனக்கு வழிகாட்டிய  ஆசிரியர்கள்.. எனது பால்ய வயதிலிருந்து என்னோடு பயணித்த நண்பர்கள்.. என்னோடு நெருங்கிப்பழகிய கவிஞர்கள்.. எழுத்தாளர்களின் உணர்வூட்டலோ என்னவோ… எனது தாயக ஆக்கங்கள் ஆற்றுகைகளெல்லாம்… ஈழத்தமிழரிடை மலிந்து செறிந்து கிடந்த சாதி சமய இட ஏற்றத்தாழ்வுகள் தீண்டாமை… பெண்ணடிமை… சீர்வரிசை சார்ந்த மூடக்கொள்கைகள்.. அறியாமைகள் இவற்றிற்கெதிரான முழக்கமாகவே எனது பார்வையும், பாதையும், பயணமும் அக்காலங்களில் இருந்து வந்தனவேயொழிய கட்சி அரசியலை மையப்படுத்திய சிங்கள மக்களுக்கெதிரான மனோநிலை எனக்கு இருந்ததேயில்லை என்று உறுதியாக என்னாற் கூறமுடியும்!

இவ்வாறான ஒரு நம்பிக்கைச் சூழலில்… இம்மாநாட்டில்… எனது வில்லுப்பாட்டும் நிகழ்வதற்கான ஓரழைப்பு ஒருகடிதமூலம் ஒருநாட்காலை நான் எனது பாடசாலையின் இரசாயன கூடத்திற் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது என்கைக்குவந்து எட்டியது எனது ஞாபகத்தில் உள்ளது! எனினும் ஏதொவொரு காரணத்தினால் நான் இந்த அரிய சந்தர்ப்பத்தை இழந்து விட்டேன்!

எனினும் இவ்விழாவினையொட்டி.. மாநாட்டின் முதல்நாளில் நிகழவிருந்த தமிழ் வளர்த்த ஈழத்துப் புலவர்… ஆன்றோர், சான்றோர், அறிஞர்களின் திருவுருவச் சிலைகள்… திருவுருவப்படங்கள் பேரூர்வலத்தினில் எனது தந்தையார் வட்டுக்கோட்டை முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்களையும் இணைத்து அவரைப் பெருமைப்படுத்த எமது ஊர் மக்கள் விரும்பியதன் விளைவாக… அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு நான் அந்த மாநாட்டுக் காரியாலயத்திற்குச் செல்லவேண்டி நேர்ந்தது! அங்கு சென்ற போது தான்… ஈழத்துப்புலவோரை மதிப்பதிலும் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் எவ்வளவு ‘தடிப்பானவர்கள்’ என்பதை நான் மீள்பதிவு செய்துகௌ்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது!

‘யாழ்ப்பாணத் தமிழர்களின்’ ஆதிக்கத்தில் அவதியும் அவமானமும் அடைந்த ஈழத்தமிழினத்தின் பிரிதிநிதிகளுட் சிலரே இம்மாநாட்டிலும் முதன்மை வகித்தார்கள் என்பதனை ஈண்டு பதிவு செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை! இது ஈழத்தமிழினத்தின் சீரழிவுக்கான  கொடுஞ்சாபமல்லவா?

இனி மாநாட்டின் மகிழ்விற்விற்கும் நெகிழ்விற்கும் வருகிறேன்

1974 சனவரி… வந்தது!

ஊர்களின் ஊர்வலம்! உணர்ச்சியின் சீர்வலம்!

வானமும் தனது நீர் கொண்டு எங்களை வாழ்த்தியது!

கொட்டும் மழையிலும்… எட்டும் திசையெலாம் எழுச்சிமிகு தமிழ்முழக்கத்தோடு;;; ஒலிபெருக்கிகளிள் விழா விளக்கத்தோடு…. யாழ்ப்பாணத்தை நோக்கி… பல ஊர்களிலிருந்தும்… ஊர்திகளிலும்… வாகனங்களிலும்… எமது ஆன்றோரும் சான்றோரும் புலவர்களும் புரவலர்களும் வரிசை வரிசையாக வீதிவழி விழாத்தலம் நோக்கி ஊர்வலம் வந்தனர்! எனது தாயூராம் வட்டுக்கோட்டையிலிருந்து… எனது தந்தையார் முதுதமிழ்ப்புலவர் மு நல்லதம்பி அவர்களினட் திருவுருவப்படத்தனைத் தாங்கிய வாகனத்துடன் நாமும் கொட்டும் மழையில் நனைந்தபடி ஊர்வலத்திற் சென்றோம்! இந்த உணர்வுதான்…பின்னொருநாள்…

‘கார்மழை மேகங்கள் பொழியவில்லை!

கண்கள் பொழிகின்றன!

ஊர்வலம் அங்கே நடக்வில்லை!

ஊர்கள் நடக்கவில்லை’

என்ற பாடலாக எனது உயிரில் இருந்து எழுந்ததோ தெரியவில்லை! இப்பாடலை எங்கள் தாயகத்தின் தனிப்பெரும் இசையாளுமை பொன். சுந்தரலிங்கம் அவர்கள் இறுவெட்டிற் பாடிவிட்டு என்னைக் கண்டு இப்பாடலின் சிறப்புப்பற்றிப் பாராட்டியதை நினைவு கூர்கிறேன்!

1974 சனவரி 10ஆம் திகதி!

என்றும் போல் அன்றும் இனிதே விடிந்தது! கன்றுகளும், காளைகளும், பெண்டுகளும், பிள்ளைகளும் கொண்டும் கொடுத்தும் பண்டிருந்த பண்பாட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்!

 

https://www.ilakku.org/?p=41489

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 8 – புலவர் நல்லதம்பி சிவநாதன்

 
download-3.jpeg
 3 Views

நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு!

1974 சனவரி 10ஆம் திகதி!

என்றும் போல் அன்றும் இனிதே விடிந்தது! கன்றுகளும் காளைகளும் பெண்டுகளும் பிள்ளைகளும் கொண்டும் கொடுத்தும் பண்டிருந்த பண்பாட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்!

சிறீமாவோ அம்மையாரின் சிங்களப் பௌத்த அரசாங்கத்தின் நாடி நரம்புகளாக விளங்கி இயங்கி நிகழவிருந்த நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கெதிரான அத்தனை கெடுபிடிகளையும், கேடுகளையும் விளைவித்த சிங்கள-தமிழ்ப் பிரமுகர்கள் அறிவியல், மொழியியல், சமூக அரசியற் பொருளாதார மேலாளர்கள் இராணுவ காவற்றுறை அதிகாரிகள் ஆட்சிபீட அலுவலர்கள் என  அத்தனைபேரது முனைப்புகள் முயற்சிகளையெல்வாம் முறியடித்த நிலையில் மாநாட்டு ஆய்வரங்க, அறிவரங்க, கலையரங்க, கல்வியரங்க நிகழ்வுகள் 3ஆம் திகதியிலிருந்து மும்முரமாக நிகழ்ந்து நிறைவேறி ஏறக்குறையப் பத்தாயிரம் பேர்மட்டில் சனத்திரள் கூடியிருந்த ஒரு மாபெரும் நிகழ்வாக மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்வு அந்த அழகான மாலைப் பொழுதில் நிகழ்ந்து கொண்டிருந்தது!

அரங்கிலே தமிழறிஞர் அணி குழுமியிருந்தது! தமிழ்த்தாயின் புகழ் பெருகிவழிந்தது!

அரங்கின்முன்னே

தமிழரார்வலர்கள், தமிழ்ப்புரவலர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், தமிழுணர்வாளர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள், கற்றோர்கள், கலைஞர்கள், மழலையர்கள், முதியோர்கள், தாயர்கள், தந்தையர்கள்  சேயர்கள், சிறுவர்கள், மாதர்கள், மங்கையர்கள், இளைஞர்கள், யுவதிகள் என மக்கள் வெள்ளம் அலைதிரண்டு காணப்பட்டது!

இவ்வாறான ஒரு உணர்வுச் சூழலில்…

பேராசிரியர் நைனா முகமது அவர்களின் ஒப்பற்ற பேருரையைச் செவிமடுத்தவாறு அவரது சிந்தனைச் செம்மாப்பினை உள்ளெடுத்தவாறு மெய்மறந்து நாமெல்லோரும் முத்தமிழில் முக்குளித்துக்கொண்டிருந்த வேளையது!

இப்போது திடீரென எம்மைச்சுற்றி ஓர் அபாயத்தின் அதிர்வலைகள் வந்து சூழ்ந்து கொள்கிறது! எம்மையறியாத ஒரு பீதி எம்மைவந்து கௌவிக்கொள்கிறது!

‘ஜீப்’ வண்டிகளின் சத்தமும் படையணியினரின் ‘பூட்ஸ்’ ஓசையும் படிப்படியாக எமக்குக் கேட்கத் தொடங்கவும் மக்களிடையே ஓர் அச்ச உணர்வும் பரபரப்பும் எழத்தொடங்குகிறது!

அரங்கினையும் மௌ்ள மௌ்ள இப்பரபரப்புத் தொற்றிக்கொள்வதை அவதானிக்க முடிந்தது!

எதையும் அறியத்துடிக்கும் இளவயதினராகவிருந்த என்போன்றவர்கள் நிலைமையையும் நிகழ்வுகளையும் மிகவும் விரைவாகச் சுதாகரித்துக் கொண்டோம்!

‘பொலீஸ்’ ‘ஜீப்’பிலும் லொறியிலும் வந்திறங்கிய காவற்படையினர் அதட்டும் குரல்களில் மக்கள் கூட்டத்தினை விரட்டியவாறே நடந்துகொண்டிருந்த விழா நிகழ்வினைக் குலைத்துப் பார்வையாளர்களைக் கலைக்கமுனைந்து முயன்று கொண்டிருப்பதனை  நாம் அவதானிக்க முற்பட்டோம்!

ஒரு பொலிஸ் லாரி நிரம்பிய 40இற்கும் மேற்பட்ட ‘கலவர எதிர்ப்பணியினரை’ ஏற்றியவாறு மாநாட்டுத்தலத்திற்குள் அன்றைய யாழ்ப்பாண துணைப்பொலிஸ் மாஅதிபர் சந்திரசேகர அவர்களும் அவரது படையினரும்  அத்துமீறி நுழைந்ததன் பிரதிபலிப்பாகவே விழாக்கோலம் பூண்டிருந்த அந்தப் ‘புனித இடம்’  இனவெறிப் படையணியின் சனவிரோதக் களமாக மாறியுள்ளது என்ற உண்மையை நாம் ஊகித்துப் புரிந்துகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை! போர்க்களத்திலோ அல்லேல் ஒரு கலவரம் நிகழ்ந்த தலத்திலோ எவ்வாறு இப்படையணியினர் நடந்து கொள்வார்களோ அவ்வாறே இவர்கள் அவ்வேளையும் நடந்துகொணடதை எம்மால் உணரமுடிந்தது! எதிரிகளைச் சுற்றி வளைப்பது போன்ற இவர்களது அத்துமீறிய அட்டகாசமான இப்பிரவேசம் மக்களைப் பயத்திலும் பீதியிலும் அச்சத்தின் பிடியிலும் பிணைத்துப் பின்னியது! ‘சிரசுப் பாதுகாப்புக் கவசம்’ அணிந்த படையணியினர் மக்களை அணுகியவாறு மந்தைக்கூட்டத்தைத் துரத்துவதுபோல  தமக்கு வழிவிடுமாறும் அவ்விடத்தைவிட்டு நகருமாறும் அங்கிருந்து அகலுமாறும்  கட்ளையிட்டுக் கொண்டிருந்தனர்!

அன்பினையும் அறத்தினையும் அகிலத்தையணைத்திருக்கும் பண்பினையும் ஈதலையும் இசைபடவாழ்தலையும் கொண்டாடிக் குதூகலித்த ஒரு மக்கள் எடுத்த பெருவிழாவினை பேதலிப்பின் பாதிப்பாக மாற்றியது சிறீமாவோ அம்மையார் ஏவிவிட்ட ‘ஏவற்’படையணி!

குடிமக்களின் மொழி கலை இலக்கியம் பண்பாடு வராலாறு சார்ந்த மகிழ்ச்சிப் பேரலையை நெகிழ்ச்சி நிகழ்வலையை ஆட்சியாளரின் ஆதிக்க அடக்குமுறைக்கான ஓர் ‘ஆடுகளமாக’ மாற்றிக்காட்டியது சிறீமாவோ அம்மையாரின் சிங்களப் பௌத்த பெரும்பான்மை அரசு என்றால் அது மிகையாகாது! (ஆட்சிக்கு வரும்போது ‘கையில் விரலைவைத்தாற் கடிப்பாரோ?’ என்று கேட்கத்தக்க அளவிலான அரசியல் அனுபவம் கொண்டிருந்த அம்மையாரின ஆட்சிக்காலம் ஈழத்தமிழர் தேசிய எழுச்சிக்கு உரமிட்ட’ காலம் என்று கூறுவதில் எதுவித தவறும் இருக்காதென நினைக்கிறேன்!)

ஒருசில நிமிடத்துளிகளில் கண்ணீர்ப்புகை துப்பாக்கி மற்றும் குண்டாந்தடி ஏந்திய படையினர் தமது பாதையின் திசையில் நின்ற அப்பாவி மக்களைத் தாக்கியவாறே துரத்தத் தொடங்கினர் ‘கலவரத்தைத் தூண்ட வந்த’ சிறீலங்காவின்  ‘கலவர எதிர்ப்பணியினர்’!

இவ்வேளை திடீரெனத் துப்பாக்கிச் சூடுகள் வானோக்கி எழுந்தன! மின்சாரக்கம்பிகளை நோக்கியும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்ததைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் சிதறி ஓடத்தொடங்கியது!

அக்கூட்டத்தில் நானும் ஒருவன்! அடிக்க அடிக்க உதைக்க உதைக்க ஓடிய தமிழர்களுள் வாழ்ந்து பழகிய நானும் ஒருவன்! சனநாயகத்தையும் அறத்தையும் அன்பையும் நீதியையும் சட்டத்ததையும் சமாதானத்தையும் எல்வாவற்றிற்கும் மேலாக சத்தியத்தையும் தர்மத்தையும் உறுதியாக நம்பியவர்களுள் ஒருவனாக வாழ்ந்து பழகிய நானும் ஒருவன்! என்றோ ஒருநாள்… சிங்களப்பெரும்பான்மை இனத்திலும் நல்ல தiலைமைகள் உருவாகும் என நம்பி வாழ்ந்து பழகிய நானும் ஒருவன்!

அதுவும் குறிப்பாக இலங்கையின் சுதந்திர தினத்தினையொட்டிய தேசிய கீதத்தினைத் தமிழில் யாத்தவர் எனது தந்தையார் முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி அவர்கள் பலருமறிந்த என்பது ஓh வரலாற்று உண்மை! எனது தந்தையார் காலத்திலே இலங்கைத் தேசியம் என்ற பதம் ஒன்று பேசப்பட்டும் எழுதப்பட்டும் நம்பப்பட்டும் வந்துள்ளதென்பதை நாமெல்லோரும் கற்றும் கேட்டும் அறிந்தும் வந்திருக்கிறோம்! ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்றதாக எண்ணிக்கொணடு ‘கறுப்புத் தோல்நிறக்’ கறுவாத்தோட்ட வெள்ளைக்காரர்களால் ஆளப்பட்ட ஒரு வரலாற்றில் ‘ஈரினங்கள் கொண்ட ஒரு தேசம்’ என்ற அரசியற் சித்தாந்தம் மேலோங்கி நின்ற காலத்தின் எச்சங்களின் எச்சங்களாகவே நம்முட்பலரும் இருந்திருக்கிறோமென்பதில் எதுவித மறுப்பும் கூறுவதற்கில்லை!

எனவே அன்று உயிரைப்பாதுகாக்க ஓடிய கூட்டத்தில் எல்லாவகைத் தமிழரும் இருந்தனர்! ஈழத்தமிழர்கள் தமது சொந்தத் தாயகத்திற் தமது தமிழ்த் தேச தேசிய தன்னாட்சி  இறைமைகளோடு வரலாற்று வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்களோடு வாழும் உரிமைகளுக்காக அறவழியிலும் அன்புவழியிலும் ஏன் மறவழியிலும் கூடப் போராடவேண்டும் என நம்பியவர்களும் அன்று ஓடிய கூட்டத்தில் இருந்திருக்கக்கூடுமென நான் எண்ணுகின்றேன்!

எனது பக்கத்தில் ஓடியவர்களுள் எமது தாயகத்தின் நாயன வாத்திய மேதைகளுள் ஒருவரான பத்மநாதன் அவர்களும் ஒருவராவார்!(1976ஆம் ஆண்டு அல்லது 1977ஆம் என எண்ணுகின்றேன்! இம்மேதையை Indian YMCA இல்நிகழ்ந்த  ஒருவிழாவிற்கு அழைத்து அவரைக் கௌரவித்து அவரது இசைமழையில் நனைந்த அனுபவம் நினைவிற்கு வருகின்றது! அப்போது  ‘அமைச்சூர்த் தமிழ்க் கலைஞர் குழு’ எனும் ஓர் அமைப்பினை எனது நண்பர்கள் ஒரு சிலருடன் நடாத்தி வந்த இனிய நாட்களவை! அவரை அறிமுகம் செய்யும் போது அவரும் நானும் மாநாட்டிலிருந்து துரத்தப்பட்டு பக்கத்தில் ஓடிய அனுபவத்தினை ஞாபகப்படுத்தியபோது அவரும் அதனை நினைவுபடுத்திக்கொண்டதை அவதானித்தேன்!)

உயிரைப்பாதுகாக்க ஓடிய மக்கள் கூட்டத்தில் எமது அன்றைய தமிழர்கூட்டணியின் ஒரு மிகமுக்கிய பாராளுமன்ற அங்கத்தவரையும் நான் ஒரு கட்டடத்தினுட் கண்டேன்! தமிழரின் தலைவிதியை எண்ணிப் பெருமூச்சுவிட்டுக்கொண்டேன்!

மேலும் எம்மைப் பொறுப்புணர்வோடு ‘காக்கவேண்டியவர்களின்’ கொடிய தாக்குதல்களுக்குத் தப்பி எமது உயிருக்குப் பாதுகாப்புத்தேடி நம்முட்பலர் யாழ்ப்பாண வைத்தியசாலையை நோக்கி ஓடினோம்!

அங்கே வைத்தியசாலை வாசலில் நின்றுகொணடிருந்த மருத்துவமனையின் பிரதம வைத்திய அதிகாரி எமக்குத் தஞ்சமளித்தார்!

அப்போதுதான் அந்த மிகவும் நெஞ்சை உலுக்கும் செய்தி எம்மை வந்து எட்டியது! மாநாட்டில் எமது உறவுகள் உயிரிழந்த செய்தியை அறிந்து எனது விழிகளிலிருந்து நீர்கொட்டியது!

மின்சாரக்கம்பியின் தாக்குதலால் இவர்கள் உயிரிழந்தார்களென்ற செய்தியும்  எமக்குக்கிட்டியது!

ஓரிரு மணித்துணிகளுக்குள் மாநாட்டிற் படையினராற் படுகொலை செய்யப்பட்ட தமிழுறவுகளின் சடலங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டன!

அச்சடலங்களை யார் யாரென இனங்காணுமாறு வைத்தியசாலையின் முன்கூடத்தில் நின்று கொண்டிருந்த எம்மை அழைத்தனர் மருத்துவமனையின் பணியாளர்கள் சிலர்! அவர்களை இனங்காணச் சென்றவர்களுள் நானும் ஒருவன்! இருபத்து நான்கு அகவைகொண்ட இளைஞனாகவும்  ஓர் வீறுகொணட் இளங்கவிஞனாகவும் வீச்சுள்ள அரங்கப் பேச்சாளனாகவும் கூத்து நாடக வில்லுப்பாட்டு ஆகிய கிராமியக் கலைகளின் ஆற்றுகையாளனாகவும் வளரத்துடித்த நானும் அன்று அந்தச் சடலங்களை இனங்காணச் சென்றேன்! அப்போது எனக்கிருந்த உணர்வுகளை விபரிக்க இப்போதும் என்னிடம் வார்த்தைகளில்லை!

இவ்வாறான உணர்ச்சிப்பிளம்பின் உச்சியில் நான் இன்னும் பலரோடு மருத்துவமனையின் முன்கூடத்தில் நின்று கொண்டிருந்தேன்!

எனது தலையெழுத்தைப் பிரமதேவன் மீளாய்வு செய்துகொண்டிருந்தான்!

 

தொடரும்….

 

https://www.ilakku.org/?p=42487

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் – நேற்றும் இன்றும் : தேடல் 9 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

 
maxresdefault-696x392.jpg
 74 Views

நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அல்லது தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு!

யாழ்ப்பாணம் ‘பெரியாஸ்பத்திரி’ அல்லது ‘தர்மாஸ்பத்திரி’ என்று எமது பெற்றோர்களால் நம்பிக்கையோடு அழைக்கப்பட்டுவந்த அந்த மருத்துவமனையில் எமது உயிருக்குப் பாதுகாப்புத் தேடித் தஞ்சம் புகுந்து அதன் முன்கூடத்தில் நினறுகொண்டிருந்தோம்!

அந்தக்கணங்கள்…. எனக்கான அரசியல் விழிப்புணர்வுணர்வுக்கான போதிமரக் கணங்களாகவே பயன்பட்டன என நான் இன்றும் உறுதியாக நம்புகின்றேன்!

இலங்கைத்தீவின் மதவெறி, இனவெறி, அரசியற் கலாச்சாரம், சட்டம் நீதி, காவற்துறைகளுக்கான ‘அறப்பிறழ்வுக்’ கோட்பாடுகள் எமது தமிழ்த் தேசிய இனத்தின், இறைமை, உயிர்ப்பு, இருப்பு, உரிமைகள், உணர்வுகள், எதிர்காலம், பாதுகாப்பு இவற்றிற்கான உத்தரவாதமின்மை எனப் பலகோணங்களில் என்னை இக்கணங்கள் சுற்றிச் சுழரவைத்தன!

இந்துசமுத்திரத்தின் முத்தாய்த்திகழ்ந்த இலங்கைத்தீவு  அன்று பிரித்தானியரது ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெற்ற செய்தியினை முற்றுமுழுதாக நம்பிய நிலையில், எல்லாக் குடிமக்களும் ஒருமித்த இலக்குகளோடு, இலங்கைத்தேசிய உணர்வோடு வாழும் சூழலில் இலங்கை ஓர் ‘இருமொழிக்குரிய’ தேசிய இனங்களும் ஒன்றாயிணைந்து வாழ்கின்ற ஒரு சனநாயக, சகோதரத்துவ நாடாகத் திகழும் என்ற தெளிந்த கனவோடு ஆனந்த சமரக்கோன் எனும் அன்றைய சிங்களக்கவிஞன்  இலங்கைக்கான தேசியகீதத்தினைச் சிங்கள மொழியில் யாத்ததைத் தொடர்ந்து, அதே நம்பிக்கையோடும், கனவுகளோடும் உயிரோசையோடும் எனது தந்தையார் முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி அவர்கள் அக்கீதத்தினைத் தமிழிலும் யாத்தது நாம் எல்வோரும் அன்று படித்த வரலாற்றுச் செய்திகளுள் ஒன்று!

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%

ஆயினும் பின்வந்த காலங்களில் இலங்கைத்தீவின் ‘இருமொழிக்கொள்கை’ ‘ஒரேமொழிக்கொள்கை’ ஆக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மேலும்  தொடரும் காலங்களிற்  ‘பன்மதக் கோட்பாடுகள்’ ‘சிங்களப் பௌத்த மதவெறித்  தீக்காடுகளாகவும்’ ‘ஈரினத் தீவு’ ‘ஓரினத்தீவாகவும் மாற்றப்படப்போவதற்கான அரசியற் பூகம்பம் அத்தீவிற் குடிகொள்ளப்போவதற்கான மிகவும் தீர்க்கமான அறிகுறிகளை 1974 சனவரி மாதம் 10ஆம் திகதி இரவுப் பொழுதில் நடந்த நான்காம் மாநாட்டு நிகழ்வுகள் எமக்குத் திரையிட்டுக்காட்டின எனலாம்!

உண்மையில் மாநாட்டு நிகழ்வுகளின் பின்னணியில் இலங்கைக்குச் ‘சிறீலங்கா’ எனப் பெயர் சூட்டிய வரலாறும் சிங்களக் கவிஞர் ஆனந்த சமரக்கோன் அவர்களின் சம்மதமின்றித் தேசிய கீதத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் அதனைத்தொடர்ந்த அக்கவிஞனது உயிர்க்கொடையும் இன்னும் பல ஆட்சி முன்னெடுப்புகளும் இலங்கை வரலாற்றில் அரங்கேறிய அரசியற்காட்சிகளாகும்!

இப்போது…

யாழ்ப்பாண நகரமே பீதியில் இருந்த வேளையில் யாழ்ப்பாண மருத்துவமனையின் முன்கூடத்தில் அச்சத்தோடும், அதிர்ச்சியோடும் நின்ற எமது செவிகளில் மீண்டும் பொலீஸ் வாகனங்கள் லாரிகளின் உறுமற்சத்தங்கள் நாராசமாக வந்து வீழத்தொடங்கின!

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு முன்னாலுள்ள யாழ்ப்பாணப் பெருவீதியில் ‘பொலீஸ்’ வாகனங்கள் நிறுத்தப்பட்டு அவ்வாகனங்களிலிருந்து கவசமணிந்த ‘கலவர எதிர்ப்புப்’ படையணியினர் ஒருசிலர் மருத்துவமனை வாசலை நோக்கி ‘பூட்ஸ்’ ஓசையோடு ஓடிவந்தனர்!

இவர்களுக்குத் தலைமை வகித்தபடி ஒரு காவற்துறைத் தலைமையதிகாரி திடுதிப்பென்று மருத்துவமனைக்குள் ஆவேசத்துடன் பிரவேசித்தவாறு, எங்களை மருத்துவமனையைவிட்டு வெளியேறும் டி மிகவும் அதட்டற் தொனியில், உரத்தகுரலில், ஆணையிட்டார்! அவரது கையிற் துப்பாக்கி இருந்ததை எம்மால் அப்போது அவதானிக்க முடிந்தது! இந்த அதிகாரியின் அதட்டற்குரல் கேட்டமாத்திரத்தில் அதுவரை எமது பாதுகாப்பையும் நலனையும் கண்காணித்துக்கொண்டும்  எம்மோடு ஆதரவாகப்பேசிக்கொண்டும் நின்ற மருத்துவமனையின் முதன்மை வைத்திய அதிகாரி மிகவும் துணிவோடும் அமைதியான பக்குவத்தோடும் எம்மை அதட்டிய காவற்துறை அதிகாரியை நோக்கி முன்சென்று, அவருக்கு ஆங்கிலத்திற் பதில் கூறினார்!

‘இவர்கள் தமது பாதுகாப்புத் தேடி இங்கு வந்துள்ளார்கள்! இவர்களை வெளியே நான் அனுப்பமாட்டேன்!’ என்று எதுவித பதட்டமுமின்றி மிகவும் உறுதியான குரலில் இவர் பதிலளித்ததைத் தொடர்ந்து, இவரின்மீது  காவற்துறை அதிகாரிக்கு கோபமும் ஆத்திரமும் அடைந்ததை எம்மால் உணரமுடிந்தது! திடீரெனத் துப்பாக்கியை உயர்த்தியபடியே ‘இவர்களை வெளியே அனுப்பாவிட்டால் துப்பாக்கியைப் பிரயோகிப்பேன்’ என்று அந்த அதிகாரி அச்சுறுத்தவும்  ‘முடிந்தால் என்னை முதலிற் சுடு’ என் எங்கள் மருத்துவமனையின் முதன்மை வைத்திய அதிகாரி தமது நெஞ்சினை நிமிர்த்தியவாறு நின்ற காட்சி இன்றும் எனது மனக்கண்முன் நிற்கிறது!

இவ்வேளை என்னைக் காணாமற் தேடியவாறு எனது ஒன்றுவிட்ட அண்ணர் ஒருவர் அவரும் அன்றைய பளைப்பகுதிக்கான வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் மருத்துவமனைக்கு வந்து என்னைத் தம்முடன் வரும்படி அழைத்தார்! நானும் அவருடன் செல்லச் சமிமதித்து அவருடன் மருத்துவமனைக் முன்கூடத்தைவிட்டு வெளியே வந்தேன்! அவ்வளவுதான் தெரியும்! வெளியே காத்துக்கொண்டிருந்த படையணியினரில் நான்கைந்து பேர் எம்மை நோக்கி ஓடிவந்தனர்! ஓரிருவர் எங்களிருவரையும் மருத்துவமனையின் மதிற்சுவரோடு சாத்தி அடிக்க வந்தனர்! இப்போது வேறும் ஒருசிலர் மருத்துவமனையிலிருந்து வெளிவரத் தொடங்கியதால் இவர்களது கவனம் அவர்கள் பக்கம் திரும்பவும், எனது அண்ணர் என்னைத் தப்பி ஓடும்படி வற்புறுத்தவே நானும் ஏதொவொரு வரட்டுத்துணிவுடன் தெருவில் ஓட ஆரம்பித்தேன்! நான் ஓடுவதைக் கண்ட படையினர் என்னைத் துரத்த ஆரம்பித்தனர்! அந்த ஓட்டம் எனது உயிரைக் காப்பதற்கான மரணஓட்டமாகவே என்னுள் இன்றும் நிலைத்திருக்கிறது! மரணபயத்தில் ஓடும்போது அதற்கான ஒருதனி வேகமும், விசையும் தானாக வந்துவிடுகிறது என்பதனை நான் அன்றுதான் உணர்ந்தேன்! அதுவும் எதுவித குற்றமோ தவறோ இழைக்காமல் யாருக்கும் எதுவித இன்னலும், இடையூறும் விளைவிக்காமல் மரணதண்டனைக்கு ஆளாக்கப்படுவதன் ஆனுபவத்தினை நான் அந்த ஒருசில நிமிடத்துளிகளுக்குள் நான் அனுபவித்துத் தீர்த்தேன்!

ஒருசிறிய தூரம்! குறுகிய நேரத்துளிகள்! உயிரைக் குடிக்கத் துடிக்கும் அரக்கக் கரங்கள்! மரணத்தை வெல்வதற்கான போராட்டமல்லவா இது?

இன்றெல்லாம் ஆண்டாண்டு காலமாக எதுவித விசாரணைகளோ, நியாய நீதி வாதப் பிரதிவாதங்களோ, தீர்ப்புகளோ இன்றித் தாம் செய்யாத குற்றங்களுக்காக தமது அரசியல் நம்பிக்கைகளுக்காக தங்கள் வாழ்வியல் வரலாற்றுப் பண்பாட்டு அடையாளங்களுக்காகக் காலங்காலமாகக் கம்பிச்சிறைகளுக்குப் பின்னாலும், கம்பி வேலிகளுக்குப் பின்னாலும் மரணபயத்தோடும் மானத்துக்கான சவால்காளோடும் கலங்கித்துடிக்கும் மானிடப்பிறவிகளை எண்ணும் போதெல்லாம் எனது இதயம் வெந்து வெடிப்பதுண்டு!

யாழ்ப்பாண மருத்துவமனையின் வலப்பக்கமாகத் திரும்பும்போது ஒரு சிறிய தூரத்தில்  யாழ்ப்பாணத் தபாற் தந்திக் காரியாலயமும் அதற்கு முன்னால் ஒரு சிறு குறுக்கு வீதியும் இருந்ததாக எனக்கு இன்றும் ஞாபகத்திலுள்ளது!

தெருவில் ஓடிய எனக்குள் ஏதொ ஒரு சிறுதுளி நம்பிக்கை! இவர்களிடமிருந்து தப்பிவிடுவேன் எனும் ஒரு முரட்டு நம்பிக்கை! ‘எங்காவது ஒளிந்துவிடலாமா?’ இந்த எண்ணம் உதிக்கவும், அந்தக் குறுக்குவீதியின் ஓரத்தில் ‘சாக்கு’ மறைப்பினுள்ளிருந்து ஒரு குரல் என்னை வந்து மோதிற்று! ‘இங்கை வாங்க தம்பி!’ அந்தக் குரலிற் ‘தமிழகப் பாசம்’ வந்து என்னைத் தழுவிக்கொண்டது!

74901817-1d57-4450-b983-aaa71cc65b75-1-6

‘ஆபத்பாந்தவ’ நிலையில் எழுந்த அந்த அழைப்பினை உற்றவாறு அந்தச் ‘சாக்கு’த் திரைக்குள் எனது சடலத்தை மறைத்துவாறு நின்றேன்!

ஓரிரு நிமிடங்கள்தான் இந்தத் ‘திரைமறைப்பு’ எனக்கு அரங்கமைத்தது!

வெளியே வாடா!’ எனும் ‘மரணமொழி’ குரல் ஓங்கி ஒலிக்க, நான் திரையை விலக்கியவாறு ‘சாக்கு’ மறைவினுள்ளிருந்து வெளியே வந்து அவர்களுக்குக் காட்சி கொடுத்தேன். துப்பாக்கி வேள்விக்கு விடப்பட்ட ஒரு இளங்காளைபோல! என்முன்னே கையிற் துப்பாக்கியுடன்  நான்கு அல்லது ஐந்து படையணியினர் நின்றுகொண்டுகொண்டிருந்தனர்!

இவ்விடத்தில்… ஒரு முக்கிய குறிப்பினைப் பதிவுசெய்ய விரும்புகின்றேன்!

1956இன் தனிச்சிங்கள் மொழித் திணிப்பையும் தொடர்ந்த தமிழ் மொழியழிப்பையும் ஏற்றுக்கொள்ளாத நிலையில்…

கொழும்பில் 1970-1971களில் கல்கிசைப் பகுதியில் வாழ்ந்துகொண்டு அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியிற் கல்வி கற்றுவந்தபோதும் கூட சிங்களத்தில் ஒருவார்த்தையைக்கூட ஒழுங்காகக் கற்க முனைப்போ முயற்சியோ எடுக்காத கூட்டத்தில் ஒருவனாகவே நான் உலவிய காரணத்தினால்…

1974 சனவரி மாதம் 10ஆம் திகதி இரவு, அந்த சிங்களப் படையினரின் முன்னால் மரணத்தை நோக்கி நின்றபொழுது, அவர்கள் ‘வெளியே வாடா!’ எனச் சிங்கள மொழியில் என்னை அதட்டியது எப்படி எனக்கு மகவும் தெளிவாக  விளங்கியது என்பது எனக்கு இன்றும் ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது!

(தொடரும்)

 

https://www.ilakku.org/?p=44410

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்: நேற்றும் இன்றும்- தொடர்ச்சி-தேடல் 10

 
1-216.jpg
 59 Views

நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அல்லது தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு!

‘சாக்கு’த் திரையினுள்ளிருந்து அச்சத்தில் நடுங்கியவனாக வெளியே வந்த என்முன்னே தமது கரங்களிற் துப்பாக்கியுடன் ‘கலவர எதிர்ப்புப் படையணியின்’ நான்கைந்துபேர் ஆயுதபாணிகளாக நின்றுகொண்டிருந்தனர்!

அந்தக்கணங்களில் நிச்சயமாக யமன் தர்பாரிலே யமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் எனது ஆயுட்கால முடிவு பற்றிய ஒருவிவாதம் நிகழ்ந்திருக்க வேண்டும்!

காட்சியில் ஒரு திடீர் மாற்றம் நிகழ்ந்தது!

என்ன நடந்ததோ தெரியவில்லை!

எனது விழிகளிற் காணப்பட்ட பீதியோ என் தலையில் எழுதப்பட்ட விதியோ  தெரியவில்லை. என்முன்னே நின்றுகொண்டிருந்த ஒருவனது ஆத்மாவிற்குட் புகுந்துகொண்டு ஒரு கட்டளையைப் பிறப்பித்தது!

அக்கட்டளை தமிழிலா இல்லை சிங்களத்திலா இல்லை ஆங்கிலத்திலா என்று இன்னமும் எனக்குத் தெளிவில்லை!,

‘ஓடடா!’ என்று என்னை அக்குரல் அதட்டியது மட்டும் எனக்கு அந்நிலையிலும் நன்றாகப் புரிந்தது! அக்குரல் எந்த உருவத்திடமிருந்து வந்ததென்பது மட்டும் எனக்கு அந்த விளக்கு வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது! அவ்வுருவம் துப்பாக்கியால் வேறு  நான் ஓடவேண்டிய திசையை எனக்குத் தன்கையசைவினூடு காட்டியது!

உண்மையில்  ‘ஓடவிட்டுச் சுடுவது’ பற்றி நான் முன்னரே கேள்விப்பட்டிருந்ததன் விளைவாக என்னை இவர்கள் ‘ஓடச் சொல்வது’ ‘என்னைச் சுட்டுவீழ்த்தவே’ எனும் தீர்மானத்தை எனது ஆழ்மனது அந்தக் கணமே எடுத்துக் கொண்டு விட்டது! மரணிக்கும் முதிர்ச்சியும் எனக்குள் உடனே வந்து அமர்ந்து கொண்டது! இறுதி யாத்திரைக்கு நான் தயாராகியிருந்தேன்!

எனினும் எதையும் அனுபவிக்காத இளவயது எப்படியாவது உயிரைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற வெறியைத் தூண்டக் கால் தெறிக்க ஓட்டமெடுத்தேன்!

‘உயிரைக் கையிற் பிடித்துக் கொண்டு’ ஓடுவதுபற்றி அதுவரை சிறுகதைகளிற் படித்த எனக்கு  அன்றுதான் அதன் உண்மையான அனுபவம் கிட்டிற்று!

ஓடிய எனக்குள் ஒரு திடீர் யுக்தி தோன்ற, யாழ்ப்பாணத் தபாற் தந்திக் காரியாலய வளாகத்தின் மதிற் சுவரிலேறிக் குதித்து, அடுத்த பக்கத்தில் வீழந்ததும்,  அங்கிருந்து எழுந்து சென்று இளைக்க இளைக்க அங்குள்ள வேறோரு கட்டத்தினுள் நுழைந்ததும், அங்கிருந்த ஒரு மேசையிற் தலையைக் கவிழ்த்துவைத்தபடி அரையுறக்கம் கொண்டதும், விடியற்காலை நேரம்… யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ‘எனது உறவுக்கார’ அக்காவின் மகன் எனக்கு ‘மருமகன்’ முறையான பையன் என்னைத் தேடியவாறு வந்து என்னைக் கண்டுகொண்ட ஆனந்தக்களிப்போடும், பழகிய  பாசத்தோடும்  ’மாமா! மாமா!’ என்றழைத்து என்னைத் தட்டியெழுப்பியதும்.. இன்றுவரையும் என்னால் நம்பமுடியாத காட்சிகளாகவே எனக்குள் நிலைத்து நிற்கின்றன!

யாழ்ப்பாணமே மரணப்பீதியை அணைத்துக் கொண்டிருந்த அந்தக் காலைவேளை எனது மருகனோடு அக்கட்டட வளாகத்தினை விட்டு வெளியேறி, யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தபோது நான் முதல்நாளிரவு ஏறிக்குதித்த மதிற்சுவரின் உயரத்தைப் பார்த்து அசந்து போய்விட்டேன்! ‘இந்தச் சுவரையா நான் தாண்டிக் குதித்தேன்?’ ஆச்சரியம் தாங்கமுடியவில்லை! உயிரைக் காத்துக்கொள்ள முனைந்து முயலும்போது எமக்குள் எவ்வாறான ஒரு துணிச்சலும், திராணியும், தில்லும், திறனும்  வந்து குடிகொள்கிறதென்பதை என்னால் அன்று ஊகித்து உணரமுடிந்தது!

இத்தனைக்கும்…

நானும், அந்த நான்காம் தமிழாராய்ச்சி மாநாட்டிற் பங்கேற்றவர்களும் அந்த இனிய இரவுப்பொழுதின்போது, தங்கள் தாய்த்திருமொழி, கலை, பண்பாட்டு நிகழ்வுகளைப் பார்க்கவும் கேட்கவும் வந்திருந்தவர்களும், அன்றிரவு நிறைவேற்றப்பட்ட அரச பயங்கரவாத்திற்குப் பலியாகியவர்களும், என்ன குற்றமிழைத்தோமென்ற கேள்வியே என்னை அந்த நாளைத் தொடர்ந்து ஆழமாகப் பதித்த ஆன்ம விசாரணையாகும்!

இலங்கை சுதந்திரமடைந்ததாக நாம் ‘முழு முட்டாள்காளாக’ நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தெடர்ச்சியாக எத்தனையோ சட்டமீறல்கள், அநீதி இழைப்புகள், அறப்பிறழ்வுகள் எமது மண்ணில் ஈழத்தமிழினத்திற்கு எதிராகச்  சிங்களப் பௌத்த அரச, ஆட்சி, மதபீட, காவற்துறை, இரணுவ, அமைப்புகளாற் பகிரங்கமாக எந்த ஒழிவு மறைவுமின்றியும், ஒளிவு மறைவாகவும்  நிறைவேற்றப்பட்டு அரங்கேற்றப்பட்டு நிகழ்த்தப்பட்டு வருகின்றபோதும், இவற்றைக் கண்டுகொள்வதற்கும், இவற்றைத் தடுப்பதற்கும் ஏன் யாராலும் முடியாதிருக்கின்றது என்ற கோள்வியும் என்னை அன்றிலிருந்து இன்றுவரை ஆழமாகவும் கூர்மையாகவும் தாக்கிவந்ததெனலாம்!

எமக்கு அயல்நாடாகவும், ஒரு பிரந்திய வல்லரசாகவும் இருக்கின்ற இந்தியாவாகட்டும் எமது உடன்பிறவாச் சகோதரங்காளா நாம் உச்சிமோர்ந்து உறவுகொண்டாடிய தமிழகமாக இருக்கட்டும் எமது அரசுகளை அழித்து எமது மண்ணை ஆண்டு பின்னர் எம்மை ஓர் இரண்டாந்தரப் பிரசைகளாக்கிவிட்டு வெளியேறிய பிரித்தானிய அரசாக இருக்கட்டும் எமது இன்னல்களை, இழப்புகளை நாம் தொடர்ச்சியாக எதிர்கொண்டு அனுபவித்து வந்த – வருகின்ற இனப்படுகொலைகளை பாலியல் வல்லுறவுகளை மாங்கல்ய  பொட்டிழப்புகளை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதும் எனக்குள்ளும் என்போன்ற பலருக்குள்ளும் எமது இளமைக்காலங்களில் ஒரு வியப்பும், வேதனையும், விரக்தியும் தருகின்ற எண்ணப்பதிவுகளாகவே இருந்து வந்துள்ளன!

மேலும் மேற்குலகப் பாராளுமன்ற சனநாயகத்தத்துவம் எமது தாயகத்தையும், தமிழ்த்தேசிய இனத்தினையும் பொறுத்தவரையிலும் எதுவிதத்திலும் ஒருநீதிக்கான, அமைதிக்கான, சட்ட வரம்புகள், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை நல்குமா என்ற கேள்வியும் 1970களிற் பலரது பார்வைகளிற் பரவிக்கிடந்ததை எம்மால் அப்போது உணரமுடிந்தது!,

அதுவும் குறிப்பாக இந்த நானகாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளும் அவற்றைத் தொடர்ந்து அவை சார்ந்து நிகழ்ந்த ஒருசில நிகழ்வுகளும் அவை தமிழ் மக்கள் மீது ஏற்படுத்திய நெகிழ்வுகளும் நெருடல்களும் சனநாயகத்தின் மீதான அவநம்பிக்கைகளையும், தமிழர் தேசம், தேசியம், இறையாண்மை, தன்னாட்சி பற்றிய தேடல்களையும் விதைத்தன என்றால் அது மிகையாகாது!

மாநாட்டின்போது இழைக்கப்பட்ட படுமோசமான அரசபயங்கரவாதத்தினை முன்னின்று நடத்திய யாழ்ப்பாண நகர துணைக் காவற்துறை அதிபரை முதன்மை அதிபராகப் பதவி உயர்த்தி அவர் நடத்திய தமிழர் படுகொலைக்கு சிறிமாவோ அம்மையாரின் அரசு மதிப்பளித்தமை; இலங்கைத்தீவிலே ஒரு சனநாயக அரசியல் அமைப்பின்கீழ் தமிழர்களுக்கு எதுவித பாதுகாப்பும் வழங்கப்படப்போவதில்லை என்ற ஒரு திட்டவட்டமான முடிவினைக் குறிப்பாக எமது இளைய சமுதாயத்திற்கு உணாத்தியதெனக் கூறலாம்!

உயிருக்குப் பயந்த என்போன்றவர்களைக்கூட ‘எவ்வளவு காலம் இப்படியே துப்பாக்கி முனையிற் பயந்து நடுங்கிக்கொண்டு இந்த நாட்டில் வாழ்ப்போகிறோம்?’ என்ற மனப்போராட்டம் ஆட்கொண்ட காலமும் இதுவெனக் கூறமுடியும்!

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழினத்தின் வரலாற்றுத் தொன்மையையும் தொடர்ச்சியையும் தன்னாட்சியையும் அவர்தம் தாயக தேச தேசிய இறையாண்மை அடிப்படை மனித உரிமைகள் இன அடையாளப் பாதுகாப்பு ஆகியவற்றையும் பேணக்கூடிய ஒருசனநாயகத் தத்துவம் செயல் முறைப்படுத்தப்படுத்துவதற்கான நடைமுறைக்குச்சாதகமான  சாத்தியக்கூறுகள் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை என்பதையும் அறவழிப்போராட்டங்களையும் சத்தியவழிப் பயணங்களையும் அவற்றிற்கான அரசியல் மொழிப் பரிமாற்றங்களையும் புரிந்துகொள்ளவோ அவற்றை ஏற்றுக்கொள்வோ கூடிய ஒரு மனோபாவத்திலும் உளவியற் பாங்கிலும் பௌத்த சிங்கள இனவெறியையே முற்றுமுழுதாக நம்பி ஏற்றுக்கொண்ட சிங்கள அரசியல்வாதிகளும் அவைசார்ந்த கல்வி கலை ஊடக உலகமும் சிங்கள்ப் பௌத்த  சமுதாயமும் இல்லை என்ற உண்மையையும் ஈழத்தமிழினம் மௌ;ள மௌ;ள உணரத்தொடங்கிய காலமும் இதுவே!

‘இடித்துரைக்கவல்ல’ எதிர்க்கட்சியற்ற ஒரு பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அத்துமீறிய அடக்குமுறைகளை உரத்துக் குரல் கொடுத்து வெற்றிபெறமுடியாத ஒரு சனநாக அமைப்பின் கீழ் ஈழத்தமிழினம் நாளுக்குநாள் படிப்படியாகத் தன்னிலை குலைந்து தன்னுரிமைகளைப் பறிகொடுத்து மெலிந்து நலிந்து தனக்கான ஒரு பாதுகாப்பான தேசத்தினை இழந்த கூலிக்கூட்மாக அடிமைப்பிடிக்குள் மூச்சழந்து பேச்சிழந்து அகப்படநேரும் என்ற ஒரு இருண்ட எதிர்காலத்தையும் எமது இளைய சமுதாயம் தன்முன்னே காணத்தொடங்கியது!

‘இரத்தம் சிந்தியாவது எமது இனத்தைக் காப்பேன் என்ற தொனியிலும் ‘இனிக் கடவுள்தான் தமிழினத்தைக் காப்பாற்றவேண்டும்’ என்ற தொனியிலும் ‘எங்கள் தேசத்தந்தை’ செல்வா அவர்கள் உதிர்த்த வார்த்தைகளைத் தொடர்ந்து  தமிழர்களது எதிர்காலத்தைத் தமிழர்களே தீர்மானித்து அதற்கான திட்டங்களை வியூகங்களை வகுத்து தமது அரசியற் பயணத்தைத் தொடர்வதைத் தவிர வேறொரு வழியும் அவர்களுக்கு இனி இருக்கப்போவதில்லை என்ற முடிவினைச்  சிங்களப் பௌத்த இனவெறியையே தமது அரிசியற் பிரச்சாரக் கையேட்டின் மூலக்கல்லாக்கொண்ட இரு பெரும் சிங்களப் பொளத்த இனவாதத் தேசியக் கட்சிகளும் அவற்றின் பிதாமகர்களாக இயங்கிய ‘புத்த மத’ பீடங்களும் அவற்றை எதிர்த்து வெல்லமுடியாத ‘கையாலாகாத’ இடதுசாரியமைப்புகளும் அவர்களின் ஊதுகுழல்களாகவும் அடிவருடிகாளாகவும் இயங்கிய ஊடக.. சமூக அமைப்புகளும் தமிழர்களின் கரங்களிற் திணித்தன என்பதே மிகவும் கசப்பான ஓருண்மையாகும்!

இவ்விடத்தில் ஒரு கருத்தினைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்!

ஈழத்தமிழினத்தினை ஓர் ‘அரசற்ற தேசம்’ (‘Stateless Nation’) எனப் பலரும் இன்றும் பதிவு செய்தும் குறிப்பிட்டும் வருவது மிகவும் வேதனையைத் தருகின்றது!

உண்மையில் இப்பதம் ஈழத்தமிழர்களுக்கு எதுவிதத்திலும் பொருந்தாத ஒன்று என்பது எனது தாழ்மையான கருத்தாகும்! ஆண்டாண்டுகால வரலாற்றுரீதியாகப் பார்ப்போமானால் ஆட்சியும் அரசும் கொண்டு தொன்மையும் தொடர்ச்சியோடும் இலங்கை்த்தீவில் சிதைத்துவிட்ட ஒரு தேசத்தை   ‘அரசற்ற தேசமென’ அழைப்பது எதுவரை நியாயமானதாகும்?

நாகர் இயக்கர் வரலாற்றுச் சின்னங்களையும் பின்னர் எழுந்து இயங்கிய தமிழர் அரசுகளின் வரலாற்றையும் அவற்றின் பின்னர் தொடர்ந்த இலங்கையின் அரசியற் பரிணாமக் கூர்ப்பனையும்  தளமாக வைத்து வேண்டுமானால்…

‘அரசிழந்த தேசம்’(‘State-lost Nation’)

‘அரசு களவாடப்;பெற்ற தேசம்’ ‘(State robbed Nation)

‘அரசு கவரப்பட்ட தேசம்’ (‘State Deprived Nation’)

‘அரசு சூறையடப்பட்ட தேசம்’ (‘State Depredated Nation’)

‘அரசு சூனியமாக்கப்பட்ட தேசம்’ (‘State Nullified Nation’)

என்ற இன்னேரன்ன பதங்களாலல்லவா எமது தமிழர்தேசத்தை நாம் குறித்துக் கொள்ளவேண்டும்!? பதிவு செய்ய வேண்டும்!

தமிழகத்திலும் கூடக் கதை இதுதானே! ‘திராவிடம்’ எனும் ‘அராவிடம்’ பற்றியும் நாம் அறிவோமல்லவா?

முடிவாக…

நான் எனது சொந்த அனுபவத்தில் நேரிற் கண்ட 1974இல் நிகழ்ந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாடும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் பொருளாதார கல்வி தொழில் வாய்ப்புகள்  சார்ந்த சமூக நிகழ்வுகளுமே ஈழத்தமிழர்களுக்கான ஒரு புதிய அரசியல் அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதென்பது எனது அவதானமாகும்!

புலவர் நல்லதம்பி சிவநாதன்

 

https://www.ilakku.org/?p=45585

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்- நேற்றும் இன்றும்- தேடல் 11 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

 
unnamed-1-696x984.jpg
 98 Views

இலங்கைத்தீவில்…

தமிழர் தேசம் ‘அரசற்ற தேசமல்ல; ஓர் அரசிழந்த தேசமே!’

எனது சொந்த அனுபவத்தில் 1974இன் தமிழாராய்ச்சி மாநாடு எமது தேசம், தேசியம் பற்றிய ஓர் அக்கினிப் பிரவேசமாகவே என்னால் உணரப்பட்டதெனலாம்!

‘ஓர் அழகிய தீவினிற் பிறந்தோம்! ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்தோம்’ என்று நம்பிய என் போன்றவர்களின் தேச, தேசிய நம்பிக்கைகள் மௌ்ள மௌ்ளக் கரைந்து கனவாகத் தொடங்கிய நாட்களிவையென்பேன்!

1960களின் நடுப்பகுதியென எண்ணுகின்றேன்! வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்போது, கல்லூரி மாணவர்களுக்கான ஒரு சுற்றுலாவில் நானும் கலந்துகொண்டு, இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றிருந்தேன்! அச்சுற்றுலாவில் பொலனறுவவை, அநுராதபுரம், சிகிரியா ஆகிய பகுதிகளையும் சென்று பார்க்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது! எமது சரித்திரபாட ஆசிரியர் ‘திரு நீலகண்டசிவம் மாஸ்டர்’ தான் அந்தச் சுற்றுலாவிற்குத் தலைமைதாங்கி எம்மை அழைத்துச் சென்றதாக ஞாபகமிருக்கிறது! அவர் அநுராதபுரத்திலும், பொலனறுவையிலும் உள்ள சிவன் கோவில்களைப் பற்றியும், அவை சார்ந்து தமிழ் மன்னர்களின் வரலாறு பற்றியும் எமக்குக் கூறியபோது, எமக்குள் எம்மையறியாமலேயே ஒரு பெருமிதமும், மகிழ்ச்சியும் உருவாகியதை நான் ஒருபோதும் மறந்ததில்லை! எமது முன்னோர் இலங்கைத்தீவின் முதற்குடியாக வாழ்ந்தவர்களென்ற ஓரெண்ணமும், எனது ஆழ்மனதில் வித்திடப்பெற்ற காலமும் இதுவாகும்! இலங்கைத் தமிழர்களுக்கும், தென்னகத் தமிழர்களுக்குமிடையிலான ஒரு மிகவும் பூர்வீகத் தொடர்பொன்று இருந்திருக்க வேண்டுமென்ற ஒரு பிடிவாதமான நம்பிக்கை மட்டும் எனக்கு அன்றிலிருந்தே துளிர்த்ததென்பது ஓர் உண்மையாகும்! அதேவேளை குமரிகண்ட வரலாறு பற்றி நான் அப்போது அறிந்திருக்க  நியாயமில்லை  என்பதும் ஓருண்மையாகும்!

இயக்கர், நாகர் பற்றியும் பழைய கற்காலம், புதிய கற்காலம், குறுணிக் கற்காலம், பெருங்கற்காலம் பற்றியும், கற்காலச் சின்னங்கள் பற்றியும் அவ்வப்போது பாட நேரங்களில் நுனிப்புல் மேயும் பாணியில் அறிந்து வந்திருக்கிறேனேயொழிய, அவற்றையெல்லாம் கூர்ந்து சிந்திக்கும் வரலாற்றுத் தேடல் அப்போதெல்லாம் என் போன்றவர்களுக்கு இருக்கவில்லையென்றே கூறுவேன்! நான் முன்னர் குறிப்பிட்டது போல எமது இளமைக் காலங்களில் எமது தமிழர்  வாழ்ந்த பிரதேசங்களையெல்லாம் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் எமக்குப் பெரிய அளவில் இருந்ததாகச் சொல்வதற்கில்லை! ஆக மிஞ்சிப்போனால் கலைப்பிரிவு மாணவர்கள் அதுவும் குறிப்பாகப் பல்கலைக்கழகப் பட்டதாரி வகுப்பு மாணவர்கள் தமது பாடத்திட்டத்தில் இவைபற்றி ஓரளவு அறிந்து, தெரிந்து வைத்திருப்பார்களேயொழிய மற்றப்படிக்கு சாதாரண தமிழ் மக்களிடையே தமிழர் தொல்குடி வரலாறு பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் பெரிய அளவில்இருந்ததென என்னாற் கூறமுடியாது!

நான் நகைச்சுவையாக அடிக்கடி ஒன்றைச் சொல்லி வந்திருக்கிறேன்!

‘நாம் தமிழர்’ என்ற எண்ணமும், எழுச்சியும் எம்மிடையே அக்காலங்களில் இருந்ததாகச் சொல்வது ஒரு வரலாற்றுத் தவறெனவே நான் கூறுவேன்! எம்மைத் தமிழர்களாக ஒன்றிணைத்த பெருமை சிங்கள பௌத்த இனவாதிகளையே சாரும் என் நான் சொல்வதுண்டு!

‘நான் யாழ்ப்பாணத்தான்!’ ‘நான் மட்டக்களப்பான்!’ ‘நான் திருகோணமலையான்!’ ‘நான் வன்னியான்!’ ‘நான் கொழும்பான்!’ ‘நான் மலைநாட்டான்!’   ‘நான் இந்தச் சாதியான் அவன் அந்தச் சாதியான்’ ‘நான் இந்த ஊரான் அவன் அந்த ஊரான்’ ‘நான் இந்தக் குறிச்சியான் அவன் அந்தக் குறிச்சியான்’ என்று பிளவுபட்டுப் பிணி கொண்டு பிரிந்து கிடந்த தமிழரை ‘தெமிலு பள்ளா’ என ஒன்றாகச் சுட்டியழைத்த சாதனை, சிங்களப் பௌத்த இனவெயறியாளர் ஈட்டிய சாதனையே என்றால் அது மிகையாகாது!

மேலும் தொடர்ச்சியாகப் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த  காலங்காலமான அந்நிய ஆக்கிரமிப்புகளினாலும், ஆதிக்க நடவடிக்கைகளாலும் 1947இலிருந்து ‘சனநாயகப் பாராளுமன்றம்’ என்கின்ற போர்வைக்குள் நிகழ்ந்த படிப்படியான திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளாலும், முகமும் அகமும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தப்பட்டு வந்த தமிழர் தேச வரலாறானது, ஒரு மீட்பிற்கும், மீளுருவாக்கத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும் என்ற தீவிரமான நிலைப்பாடு எமது இளைய சமுதாயத்தின் மத்தியில் வேரூன்றி விழுதுவிட்ட காலம், 1974இன் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டினைத் தொடர்ந்து வந்த காலமெனவே எண்ணத் தூண்டுகிறது!

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் ஏனைய தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் தமிழருக்கான ஒரு பாதுகாப்பான இருப்பினையும், வரலாற்றுத் தொன்மையின் தொடர்ச்சியையும், தேசிய இறைமையையும் பேணக்கூடிய சட்டம் நீதி வரம்புக்குட்பட்ட ஓர் அரசியல், சமூக பொருளாதாரச் சூழலமைவு சமகாலத்திலும், எதிர்காலத்திலும் ஏற்படும் என்ற நம்பிக்கை அறவே விலகிவிட்ட காலமாகவும் இதனை எம்மாற் பார்க்க முடியும்!

இலங்கைத் தீவிலிருந்து தமிழர்களை விரட்டித் துரத்தியடிப்பதே தமிழருக்கான ஓர் அரசியற் தீர்வு என்ற ‘இனவாத’ அரசியலை மையப்படுத்திய சனநாயகப் பாராளுமன்ற அமைப்பே தலைதூக்கித் தாண்டவமாடுகின்ற ஒரு நிலையை உருவாக்குவதில் சிங்களப் பெரும்பான்மையினத்தினைத் தயார் செய்கின்ற பணியிலேயே சிங்கள  அரசியற் கட்சிகளும், பௌத்தமத பீடங்களும் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது! இந்நிலையை எதிர்த்துக் கருத்து வெளியிடக்கூடிய  அங்கிருந்த சிங்கள ஊடகங்ளும் சரி, இடதுசாரிக் கட்சிகளும் சரி, தொழிலாளர் மேம்பாட்டினை நோக்கி இயங்கிய நிறுவன அமைப்புகளும் சரி ‘வலுவற்ற’ நிலையிலேயே அக்காலகட்டங்களில் வலம் வந்தன எனலாம்! தமிழருக்காகக் குரல் கொடுத்தால் அவர்கள் அரசியற் களத்திலும் சரி, அன்றாட வாழ்வியற் களத்திலும் சரி நின்று பிடிக்கக்கூடிய நிலைப்பாடு அங்கு இருந்திருக்கவில்லை!

இந்நிலையில் ‘இழந்த தாயக தேசத்தை மீட்பதே’ இலங்கைத் தீவில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கான அரசியல் இலக்கு என்ற சிந்தனைக் கருத்தாக்கம் எமது இளைய சமுதாயத்தின் உள்ளங்களில் மிகவும் ஆணித்தரமாகவும், மிகவேகமாகவும் வேரூன்றத் தொடங்கியதில் எதுவித ஆச்சரியமும் இருக்கவில்லை! எமது இளைய சமுதாயத்தின் கரங்களில் ஆயுதத்தைத் திணித்தமைக்கான முழுப் பொறுப்பும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அநீதியான அடக்குமுறையையும்  அவற்றின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இன அழிப்பினையுமே சாரும் என்பதை மறுப்பதற்கில்லை!

உண்மையைக் கூறப்போனால்..

இவ்வேளையிற்றான் ‘ஆண்ட பரம்பரை மீண்டுமொருமொரு முறை  ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய கவி வரிகளின் கருவூலமானது.  உணர்ச்சிபூர்வமாகவும், தத்துவார்த்தமாகவும் தமிழ் மக்களிடையே உருவாக்கம் பெற்று  ‘தமிழீழம்’ என்கிற பெருவிருட்சம் தமிழிளைஞர்கள் மத்தியில் ஒரு பெருவெளியையும், பேரொளியையும் தோற்றுவித்ததெனலாம்!

‘தமிழீழம்’ என்பது ‘ஈழத்தமிழர் பிறரிடம் இழந்த தேசம்’  ‘தமிழர்கள் மீண்டும் போராடி மீட்கப்பட வேண்டிய தேசம்’ என்ற தாகத்துடன் இளைஞர்களும், யுவதிகளும் அணிதிரள வேண்டிய உளவியல் அரசியற் சூழலையும் அப்போராட்டத்திற்கான சிந்தனைத் தளங்களையும், செயற்பாடுகளையும் இக்காலகட்டம் எமது தாயக பூமியில் உருவாக்கியது!

1956இலிருந்து இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், இனஅழிப்பு நடவடிக்கைகள், அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தாமடைந்த தொடர்ச்சியான இழப்புகளையும், இன்னல்களையும், துன்பங்களையும், துயர்களையும் கண்டும் கேட்டும் படித்தும் வந்த மக்கள் அகிம்சை, சத்தியம் எனும் அறவழி அன்புவழிப் போராட்டங்களை நம்பி வந்த மக்களின் மடியிற் தவழ்ந்த அவர்தம் குழந்தைகள்; தங்கள் கரங்களில் ஆயுதமேந்திப் போரடி  இரத்தம் சிந்துகின்ற ஒரு வரலாற்றுப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் அறிகுறிகளை அவதானிக்கத் தொடங்கினர்!

தாய் மொழியையும், கலையையும், பண்பாட்டையும், தங்கள் தாய் நிலத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுவதற்கான ஒரே மொழி ஆயுத எழுத்துத்தான் என்ற யதார்த்தத்திற்கு எமது தாயகம் உள்ளானது!

பள்ளிப் படிப்பையும், பாடப் புத்தகத்தையும், பட்டம் பதவிகளையும், குடும்பம் பிள்ளை குட்டிகளையும் வட்டமிட்டுக் கொண்டிருந்து, தமிழர் வரலாறு கொள்ளி வைக்கவும் பிள்ளைகளில்லாத ஒரு புதிய சகாப்தத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்தலானது!

தோட்டத்துப் பூக்களுக்கு நீர் வார்த்த மென்மைக் கரங்கள் கோயிற் தீச்சட்டிக்கு நெய்வார்த்த அன்புக் கரங்கள் தோட்டாக்களுடன், குண்டுகளுடன் உறவாடப் புறப்படும் பயணத்திற்குத் தம்மைத் தயார் செய்யத் தொடங்கின!

சங்க இலக்கியத்திலும், சரித்திர நாவல்களிலும் கண்கள் குவித்தவர்கள் வங்க வரலாற்றை மாற்றும் வாழ்வுக்கு வழிதேடி நின்றார்கள்!

இப்போதும் கூட நான் கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் கணிதத்தையும், விஞ்ஞானத்தையும், தமிழையும் அங்குள்ள மாணவச் செல்வங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தேன்! அவ்வப்போது ஆங்காங்கே நிகழ்ந்து வந்த அதிரடித் தாக்குதல்கள் பற்றிப் பத்திரிகைகள் வழியே அறிந்து வந்தேன்!  கிளிநொச்சி, பளை, பரந்தன் ஆகிய பகுதிகளில் எனது கவிதை, நாடக முயற்சிகள் தொடர்ந்த வண்ணமேயிருந்தன! அப்போதெல்லாம் எமது இலக்கியப் படைப்புகள் அநேகமாக எமது தமிழர் சமூகத்திடையே மலிந்து கிடந்த சாதி, மத, இட ஏற்றத்தாழ்வுகள், சீர்வரிசைக் கொடுமைகள் மூடக் கொள்கைகளைச் சாடுவனவாகவே ஒலித்து வந்தனவெனினும், அவ்வப்போது அரங்குகளில் எமது தாய்மொழி, தாயகம், எமது கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு என்பன எதிர்கொண்டுள்ள சாவால்கள் பற்றியும், அவற்றைக் காத்துப் பேண வேண்டியதன் அவசியம் பற்றியும்,  தாயக தேசத்தின் இறையாண்மை பற்றியும் தர்மாவேசத்தோடு ஓசையெழுப்பி வந்தோம்!

தொடரும்….

 

https://www.ilakku.org/?p=46899

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 12 – புலவர் நல்லதம்பி சிவநாதன்

 
download-2.jpg
 64 Views

இலங்கைப் பாராளுமன்ற அரசியலமைப்பின் ஊடாக….

ஈழத்தமிழர்களின் தேச இறையாண்மைக்கும், தேசியப் பாதுகாப்பிற்குமான  ஒரு சனநாயகத் தீர்வு கிடைக்குமா?

1970களின் ஆரம்ப காலங்களில் இலங்கைத் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் இளைய சந்ததியினரின் இதயத்தில் எழுந்து ஒலித்த மிகவும் ஆழமான கேள்வி இதுவேயெனலாம்!

இலங்கைத்தீவிற்குள் வாழ்கின்ற தமிழர்களுக்கு இலங்கையின் பாராளுமன்ற அமைப்பினூடும் அதற்கான ‘தேர்தல்-வாக்கு’ வழிப்பட்ட பிரதிநிதித்துவத்தினூடும்  கிடைக்கப்போகின்ற இறுதித்தீர்வு ‘இனப்படுகொலையே’ என்ற முடிவிற்கு எமது இளைய சமுதாயம் தள்ளப்படுகின்ற அரசியல் சமூக பொருளாதாரச் சூழல் மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் விருத்தியடையத் தொடங்கிய காலப்பகுதி இதுவென்பதில் எதுவித ஐயப்பாடுமில்லை!

தமிழினத்தினை ஒட்டுமொத்தமாக ஓர் உரிமைகளற்ற, உயிர்பாதுகாப்பிற்கு எந்தவித உத்தரவாதமுமற்ற ஓர் ‘உயிர்க்கூடுகளின்’ சங்கமமாகவே பௌத்த சிங்களப் பெரும்பான்மையினம் கருதியும், கணித்தும், சிந்தித்தும்,  செயற்பட்டும் வருகிறது என்ற ஒரு அனுமானத்திற்கு எமது இளைய சந்ததி வரத் தொடங்கியதை எம்மால் நன்கு ஊகிக்கவும், உணரவும் கூடியதாகவிருந்ததெனலாம்!

இனவாத சக்திகளாக நாளுக்குநாள் விசுவரூபமெடுத்துவந்த சிங்களப் பௌத்த மதபீடங்களும், அரசியல்வாதிகளும் அவர்தம் அடியாட்களும், கைக்கூலிகளும் புரிந்துகொள்ளக்கூடிய – எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு மாற்று அரசியல் மொழியை, ஒரு முற்றிலும் மாறுபட்ட அரசியல் அணுகுமுறையை ஏற்று எதிர்கொள்ளவேண்டித் தானாக வேண்டுமென்ற ஒரு நிலைப்பாட்டினை எமது இளைய சந்ததியினர் எடுத்துவிட்டதற்கான அறிகுறிகள் மௌ்ள மௌ்ள வெளிப்படத் தொடங்கின!

இவ்வாறான ஒரு வரலாறுதான் சிங்கள மக்களிடையேயும் தலையெடுத்துத் தாண்டவமாடியதை நாமெல்லோரும் அறிந்திருந்தோம்! ‘சேகுவேரா இயக்கம்’ பற்றிய செய்திகளை நான் ஈண்டு விபரிக்க விரும்பவில்லை! ‘இரட்டை’ப் பிரதான முதன்மைக் கட்சிகளின் கையில் அகப்பட்டு உலக சனநாயக தத்துவம் அனுபவிக்கும் இடர்கள், இன்னல்கள் பற்றி யாமெல்லோரும் நன்கறிவோம்!

இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையில், அரசியற் தலைமைகளும், அரசியல்வாதிகளும், அவர்தம் கட்சியமைப்புகளும் கனவிலும் கண்டிராத புதியதொரு அரசியல் மொழியும், அதற்கான அணுகுமுறையும் இலங்கை அரசியலுக்குள் அடியெடுத்து வைப்பதற்கான பாதையையும், பயணத்தையும், அவற்றிற்கான தேவையையும், தெளிவினையும் முன்னின்று எடுத்துக்கொடுத்த பெருமையும் பேறும்…

இனவாத சிங்களப் பௌத்த அரசியலமைப்புகளையும், மதபீடங்களையும் ஊடக அமைப்புகளையும் அவற்றின வழிகாட்டலில் தொடர்ச்சியான இனக் கலவரங்களையும், உயிர்ப்பலிகளையும், உடைமைகள் அழிப்புகள், எரிப்புகளையும், மானபங்கங்களையும் நிகழ்த்தி, நிறைவேற்றி அதில் ஆனந்தக் களிப்பும்,  ஆர்ப்பரிப்பும் ஈட்டிய அனைத்துச் சிங்கள மக்களையுமே சாருமெனலாம்! இந்த இனக்கவர காலங்களில் இதனை நிறுத்துகின்ற முயற்சிகளில் சிங்கள மக்கள் உணர்வு பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் ஈடுபட்டிருந்தால் –  அதன்வழி இயங்கியிருந்தால் உண்மையான புத்தசமய போதனைகளைப் பின்பற்றியிருந்தால், இலங்கையில் எல்லா இனங்களும் ஒன்றாகச் சகோரத்துவப் பண்புகளோடு வாழக் கூடிய சூழல் எப்போதோ ஏற்பட்டிருக்க முடியுமென்பதை மறுப்பதற்கில்லை! ஆனால் உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டேயிருந்து வந்துள்ளது!

இதன்விளைவாக…

திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கெதிராகச் சமநீதியென்றும், ‘சமஸ்டி’ அமைப்பென்றும், சத்தியாக்கிரகமென்றும், அறவழிப் போராட்டமென்றும், கூப்பாடு போட்டும் கூக்குரலெழுப்பியும் வந்த இலங்கைத்தமிழர்கள் தம்மை ஈழத்தமிழர்களாக மீளுருவாக்கம் செய்யத் தலைப்பட்ட வரலாறு தோற்றம் பெற்றது! அகிம்சையென்றும் அறமென்றும் வரம்புகள் கட்டிய தமிழர் அரசியல் வரலாற்றின் தலையெழுத்தில் ‘ஆயுத எழுத்து’ வந்து அமர்ந்து கொண்டது! தமிழர்கள் காலங்காலமாக நம்பித் தொழுத ஆண்டவனின் கையில் வைத்திருந்த ஆயுதம் ஈழத்தமிழர் கரங்களிற்கு வந்திறங்கியது! புறநானூற்றிலும், பரணிப்பாட்டிலும் அறத்தையும், மறத்தையும் அழகுபடுத்திய பண்டைத்தமிழர் வரலாறு நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், கடற்துறைகளிலும்,  வயற்புறங்களிலும் தரையிறங்கின!

‘அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்;மறத்திற்கும் அஃதே துணை’ எனும் குறள் உயிர்பெற்று உலாவரத்தொடங்கியது!

தாய்மீதும், தாரத்தின் மீதும், தமக்கைமீதும், தங்கைமீதும், சேய்மீதும், சிறுவர்மீதும் கொண்டிருந்த பாசமும் பற்றும் தாயகத்தின்மீதும், தன்னினத்தின் மீதும் தாவிக்கொள்ள பாய்கின்ற தமிழர்களின் காவியம் ஆரம்பமாயிற்று!

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதிலலையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்’ எனும் பாரதியின் உயிரொலி ஊரொலியாயிற்று!

கல்வியும், கலையும், செல்வமும், சிறப்பும் பட்டமும், பதவியும், உத்தியோகமும் தன்மானத்தின் முன்னே, இனமானத்தின்முன்னே துச்சமென எண்ணும் ஓர் இளைய தமிழ்ச் சமுதாயம் தலையெடுக்கலாயிற்று!

குட்டக்குட்டக் குனிவதும், எட்டியுதைக்கவும், ஏளனஞ் செய்யவும், திட்டித்துரத்தவும் வெட்கமின்றி வீழந்துகிடக்கின்ற கெட்ட சமுதாயத்தைத் தட்டியெழுப்புவோமெனத் திட்டங்கள் தீட்டப்பெற்றன! அவற்றிற்கான அரங்குகள் கட்டப்பட்டன!

உளவியல் ரீதியாகப் பார்க்கப்போனால், ஒரு சர்வதிகார அமைப்பின்கீழ் ஓர் இராணுவ ஆட்சியின் கீழ் அதிகார வர்க்கத்தின் ஆக்கிரமிப்பு அடக்குமுறையின் பிடியில் அச்சம் பீதியில் வாழ்கின்ற குடிமக்கள் தங்களுக்கு முன்னால் தோற்றமளிக்கின்ற அந்தத் தோற்றப்பாட்டை எப்படியாவது விலக்கிவிடவேண்டுமென்று துடிப்போடும், தவிப்போடும் முயல்வதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாதென்ற யதார்த்த உண்மையையே ஈழத்தமிழினம் அன்று நேரிற் சந்தித்ததெனவே எண்ண வேண்டியுள்ளது!

ஒருமுறை என்னோடு ஒரு ‘சான்றாண்மை’ மிக்க பெரியவர் பேசிக் கொண்டிருந்த போது கூறிய விடயம் இன்றும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது!

‘தம்பி! நாங்களும் ஒருகாலத்தில் எங்கள் முன்னால் நின்று எம்மைக் கொடுமைப்படுத்தி, அவமானப்படுத்திய இனவெறியர்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தவர்கள் தானே தம்பி! ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், நாம் மனதிற்குள் ஆயுதம் தாங்கி எமது பகைவர்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டு எமது வஞ்சினங்களைத் தீர்த்துக் கொண்டிருந்தோம்! இன்றோ தமிழர்கள் உண்மையாகவே ஆயுதத்தைக் கையிலேந்திச் சுடத்தொடங்கியிருக்கிறார்கள்! நாங்கள் படு கோழைகளாக இருந்தோம்! புத்தகப் புறநானூற்றுப் பக்தர்களாக இருந்தோம்! ஆனால் அவர்களோ வாழ்வா? சாவா? என்ற வரலாற்றின் பக்கங்களை எழுதத் துணிந்து விட்டார்கள்!’ என்ற தொனிப்பட அந்தப்பெரியவர் கூறிவிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்!

அவருடைய புன்னகையைப் பார்த்திருந்த எனது மனத்திரையில் நான் தமிழாராய்ச்சி மாநாட்டின் பத்தாவது நாளிரவு துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்த ‘கலவர எதிர்ப்புப் படையணி’யினரின் முன்னால் அஞ்சி நடுங்கி நின்ற காட்சியும், எனது உருத்திரபுரம் கிளிநொச்சி ஆசிரிய அனுபவ காலங்களில் ஆனையிறவை ஒவ்வொரு நாளும் கடக்க நேர்ந்தபோது சிங்கள இராணுவச் சிப்பாய்கள் எம்மை நிறுத்திச் சோதனை செய்து துன்புறுத்திய வேளைகளிலும் கொழும்பு யாழ்ப்பாண இரயிற் பயணங்களின்போதும் நாம் அனுபவித்த அவமானங்களும், அருவருப்புகளும் ஒவ்வொன்றாக ஓடிக்கொண்டிருந்தன!

அந்தப் பெரியவர் சொன்னதிற்றான் எத்தனை உண்மைகள் என அப்போது நான் எண்ணிக்கொண்டேன்!

இலங்கைத் தீவினில்  சனநாயகம் எனும் போர்வையில் நாம் அனுபவித்த துன்பங்களை, இன்னல்களை, உயிரிழப்புகளை, பட்ட அவமானங்களை, அலங்கோலங்களை, அதிருப்திகளை அறியவும், அணுகவும், எம்மை எட்டிப் பார்க்கவும் எவரும் முனையவுமில்லை! முயலவும் இல்லை!

சீனாவிலும் ருசியாவிலும் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்களைப் பற்றியும் அங்கிருந்து விரிந்து செழித்த மானிட உரிமைக் குரலுக்கான இலக்கிய வீச்சுக்களைப் பற்றியும் அரங்குகளிலும், இதழ்களிலும் பொரிந்து தள்ளியவர்கள், சொரிந்து தள்ளியவர்கள் எல்லாம் சிங்களப் பௌத்த இனவாதத்தினைத் தடுப்பதற்கு வலுவற்றவர்களாகவும், வக்கற்றவர்களாகவுமே அரசியற் பிழைப்பு நடத்தி வந்தனர்!

உலக சனநாயகமும் எம்மைப்பொறுத்தவரை ஊமையாகி நின்றது!

டொனமூர் – சோல்பரித் திட்டங்களும், கண்டி கறுவாத்தோட்ட அரசியலும் தமிழரிடை மலிந்து கிடந்த வடமாகாண கிழக்கு மாகாணப் பிளவுகளும், சாதி சமயப் பிரிவுகளும் அவை சார்ந்த பிணிகளும் ஒன்றுசேர நின்று தமிழுக்கும், தமிழருக்குமான சுபீட்சத்தையும், சுயநிர்ணய உரிமைகளையும், வரலாற்று இறையாண்மையையும் அழிக்க நின்ற சிங்களப் பௌத்த இனவாத அரசியலுக்கு உரமாக அமைந்தன!

இப்பின்னணியிற்றான் இலங்கைத்தீவில் தமிழுக்கும், ஈழத்தமிழருக்குமான ஒரு தமிழ்த்தேசியம் தளிர்த்துக் கரங்களில் ஆயுதத்துடன் தன்னைக் களமிறக்கியது எனலாம்!

இந்நிலையிற்றான் இளைய தமிழர்களின் பிரிவினைக் கொள்கையை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்றும், தமக்கான ஒரு தாயக தேசத்தை நோக்கிய ஒரு மாற்று அரசியற் பாதையை நம்பிக்கையோடு தளமிட்டு ஒரு தாயக விடுதலைப் போராட்டப் பயணத்தையும், அதற்கான வியூகங்களையும் வகுத்துள்ளார்கள் என்றும் கூறிய   செய்திகள் மௌ்ள மௌ்ள இலங்கையின் எல்லாப் பாகங்களுக்கும் மட்டுமன்றித் தாயத் தமிழகத்திற்கும் கசியத் தொடங்கிற்று!

தமிழர்கள் இனியும் தாம் இயற்றும் தாங்கொணாக் கொடுமைகளை, தாழ்வுகளை, தரக்கேடுகளை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் தம்மைச் சகிக்கமாட்டார்கள் என்ற சத்திய உண்மையைச் சிங்கள தேசமும், அதன் தீயசக்திகளும் இப்போதுதான் தரிசிக்கத் தொடங்கின!

இப்போதும் நான் கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் எனது ஆசிரியக் கடமைகளைப் புரிந்துகொண்டும் கவிதை கலை இலக்கியப் பணிகளை ஆற்றிக் கொண்டும் நாட்டு நிலைமைகளை அவதானித்துக் கொண்டும் இருந்தேன்!

இவ்வேளைதான் இலண்டனிலிருந்து பொறியியற் பட்டப்படிப்புக்கான அழைப்பு எனது  சின்னண்ணாவிடமிருந்து வந்தது!

எனது பத்தொன்பது வயதில் என்னை ஆற்றொணாத் துயரில் ஆழ்த்திவிட்டு அமரத்துவமடைந்த என் தெய்வத்தாய் கூறிய ஒரேயொரு காரணத்தை முன்னிட்டு நான் மேற்படிப்பினை நோக்கி வெளிநாடு செல்ல ஆயத்தமானேன்!

தொடரும்….

 

https://www.ilakku.org/?p=48498

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
    • அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே ........!  😍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.