Jump to content

20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும்


Recommended Posts

20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும்

 

 

இருபதாவது அரசியல் யாப்பு திருத்தம் யாரை பாதிக்கும். இதன் விளைவு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்? தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்? இதனை ஆராய்கிறது இந்தப் பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அரசியல் ஆய்வு. தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகள் இந்த சூழ் நிலையை கவனமாக கையாள வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வு பாராட்டுக்கள்.
கோத்தபையன் இவ்வளவு பெரிய வெற்றி என்றால்
அதற்கு குள்ளநரி ரணில் தான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும்.

உங்கள் தளத்துக்கு 2000 க்கு மேற்பட்டவர்களை ஆதரவாளர்களாக சேர்த்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம்

 
srilanka_parliament-720x480-696x464.jpg
 22 Views

ஜனாதிபதி கோத்தாபாயவின் திட்டப்படி இருபதாவது திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுடைய மூன்றாவது அரசியல் சாதனை என்றே கூற வேண்டும்.

ராஜபக்ஷக்களுக்கு இது சாதனையாக இருந்த போதிலும், இலங்கை என்ற ஜனநாயக நாட்டிற்கு இந்த வரலாற்றுத் தினமானது ஒரு கரி நாளாகவே அமைந்துள்ளது. அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயா ராஜபக்ஷ வெற்றிபெற்று பதவியேற்ற தினமும், பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நாடாளுமன்றம் பதவியேற்ற தினமும்கூட வரலாற்று கரிநாட்களாகவே கருதப்பட வேண்டியவை.

ஏனெனில், பல்லின மற்றும் பல்சமயம் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், பல்லின பல்சமயத் தன்மை பேணப்பட வேண்டியது அவசியம். இந்தப் பல்லினத்தன்மை தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதன் மோசமான அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளில் இருந்து விடுபட முடியாமல் நாடு திணறிக் கொண்டிருக்கின்றது.

122432288_3366097240170175_7526941342012

இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு பல்லினத் தன்மையும் பல்சமய நிலைமையும் பேணப்படுவதற்குப் பதிலாக தனிச்சிங்கள, தனிபௌத்த அரசியல் கடும் போக்கைக் கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றிருக்கின்றார்கள். செல்வாக்கு பெற்றிருப்பது மட்டுமல்லாமல், கட்டுக்கடங்காத வகையில் அவர்கள் தமது அதிகாரங்களைச் சட்ட ரீதியாக வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் சர்வாதிகாரம் மேலோங்குவதற்குமே வழி வகுத்துள்ளது.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தாபாய ராஜபக்ஷ தனது இராணுவ போக்கிலான ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்திருந்தது. அந்தச் சட்டம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது. நிறைவேற்றதிகாரம் என்ற நிர்வாக வலுவைப் பயன்படுத்தித்தான் விரும்பியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு அது தடை போட்டிருந்தது.

இந்தத் தடையை அடித்து நொறுக்கி, தான் விரும்பியவாறு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயற்படவும், ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை மன்னாராட்சிக்கு நிகராகக் கொண்டு நடத்தவும் பத்தொன்பதாவது திருத்தச்சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டிய தேவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்தத் தேவையை அவர் இருபதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்.

இருபதாவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அரசியல் தேவை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கேள்வி எழுப்பி இருந்தார். நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தவதிலும் பார்க்க கொரோனா வைரஸை செயல் வல்லமையுடன் கட்டுப்படுத்தவதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்? என்ற தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

20th.jpg

அரசாங்கத்தின் முன்னால் அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றைப் புறமொதுக்கிவிட்டு ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களைக் கொண்டு குவிப்பதற்கான திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் கண்டனம் வெளியிட்டிருந்தார்.

அதேபோன்று சிறுபான்மை இன அரசியல் தலைவர்களும் பெரும்பான்மை இன தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டிருந்த பொதுஅமைப்புக்களைச் சேர்நதவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பௌத்த பீடங்கள் மற்றும் சில பௌத்த குருமார்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்த எதிர்ப்புக்கள் எதனையும் ராஜபக்ஷக்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் தமது போக்கில் இருபதாவது திருத்தச் சட்டத்தை வெற்றிரகமாக நிறைவேற்றி உள்ளார்கள்.

இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பௌத்த பிக்குகளும், அரச தரப்பின் தீவிர அரசியல் போக்குடையவர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களும் இறுதித் தருணத்தில் தங்களுடைய எதிர்ப்பைக் கைவிட்டு அரச தரப்பிற்குத் தாளம் போட்டு அந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகக் கை உயர்த்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது.

அதேபோன்று ராஜபக்ஷக்களின் இனவாத அரசியல் கொள்கைகளினாலும், ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் கட்சித்தாவி, இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த கேவலமான அரசியல் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகிய இருவரும் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் அரசுக்கு ஆதரவளித்திருந்தனர். இதில் நான்கு பேர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர். இது தவிர ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயானா கமகே மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினராகிய அரவிந்தகுமார் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.

சிறுபான்மை இன மக்களின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ராஜபக்ஷக்கள் இருபதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக அந்த சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையே பகடைக்காய்களாகப் பயன்படுத்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால், இருபதாவது திருத்தச் சட்டமானது, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களர்களினால் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய நாட்டின் மூவின மக்களுடைய பிரதிநிதிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதியாகப் பதவியேற்றால் தனது செயற்பாடுகளுக்கு அரசியலமைப்பு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பு என்பது ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோத்தாபாய ராஜபக்ஷ தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்த போது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. எந்தச் சட்டமும் நிறைவேற்றதிகாரத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது. நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியானவர் தான் விரும்பியவாறு செயற்படுவராக இருக்க வேண்டும் என்ற தனது அரசியல் அபிலாஷையை கோத்தாபாய ராஜபக்ஷ இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார்.

சிங்கள பௌத்த தேசியக் கொள்கையையும் குடும்ப அரசியல் நலன்களை முதன்மைப்படுத்திய போக்கையும் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ இனிமேல் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படுவதற்குரிய சட்ட ரீதியான அரசியல் சூழல் உருவாக்கப்பட்டு விட்டது. ஜனநாயக வழிமுறையிலான சர்வாதிகார ஆட்சிக்கே இது வழிவகுத்திருக்கின்றது.

இது நாட்டின் இயல்பு நிலைமைக்கும், பல்லின மக்களின் அமைதியான எதிர்கால வாழ்க்கைக்கும் சுபிட்சத்திற்கும் பாதகமாகவே அமையும்.

அதேவேளை இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது. சிங்கள பௌத்த மதத்திற்கு மாத்திரமே இங்கு இடமுண்டு என்ற பேரினவாத ஆட்சி முறைமை இனிமேல் தங்குதடையின்றி கொண்டு செலுத்தப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.

இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நிலைபெறும். சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வுக்கு வழி இல்லாமற் போகும் என்பது தமிழ்த்தேசிய பற்றுடையவர்களின்  கவலை.

இந்த அரசியல் ரீதியான கவலையே இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இருள் சூழ்ந்த யதார்த்த அரசியல் நிலைமையாகும்.

https://www.ilakku.org/இருபதாம்-திருத்தச்-சட்டம/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.