Jump to content

தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம்  புறப்பட்ட நடிகை குஷ்பு கைது!! | Dinakaran

தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது

நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பா.ஜ.க.வினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர்.

அதற்கமைய கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைக் கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜ.க.வின் நிர்வாகிகள் கலந்துகொள்ளவிருந்தனர். எனினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் தடை விதித்தது.

இதேநேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது சிதம்பரம் உதவி ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் பா.ஜ.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தடையை மீறிச் சென்ற குஷ்புவை பொலிஸார் முட்டுக்காடு அருகே கைது செய்தனர்.

http://athavannews.com/தடையை-மீறி-பா-ஜ-க-ஆர்ப்பாட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு கைது:தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்!

 

spacer.png

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மனுதர்மம் பற்றிய பேச்சைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று (அக்டோபர் 27) குஷ்பு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்துக்காக சிதம்பரம் புறப்பட்ட குஷ்புவை வழியிலேயே போலீஸார் கைது செய்தனர்.

மனுதர்மத்தில் பெண்கள் பற்றி குறிப்பிட்டிருப்பதை சுட்டிக் காட்டி திருமாவளவன் பேசியதைக் கண்டித்து சில நாட்களுக்கு முன்பு, பேட்டி கொடுத்த குஷ்பு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த நிலையில்தான் தமிழகம் முழுக்க பாஜக சார்பில் திருமாவளவனை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிதம்பரத்தில் குஷ்பு, மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலீஸார் நேற்று தடை விதித்த நிலையில் குஷ்புவோ, ‘நீங்கள் ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். நான் எப்படியாவது சிதம்பரம் வந்துவிடுவேன். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என்று மாவட்ட பாஜகவினரிடம் கூறியிருந்தார்.

 

இதை அறிந்த போலீஸார் குஷ்புவை இன்று அதிகாலை முதலே கண்காணித்தனர். இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வழக்கமாக, தான் பயன்படுத்தும் கார் அல்லாமல் வேறுகாரில் சிதம்பரத்தை நோக்கி ஈசிஆர் சாலையில் பயணப்பட்டார் குஷ்பு. சென்னை போலீஸார் உடனடியாக காஞ்சிபுரம் போலீஸுக்கு தகவல் கொடுக்க, மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீஸ் டீம் முட்டுக்காடு அருகே வந்துகொண்டிருந்த குஷ்புவின் வாகனத்தை மறித்து அவரைக் கைது செய்தது. அவர் வந்த காரில் இருந்து அவரை இறக்கி, போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர் போலீஸார்.

அதேபோல செங்கல்பட்டில் வசிக்கும் பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு திண்டிவனம் தொழிற்பேட்டை டோல்கேட் அருகே செல்லும்போது கைது செய்யப்பட்டார். ராகவனை அவரது காரிலேயே அழைத்துச் சென்றனர் போலீஸார்.

போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தால், “சிதம்பரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தால், அங்கே வலுவாக இருக்கக்கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் திட்டமிட்டிருந்தார்கள். குஷ்பு ஒருவேளை தாக்கப்படக் கூடும். அப்படித் தாக்கப்பட்டால் பாஜக அதை வைத்தே மிகப்பெரிய அரசியல் செய்வார்கள். இது பெரிய அளவுக்கான சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் இருந்தன. எனவேதான் குஷ்புவுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது”என்கிறார்கள்.


https://minnambalam.com/politics/2020/10/27/16/kushbu-arrest-law-and-order-issue-chidambaram

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு தங்கவைக்கப்பட்ட விடுதி முன்பு விசிக தர்ணா: போலீஸ் தடியடி!

spacer.png

 

விசிக தலைவர் திருமாவளவனின் மனு தர்மம் பற்றிய பேச்சைக் கண்டித்து அவரது மக்களவைத் தொகுதியான சிதம்பரத்தில் குஷ்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தார். அதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து கார் மூலமாக சென்ற குஷ்புவை, முட்டுக்காடு அருகே காவல் துறையினர் கைது செய்தனர். குஷ்பு உள்ளிட்ட 20 பேரை காவல் துறை வேனில் ஏற்றிய போலீசார், கேளம்பாக்கம் பையூர் பகுதியிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் தடுத்துவைத்தனர்.

அப்போது பேசிய குஷ்பு, சிதம்பரம் செல்வதற்கு தடை இருந்தாலும், குறைந்தபட்சம் கடலூர் வரையாவது அனுமதிப்பார்கள் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், செங்கல்பட்டு எல்லை ஆரம்பித்ததும் தங்களை கைதுசெய்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதற்காகத்தான் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். அவரை அண்ணன் திருமாவளவன் என்று அழைக்கும் அளவுக்கு மரியாதை வைத்திருந்தேன். பெண்களுக்கு எதிராக பேசியிருக்கும்போது எவ்வாறு அவரை அண்ணன் என அழைக்க முடியும் என்று தெரியவில்லை என்று கூறிய குஷ்பு,

 

“திருமாவளவன் சொன்னது 3,000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தற்போது, அம்பேத்கர் எழுதிய சட்டம்தான் நடைமுறையில் இருக்கிறது. தேவையில்லாத விஷயத்தை இப்போது ஏன் பேசுகிறார். திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை சும்மா விடப்போவதில்லை. கைது செய்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

spacer.png

குஷ்பு மீது ஐபிசி பிரிவுகள் 151, 7(1)(a) ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குஷ்பு கைது செய்யப்பட்ட தகவலறிந்த அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குஷ்பூ தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விடுதியின் கேட்டை உடைத்து விசிகவினர் உள்ளே செல்ல முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் குஷ்புவுக்கு ஆதரவாக பாஜகவினரும் கூறினர்.

பாஜக மற்றும் விடுதலைச் சிறுத்தையினர் இடையே தள்ளுமுள்ளு போராட்டம் நடைபெற்றதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

https://minnambalam.com/politics/2020/10/27/19/vck-protest-against-kushboo-on-his-arrested-hotel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

குஷ்பு தங்கவைக்கப்பட்ட விடுதி முன்பு விசிக தர்ணா: போலீஸ் தடியடி!

கைது செய்த  குஷ்புவை... சிறைக்கு கொண்டு போகாமல்....

விடுதிக்கு.... ஏன், கொண்டு போனவர்கள்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கைது செய்த  குஷ்புவை... சிறைக்கு கொண்டு போகாமல்....

விடுதிக்கு.... ஏன், கொண்டு போனவர்கள்? 😎

சரி...சரி  விடுங்க சிறித்தம்பி. ****.

Bild Bild

Bild Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

சரி...சரி  விடுங்க சிறித்தம்பி. ****.

Bild Bild

Bild Bild

குமாரசாமி அண்ணை... யார் பார்த்த வேலை இது? 😅

படங்கள்..... நல்லாய் இருக்கு. 😁 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hello...அறிவுஜீவிகளே..பதில் சொல்லிட்டு போங்க.. | செந்தில் வேல்-வீச்சு (Does Kushboo knew this..?)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாஞமான கேள்விகள்.
இணைப்புக்கு நன்றி உடையார்.

1 hour ago, உடையார் said:

Hello...அறிவுஜீவிகளே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நியாஞமான கேள்விகள்.
இணைப்புக்கு நன்றி உடையார்.

 

 

ஆகா காமடி 4.20 இல் இருந்து பாருங்கள், சும்ம சூட்டிங் நடந்திருக்கு 😂🤣

 

கேவலமான அரசியல் அஸ்கு புஸ்கு குஸ்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை அவமன்படுத்தினரா திருமாவளவன் ll BJP குற்றச்சாட்டு என்ன ll திசைகள் எட்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனு தர்மம் மாயைனா.!? ஏன் உங்களுக்கு எறியுது.!? கலையரசி அம்மாள் எதிர் கேள்வி

 

Link to comment
Share on other sites

பெண்களை மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும், அத்துடன் தமிழரைத் தாழ்த்தி பிராமணரை உயர்த்தும் மனுதர்ம சாத்திரம் பற்றிப் பட்டி தொட்டிகளில் உள்ளோரும் அறியும்படி செய்து விழிப்புற வைத்த குசுப்புவுக்கு வாழ்த்துக்கள்,!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.