Jump to content

வருவதை தள்ளி வாழுவோம்  நண்பா..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.images-1.jpeg.7df66b32d9fe721f501c529d6337c574.jpeg

வருவதை தள்ளி வாழுவோம்  நண்பா..!

*******************************

ஓலைக் குடிசையில் வாழ்ந்தனான் நண்பா

ஒளிவு மறைவின்றி சொல்லுறேன் நண்பா

காலை உணவுகூட  கஞ்சிதான் நண்பா

காலத்தால் நானொரு ஏழைதான் நண்பா

 

வாழப்பிடிக்காமல் வாழ்ந்தநான் நண்பா -இந்த

வையகம் ஏனென்று ஏசினேன் நண்பா

பிறந்ததன் பயன் பற்றி யோசித்தேன் நண்பா

பிடித்தது வாழ்க்கையில் பற்றொன்று நண்பா

 

மனிதர்கள் எல்லோரும் வேறு வேறு நண்பா

மடையராய் எங்களைப் பார்ப்பார்கள் நண்பா

உலகத்தில் எல்லோரும் ஒன்றுதான் நண்பா

உணர்ந்தாலே போதுமே வெல்லலாம் நண்பா.

 

படித்ததன் வேலையோ கிடைக்கேல்ல நண்பா

பாசங்கள்  காட்டவோ யாருமில்லை நண்பா

எடுத்ததன் பிறவியின் புரிதலே நண்பா-உலகில்

எல்லோரும் இங்குமே  தனிமைதான் நண்பா.

 

வாடிக்கிடக்கின்ற ஏழைக்கு நண்பா

வயிறாற உணவு கொடுக்கணும் நண்பா 

இல்லையேல்

கோடிப் பணமிருந்தும்  ஏழைதான் நண்பா

கொண்டுபோக  ஒன்றும் இல்லையே நண்பா.

 

உலகத்தில் படைத்தவை எல்லாமே நண்பாஎம்

உயிர்களைப் போலத்தான் அவைகளும் நண்பா

உலகமே எமக்கென்று சொல்வதா நண்பா

உயிர் நேயம் முக்கியம் உணரணும் நண்பா 

 

வருவதும் போவதும் தெரியாது நண்பா

வாழ்க்கையொன்றுதான் முக்கியம் நண்பா

வாழும் காலத்தை நல்லதாய் நண்பா

வாழ்ந்து சாதலே புண்ணியம் நண்பா.

அன்புடன்- பசுவூர்க்கோபி- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பசுவூர்க்கோபி said:

வருவதும் போவதும் தெரியாது நண்பா

வாழ்க்கையொன்றுதான் முக்கியம் நண்பா

வாழும் காலத்தை நல்லதாய் நண்பா

வாழ்ந்து சாதலே புண்ணியம் நண்பா.

உண்மை வரிகள் .. பகிர்விற்கு நன்றி தோழர் .. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உண்மை வரிகள் .. பகிர்விற்கு நன்றி தோழர் .. 👍

எனது கவிதை பார்த்து ஊக்கம் தரும் அன்பு புரட்சிகர தோழருக்கு உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அழகான வரிகள் .. ஒரு பாடல் படித்த உணர்வு... வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருவதும் போவதும் தெரியாது நண்பா

வாழ்க்கையொன்றுதான் முக்கியம் நண்பா

வாழும் காலத்தை நல்லதாய் நண்பா

வாழ்ந்து சாதலே புண்ணியம் நண்பா.....!

 

---நல்ல கவிதை பசுவூர்க்கோப்பி ---  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2020 at 15:12, nige said:

அழகான வரிகள் .. ஒரு பாடல் படித்த உணர்வு... வாழ்த்துக்கள்...

உளமார்ந்த நன்றிகள் nige

On 11/11/2020 at 15:33, suvy said:

வருவதும் போவதும் தெரியாது நண்பா

வாழ்க்கையொன்றுதான் முக்கியம் நண்பா

வாழும் காலத்தை நல்லதாய் நண்பா

வாழ்ந்து சாதலே புண்ணியம் நண்பா.....!

 

---நல்ல கவிதை பசுவூர்க்கோப்பி ---  

உரம் தரும் உங்களின் ஊக்கம். என் உளமார்ந்த நன்றிகள்.சுவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அழகான வரிகள் - இறந்தபின் எங்கு கொண்டு போகப்போகின்றார்கள், இருக்கும்போது பகிர்ந்து கொடுத்தால் எத்தனையோ ஏழைகள் வாழிவு வெளிச்சமாகும்.

குழந்தையாக பூமியில் பிறக்கும் போது எல்லோரும் ஒன்றே, பிறந்தபின்தான் வாழ்கையே மாறுகின்றது எங்கு பிறந்தோமென்ற இடத்திலிருந்து.

தொடர்ந்து பகிருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.