Jump to content

பிரித்தானிய இளவரசியின் அரண்மனையில் வேலைவாய்ப்பு: ஏறக்குறைய 20,000 பவுண்டுகள் ஊதியம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய இளவரசியின் அரண்மனையில் வேலைவாய்ப்பு: ஏறக்குறைய 20,000  பவுண்டுகள் ஊதியம்! | Athavan News

பிரித்தானிய இளவரசியின் அரண்மனையில் வேலைவாய்ப்பு: ஏறக்குறைய 20,000 பவுண்டுகள் ஊதியம்!

பிரித்தானிய இளவரசி எலிசபெத்தின் வின்ட்ஸ்டர் காஸ்டில் அரண்மனையில் தூய்மை பணியாளருக்கு ஏறக்குறைய 20,000 பவுண்டுகள் ஊதியமாக வழங்கப்படுகின்றது.

இளவரசி எலிசபெத்தின் அரண்மனையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரச இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பிறகு முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்குத் தேர்வானோர் வின்ட்சர் காஸ்டில் அரண்மனை மட்டுமல்லாமல் பக்கிங்காம் அரண்மனை உள்ளிட்ட பல்வேறு அரண்மனைகளிலும் பணியமர்த்தப்படுவார்கள். அதாவது ஆண்டில் தலா 3 மாதங்கள் ஒவ்வொரு அரண்மனையிலும் பணியாற்றும் வகையில் அவர்களது பணிக்காலம் அமையும்.

இது ஒரு நிரந்தர பணி வாய்ப்பாகும். ஆங்கிலம் மற்றும் கணிதம் நன்கு தெரிந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு வேளை, இந்தக் கல்வித் தகுதி இல்லாமல், ஆனால் நேர்முகத் தேர்வின் போது நன்கு பணியாற்றக் கூடியவராக அறியப்பட்டால், அவர்களுக்கு 13 கால பயிற்சியின் போது கல்விப் பயிற்சி அளித்து தேர்வு செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.

இந்த பணியில் சேர்ந்தவர்கள் அரண்மனையில் வசிப்பதோடு, ஆண்டுக்கு 33 நாள்கள் விடுமுறை, ஓய்வூதியம், உணவுப்படி, போக்குவரத்துப்படி அனைத்தையும் பெறலாம். ஊழியர்களுக்கு என்று தனியாக உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், டென்னிஸ் மைதானமும் இருக்கிறதாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஒக்டோபர் 28ஆம் திகதி தான் இறுதிநாள். நேர்முகத் தேர்வு நவம்பர் 2ஆம் திகதி நடைபெறுகின்றது.

அது மட்டுமல்ல, வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே பணி நாள். இதற்கு அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் 19,140 பவுண்டுகள் (34,000 டொலர்கள்) இது வெறும் தொடக்க ஊதியம்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பிரித்தானிய-இளவரசியின்-அ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லை கொடுத்து அடிவாங்க போகினம் வந்தான் வரத்தான் எல்லாம் உள்ளே போய் அநியாயம் பண்ணப்போறாங்கள் இங்கிலாந்து கிரிமினல் ரெக்கோர்ட் சிஸ்ட்டம் தரவுகள் பல பிழையான தகவல்களை கொண்டுள்ளன என்று பேப்பர்காரங்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இது தேவையற்ற ஒன்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு நேரம் இல்லையா இந்த கொரான வின் போது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஆங்கிலம் மற்றும் கணிதம் நன்கு தெரிந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த உலகில் இப்படியான வர்க்கங்கள் இருக்கக்கூடாது என நினைப்பவன் நான்....இருந்தாலும் சும்மா பம்பலுக்கு கதைக்கலாம்...😎

ஆங்கிலம் ஓகே அது மொழி அவசியம்....ஆனால் அரசகுடும்பத்துக்குள்லை வேலை செய்யிறதுக்கு கணக்கு பாடத்திலை c என்னத்துக்கு? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இந்த உலகில் இப்படியான வர்க்கங்கள் இருக்கக்கூடாது என நினைப்பவன் நான்....இருந்தாலும் சும்மா பம்பலுக்கு கதைக்கலாம்...😎

ஆங்கிலம் ஓகே அது மொழி அவசியம்....ஆனால் அரசகுடும்பத்துக்குள்லை வேலை செய்யிறதுக்கு கணக்கு பாடத்திலை c என்னத்துக்கு? 😜

அது வேற அலுவல்களுக்கு, கணக்குப்பண்ணுவது முக்கியம் அரண்மனையில்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

அது வேற அலுவல்களுக்கு, கணக்குப்பண்ணுவது முக்கியம் அரண்மனையில்😁

உடையார் அவர்கள்! என் வாயை கிளற எத்தனிக்கின்றார் என குற்றம் சாட்டுகின்றேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உடையார் அவர்கள்! என் வாயை கிளற எத்தனிக்கின்றார் என குற்றம் சாட்டுகின்றேன். 🤣

எந்த திறமையில்லை என்றாலும், கணக்குப்பண்ணுவது முக்கியம் குமாரசாமி, இதில் எங்கே உங்களை வாயை கிளறுகின்றேன்.😁 கடந்து வந்த பாதைகளை பாருங்கள் கணக்குப்பண்ணுவிதில் விட்ட பிழைகளால்தான் அரண்மனைக்கு கெட்ட பெயர்கள், வடிவாக கணக்குப்போட்டிருந்தால் இந்த பிழைகளை தவிர்த்திருக்கலாம்🥰

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.