Jump to content

கோட்டாபயவைச் சந்தித்தார் பொம்பியோ!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபயவைச் சந்தித்தார் பொம்பியோ!

October 28, 2020

mike-pompio.jpg


இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்தித்துள்ளார்.

நேற்று (27.10.20) இரவு 7.35 மணியளவில் இலங்கை சென்றடைந்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் உட்பட.ட குழுவினரை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி உட்பட அமெரிக்க தூதவர அதிகாரிகள் வரவேற்றிருந்தனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான இரு தரப்பு கலந்துரையாடலை அடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளார்.

இதனையடுத்து அவர் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மாலைத்தீவு நோக்கி பயணிக்கவுள்ளார்.

 

https://globaltamilnews.net/2020/152410/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகல இலங்கை சமூகத்துக்குமான வளர்ச்சியை அமெரிக்கா உறுதி செய்யும் என்கிறார் பம்பியோ!

Screenshot-2020-10-28-12-15-01-312-com-a

சகல இலங்கை சமூகத்துக்கும் நிலையான, சகலதும் அடங்கலான வளர்ச்சியை அமெரிக்கா உறுதிசெய்யும் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது உறுதியளித்துள்ளார்.

சுகாதார, மனிதாபிமான, பொருளாதார விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் மைக் பம்பியோ உறுதியளித்ததாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ருவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிப்படையான வர்த்தக, முதலீட்டின் அடிப்படையிலான பொருளாதார பங்காண்மை, கொரோனா தொற்றுப் பரவலின் பின்னரான பொருளாதார மீட்சியின் முக்கிய அங்கங்கள் - அதேபோல், ஜனநாயக சுதந்திரங்களுக்கான அமெரிக்காவின் பகிரப்பட்ட உறுதிப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பம்பியோ இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அமெரிக்க துதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பம்பியோ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்தபோதே இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை பம்பியோ சந்தித்தார்.

இறைமையுடைய, பாதுகாப்பான இலங்கைக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீள் உறுதிசெய்யும் வகையில் இச்சந்திப்பு அமைந்திருந்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ருவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://aruvi.com/article/tam/2020/10/28/18535/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.