Jump to content

‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை மிரட்டிய பிரிகேடியர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை மிரட்டிய பிரிகேடியர்

 
1-114-696x377.jpg
 68 Views

“பிரபாகரன், தமிழனே, நாங்கள் உங்கள் அனைவரையும் கொன்று விடுவோம்” என இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் கே கே எஸ் பெராகும் பணியில் இருந்த மருத்துவர்களை மிரட்டியதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

இலங்கை இயந்திர காலாட் படைப்பிரிவின் பிரிகேடியர் கே கே எஸ் பெராகும், மருத்துவ அதிகாரிகளை பார்த்து உங்களைக் கொன்ற விடுவேன் என்றும் இனவாத ரீதியிலும், “பற தெமிழா, பிரபாகரன், பயங்கரவாதிகள். உங்கள் எல்லாரையும் கொல்லுவேன். இது எனது ஏரியா” என்று தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும் இலங்கையின் மிக முக்கியமான மருத்துவ சங்கமான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

 

Sampathnuwara வில் உள்ள மாவட்ட  மருத்துவமனைக்கு பிரிகேடியர் பெராகும் சென்ற பொழுது இந்த மோசமான செயலில் அவர் ஈடுபட்டிருந்தார் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இதன் காரணமாக மருத்துவமனையின் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தொழில்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலையின் பணிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.

யுத்தகாலத்தின் போது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய படையினர் பொலிஸாரிற்கு உளவியல்ரீதியான மருத்துவ ஆதரவை வழங்குவதற்காக மருத்துவர்கள் படைத்தரப்பினரை கௌரவத்துடன் நடத்தினார்கள் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட அதிகாரி தனது நடத்தைகள் மூலம் படைத்தரப்பிலிருந்து எதிர்பர்ர்க்கப்படும் நடத்தையின் தராதரத்தை எட்டதவறிவிட்டார் என மருத்துவர்கள் மக்களின் கௌரவத்தை உறுதி செய்ய தவறிவிட்டார் என அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

https://www.ilakku.org/பிரபாகரன்-தமிழனே-அனைவரை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

spacer.png

பிரிகேடியர் கே.கே.எஸ்.பரகும் குறித்த வைத்தியசாலையின் வைத்தியரை மிரட்டியதன் விளைவாகவே தாம் இந்த முடிவை எடுத்ததாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/93249

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமிழ் மக்களை காக்க போராடினார்களாம், விளக்கம் வேறு. எல்லோரின் மனநிலையை பிரிகேடியர் பதவியில் இருக்கும் ஒரு கேடி வெளிப்படுத்தியிருக்கு. இதற்கு வெள்ளையடிக்க ஒரு அறிக்கை, மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை, அவர் சொன்னது சரி என்று வேறொரு அறிக்கை வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லை; அவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவ  அறிக்கை வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தட்டிக் கேட்க ஆளில்லை எதுவேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் என்கிற நிலை இருக்கும்போது.

Link to comment
Share on other sites

தமிழ் வைத்திய அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர்!

Army.jpg?189db0&189db0

 

முல்லைத்தீவு – வெலிஓயா, சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளை “ப.. தமிழா. பிரபாகரன், பயங்கரவாதிகள், உங்களை கொலை செய்வேன், இது என்னோட இடம்” என்று இராணுவ பிரிகேடியர் கே.கே.எஸ்.பராகும் மிரட்டல் விடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் குறித்த வைத்தியசாலைக்கு சென்ற பிரிகேடியர் அவ்வைத்தியசாலை தலைவர் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகளை மேற்கண்டவாறு மிக மோசமாக இனவாதத்தை கக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிற்கு அறிக்கை மூலம் முறையிட்டுள்ளது. அதில்,

“இது தொடர்பாக கடந்த 26ம் திகதி இராணுவத் தளபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும்,

போர் இடம்பெற்ற காலத்தில் நாட்டின் அனைத்து மருத்துவர்களும் இராணுவத்தினர் உள்ளிட்ட படைத்தரப்பினரை மிகுந்த மரியாதையுடன் நடாத்தி சிகிச்சை வழங்கியிருந்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் சம்பத்நுவர வைத்தியசாலையின் கடமைகளிலிருந்து தமது அதிகாரிகள் விலகியிருக்க நேரிடும் என்பதனை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்” என்றுள்ளது.

இதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் என்று இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

5 hours ago, satan said:

இவர்கள் தமிழ் மக்களை காக்க போராடினார்களாம், விளக்கம் வேறு. எல்லோரின் மனநிலையை பிரிகேடியர் பதவியில் இருக்கும் ஒரு கேடி வெளிப்படுத்தியிருக்கு. இதற்கு வெள்ளையடிக்க ஒரு அறிக்கை, மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை, அவர் சொன்னது சரி என்று வேறொரு அறிக்கை வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லை; அவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவ  அறிக்கை வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தட்டிக் கேட்க ஆளில்லை எதுவேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் என்கிற நிலை இருக்கும்போது.

என்னை பொறுத்தளவில் இவர் அவசர பதவி உயர்வுக்காக இப்படி செய்துள்ளார். இவருக்கு சொட்ப காலத்தில் இராஜதந்திர பதிவு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.