Jump to content

துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம்

-புருஜோத்தமன் தங்கமயில்

மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர்.   

சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது.  மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார். 

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f79bb2fe94.jpg

அதனால்தான், தன்னுடைய சொந்தக் கட்சியினராலும் சக வேட்பாளர்களாலும் உறவுகளாலும், தேர்தல் அரசியலில் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம், தமிழ் பேசும் மக்கள் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு, சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்த்திருக்கிறார்.  

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னராக, ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷ தலைமையில், ஆளுங்கட்சி எம். பிக்களில் கூட்டம் நடைபெற்றபோது, மரண தண்டனைக் கைதியான முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, பொதுமன்னிப்பு அளிக்க ஜனாதிபதியிடம் கோரும் மகஜரொன்று விநியோகிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டது.   

எனினும், கெஹலிய ரம்புக்வெல, மஹிந்த அமரவீர, விமல் வீரவங்ச, சுரேன் ராகவன் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர், மகஜரில் கையெழுத்திடவில்லை. ஆனால், எதிரணி எம்.பிக்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் உள்ளிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து எம்.பிக்களும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.   

துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரிய, 150க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் கையெழுத்துடனான மகஜர் விவகாரம், ஊடகங்களில் வெளியானதும், மனோ கணேசன் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் ஊடக அறிக்கையொன்றை திங்கட்கிழமை (26) வெளியிட்டார். 

அந்த அறிக்கையின் பிரதி, அவரது ‘பேஸ்புக்’ பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த அறிக்கைக்கான எதிர்வினை, தமிழ்ச் சூழலில் பெரியளவில் எழுந்ததை அடுத்து, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கிவிட்டார்.  

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துமிந்த சில்வா என்கிற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதான குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, மரண தண்டனைக் கைதியாகச் சிறையில் இருக்கிறார். 

துமிந்த சில்வா என்பவர், ராஜபக்‌ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், அவர்களின் அம்பாகச் செயற்பட்டிருந்ததுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகத் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தார். ஊடக பின்புலம், ஆட்சியாளரின் அனுசரணை உள்ளிட்ட விடயங்களால், குறுகிய காலத்தில் அரசியலிலும் மேலெழுந்தவர்.  

 பிரேமசந்திர கொலை தொடர்பில், அரசியல் மற்றும் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான போட்டி (முன் விரோதம்) காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் இன்னமும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவருக்கு, பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றுதான், மனோ கணேசனும் அவரது அணியினரும் கையெழுத்து வைத்திருக்கிறார்கள்.  

ராஜபக்‌ஷர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், துமிந்த சில்வா விடுதலையாவார் என்பது, நீதிமன்றம் தண்டனை விதித்த காலத்திலேயே, அரசியல் அரங்கில் பேசப்பட்டது. அவரது ஊடகப் பின்புலம், அதற்காகக் கடுமையாக உழைத்தது. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ராஜபக்‌ஷர்களின் வெற்றி, பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்கிற இலக்கோடு இயங்கியதையும் கண்டோம். கிட்டத்தட்ட துமிந்த சில்வாவுக்கான பொது மன்னிப்பு என்பது, அவரது ஊடகப் பின்புலத்தினூடாக, ஒருவகையிலான இலஞ்சமாகத் திணிக்கப்பட்டதாகக் கொள்ள முடியும். “ராஜபக்‌ஷர்களினதும் அவரது அணியினரதும் வெற்றிக்காக உழைத்திருக்கிறோம். ஆகவே, துமிந்தவை விடுதலை செய்வது தவிர்க்க முடியாதது” என்று, ராஜபக்‌ஷர்களிடம் வலியுறுத்தப்படுகின்றது.  

தேர்தல் அரசியலில், கொடுக்கல்- வாங்கல் என்பது பெரும் சாபக்கேடு. மக்களின் உரிமைகள், அடிப்படைத் தேவைகள் சார்ந்து உரையாடப்படவேண்டிய கட்டங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டு, ஆட்சியதிகாரம் என்கிற ஒற்றை இலக்குக்குள் சுருங்கிவிட்ட பின்னர், கொடுக்கல்- வாங்கல் என்பது, ஓர் அத்தியாவசியக் கடமை போன்று மாறிவிட்டது. இந்தக் கொடுக்கல்- வாங்கல் என்பது, சகிக்கவே கூடாத அயோக்கியத்தனமாகும்.   

துமிந்த சில்வாவின் விடுதலைக்காகக் கையெழுத்திட்ட ஆளுங்கட்சிக்காரர்கள், இந்தக் கொடுக்கல் -வாங்கல் பின்னணியுடன் இருந்திருக்கலாம். ஆனால், எதிரணியில் இருக்கும் மனோ கணேசன் போன்றவர்கள், இந்தக் கொடுக்கல்- வாங்கல் அரசியலுக்குள் எவ்வாறு உள்வர முடியும்? 

ஜனநாயகமும் மனித உரிமைகளும் தனது இரு கண்களாக, நாளாந்தம் முழங்கும் அவர், துமிந்தவின் விடுதலைக்காக எப்படிப் பங்காளியானார்?  

துமிந்தவின் விடுதலைக்கு, மனோ கணேசன் பங்காளியான விடயத்தை, “துமிந்த, கொலைக் குற்றத்தைப் புரியும் போது, மது போதையில் இருந்துள்ளார். ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். இளைஞர்கள் திருந்தி வாழ இடமளிக்க வேண்டும். அதன் நோக்கில், அவருக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்....” என்கிற தோரணையில் நியாயப்படுத்தி இருக்கிறார்.  

மனோ கணேசன், கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் அமைச்சராக இருந்தவர். அந்தக் காலப்பகுதியில் அவர், எத்தனை இளைஞர்களின் விடுதலை தொடர்பில், ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புச் சார்ந்த கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்திருக்கிறார் என்கிற கேள்வி எழுகிறது?   

அதுவும், வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான, அரசியல் பொறிமுறையொன்றை அமைப்பது சார்ந்து, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?   

விடுதலையை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் அரசியல் கைதிகளைச் சந்தித்து, வாக்குறுதிகளை வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்ததைத் தாண்டி, அவர்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்திய சந்தர்ப்பங்கள் உண்டா?   

வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளும், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் ஒரே நிலையில் உள்ளவர்களா?   

மது போதையில் குற்றமிழைத்தவர்கள், திருந்தி வாழச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்கிற மனோ கணேசனின் நியாயத்தின் படி நோக்கினால், சிறைச்சாலைகளில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டவர்களை, மன்னித்து ஒரே நாளில் விடுதலை செய்ய வேண்டியிருக்குமே?  

படுமோசமான முடிவுகளை என்ன என்னவோ காரணங்களுக்காக எடுத்துவிட்டு, அவற்றை நியாயப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் அடிக்கும் கோமாளித்தனங்கள் வழக்கமானவைதான்.   

ஆனால், மக்களின் மனங்களை அறிந்த அரசியல்வாதியாக, தைரியசாலியாக, நேர்மையாளனாகத் தன்னைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தும் மனோ கணேசன், துமிந்த சில்வா விடயத்தில் நடந்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அதுவும், அதை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் கோமாளித்தனமானவை.  

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்துவிட்டார் என்று, அவரது கூட்டணி எம்.பியான அ. அரவிந்த குமாரை, உடனடியாக நீக்குவதற்கு மனோ கணேசன் உத்தரவிட்டிருக்கிறார். நிறைவேற்று அதிகாரம் என்கிற, ஜனநாயகத்தின் மீதான சம்மட்டி அடிக்கு எதிராக, தன்னையொரு ஜனநாயகப் போராளியாகவே காட்டியிருக்கிறார்.  

ஆனால், நிறைவேற்று அதிகாரம் வழங்கும் ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் வழி வரும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்கிற விடயத்தை, என்ன காரணத்தின் அடிப்படையில் துமிந்தவுக்காகக் கோருகிறார்? என்று, அவரது முன்னாள் சகாவான எம்.திலகராஜ் கேள்வியெழுப்பி இருக்கிறார்.  

துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட விடயமும் அதற்காக வெளியிட்ட அறிக்கையும், மனோ கணேசனின் அரசியல் வாழ்வில், பெருங்கறையாகக் கொள்ள முடியும். அத்தோடு, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கியமையானது, அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.  

 மனோ கணேசன், என்றைக்காவது ஒருநாள் மனம் திறக்க வேண்டும்; துமிந்த சில்வாவுக்காக, எங்கே சறுக்கினேன் என்பது தொடர்பில்!    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/துமிந்தவுக்காக-மனோ-சறுக்கிய-இடம்/91-257668

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் "" பணத்திற்காக மனோ சறுக்கிய இடம்"" என வந்திருக்க வெண்டும்.

😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மனோ தனது கையெழுத்தை நீக்கிக் கொள்வதாக அறிவித்ததுள்ளார்.

Link to comment
Share on other sites

9 minutes ago, Nathamuni said:

இன்று மனோ தனது கையெழுத்தை நீக்கிக் கொள்வதாக அறிவித்ததுள்ளார்.

நேற்றே அறிவித்து விட்டார். ஆனால் தான் ஏன் கையெழுத்து இட்டார் என்ற சமாளிப்புகளை இன்னும் கைவிடவும் இல்லை, கையொப்பம் இட்டமைக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. அவர் முகனூலில் தன் அறிக்கையை வெளிவிட்டபின் அதற்கு கிடைத்த பின்னூட்டங்களை பார்த்து அந்தப் பதிவையே முகனூலில் இருந்து தூக்கியது பற்றிக் கூட  ஒரு வருத்தமும் இல்லை அவருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நேற்றே அறிவித்து விட்டார். ஆனால் தான் ஏன் கையெழுத்து இட்டார் என்ற சமாளிப்புகளை இன்னும் கைவிடவும் இல்லை, கையொப்பம் இட்டமைக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. அவர் முகனூலில் தன் அறிக்கையை வெளிவிட்டபின் அதற்கு கிடைத்த பின்னூட்டங்களை பார்த்து அந்தப் பதிவையே முகனூலில் இருந்து தூக்கியது பற்றிக் கூட  ஒரு வருத்தமும் இல்லை அவருக்கு.

போலி அரசியல்வாதியாகி விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு மிச்சம் மீதியுள்ள சுயமரியாதையுடன் கட்சி பொறுப்புகளில் இருந்து தானாகவே விலகிவிடுவதுதான் மனோவுக்குள்ள ஒரே தெரிவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.