Jump to content

வெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.! சம்பந்தன் சுட்டிக்காட்டு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.! சம்பந்தன் சுட்டிக்காட்டு.!

Screenshot-2020-10-30-11-21-37-623-com-a 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்கக்கூடியவாறு புதிதாக - பக்கச்சார்பில்லாமல் சமாந்தரமான கொள்கைகளை வகுத்துக் கருமங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தக் கடமையிலிருந்து தவறினால் பாரிய பின்விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்."

- இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா, 'நிலையான வளர்ச்சியுடன் இலங்கை மக்களுக்கு இறையாண்மையும் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது.

ஒரு நட்பு நாடாக அமெரிக்கா அதைச் சரியாக வழங்குகின்றது என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால், சீனா ஆக்கிரமிப்பு நோக்கத்தைக் கொண்டுள்ளது. இலங்கையைச் சீனா வேட்டையாடி வருகின்றது. அந்த நாடு நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறி வருகின்றது' என்று கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பலவிதமான கருமங்கள் சம்பந்தமாக சமீப காலத்தில் ஏற்பட்ட தொடர்புகள் யாவரும் அறிந்ததே.

கடல் பாதை மற்றும் உள்நாட்டுப் அபிவிருத்திப் பணிகளில் சீனாவின் பங்களிப்பு வேரூன்றிக் காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் தெரிவிக்கும் விமர்சனக் கருத்துக்களை நாங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

இதையெல்லாவற்றையும் உணர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்கக்கூடியவாறு புதிதாக - பக்கச்சார்பில்லாமல் சமாந்தரமான கொள்கைகளை வகுத்துக் கருமங்களை முன்னெடுக்க வேண்டும். இது இலங்கை அரசின் பிரதான கடமை.

இந்தக் கடமையிலிருந்து தவறினால் பாரிய பின் விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/10/30/18615/

Link to comment
Share on other sites

2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பாரிய பின் விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்

அவர்கள்  இருக்கட்டும். இந்த விடயத்தில் உங்கள் தந்திரோபாயம் தான் என்ன?. சும்மா அவங்களை வெருடிக்கொண்டிருப்பதை விட்டு எண்கள் நலன்களை எவ்வாறு முன்நகர்த்துவது என்பது பற்றி சிந்தித்து நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, puthalvan said:

அவர்கள்  இருக்கட்டும். இந்த விடயத்தில் உங்கள் தந்திரோபாயம் தான் என்ன?. சும்மா அவங்களை வெருடிக்கொண்டிருப்பதை விட்டு எண்கள் நலன்களை எவ்வாறு முன்நகர்த்துவது என்பது பற்றி சிந்தித்து நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். 

இருந்தா சொல்லமாட்டோமா , நாங்க என்ன வஞ்சகக்காரர்களா வச்சிக்கிட்டு இல்லைங்கிறதுக்கு 
இம்முறை பதவிகளை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யப்போகிறோம் என்று அறிக்கை விட்டு பார்த்தோம் , சண்டாளர்கள் திரும்பியே பார்க்கிறானுகள் இல்லை, 20 இலாவது இரண்டுகோடியை வாங்கி டிக்கிக்கு கீழே அமத்திக்கொண்டு அரசியல் செய்வமென்று பார்த்தல் எங்கடை தேங்காப்பூக்கள் எங்களுக்கு முன்னாடியே டீலை பேசி எங்கடை  மூஞ்சியில் செருப்பால் அடித்துபோட்டினம், எங்கடை முதலாளிக்கு வேறு கொரோனா காட்டு காட்டு என்று காட்டுவதால் வருமானம் பெருசா இல்ல , இந்தமுறை பாராளுமன்ற தேர்தலிலும் பருப்பு அதிகமாக தின்றதால் முதலாளி எங்களை கழட்டி விட்டாலும் விட்டுடுவார், அபிவிருத்தி அரசியல் என்று வெளிக்கிட்ட கிராதகர்கள் எங்களை மாதிரி வெறும் வாயால் வடை சுடும் கேசுகளால இருக்கும் என்று பார்த்தால் விசயக்காரனுவளாக  இருக்கிறானுகள், என்ன செய்யுறதெண்டே தெரியலை 
போம்பியோவை வைத்துதான் கொஞ்சம் இருமியாவது நாங்கள் இருக்கிறதை காட்டவேணும்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ லஙா எனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பங்கம் விளைந்தால் பயங்கர அதிபயங்கர விளைவுகள் வந்துவிட்டுப்போகட்டும் அதுக்கு ஏன் இவர் குத்தி முறியுறார். தமிழர்களைப் பொறுத்தமட்டில் அது அவர்களது நாடு. அப்படி ஏதாவது நடந்தால் அதில் குளிர்காய்வதை விட்டு நாம் ஏன் கவலைப்படவேண்டும்.

சம்பந்தர் மேதின ஊர்வலத்தில ஏந்திய சிங்கக்கொடியை இன்னமும் கீழிறக்கி விடவில்லை. அவருக்குத் தெரியும் தான் கட்டையில போறமட்டும் தமிழர்கள் தன்னைத் தரையில் இறக்கிவிடமாட்டினம் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை பார்க்க பாவமாயிருக்கு. எச்சரிக்கிறார், கெஞ்சுகிறார், பயமுறுத்துகிறார், முட்டு கொடுக்கிறார், உறுதி மொழி வழங்குகிறார் ஒன்றுக்கும் மசிய மாட்டானுகளாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

சம்பந்தனை பார்க்க பாவமாயிருக்கு. எச்சரிக்கிறார், கெஞ்சுகிறார், பயமுறுத்துகிறார், முட்டு கொடுக்கிறார், உறுதி மொழி வழங்குகிறார் ஒன்றுக்கும் மசிய மாட்டானுகளாம்.

கிண்ணியா விடயத்தில் ஊமையாய் இருந்ததுக்கு பரிசாக கிடைத்த  கொழும்பு வீட்டை திரும்பவும் அரசு கையகப்படுத்த போகுது என்றால் காணும் கிழவர் வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாத்தையும் காத்தில்  பறக்க  விட்டு விட்டு கோத்தாவின் காலில் விழுந்து கிடக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.