Jump to content

கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..

LEB-GEN-Savent.jpg

கொரோனா தொற்றை இனங்காணும் PCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுதடைந்துள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா,

பழுதடைந்த இயந்திரங்களை திருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,

20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம் இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள்,

ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களைச் சீர்செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர் ஒருவரை அழைத்து வர வேண்டும்.

தற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில் நுட்பவியலாளர் தனிமைப்படுத்தலின் கீழ்

பிசிஆர் இயந்திரங்களை சீரமைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

https://jaffnazone.com/news/21290

டிஸ்கி :

இனி ஒன்டுக்கு சரியில்லை என்டாலும் சீனன்தான் போல கிடக்கு . .☺️ .😊

Link to comment
Share on other sites

55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பழுதடைந்த இயந்திரங்களை

எல்லாம் பழுதடையும் வரை பார்த்துக்கொண்டு இருந்தவர்களா?

55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும்

சீனாவில் இருந்தா இவை பெறப்பட்டன. அப்ப ஜஸ்டின் சொன்ன விலையை விட இன்னும் குறைவாக இருக்குமே. கொரியாவில் சிறந்த தயாரிப்புகள் உள்ளனவே.

55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில் நுட்பவியலாளர்

அடடா. நான் கொஞ்சம் பிரேக் எடுப்பம் எண்டு பார்த்தால் இனி இது நீண்டுகொண்டு போகுது. நாளைக்கு இந்திய தூதுவர் சம்பந்தனை கூப்பிட்டு என்றை அறைக்கை இருக்கிற PCR இயந்திரந்தை பார். இனி போய் இந்த இயந்திரந்தை வேண்டாவிட்டால் பயங்கர விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டிவரும் என்று ஒரு போடு போடுஎன்று சொல்லுவார். அமெரிக்கரும் இதைவிட திறமான மெசின் எங்களிடம் உள்ளது இதோ இலவசம் என்று கொடுக்கக்கூடும். ஆனால் இலங்கையோ மெஷின் கோரணவோட வந்திருக்கென்று அறிக்கைவிட எங்கட தினக்குரல்/வீரகேசரி ஆய்வாளர்கள் எல்லாம் எழுதி  தள்ளுவீனம்.

Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..

LEB-GEN-Savent.jpg

 

அமெரிக்கா இந்த ஆளைக்கண்டு ஏன் பயப்படுகிறது என்று இப்ப புரிகிறது. அப்பப்பா என்ன பயங்கரம்.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில் நுட்பவியலாளர் தனிமைப்படுத்தலின் கீழ்

பிசிஆர் இயந்திரங்களை சீரமைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒரு தொழில் நுட்பவியலாளர் வருகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லையே என்னவோ கள்ளக்கூட்டு செய்யிறானுகள் போல இருக்கு. இந்த கொரோனா சீனுக்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் ஒளிந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. எது எப்பிடியிருப்பினும் ஒரு சர்வாதிகார ஆட்சி மலரப்போகுது. அதை  சிங்களவர் தட்டு வைத்து அழைத்திருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட ஆரம்பத்தில்... நோர்வே, பிரான்ஸ் போன்ற நாடுகளும், சீனாவின் மருத்துவ உபகரகணங்களை வாங்கி, அவை தரமற்றவை என குற்றம் சாட்டினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பி.சி.ஆர்.இயந்திரம் திருத்தம் தொடர்பாக சீன குழு முக்கிய அறிவிப்பு

முல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்துள்ள பி.சி.ஆர்.இயந்திர திருந்த பணியை  நாளைக்குள் (திங்கட்கிழமை) நிறைவு செய்ய முடியுமென இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.

பி.சி.ஆர்.இயந்திரத்தின் தானியங்கி மூலக்கூறு பிரித்தெடுத்தலுக்கான கூறு, ஓரளவு விலகி இருந்ததாக சீனாவிலிருந்து வருகை தந்துள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பி.சி.ஆர்.இயந்திரம் சுமார் 10 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக  சீர் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, நாளை முதல் பி.சி.ஆர்.இயந்திரத்தின் செயற்பாடுகளானது வழமைபோல் இயங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/பி-சி-ஆர்-இயந்திரம்-திருத/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.