Jump to content

போருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

 
1-124.jpg
 48 Views

போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில்  தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு பயனளிக்கவில்லை என்றே கூற முடியும்.

வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளார்கள் மாற்றப்படுவது வழமை.  அந்த தகவலின் அடிப்படையில்,  கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்கொலைகள்  எண்ணிக்கையளவில் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருடாந்தம் 500இற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெறுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இவற்றின் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு 714 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதோடு, 2014இல் 640 பேரும், 2015இல் 588 பேரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 2016ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்து 578 ஆகக் காணப்பட்டது.

இவ்வாறு குறைவடைந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 612 எனத் தெரிவிக்கும் வைத்தியசாலை புள்ளிவிபரத்தில்;  இதில் 104 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது. அதே நேரம் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் 361 பேர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலைக்கான காரணங்களாக பலதை குறிப்பிட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் இத் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு ஒரு சில காரணங்களை சுருக்கமாக குறிப்பிடலாம்.

பொருளாதாரப் பிரச்சனை

போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் சென்றடைவதில் பல வேறுபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. சிலருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் உரிய முறையில் கிடைப்பதில்லை. சிலருக்கு வழங்கப்படும் உதவிகள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இருப்பதில்லை,  ஒருசிலருக்கு  தனிப்பட்ட காராணங்களுக்காக உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

புலம்பெயர் தேசத்தில் இருந்து கிடைக்கும் உதவிகள் தற்காலிக உதவிகளாகவே பெரும்பாலும் கிடைக்கின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதிய அளவில் இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரியது.

பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசும் போது, அவர்கள் நிலையான ஒரு தொழில் முயற்சியை மேற்கொள்வதற்கே விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உதவி செய்வதற்கு அரசோ, புலம்பெயர் உறவுகளோ தயாராக இல்லை. ஒரு சிலர் தமது முயற்சியாலும் உறவுகளின் பலத்துடனும் தமது வாழ்க்கையை முன்னேற்றி செல்கின்ற போதும், போரால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றே கூறலாம். தமது வாழ்க்கைச் செலவை கொண்டு செல்வதில் பாரிய இடர்பாடுகளை சந்தித்தவண்ணமே  உள்ளார்கள்.

மன உளைச்சல்

பேரால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் முன்னாள் போரளிகளே. இவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

குறிப்பாக அவர்கள் சமூகத்தில் நடத்தப்படும் விதம், பாரிய மன உளைச்சலுக்கு அவர்களை உள்ளாக்குகிறது. அரசியல் விடயங்களோ, பாதுகாப்பு பிரச்சனைகளோ எதுவாக இருந்தாலும்; முன்னாள் போராளிகள் விசாரணை என்ற போர்வையில் துன்பப்படுத்தப்படுகிறார்கள். தனி மனித சுதந்திரத்தையும் மீறி அவர்கள் கண்காணிக்கப்படுவதும், சந்தேகத்துக்கிடமான பார்வைகளும் அவர்களை நிம்மதியான வாழ்வை வாழ முடியாத நிலைக்குத் தள்ளுகிறது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவி செய்கின்ற பெயரில் பல்வேறு துன்பகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் வெளியில் சொல்லாமல் தமது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சிலர் வெளியில் சொல்லி நீதி கிடைக்காமல் தமது வாழ்கையை தொலைக்கின்றனர்.

வேலையின்மை

இது அனைத்து தரப்பினருக்கும் பொதுப் பிரச்சனையாகவே இருக்கிறது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டவர்களில் அங்கவீனமுற்றோர் அதிகளவில் காணப்படுகிறார்கள். அவர்களுக்கான நிலையான  தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. கடந்த 10 வருடங்களில் வடக்கில் ஆக்கபூர்வமான ஒரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.  அரசோ, தமிழ் அரசியல்வாதிகளோ, புலம்பெயர் உறவுகளோ பாரிய திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை என்றே கூறலாம். வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படாததால், போரல் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் தமது வாழ்க்கைமுறையை  சரியான முறையில் கொண்டு செல்வதற்கு முடியாத நிலையில் உள்ளார்கள்.

முன்னாள் போராளிகள் என்றால், எந்த தனியார் நிறுவனங்களிலும் வேலை வாழங்குவதற்கு பின்னிற்கின்ற நிலையே அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பாரிய தொழிற்சாலைகள் வடக்கில் நிறுவ  வேண்டியது மிக மிக முக்கியமாக இருந்தாலும், அதை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை.

உறவுகளின் பிரிவு

போரால் பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். ஒரு கட்டத்துக் மேல் துணை இல்லாமல் வாழ முடியாத சூழ்நிலையும் காணப்படுகிறது. கணவனை இழந்த மனைவி பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என பலர் இந்த நிலையில் உள்ளார்கள். வாழ்வதாரம் என்பது சீர்படுத்தப்படாததாலும், சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவாலின் தாக்கத்தின் காரணமாக தாம் இழந்த தமது  உறவுகளை நினைத்து மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். தமது  உறவுகள் இருந்தால் இந்த நிலை ஏற்படாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்ற போது இவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பாக சில காரணங்களை கூற முடியும்.

மேலும் தற்போது இள வயதினரின் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. இதற்கு பெற்றோர் ஆசிரியர்கள், மத தலைவர்கள் பாதுகாப்பையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டியது அவசியமாகிறது.

தற்கொலைகளை தடுப்பதற்கான பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது குறித்து யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மாத்திரம் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், ஊடகங்கள் ஊடாக சில கருத்துக்களையும் பகிர்வதன் மூலம் தற்கொலையை தடுத்துவிட முடியாது.

முக்கியமாக ஒவ்வொருவரினதும் பிரச்சினைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிளை மேற்கொள்ள வேண்டும். போரால் பதிக்கப்பட்டவர்கள் என ஆரம்பத்தில் பலர் உதவிகளை செய்து வந்தார்கள். நிரந்தரமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் தமக்கு விருப்பிய உதவிகளை செய்தார்களே தவிர, அந்த மக்களை சுய முயற்சியாளர்களாக ஆக்குவதற்கு முயற்சிக்கவில்லை. தற்போது உதவிகைளை நிறுத்தும்போது, அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் செய்வது அறியாமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினை வந்தாலும், முதலில் முன்னாள் போராளிகளை சந்தேகப்பட்டு அவர்களை அச்சத்துக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதுடன், அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

வடக்கில் பாரிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளையவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க புலம்பெயர் தேசத்தவர்கள் முன்வர வேண்டும், சுயமுயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களை செய்ய வேண்டும் இவைகள் தொடர்சியான முறையில் மேற்கொண்டால் மாத்திரமே பாதிக்கப்பட்ட சமூகத்தில்  இடம்பெறும் தற்கொலைகளை குறைத்துக் கொள்ள முடியும்.

வடக்கில்  போருக்கு பின்னர் தற்கொலைகள் அதிகரிப்பது தொடர்பில் தற்கொலைக்கு முயற்சி செய்து அதிலிருந்து மீண்ட முன்னாள் போராளி ஒருவரிடம் கேட்ட போது, எமக்கு வேண்டும் என்பதைக் கேட்கவோ, வேண்டாம் என்றதை மறுக்கவோ முடியாத நிலையில் வாழ்கின்றோம். எம்முடன் இருந்தவர்கள் எம் நிலை பற்றி அறிவார்கள். எமது சுய கௌரவம் மதிக்கப்படும் நிலை வரும்போது தான் நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு எமது உறவுகளே வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/போருக்கு-பின்னர்-வடக்கில/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.