Jump to content

நாம் இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளோம் - பிரான்ஸ் உள்துறை அமைச்சர்


Recommended Posts

பிரான்ஸ் தொடர்ச்சியாகப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்களுக்கு உள்ளாகிவருவது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வானொலி ஒன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப் போர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. அவை எம்மீது திணிக்கும் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் கொடிய வன்முறை மூலம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைக்கும் எதிரானது. இதையே அவர்கள் பல நாடுகளிலும் செய்து வருகின்றனர்.

போரில் இறங்கிவிட்டால் துரதிஸ்டவசமாக இவ்வாறான கொடிய தாக்குதல்கள மேலும் எதிர்நோக்க வேண்டி வரலாம்.
என்று கூறியுள்ளார்.

மேலும் அரசாங்க உயர் மட்டத்தில் பாதுகாப்பு கூட்டங்கள் நடந்து வருகின்றன.

https://www.bfmtv.com/police-justice/terrorisme/attentat-attaque-couteau-nice-eglise-basilique-notre-dame-terroriste-emmanuel-macron-vincent-loques-conseil-de-defense_LN-202010300015.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் ;திருக்கார்த்திகை  தோன்றிய விதம்!!! - Onetamil News

திருவெண்ணாமலை தீபம் போல் எரிய வாழ்த்துக்கள். 😎

இது தானே அன்று எம் பூமியில் நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லற்பட்டு வந்தோருக்கு இரக்கப்பட்டு அடைக்கலம் கொடுத்தால், அவனையே கொல்வீர்களா? உங்களின் காட்டுமிராண்டி அரபுலகத்திற்கே திரும்பிச் செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் இனியும்,  தாமதிக்காமல்... இந்த வருடத்துக்குள்ளேயே இவர்களை  விரட்டி 🏃🏽🏃🏽‍♂️அடிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியின் அருகாமையிலான நகர்புறத்திலுள்ள உயர் தொழில்நுட்பக்கல்லூரியின் தாக்குதலாளி எனச்சந்தேகப்படுபவர் ஒருவர் காவல்துறையால் கைதுசய்யப்பட்டுள்ளார் அத்துடன் அக்கல்லூரி வளாகம் மூடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தனது ருவீற்றர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மேலதிக விபரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அனேகமாக இங்கிருந்து வெளிவரும் இலங்கையின் மித்திரன் பத்திரிகைபோன்ற மாலைப்பத்திரிகைகள் அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேயும் என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

அல்லற்பட்டு வந்தோருக்கு இரக்கப்பட்டு அடைக்கலம் கொடுத்தால், அவனையே கொல்வீர்களா? உங்களின் காட்டுமிராண்டி அரபுலகத்திற்கே திரும்பிச் செல்லுங்கள்.

திண்ணையில் ஒதுங்க இடம் கொடுத்தால்..... திண்ணை சொந்தக்காரனையே கொல்கின்றார்கள்.

முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு உற்சாகம் கொடுக்கும் நாடாக துருக்கியும் மாறி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

திண்ணையில் ஒதுங்க இடம் கொடுத்தால்..... திண்ணை சொந்தக்காரனையே கொல்கின்றார்கள்.

முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு உற்சாகம் கொடுக்கும் நாடாக துருக்கியும் மாறி விட்டது.

துருக்கி...  முஸ்லீம் நாடுகள்,  எல்லாத்துக்கும்... பெரிய தாதா. 

அவன், கிறிஸ்தவனுக்கு... எப்புடி ஆதரவு குடுப்பான்.

டிஸ்க்கி: குமாரசாமி அண்ணர், "துருக்கி"...   ஒரு, இந்து  நாடு என்று, நினைத்து விட்டார்  போலுள்ளது. கிக்கீகீ...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

துருக்கி...  முஸ்லீம் நாடுகள்,  எல்லாத்துக்கும்... பெரிய தாதா. 

அவன், கிறிஸ்தவனுக்கு... எப்புடி ஆதரவு குடுப்பான்.

டிஸ்க்கி: குமாரசாமி அண்ணர், "துருக்கி"...   ஒரு, இந்து  நாடு என்று, நினைத்து விட்டார்  போலுள்ளது. கிக்கீகீ...  🤣

துருக்கி  விலாங்கு மீன் நாடாய் கடைசி கொஞ்சக்காலம் இருந்தது. இப்ப ஈரான் லெவலுக்கு வந்திட்டினம். அவையின்ரை பழைய படையெடுப்புகள் எல்லாம் இனி சரி வராது கண்டியளோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Familie des Nizza-Attentäters in BILD: Terrorist war erst einen Tag in Frankreich

தேவாலய கொலையாளி. இவர் ஒரு நாளுக்கு முன்னர்தான் பிரான்ஸ்சுக்கு வந்தாராம்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளும் அரசாங்கமும் ஒரே மாதிரியாக ஏட்டுக்கு போட்டியாக செயல்படமுடியாது.

தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை காக்கவேண்டிய பொறுப்பும் பிரான்ஸ் அரசுக்கு உள்ளது.

அரச அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டிய தேவை உள்ளது. இது நாளைக்கு நாளன்றைக்கு முடிக்கக்கூடிய பிரச்சனை இல்லை.

உணர்ச்சிபூர்வமாக நாட்டின் சிறுபான்மையினரை சீண்டக்கூடிய அறிக்கைகள், செயல்பாடுகள் தொடர்ந்தும் தீவிரவாத தாக்குதல்கள் உக்கிரம் பெறவே வழிவகுக்கும்.

காதும் காதும் வைத்தாற்போல் களையெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

Familie des Nizza-Attentäters in BILD: Terrorist war erst einen Tag in Frankreich

தேவாலய கொலையாளி. இவர் ஒரு நாளுக்கு முன்னர்தான் பிரான்ஸ்சுக்கு வந்தாராம்....

 

முஸ்லீமாக... பிறந்த, இந்த,  மீன் குஞ்சுக்கே...
இவ்வளவு... கொழுப்பு, என்றால்....

ஐரோப்பாவில்... பல ஆண்டுகளாக,
வாழும்.. இந்த இஸ்லாமியாருக்கு, எவ்வளவு கொழுப்பு...
முத்தி இருக்க வேண்டும்.... என்பதனை, கவனத்தில்  எடுக்க வேண்டும்.

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிலுவை யுத்தம் என்ற ஜரோப்பியகிறிஸ்தவர்கள் நடாத்திய மிக நீண்ட யுத்தத்தின் எதிர் தரப்பின் கதாநாயகன் துருக்கி.

மறுபுறம் வட பாரதத்துனுள் நுழைந்து, மொகாலயர் ஆட்சியை நிறிவியதும் அவர்கள் தான் பிரதான கதாநாயகர்கள்.

உந்த, ஆரியர்..... பிராமணர் எல்லாம் உங்க இருந்து வந்த கோஸ்டிகள் தானே.

55 minutes ago, குமாரசாமி said:

Familie des Nizza-Attentäters in BILD: Terrorist war erst einen Tag in Frankreich

தேவாலய கொலையாளி. இவர் ஒரு நாளுக்கு முன்னர்தான் பிரான்ஸ்சுக்கு வந்தாராம்....

 

கறுப்பின பெண்ணை கொலை செய்திருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பயங்கரவாதிகளும் அரசாங்கமும் ஒரே மாதிரியாக ஏட்டுக்கு போட்டியாக செயல்படமுடியாது.

காதும் காதும் வைத்தாற்போல் களையெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது புத்திசாலித்தனம்.

அது தான் பிரிட்டிஸ்காரன் செய்யிறான்.  இணையத்தளத்தில், ஜிகாதி பத்தி அதிகம் கதைக்கிறது..... உளவாளிகள்.... மாட்டுபவர்களை தூக்க, வேறு யாரும் இணையப் பக்கமாக வருவதில்லை.

தனி ஓநாய்கள் தான் பிரச்சணை..... ஆனாலும்.... அவர்கள் இணையத்தினுள் நோண்டாமல் இருக்க மாட்டார்கள். நோண்டக்கூடிய, ஆவேசமாக்கும் கட்டுரைகள் போட்டு உளவர்கள் வலை விரித்தும் காத்திருப்பார்கள்.

அது தவிர வாற்சப் குறாப் எல்லாம் போட்டு.... நடாத்தி.... உண்மையான ஜிகாதிகளிலும் அமர்களமாக கத்தி..... மாட்டுவார்களா என கவனிப்பார்கள்.

அது மட்டுமல்ல, வேற்று மதத்தவரை வேலைக்கு எடுத்து, அடையாளம் மாத்தி, பள்ளிக்கு தொழுகைக்கு போக வைப்பார்கள். அவர்கள் உளவர்கள் என தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2020 at 06:33, இணையவன் said:

பிரான்ஸ் தொடர்ச்சியாகப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்களுக்கு உள்ளாகிவருவது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வானொலி ஒன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப் போர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. அவை எம்மீது திணிக்கும் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் கொடிய வன்முறை மூலம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைக்கும் எதிரானது. இதையே அவர்கள் பல நாடுகளிலும் செய்து வருகின்றனர்.

போரில் இறங்கிவிட்டால் துரதிஸ்டவசமாக இவ்வாறான கொடிய தாக்குதல்கள மேலும் எதிர்நோக்க வேண்டி வரலாம்.
என்று கூறியுள்ளார்.

மேலும் அரசாங்க உயர் மட்டத்தில் பாதுகாப்பு கூட்டங்கள் நடந்து வருகின்றன.

https://www.bfmtv.com/police-justice/terrorisme/attentat-attaque-couteau-nice-eglise-basilique-notre-dame-terroriste-emmanuel-macron-vincent-loques-conseil-de-defense_LN-202010300015.html

பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை கடும்/ கொடும் கரங்கள் கொண்டு முறியடிக்கவேண்டும். குலத்துக்கு எதிரான  பயங்கரவாதிகளுக்கு ஈவிரக்கம் என்பதே  காட்டப்படக்கூடாது.

பிரான்சின் இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கெதிரான போரை மனித குலத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் ஆதரிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை கடும்/ கொடும் கரங்கள் கொண்டு முறியடிக்கவேண்டும். குலத்துக்கு எதிரான  பயங்கரவாதிகளுக்கு ஈவிரக்கம் என்பதே  காட்டப்படக்கூடாது.

பிரான்சின் இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கெதிரான போரை மனித குலத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் ஆதரிக்கவேண்டும்.

இதற்காகத்தான் விடுதலைப்புலிகள் முளையிலையே கிள்ளினார்கள். கிடைத்ததோ கெட்ட பெயர். அதை இன்று பிரான்ஸ் செய்ய முனைகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் உளவு அமைப்பு முன்னாள் தலைவரின் சகோதரி உள்பட 183 பேரின் விசாவை நிராகரித்தது பிரான்ஸ்

பாகிஸ்தான் உளவு அமைப்பு முன்னாள் தலைவரின் சகோதரி உள்பட 183 பேரின் விசாவை நிராகரித்தது பிரான்ஸ்

 

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் பள்ளி ஆசிரியரான சாமுவேல் பதி பாடம் நடத்தி கொண்டிருந்தபொழுது முகமது நபியின் கார்ட்டூன்களை காண்பித்த சர்ச்சையில் 18 வயது இளைஞர் ஒருவரால் கொடூர முறையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  இதன்பின் பாரீஸ் நகரில் சார்போன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் லெஜன் டி ஹானர் என்ற பிரான்சின் உயரிய விருது பதிக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

பிரான்சில் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அந்நாட்டு அதிபர் மேக்ரான் இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு எதிராக போரிடுவேன் என உறுதி எடுத்து கொண்டார்.

எனினும், இஸ்லாமுடனும், முஸ்லிம்களுடனும் மேக்ரானுக்கு என்ன பிரச்னை? என்று துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 183 பேரது விசாக்களை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர்.  அவர்களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்ற உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷாவின் சகோதரியின் பெயரும் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரான்சில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், 183 பேரும் உரிய ஆவணங்களுடன் இருந்தும் வலுகட்டாயத்தின்பேரில் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதன்பின்னர் பிரெஞ்சு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாஷாவின் சகோதரியை நாட்டில் அனுமதிக்கும்படி தூதரகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது.  அவரது மாமியாரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை காண்பதற்காக பாஷாவின் சகோதரி விருப்பம் தெரிவித்து உள்ளார்.  அதனால் அவரை தற்காலிகம் ஆக பிரான்சில் தங்க அனுமதி தரும்படி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/01114722/France-rejects-visa-of-sister-of-former-Pakistani.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இதற்காகத்தான் விடுதலைப்புலிகள் முளையிலையே கிள்ளினார்கள். கிடைத்ததோ கெட்ட பெயர். அதை இன்று பிரான்ஸ் செய்ய முனைகின்றது.

அண்ணை , சும்மா "கெப்" பில கடா வெட்டக் கூடாது! உலக பயங்கரவாதத்திற்கும் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கும் அன்று தொடர்பிருக்கவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

அண்ணை , சும்மா "கெப்" பில கடா வெட்டக் கூடாது! உலக பயங்கரவாதத்திற்கும் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கும் அன்று தொடர்பிருக்கவில்லை! 

எங்களைப் பொறுத்தவரை....எம்மினத்தை காட்டிக்கொடுத்து அழிக்க வெளிக்கிட்ட கூட்டம்....அந்த நேரம் புலிகள் சரியான முடிவைத்தான் எடுத்தார்கள்...பிரான்சும் அவ்வழி முனைவது நன்று.

Link to comment
Share on other sites

40 minutes ago, alvayan said:

எங்களைப் பொறுத்தவரை....எம்மினத்தை காட்டிக்கொடுத்து அழிக்க வெளிக்கிட்ட கூட்டம்....அந்த நேரம் புலிகள் சரியான முடிவைத்தான் எடுத்தார்கள்...பிரான்சும் அவ்வழி முனைவது நன்று.

எம்மினத்தை அழிக்கும் கூட்டமே தமிழர்கள் என்ற துட்டகைமுனுவின் வாதத்தை தான் சிங்கள இனவெறி பேசும் அதை வைத்து அரசியல் செய்யும் அமைப்புகளும் கூறுகின்றன. 

புலிகளே அதை தவறு என்று பின்னாளில் உணர்ந்து முஸ்லீம் மக்களை மீள அழைத்தார்கள். 

பிரான்ஸ் குறி வைப்பது  இஸ்லாமிய மத தீவிரம் பேசும் நபரகளை மட்டுமே. மக்களை அல்ல. ஆகவே இரண்டும் ஒன்று என்று பேசுவதே மடமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

எம்மினத்தை அழிக்கும் கூட்டமே தமிழர்கள் என்ற துட்டகைமுனுவின் வாதத்தை தான் சிங்கள இனவெறி பேசும் அதை வைத்து அரசியல் செய்யும் அமைப்புகளும் கூறுகின்றன. 

புலிகளே அதை தவறு என்று பின்னாளில் உணர்ந்து முஸ்லீம் மக்களை மீள அழைத்தார்கள். 

பிரான்ஸ் குறி வைப்பது  இஸ்லாமிய மத தீவிரம் பேசும் நபரகளை மட்டுமே. மக்களை அல்ல. ஆகவே இரண்டும் ஒன்று என்று பேசுவதே மடமை. 

நீங்கள்..அப்படி நினைக்கெல்லாம்... அந்த பாதிக்கப்பட்ட இனம் இப்பவும் ஒரு மாதம்  செத்தவீடு கொண்டாடி இப்பவும் எமது இன த்தை  கருவறுக்க நினைப்பதை  என்ன சொல்கிறீர்கள்.... அதனை ஆதரிப்பவராகிய உங்களுக்கு தமிழும் தேவையில்லை ...இனமும் தேவையில்லை...ஏன் யாழும் தேவையில்லைத்தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

அண்ணை , சும்மா "கெப்" பில கடா வெட்டக் கூடாது!

இவரே தான் பிரான்ஸ்சில் பேராசிரியர்  Samuel Paty கொல்லபட்டதிற்கு முஸ்லிம் மதவாதத்தை கண்டிக்காமல் ஏன் முஸ்லிம் சமயத்தை கேலி செய்ய வேண்டும் என்ற கருத்து பட கருத்து தெரிவித்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

அண்ணை , சும்மா "கெப்" பில கடா வெட்டக் கூடாது! உலக பயங்கரவாதத்திற்கும் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கும் அன்று தொடர்பிருக்கவில்லை! 

அவர்கள்!  உலக பயங்கரவாதம் எப்படியிருக்கும் என்பதை அன்றே கிரகித்தவர்கள்.இன்று அந்த பயங்கரவாதிகளினால் உலகமே தள்ளாடுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர்கள்!  உலக பயங்கரவாதம் எப்படியிருக்கும் என்பதை அன்றே கிரகித்தவர்கள்.இன்று அந்த பயங்கரவாதிகளினால் உலகமே தள்ளாடுகின்றது. 

அப்படியா அண்ணை? அந்தக் கிரகிப்பு எப்படி அவர்களை உலக பயங்கரவாதத் தடைப்பட்டியல்களில் இணையாமல் காத்தது என்று விளக்க முடியுமா?

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இவரே தான் பிரான்ஸ்சில் பேராசிரியர்  Samuel Paty கொல்லபட்டதிற்கு முஸ்லிம் மதவாதத்தை கண்டிக்காமல் ஏன் முஸ்லிம் சமயத்தை கேலி செய்ய வேண்டும் என்ற கருத்து பட கருத்து தெரிவித்தவர்.

தீவிர வலது சாரிகளின் ஒரு இயல்பே அவர்கள் consistent ஆக இருப்பதில்லை! அந்தப் பிரச்சினை தான் அவருக்கும்.

உங்களுக்கு எங்கள் நாட்டிலிருந்து ஒரு உதாரணம் சொல்கிறேன். இங்கே தீவிர வலது சாரிகளுக்கு மத சுதந்திரம் மிக முக்கியம் - அது கிறிஸ்தவ மதமாக இருக்கும் வரை!. ஆனால் ஒரு முஸ்லிம் அமைப்பு கிடைத்து விட்டால் , அந்த மத சுதந்திர வேட்கை மறைந்து மதத்தை அடக்கும் வேட்கை வந்து விடும்!

ஒரே கொள்கையை எல்லாப் பிரச்சினைகளுக்கும் பிரயோகிக்க இயலாத வலது சாரித் தனம் எங்கே இருந்தாலும் அதன் உள்ளீடு வெறுப்பே தவிர வேறெதுவும் இல்லை!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

அப்படியா அண்ணை? அந்தக் கிரகிப்பு எப்படி அவர்களை உலக பயங்கரவாதத் தடைப்பட்டியல்களில் இணையாமல் காத்தது என்று விளக்க முடியுமா?

உங்களை போன்றவர்களுக்கெல்லாம் விளக்கம் விசாரணைகள் எதுவுமே நடைமுறைக்கு ஒத்து வராதவைகள்.

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

உங்களை போன்றவர்களுக்கெல்லாம் விளக்கம் விசாரணைகள் எதுவுமே நடைமுறைக்கு ஒத்து வராதவைகள்.

****.

நன்றியண்ணை பதிலுக்கு! உலகம் முழுவதும் தடை செய்யப் படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்!

ஆனால் தடை செய்யப் பட்ட நாடுகளில் சொல்லப் பட்ட காரணங்கள் சில முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளோடு எங்கள் ஆட்களின் ஒரு சில செயல்பாடுகளும் ஒத்திருந்தன என்பதை இங்கே பதிவு செய்கிறேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.