Jump to content

கொரோனா அச்சம்: மீன் உணவு தவிர்ப்பால் நெருக்கடியில் இலங்கை மீனவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகின்ற பின்னணியில், பல்வேறு தரப்பினரும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் முதலாவது கொரோனா அலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கடற்படை மற்றும் கந்தகாடு மறுவாழ்வு நிலையத்திலுள்ளவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களே பாதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இந்த முறை ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் முதலில் பாதிக்கப்பட்ட நிலையில், பின்னரான காலத்தில் மீன் விற்பனையாளர்கள், போலீஸார், ஊடகவியலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோவிட் கொத்தணி, பின்னர் பேலியகொட மீன் சந்தையில் பரவியிருந்தது.

இந்த நிலையில், மினுவங்கொட மற்றும் பேலியகொட கோவிட் கொத்தணிகளின் ஊடாக இதுவரை சுமார் 6000திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவிட்-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இந்த தொற்றின் பின்னர், நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதில் அச்சப்படுவதை காண முடிகின்றது.

பேலியகொட மீன் சந்தையிலிருந்தே நாடு முழுவதும் மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மீன்

பட மூலாதாரம், Prasad Purnamal

இந்த நிலையில், நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மீன் விற்பனையாளர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டமை அண்மை காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவி வருகின்றமையினால், நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதை பெருமளவு நிறுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று மீனவர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

கோவிட்-19 தொற்று மிக வேகமாக பரவி வருகின்ற பின்னணியில், மீனவ கிராமமான சிலாபம் - வெல்ல பகுதியிலுள்ள வர்ணகுலசூரிய இனோகா டிஷானியை பிபிசி சந்தித்து விடயங்களை ஆராய்ந்தது.

'எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். எனது கணவர் கடற்றொழிலில்; ஈடுபடுகின்றார். அவர் கொண்டு வரும் மீன்களை நான் விற்பனை செய்வேன். அதன் மூலமே எமது வாழ்க்கையை கொண்டு செல்கின்றோம். இந்த கொரோனா பிரச்சினை காரணமாக எமக்கு வாழ முடியவில்லை. மீன்களை சாப்பிட, மக்கள் அச்சப்படுகின்றனர். இன்று 4 கிலோ மீன்களை கூட விற்பனை செய்ய முடியவில்லை

பேலியகொட மீன் சந்தையிலுள்ள மீனவர்களுக்கு மத்தியில் பரவிய கோவிட்-19 தொற்றினால், அது இன்று முழு மீனவ சமூகத்தையே பாதிப்புக்குட்படுத்தியுள்ளது.

கோவிட் பரவலை அடுத்து, பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டுள்ளதுடன், நாட்டின் முக்கியமான பல மீனவ துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளமையினால், மீனவர்கள் இன்று பாரிய பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு உரிய வேலைத்திட்டம் கிடையாது

நாட்டிலுள்ள அனைத்து மீன்களையும் அரசாங்கம் கொள்வனவு செய்யும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு முன்பாக கூறிய போதிலும், அதற்கான உரிய வேலைத்திட்டமொன்று இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என மீனவரான நிஹால் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

மீன்

பட மூலாதாரம், Prasad Purnamal

 
படக்குறிப்பு,

நிஹால் பெர்ணான்டோ, மீனவர்

லட்சக்கணக்கான கிலோகிராம் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவில் அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த பிரச்சனையினால் கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி, மீன் விற்பனையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

மீனவ சங்கத்தின் பதில்

மீனவர்கள் தற்போது பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமையினால், அரசாங்கம் தலையீடு செய்து உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலாபம் கிராமிய மீனவ மாவட்ட அமைப்பின் செயலாளர் அன்டன் சுரேஷ் தெரிவிக்கின்றார்.

அன்டன் சுரேஷ்

பட மூலாதாரம், Prasad Purnamal

 
படக்குறிப்பு,

அன்டன் சுரேஷ் - சிலாபம் கிராமிய மீனவ மாவட்ட அமைப்பின் செயலாளர்

மீன்களை உட்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமற்றது என நாட்டு மக்கள் மத்தியில் எண்ணமொன்று ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எண்ணத்திற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் உரிய கருத்தொன்றை வெளியிடாதுள்ளதாகவும், சுகாதார பிரிவினர் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான பின்னணியில் மக்கள் சந்தேகத்துடனேயே வாழ்ந்து வருவதாக அவர் கூறுகின்றார்.

அதனால், அரசாங்கம் உறுதியான பதிலொன்றை வழங்க முன்வர வேண்டும் என சிலாபம் கிராமிய மீனவ மாவட்ட அமைப்பின் செயலாளர் என்டன் சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச கடற்றொழில் சம்மேளனத்தின் இலங்கை பிரதிநிதியும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டாளருமான ஹர்மன் குமாருடன், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

நாட்டிலுள்ள மீனவர்கள் பிடித்துள்ள மீன்களை காலம் தாமதிக்காது, அரசாங்கம் கொள்வனவு செய்து, அவற்றை பழுதடையாத வகையில் களஞ்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் மீன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எட்ட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அதாவது, கடலுக்கு சென்றுள்ள பல நாள் மீன்பிடி படகுகள், மீண்டும் கரைக்கு வரும் போது, அவர்களினால் பிடிக்கப்பட்ட மீன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மீன்களின் ஊடாக கொரோனா பரவுமா? இல்லையா? என்பது தொடர்பிலான விஞ்ஞானபூர்வமான நிலைப்பாட்டை சுகாதார பிரிவினர் வெளியிட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

மீன்

பட மூலாதாரம், Prasad Purnamal

20 லட்சம் பேரின் வாழ்வாதாரம்?

கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் பிரகாரம், இலங்கையில் சுமார் 20 லட்சம் பேர் கடற்றொழிலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்பி வாழ்ந்து வருகின்றார்.

அத்துடன், கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டு செயலணி அறிக்கையின் படி, அந்த ஆண்டின் மொத்த மீன் உற்பத்தி 527,060 மெட்ரிக் டன் ஆக காணப்படுகின்றது.

2019ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், கடற்றொழில் துறையின் ஊடாக நாட்டின் தலா தேசிய உற்பத்திக்கு 1.1 வீதம் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 2018ஆம் ஆண்டு 1.2 வீதம் கடற்றொழிலினால் தலா தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில்

மீனவர்களுக்கு மத்தியல் மூன்று விதத்தில் இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கான அபாயம் ஏற்கனவே காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கின்றார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்பட்ட நிலையில், இந்திய மீனவர்களின் ஊடாக நாட்டிற்குள் கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் ஏற்கனவே காணப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

அத்துடன், வைரஸ் நாட்டிற்குள் பரவி, அது வேகமாக பரவுவதற்கான அபாயமும் ஏற்கனவே காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

மூன்றாவதாக, மீனவர்களுக்கு மத்தியில் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பும் காணப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

மீனவர்களுக்கு மத்தியில் கொவிட் தொற்று பரவுகின்றமையினால், மீன்களை கொள்வனவு செய்ய பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக அவர் கூறுகின்றார்.

மீன்களின் ஊடாக கொரோனா வைரஸ் பரவும் என விஞ்ஞான ரீதியில் இதுவரை எங்கும் உறுதிப்பட தெரிவிக்கவில்லை என அவர் நினைவூப்படுத்தியுள்ளார்.

மீன்

பட மூலாதாரம், Prasad Purnamal

அரசாங்கத்தின் பதில்

மீன்பிடி துறைமுகங்களின் பிடித்து சேமிக்கப்பட்டுள்ள மீன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

மீன்களின் ஊடாக கோவிட் தொற்று பரவும் அபாயம் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீன்களை கொள்வனவு செய்து சாப்பிடுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மீனவ சமூகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு தொழில்துறையாக கடற்றொழில் துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், உள்நாட்டு தொழில்துறையில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை இந்த சந்தர்ப்பத்தில் கைவிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்https://www.bbc.com/tamil/sri-lanka-54747825

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
    • 40 இல் (பாண்டிச்சேரி உட்பட) எதுவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,  வாக்குச்சாவடிக்குப் போய் போட்டால்தான் வாக்கை எண்ணுவார்கள்.😉  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.