Jump to content

சிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்!

spacer.png

 

சிறந்த நிர்வாகத் திறன் தொடர்பான தர வரிசையில் தென்மாநிலங்கள் முதன்மை இடத்திலும், வட மாநிலங்கள் பின் தங்கியும் உள்ளன.

நாட்டின் சிறந்த நிர்வாகத் திறனுள்ள மாநிலமாக கேரளா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்கள் பிரிவில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது. பொது விவகாரங்கள் மையம் (public affairs centre) வெளியிட்ட 2020ஆம் ஆண்டுக்கான பொது விவகாரக் குறியீடு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்பான இந்த மையத்தின் தலைவராக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் செயல்பட்டு வருகிறார்.

மாநிலங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறனை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களின் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி, பெரிய மாநிலங்கள் பட்டியலில் தென்னிந்திய மாநிலங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. கேரளா 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 0.912 புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதேபோல ஆந்திரா 0.531, கர்நாடகா 0.468 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் உத்தரபிரதேசம் (- 1.461), ஒடிசா (-1.201) மற்றும் பீகார் (-1.158) உள்ளிட்ட வட மாநிலங்கள் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளன.

சிறிய மாநிலங்கள் பட்டியலில் 1.745 புள்ளிகளுடன் கோவா முதலிடம் வகிக்கிறது. மேகாலயா (0.797) இரண்டாவது இடத்திலும், இமாச்சல் பிரதேசம் (0.725) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இதில் மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289) மற்றும் உத்தராகண்ட் (-0.277) ஆகியவை மோசமான செயல்பாடுகளுடன் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்தங்கின.

யூனியன் பிரதேசப் பகுதிகளில் சண்டிகர் 1.05 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி மாநிலம் 0.52 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், லட்சத்தீவுகள் 0.003 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் இருக்கிறது. எதிர்மறை புள்ளிகளுடன் தாதர் நாகர் ஹாவேலி, அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு காஷ்மீர் ஆகியவை மோசமான நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளன

இதுதொடர்பாக கஸ்தூரி ரங்கன் கூறுகையில், “பிஏஐ தரும் சான்றுகள் மற்றும் அது வழங்கும் தரவுகள் ஆகியவை இந்தியாவில் நடந்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தைப் பற்றி சிந்திக்க மாநிலங்களை கட்டாயப்படுத்த வேண்டும்” என்றார்.

 

https://minnambalam.com/politics/2020/10/31/4/-best-governed-states-and-ut-pac-ranking-taminadu-get-2nd-rank

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க மாட்டார்களே இப்படியான குறிகாட்டிகளை? அந்த 0.912 என்ற இலக்கத்தை பத்தினால் வகுத்துத் தான் கணக்குப் பார்ப்போம் என்பார்களே ஐயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது முன்பு  போல் ஊழல்களும் குழி பறிப்புக்களும்

குறைவாகத்தான் இருக்கின்றன

பின்னால்  வளர்ந்து  வருபவர்களின் மீதான  பயமும்

புதிய  தலைமுறையின்  மனமாற்றமும் காரணமாக  இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஆள்வதால் இருக்கலாம்!☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

தற்பொழுது முன்பு  போல் ஊழல்களும் குழி பறிப்புக்களும்

குறைவாகத்தான் இருக்கின்றன

பின்னால்  வளர்ந்து  வருபவர்களின் மீதான  பயமும்

புதிய  தலைமுறையின்  மனமாற்றமும் காரணமாக  இருக்கலாம்

தமிழ் நாடு திராவிடர் ஆட்சியில் முன்னேறினாலும் "வீரத் தமிழர்" மீதான பயம் தான் காரணம் எண்டு சொல்ல வாறீங்கள் போல!😊

இப்போது மட்டுமல்ல, எப்போதுமே தென்மாநிலங்கள்  இந்தி பேசும் ஏனைய மாநிலங்களை விட பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் கொஞ்சம் முன்னணியில் தான்! இதற்கு அரசியல் வாதிகளை விட மக்களிடையே இருக்கும் உழைப்பாளிகள் தான் காரணம்!

ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது மாறக் கூடும், வலது சாரிகள் ஆட்சிக்கு வந்து முதலீட்டாளர்களை ஆந்திரா, கர்நாடகம், கேரளா பக்கம் துரத்தினால்!

Link to comment
Share on other sites

தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் நீண்டகாலமாகவே பொருளாதாரத்திலும் கல்வியிலும் முன்னேறிய மாநிலங்களாகவே உள்ளன.   மத்திய அரசு வரி வருயாயில் முன்னேறிய மாநிலம் என்ற ரீதியில் தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு வட மாநிலங்களை விட பல வருடங்களாக  அதிகமாகவே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

தற்பொழுது முன்பு  போல் ஊழல்களும் குழி பறிப்புக்களும்

குறைவாகத்தான் இருக்கின்றன

பின்னால்  வளர்ந்து  வருபவர்களின் மீதான  பயமும்

புதிய  தலைமுறையின்  மனமாற்றமும் காரணமாக  இருக்கலாம்

உண்மைதான் விசுகர்!  அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியின் செயல்த்திட்ட பிரச்சாரங்களை தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. தெலுங்கு தேசத்திலும் மலையாள தேசத்திலும் நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை   அதிகமாகவே செயல் படுத்துகின்றார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியின் செயல்த்திட்ட பிரச்சாரங்களை தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. தெலுங்கு தேசத்திலும் மலையாள தேசத்திலும் நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை   அதிகமாகவே செயல் படுத்துகின்றார்கள்..

தெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள் 🤣

தலை கீழாக/விதண்டாவாதமாக சிந்திக்கும் உங்கள் பார்வை ஒரு பக்கம் நிற்க......

மேற்குலகில் வெற்றி பெற்ற விடயங்களைத்தான் நாம் தமிழர் கட்சியினரும் முன் வைக்கின்றார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள் 🤣

இதில் நக்கல் நளினத்திற்கு என்ன இருக்கிறது ☹️

சுயசார்பு பொருளாதாரம் என்பதுபுதியவிடயம் அல்லவே 🤥

நா.த.க வின் (சுய சார்புக்)கொள்கைகளை திமுக அல்லது அதிமுக கொண்டிருந்தால் உங்கள் நக்கல் வந்திருக்குமா 🤔

அதிகாரம் செலுத்த முற்படுவீர்கள் அது சரிவரவில்லையென்றால் கூழைக் கும்பிடு. 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சுயமாக ஓய்வுபெற்று சேவையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டின் நிர்வாகக் மையமாகத்திகழும் தலைமைச்செயலகத்துக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விகடன் இணையச்செய்தி கூறுகிறது.

இந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.

யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என. திமுக்காவுக்குச் சளைத்ததாக அதிமுக ஊழலில் ஊறியிருப்பது எல்லோருக்கும் தெரியும் விஜயபாஸ்கரின் குதா ஊழல் கோப்புகள் தொடங்கி ஓபிஎஸ்சின் ஊழல் வரைக்குமான அனைத்தும் இப்போது பாஜாக கைவசம் இருக்கு.

அதாவது பாஜக தமிழகத்தில் வலுவாகும்வரைக்கும் தொடர்ந்தும் இந்த நிலையைத் தக்கவைக்க ஒரு லெட்டர்பாட் அமைப்புக்குச் சொல்லி ஒரு அறிக்கையைத் தட்டி விட்டிருக்கு அதெளக்காக நாம் யாழ் களத்தில் குத்தி முறிகிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சுயமாக ஓய்வுபெற்று சேவையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டின் நிர்வாகக் மையமாகத்திகழும் தலைமைச்செயலகத்துக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விகடன் இணையச்செய்தி கூறுகிறது.

இந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.

யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என. திமுக்காவுக்குச் சளைத்ததாக அதிமுக ஊழலில் ஊறியிருப்பது எல்லோருக்கும் தெரியும் விஜயபாஸ்கரின் குதா ஊழல் கோப்புகள் தொடங்கி ஓபிஎஸ்சின் ஊழல் வரைக்குமான அனைத்தும் இப்போது பாஜாக கைவசம் இருக்கு.

அதாவது பாஜக தமிழகத்தில் வலுவாகும்வரைக்கும் தொடர்ந்தும் இந்த நிலையைத் தக்கவைக்க ஒரு லெட்டர்பாட் அமைப்புக்குச் சொல்லி ஒரு அறிக்கையைத் தட்டி விட்டிருக்கு அதெளக்காக நாம் யாழ் களத்தில் குத்தி முறிகிறோம். 

எழுஞாயிறு, என்னென்னவோ எழுதியிருக்கிறீர்கள், எழுத முதல் நீங்கள் குறிப்பிடும் "கருத்துக் கணிப்பு" என்பது 25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு அமைப்பின் பொருளாதார/சமூகத் தரவுகள் அடிப்படையிலான அறிக்கை என்றாவது முயற்சி செய்து கண்டறிந்திருக்கலாம்!

மறந்து விட்டேன், குதிரைக்கு முன்னால்  வண்டிலைப் பூட்டும் ஆளாயிற்றே நீங்கள்! முடிவு முன்னால், data பின்னால்!☺️

Link to comment
Share on other sites

5 hours ago, Elugnajiru said:

.

இந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.

அதாவது பாஜக தமிழகத்தில் வலுவாகும்வரைக்கும் தொடர்ந்தும் இந்த நிலையைத் தக்கவைக்க ஒரு லெட்டர்பாட் அமைப்புக்குச் சொல்லி ஒரு அறிக்கையைத் தட்டி விட்டிருக்கு அதெளக்காக நாம் யாழ் களத்தில் குத்தி முறிகிறோம். 

முதலில் இது கருத்து கணிப்பு அல்ல. மாநிலங்களின் வளர்சசி, நிர்வாகத்திறன் போன்ற பல விடயங்களை பகுப்பாய்வு செய்து அதற்கு சுட்டிகள் வழங்கப்படுவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பானது என்றால்  அவர்களுகள் எப்போதுமே வெறுக்கும் கம்யூனிஸ் கட்சி ஆட்சி நடத்தும் கேரளத்திற்கு முதலிடம் கிடைத்திராது. அதே வேளை பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கு இறுதி இடம் வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும். 

தமிழ்நாடு உட்படதென்மாநிலங்கள் நீண்ட காலமாகவே வளர்சசியடைந்த மாநிலங்களாக  உள்ளது என்ற  உண்மை இங்கு சிலருக்கு ஏனோ கசக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

முதலில் இது கருத்து கணிப்பு அல்ல. மாநிலங்களின் வளர்சசி, நிர்வாகத்திறன் போன்ற பல விடயங்களை பகுப்பாய்வு செய்து அதற்கு சுட்டிகள் வழங்கப்படுவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பானது என்றால்  அவர்களுகள் எப்போதுமே வெறுக்கும் கம்யூனிஸ் கட்சி ஆட்சி நடத்தும் கேரளத்திற்கு முதலிடம் கிடைத்திராது. அதே வேளை பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கு இறுதி இடம் வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும். 

தமிழ்நாடு உட்படதென்மாநிலங்கள் நீண்ட காலமாகவே வளர்சசியடைந்த மாநிலங்களாக  உள்ளது என்ற  உண்மை இங்கு சிலருக்கு ஏனோ கசக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது. 

 

5 hours ago, Justin said:

எழுஞாயிறு, என்னென்னவோ எழுதியிருக்கிறீர்கள், எழுத முதல் நீங்கள் குறிப்பிடும் "கருத்துக் கணிப்பு" என்பது 25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு அமைப்பின் பொருளாதார/சமூகத் தரவுகள் அடிப்படையிலான அறிக்கை என்றாவது முயற்சி செய்து கண்டறிந்திருக்கலாம்!

மறந்து விட்டேன், குதிரைக்கு முன்னால்  வண்டிலைப் பூட்டும் ஆளாயிற்றே நீங்கள்! முடிவு முன்னால், data பின்னால்!☺️

எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் வாய்க்கால் வரப்புத் தகராறு ரெம்பநாளாகத் தொடர்கிறது.

கேரளாவில் நெடுநாளாகக் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கிறார்கள் ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் தலமையில் வெற்றிடம் இருக்கு காலப்போகில் கேரளாவுக்கும் இதே நிலை வரலாம். 

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிகர் நிலைப்  பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஆயிரக்கானக்கான மோசடிப் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது எதற்கும் இருக்கட்டுமே என எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தமாதிரி அமைப்புகளைக்கொண்டு அறிக்கையைத் தயாரிப்பது பெரிய விடையம் இல்லை. 

அப்படி அவர்கள் மறுத்தால் இருக்கவே இருக்கு வருமானவரிச் சோதனை இதை நான் கூறவில்லை நடிகர் சத்தியராJ அவர்கள் எதையோ கூற தமிழிசை சவுந்தரராஜன் அவரது வீட்டுக்கு ஒரு ரைட் நடத்திவிட்டால் எல்லாம் சரி எனக்கூறியதை நினைவுபடுத்தவும்.

கூவத்தூரில் புறியாணிப்பொட்டலத்துடன் விருந்து படைத்து ஆட்டுமந்தைகளாக அடைத்துவைத்து முதல்வரைத் தேர்வுசெய்த கேவலம் நடந்தபின்பும் அந்த ஆட்சியைக் கலைக்காது அதை அடிமைப்படுத்தி தனது கட்சியின் நலனுக்காக அதைபாவிக்கும் மத்திய பாஜக அரசும், பத்திரிகைகளி வேலை செய்யும் பெண்கள் தங்களது மேலதிகாரிகளைப் பாலியல்ரீதியில் திருப்திப்படுத்தெயே பணியைத் தொடர்கிறார்கள் எனக்கூறிய நடிகர் எஸ் வீ சேகருக்கு அரஸ்ட் வாரண்ட் நீதிமன்றால் கொடுக்கப்பட்டும் கைதுசெய்யவேண்டிய காவல்துறை கான்ஸ்டபிளே அவருக்குக் காவல் காத்ததும் கள உறவுகளுக்கு நினைவில்லைப்போல. 

நான் வண்டிலைக் குதிரைக்குமுன்பூட்டிப் பயணம் செய்யலாம் ஆனால் எனது கண்களுக்கு லாடம் கட்டிவிட்டு, கடந்தவைகளை மறந்து கனவுலகில் ஆகா இந்தியா வல்லரசாகிவிடும் கனவுகாண்போம் என அப்துல் கலாம் சொன்னவுடன் மல்லாக்காப் படுத்துக்கொண்டு கனவு காணவில்லை.

இந்தியாவுடணோ அல்லது தமிழ் நாட்டுடணோ எனக்கு ஒரு கொண்டான் கொடுத்தான் விடையத்தில் பிரச்சனை இருக்கு அதுதான் நான் இப்படிக்கூவுகிறேன். சும்மா போங்கசார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

சுயசார்பு பொருளாதாரம் என்பதுபுதியவிடயம் அல்லவே

நா.த.க வின் (சுய சார்புக்)கொள்கைகளை திமுக அல்லது அதிமுக கொண்டிருந்தால் உங்கள் நக்கல் வந்திருக்குமா

சுயசார்பு பொருளாதாரம் என்பது புதியவிடயம் அல்ல.
கம்யுனிசத்தில் கொஞ்சம் எடுத்து ஹிட்லரிசத்தில் அதிகம் எடுத்து கலந்து நாம் தமிழர் கட்சி தெரிவிப்பதை  தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இங்கே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் தெரிவித்ததை போன்று திமுக அல்லது அதிமுக ஆதரவாளர் தெரிவித்தாலும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

 

எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் வாய்க்கால் வரப்புத் தகராறு ரெம்பநாளாகத் தொடர்கிறது.

கேரளாவில் நெடுநாளாகக் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கிறார்கள் ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் தலமையில் வெற்றிடம் இருக்கு காலப்போகில் கேரளாவுக்கும் இதே நிலை வரலாம். 

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிகர் நிலைப்  பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஆயிரக்கானக்கான மோசடிப் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது எதற்கும் இருக்கட்டுமே என எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தமாதிரி அமைப்புகளைக்கொண்டு அறிக்கையைத் தயாரிப்பது பெரிய விடையம் இல்லை. 

அப்படி அவர்கள் மறுத்தால் இருக்கவே இருக்கு வருமானவரிச் சோதனை இதை நான் கூறவில்லை நடிகர் சத்தியராJ அவர்கள் எதையோ கூற தமிழிசை சவுந்தரராஜன் அவரது வீட்டுக்கு ஒரு ரைட் நடத்திவிட்டால் எல்லாம் சரி எனக்கூறியதை நினைவுபடுத்தவும்.

கூவத்தூரில் புறியாணிப்பொட்டலத்துடன் விருந்து படைத்து ஆட்டுமந்தைகளாக அடைத்துவைத்து முதல்வரைத் தேர்வுசெய்த கேவலம் நடந்தபின்பும் அந்த ஆட்சியைக் கலைக்காது அதை அடிமைப்படுத்தி தனது கட்சியின் நலனுக்காக அதைபாவிக்கும் மத்திய பாஜக அரசும், பத்திரிகைகளி வேலை செய்யும் பெண்கள் தங்களது மேலதிகாரிகளைப் பாலியல்ரீதியில் திருப்திப்படுத்தெயே பணியைத் தொடர்கிறார்கள் எனக்கூறிய நடிகர் எஸ் வீ சேகருக்கு அரஸ்ட் வாரண்ட் நீதிமன்றால் கொடுக்கப்பட்டும் கைதுசெய்யவேண்டிய காவல்துறை கான்ஸ்டபிளே அவருக்குக் காவல் காத்ததும் கள உறவுகளுக்கு நினைவில்லைப்போல. 

நான் வண்டிலைக் குதிரைக்குமுன்பூட்டிப் பயணம் செய்யலாம் ஆனால் எனது கண்களுக்கு லாடம் கட்டிவிட்டு, கடந்தவைகளை மறந்து கனவுலகில் ஆகா இந்தியா வல்லரசாகிவிடும் கனவுகாண்போம் என அப்துல் கலாம் சொன்னவுடன் மல்லாக்காப் படுத்துக்கொண்டு கனவு காணவில்லை.

இந்தியாவுடணோ அல்லது தமிழ் நாட்டுடணோ எனக்கு ஒரு கொண்டான் கொடுத்தான் விடையத்தில் பிரச்சனை இருக்கு அதுதான் நான் இப்படிக்கூவுகிறேன். சும்மா போங்கசார்.

உங்களுடைய கொண்டான் கொடுத்தான் பிரச்சினையை நீங்கள் யாழ் களத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள வேண்டும்!😊

நான் சுட்டிக் காட்டியதெல்லாம், இந்த நிரலைத் தயாரித்த அமைப்பு நிகர் நிலைப் பல்கலையும் அல்ல, உங்கள் கற்பனைகளில் நீங்கள் குறிப்பிடும் அமைப்புகளும் அல்ல! தரவுகளை வைத்து "நல்லாட்சிக்காக" பல ஆண்டுகளாக உழைக்கும் ஒரு அமைப்பு! 

எதையும் "கொண்டான் கொடுத்தான் பிரச்சினை, வாய்க்கால் வரம்புப் பிரச்சினை" என்ற கோபத்தில் பார்ப்பதை விட்டு உலக விடயங்களை அறிந்து கொள்வதும் விளங்கிக் கொள்வதும் முக்கியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சுயசார்பு பொருளாதாரம் என்பது புதியவிடயம் அல்ல.
கம்யுனிசத்தில் கொஞ்சம் எடுத்து ஹிட்லரிசத்தில் அதிகம் எடுத்து கலந்து நாம் தமிழர் கட்சி தெரிவிப்பதை  தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இங்கே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் தெரிவித்ததை போன்று திமுக அல்லது அதிமுக ஆதரவாளர் தெரிவித்தாலும்...

பொருளாதார விடயங்கள் என்று வரும்போது பொருளாதாரத்தை மட்டும் நோக்குங்கள். நா. த. க யினரின் பல கொள்கைகள் விளக்கக் குறைவாகவும் காலத்துக்கு ஒத்ததாகவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் முன்வைக்கும் பல கொள்கைகளை அண்டை மானிலங்கள் செயற்படுத்த முனைவது உண்மை. அதை உங்களால் மறுக்க முடியாது. 

ஆனால் ..

ஒட்டுமொத்தமாக ஆதரவாளர்களை நையாண்டி செய்வது அவர்கள் மேலுள்ள வெறுப்பினால்  அல்லது காழ்ப்புணர்ச்சியினால் என்பது என் கணிப்பு. அது சரியானதும் அல்ல. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

முதலில் இது கருத்து கணிப்பு அல்ல. மாநிலங்களின் வளர்சசி, நிர்வாகத்திறன் போன்ற பல விடயங்களை பகுப்பாய்வு செய்து அதற்கு சுட்டிகள் வழங்கப்படுவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பானது என்றால்  அவர்களுகள் எப்போதுமே வெறுக்கும் கம்யூனிஸ் கட்சி ஆட்சி நடத்தும் கேரளத்திற்கு முதலிடம் கிடைத்திராது. அதே வேளை பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கு இறுதி இடம் வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும். 

தமிழ்நாடு உட்படதென்மாநிலங்கள் நீண்ட காலமாகவே வளர்சசியடைந்த மாநிலங்களாக  உள்ளது என்ற  உண்மை இங்கு சிலருக்கு ஏனோ கசக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது. 

இந்தியாவிலேயே சகல வளமும் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் மற்றும் தென் மாநிலங்களும். மட்டுமே......அதிலும் தமிழ்நாடு சகல வளமும் பெற்ற நாடு. இங்கே சுரண்டல் அரசியல் நிறைந்துள்ளதை நீங்களும் உங்களைப்போன்ற பொதுவுடமை மனிதர்களும் புரிய மறுப்பது சகஜம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்தியாவிலேயே சகல வளமும் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் மற்றும் தென் மாநிலங்களும். மட்டுமே......அதிலும் தமிழ்நாடு சகல வளமும் பெற்ற நாடு. இங்கே சுரண்டல் அரசியல் நிறைந்துள்ளதை நீங்களும் உங்களைப்போன்ற பொதுவுடமை மனிதர்களும் புரிய மறுப்பது சகஜம்.

இது முற்றிலும் சரியான கருத்தல்ல! பெருமளவான வளங்களில் முன்னணி வகிப்பது பிரதான ஆறுகளின் தோற்றுவாய்க்கு அருகே இருக்கும் பஞ்சாப் போன்ற மானிலங்கள் தான்! 

தென் மாநிலங்களில், கல்வியும் அதனால் மனித வளமும் சிறப்பு!

ஆனால், இந்தத் திரியைப் பொறுத்தவரை, சுரண்டல் ஊழலும் பெரிதாக முன்னேற்றத்தின் குறிகாட்டிகளைப் பாதிக்கவில்லை! ஆனால், மக்களின் பூரணமான நிலைமையை இந்தக் குறிகாட்டிகள் பிரதிபலிக்க மாட்டாது என்பதும் உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

தென் மாநிலங்களில், கல்வியும் அதனால் மனித வளமும் சிறப்பு!

கல்வி வளம் மட்டும் மனித வளம் மட்டும் போதாது இயற்கை வளம் அத்தியாவசியம். அது தமிழ்நாட்டில் அதிகம். அதனால் வட மாநிலத்தவர் வருகை அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கல்வி வளம் மட்டும் மனித வளம் மட்டும் போதாது இயற்கை வளம் அத்தியாவசியம். அது தமிழ்நாட்டில் அதிகம். அதனால் வட மாநிலத்தவர் வருகை அதிகம்.

தண்ணீருக்கே மூன்று மாநிலங்கள் அடித்துக் கொள்கின்றன. நீங்கள் இயற்கை வளமென்று எதைக் குறிப்பிடுகிறீர்களோ புரியவில்லை!

வேறு மாநிலத்தவர் வருவது தொழில் நுட்பத் துறையில் தெற்கு சிறந்து விளங்குவதால். தமிழகத்தின் தற்போதைய மொத்த வருமானத்தில் 20% இற்கும் குறைவாகத் தான் இயற்கை வளம் சார்ந்த விவசாயத்தினால் கிடைக்கிறது என கருதுகிறேன். மிகுதி தொழில் துறை உற்பத்திகளும் சேவைகளும்! 

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

இந்தியாவிலேயே சகல வளமும் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் மற்றும் தென் மாநிலங்களும். மட்டுமே......அதிலும் தமிழ்நாடு சகல வளமும் பெற்ற நாடு. இங்கே சுரண்டல் அரசியல் நிறைந்துள்ளதை நீங்களும் உங்களைப்போன்ற பொதுவுடமை மனிதர்களும் புரிய மறுப்பது சகஜம்.

ஊழலும் சுரண்டலும் தெற்காசிய அரசியல்வாதிகளுடம் உள்ள ஒழிக்கப்பட வேண்டிய பிரச்சனைதான். 2 மில்லியனே உள்ள ஈழத்தமிழர்களிடையேயே  பல ஊழல் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களை நேரில் கண்டவர்கள் நாம். எனவே  தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் தமிழ் மக்களில் இவ்வாறு ஊழல் அரசியலவாதிகள் இருப்பது தெரிந்த விடயம் தான். அதை மீறி அங்கு வளர்சசி உள்ளதற்கு   69 வீத இட ஒதுக்கீட்டால் கல்வி, பல மட்டங்களில் உள்ள மக்களை  சென்றடைந்ததும் ஒரு காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடே 2வது இடத்திலிருக்கென்றால் மற்ற மாநிலங்களின் நிலமை🤔

அரசியல் வாதிகள் தங்கள் குடும்பத்திற்கும் சாதி மத வெறிக்கு உழைக்கின்றார்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு அல்ல, 

இந்தியா & அரசியல் வாதிகள்வெட்கப்பட வேண்டும் வெங்காய இறக்குமதிக்கு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

ஆனால், இந்தத் திரியைப் பொறுத்தவரை, சுரண்டல் ஊழலும் பெரிதாக முன்னேற்றத்தின் குறிகாட்டிகளைப் பாதிக்கவில்லை! ஆனால், மக்களின் பூரணமான நிலைமையை இந்தக் குறிகாட்டிகள் பிரதிபலிக்க மாட்டாது என்பதும் உண்மை!

நானும் இதைத்தான் கூற நினைத்தேன். அபிவிருத்தி என்பது ஒரு புறம் இருக்க அதனால் தமிழக மக்கள் எல்லோரும் (அடித்தட்டு மக்கள் உட்பட) பயனடைகிறார்களா அல்லது மேல்தட்டு மக்களும் ஊழல் அரசியல்வாதிகளும்தான் பயனடைகிறார்களா என்பதுதான் கேள்வி??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நானும் இதைத்தான் கூற நினைத்தேன். அபிவிருத்தி என்பது ஒரு புறம் இருக்க அதனால் தமிழக மக்கள் எல்லோரும் (அடித்தட்டு மக்கள் உட்பட) பயனடைகிறார்களா அல்லது மேல்தட்டு மக்களும் ஊழல் அரசியல்வாதிகளும்தான் பயனடைகிறார்களா என்பதுதான் கேள்வி??

இது எந்தக் குறிகாட்டிகளைக் கொண்டு அறிக்கை தயாரிக்கப் பட்டது என்பதைப் பொறுத்தது. தனி நபர் வருமானம் (PCI) மட்டும் என்றால் அது சராசரி அளவீடு மட்டுமே! நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே சுவறும்! இது எந்த நாட்டிற்கும் பொருந்தும்.

சேவைகளின் தரம், மக்கள் அரச நிர்வாகத்தை எப்படிப் பார்க்கின்றனர் போன்ற குறிகாட்டிகள் பயன்பட்டால், அது ஒருவரின் சமூக நிலையினால் சிறிய அளவிலேயே பாதிக்கப் படும் ஒரு குறிகாட்டி!
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.