Jump to content

தமிழர் பண்பாட்டில் கள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பண்பாட்டில் கள் ..

toddypots.jpg 

திருமணம் முடித்து குடும்பத்துடன் நலமாய் வாழ்பவனை ‘அவன் குடியும் குடித்தனமுமாய்’ இருக்கின்றான் என்று கூறும் வழக்கம் நம்மிடையே மரபாக உள்ளது. அதேபோன்று குடிக்கு அடிமையான ஒருவனைக் கூறுவதற்கும் மேற்கண்ட வாசகத்தையேக் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. இன்று மதுவிலக்கு பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அவற்றால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் குறித்துப் பல ஆர்வலர்களும், அமைப்பினரும் குரல் கொடுக்கின்றனர். பெண்களேக் கூட பல மதுக்கடைகளின் முன் நின்று போராடுவது குடி எத்தனை குடிகளை மூழ்கடிக்கின்றது, மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம். இந்தச் சூழலில் தமிழரின் குடி கலாச்சாரம் குறித்துப் பேசுவது அவசியமாகிறது. அதாவது சங்ககாலத்தில் இருந்த குடி கலாச்சாரம் குறித்து விவாதிப்பது தற்காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

சங்ககாலத்தில் ‘கள்’ தேறல், தோப்பி, கள், என்று பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றது. இது தேன், நெல்லரிசி, பழங்கள், பனைமரம் போன்றவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது. நீண்ட நாட்கள் வைத்திருந்து உண்ணும் கள் தரும் போதையை “தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்” (புறம்: 392) என்பதால் அறியமுடிகிறது. அதாவது, தேள் கடித்தால் ஏறும் விடத்தைப்போன்று இக்கள்ளானது போதையைத் தரும் என்ற பொருளில் இவ்வடி வருகின்றது. “பாம்பு வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண்: 237) அடங்கிக் கிடக்கும் பாம்பு ஞெரேலெனச் சீறி எழுவது போன்று, உண்டவுடன், உண்டவர் உள்ளத்தில் வெறியை, களிப்பை ஏற்ற வலிய தன்மை உடையது என்னும் பொருளில் இவ்வரி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. “பாம்புக் கடுப்பன்ன தோப்பி” (அகம்.378), “அரவு வெகுண்டன்ன தேறல்” (புறம்.379) என்ற வரிகளும் கள்ளின் வீரியத்தைக் குறித்து நிற்பதைக் காணலாம். மேலும் கள்ளினை நீண்ட நாட்கள் வைத்துக் குடிக்கின்ற வழக்கத்தினை “பழம்படு தேறல்” (சிறுபாண்: 159) என்னும் சிறுபாணாற்றுப்படை பாடல் வரியால் அறியமுடிகிறது.

“கேளா மன்னர் கடிபுலம் புக்கு

நாள்ஆ தந்து, நறவுநொடை தொலைச்சி”
(பெரும்பாண்.140-141)

என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள், பகை மன்னருடைய ஆவினைக் கவர்ந்து வந்த வீரன் ஒருவன் அதனைக் கொடுத்துத் தனது பழைய கள்விலைக் கடனைத் தீர்த்ததைக் குறிப்பிடுகின்றது. மேலும், “குற்றாத கொழியல் அரிசியை நல்ல களியாகத் துழாவி அட்ட கூழை, மலர்ந்த வாயையுடைய தட்டுப்பிழாவில் இட்டு உலரும்படி ஆற்றிப் பாம்பு கிடக்கும் புற்றின்கண் கிடக்கும் பழஞ்சோற்றைப் போன்று பொலிவு பெற்ற புறத்தையுடைய நல்ல நெல் முளையை இடித்து அதனை அதிலே கலந்து, அஃது இனிமை பெறும்படி இரண்டு பகலும் இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரில் வேகவைத்து நெய்யரியாலே வடிகட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நறிய கள்” என்று கள் தயாரிக்கும் முறையினை பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாண்: 275 - 282) குறிப்பிடுகின்றது. தமிழர்கள் கள் தயாரித்த முறையினையும், அதை உருவாக்கிப் பருகுவதில் இருந்த அவர்களின் விருப்பத்தினையும் இதனால் உணர்ந்துகொள்ள முடிகிறது. மூங்கில் குழாய்களில் தேனினை நிரப்பித் தேறல் என்னும் மதுவகையினைத் தயாரித்துள்ளதை “வேய்ப் பெயல் விளையுள் தாகட் தேறல்”
(மலைபடு.171)

என்று மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. கள் உண்பவர் பலரும் செல்லும் மனைகளில், சிறந்த கள்ளின் விலையை எடுத்துக் காட்டும் கொடிகள் பறந்தது என்பதை, “பலர் புகு மனைப் பலிப் புதவின்

நறவு நொடைக் கொடியோடு”
(பட்டினப்.179-180)

என்ற பட்டினப்பாலை அடிகள் குறிப்பிடுகின்றன.

பெண்களும் சங்ககாலத்தில் கள்ளுண்டு மகிழ்ந்துள்ளனர் என்பதை “தாம் உடுத்திய பட்டாடைகளை நீக்கிப் புணர்ச்சிக் காலத்திற்கென மெல்லிய வெண்ணிறத் துகிலை உடுத்துவர். கள் உண்டலைக் கைவிட்டு, இனிய காமபானத்தை விரும்பி உண்பர். மதுவின் மயக்க மிகுதியால், மகளிர், தம் கணவர் சூடிய கண்ணியைத் தம் கோதையாக நினைத்துத் தங்கள் கூந்தலில் சூடிக் கொள்வர். மகளிர் கூந்தலில் அணிந்திருந்த கோதையை, ஆடவர், தங்கள் கண்ணியாக நினைத்துத் தங்கள் தலையில் சூட்டிக் கொள்வர்”
(பட்டினப்.107-110)

என்னும் கூற்றால் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் இரவெல்லாம் இவ்வாறு கள் குடித்தும், களவியில் ஈடுபட்டும் இருக்கும் பெண்கள் இரவின் கடையாமப் பொழுதில் துயில் கொள்ளுவர் என்று குறிப்பிடுகின்றது பட்டினப்பாலை.

கள் விற்கப்படும் மனைகளில் அதன் விலையுடன் கூடிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கின்றன என்பதை,

“பலர் புகு மனைப் பலிப் புதவின்

நறவு நொடைக் கொடியோடு”
(பட்டினப்.179-180)

என்ற பட்டினப்பாலையடியால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கள் விற்கும் இடங்களில் கொடி பறந்து கொண்டிருந்ததை, “கட்கொடி நுடங்கும் ஆவணம்”
(பெரும்பாண்.337)

“கட்கொடி நுடங்கும் ஆவணம்”
(பதிற். 98:10)

, “நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்” (அகம் 126:10), “கள்ளின் களிநவில் கொடி”
(மதுரைக். 372)

என்னும் பாடல் வரிகளால் அறியமுடிகிறது. மேலும் களிப்பினைத் தரும் கள்ளிற்கு விலை கூறி விற்றதைக் “கள்ளோர் களி நொடை நுவல”
(மதுரைக்.662)

, “களம் தோறும் கள் அரிப்ப”
(மதுரைக்.753)

என்னும் மதுரைக்காஞ்சி பாடலடிகள் புலப்படுத்துகின்றன. இவ்வாறு கள், அவற்றை உற்பத்தி செய்யும் முறை, விற்பனை செய்யும் இடம், கள் குடித்த மக்கள் என்று பல்வேறு தகவல்களைச் சங்க இலக்கியங்களிலிருந்து பெறமுடிகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமுதாயத்தில் மன்னர் முதற்கொண்டு விளிம்புநிலை மக்கள் வரை கள் குடித்திருக்கின்றனர் என்பது ஒருபுறமிருந்தாலும், அவர்கள் குடிப்பதெற்கென ஒரு எல்லையை வகுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அக்காலத்தில் குடி கலாச்சாரத்தால் எந்தக் குடும்பமும் சீரழிந்ததாகத் தெரியவில்லை. கவிஞர்களும், கலைஞர்களும், பெண்களும் கள் குடித்துள்ளனர். அதியமான் ஒளவைக்கு கள் கொடுத்து மகிழ்ந்திருக்கிறான். இது பெண்களும் பாகுபாடின்றிக் கள் குடிப்பதற்கு இருந்த சுதந்திரத்தை எடுத்துக் காட்டுகின்றது. சங்ககாலத்தில் கள் உணவாகப் பார்க்கப்பட்டது. அது இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்டது. எந்த வகையிலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதது. அது அவர்கள் செய்யும் தொழிலை முடக்கிப்போடவில்லை. அப்படியா இருக்கின்றது இன்றைய நிலை. ? முற்றிலும் இல்லை என்றுதான் கூற முடியும்.

முனைவர் சி. இராமச்சந்திரன்

ஆராய்ச்சி உதவியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை - 600 113

http://www.muthukamalam.com/essay/general/p218.html 

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெண்களும் சங்ககாலத்தில் கள்ளுண்டு மகிழ்ந்துள்ளனர் என்பதை “தாம் உடுத்திய பட்டாடைகளை நீக்கிப் புணர்ச்சிக் காலத்திற்கென மெல்லிய வெண்ணிறத் துகிலை உடுத்துவர். கள் உண்டலைக் கைவிட்டு, இனிய காமபானத்தை விரும்பி உண்பர். மதுவின் மயக்க மிகுதியால், மகளிர், தம் கணவர் சூடிய கண்ணியைத் தம் கோதையாக நினைத்துத் தங்கள் கூந்தலில் சூடிக் கொள்வர். மகளிர் கூந்தலில் அணிந்திருந்த கோதையை, ஆடவர், தங்கள் கண்ணியாக நினைத்துத் தங்கள் தலையில் சூட்டிக் கொள்வர்”

குமார சாமியார் ஏன் கள்ளுக் கொட்டிலில் அமர்ந்து கள்ளடித்து மகிழ்ந்து யாழையும் கலக்குகிறார் என்று இப்போது புரிகிறது. பரிமளாக்காவோடு நரி பரிகளென எப்படிப் பிடித்தார் என்றும் தெரிகிறது. யாழ் உறவுகள் சாமியாரிடம் பாடம்கேட்க வரிசையில் நிற்பதையும் காணமுடிகிறது.  

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அக்காலத்தில் குடி கலாச்சாரத்தால் எந்தக் குடும்பமும் சீரழிந்ததாகத் தெரியவில்லை. கவிஞர்களும், கலைஞர்களும், பெண்களும் கள் குடித்துள்ளனர். அதியமான் ஒளவைக்கு கள் கொடுத்து மகிழ்ந்திருக்கிறான். இது பெண்களும் பாகுபாடின்றிக் கள் குடிப்பதற்கு இருந்த சுதந்திரத்தை எடுத்துக் காட்டுகின்றது. சங்ககாலத்தில் கள் உணவாகப் பார்க்கப்பட்டது. அது இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்டது. எந்த வகையிலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதது. அது அவர்கள் செய்யும் தொழிலை முடக்கிப்போடவில்லை.

இன்றைய குடிமக்கள் படிக்கவேண்டிய அத்தியாவசிய பாடம். Bildergebnis für %e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d+%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.