Jump to content

நாட்டில் விழுந்த பேரிடி! ஆட்டம் காண வைக்கும் அலை..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவு பொருளாதார ரீதியாக மேலும் பலவீனமான நிலையை அடைந்திருக்கின்ற சூழலில் தான், கொரோனாவின் இரண்டாவது அலை தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.

இப்போது நிலவுவது, இரண்டாவது அலையே இல்லை என்றும், இன்னமும் சமூகத் தொற்றாக மாறவில்லை என்றும் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை அரச அதிகாரிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், முதல் அலையை விட மூர்க்கத்தனமானதாக இப்போதைய அலை காணப்படுகிறது.

நாட்டில் நிலைமை படுமோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை சாதாரண மக்களால் ஊகிக்க முடிகிறது, உணர முடிகிறது.

முதல் அலை தாக்கிய போது, நாடு பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தது.

அந்நியச் செலவாணிக் கையிருப்பு தேய்ந்து போயிருந்தாலும், சமாளிக்கக் கூடிய நிலையில் அரசாங்கம் காணப்பட்டது.

ஆனால் இப்போது மிகமோசமான பொருளாதாரச் சூழலுக்குள் தான், இரண்டாவது அலையின் உக்கிர தாண்டவத்தை எதிர்கொள்கிறது இலங்கை.

முதல் அலையின் போது ஆங்காங்கே தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், முடக்க நிலையில் இருந்த போதும், உற்பத்தித் துறையினால் ஓரளவுக்காவது இயங்க கூடிய நிலை காணப்பட்டது.

இதனால் நாட்டின் உற்பத்திகள் பெரியளவில் பாதிக்கப்பட்டதாக கூற முடியாது, அது உள்நாட்டு நிரம்பல் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகளுக்கு கை கொடுத்தது.

ஆனால், இரண்டாவது அலை, நாட்டின் உற்பத்தித் துறையையும், ஒட்டு மொத்தமாக முடக்கிப் போடும் அளவுக்கு தீவிரமானதாக மாறியிருக்கிறது.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே இப்போதைய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார உத்தியாக உள்ள நிலையில், உற்பத்தித் துறை தடங்கலின்றி இயங்கிக் கொண்டிருந்தால் தான், அந்த இலக்கை எட்ட முடியும்.

கொரோனாவுக்குப் பின்னர், சுற்றுலாத் தொழிற்துறை முற்றாக செயலிழந்து விட்ட நிலையில், இலங்கைக்கு முக்கியமாக அந்நியச் செலவாணியை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது ஆடை ஏற்றுமதி துறை.

அதற்குத் தான் இப்போது பேரிடி விழுந்திருக்கிறது. மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பரவிய தொற்று கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பல தொழிற்சாலைகளுக்குப் பரவியது.

இதனால், நாட்டின் ஆடை உற்பத்தி துறை பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த துறை சார்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீடுகளுக்கு அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் ஒரு பக்கத்தில் உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் ஏற்றுமதி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மற்றொரு பக்கம், வேலையிழப்பு நிலையும் எதிர்கொள்ளப்படுகிறது.

பொருளாதார ரீதியான இந்த இழப்பு அடுத்து வரும் பல மாதங்களுக்குத் தொடரக் கூடிய சூழல் உள்ளது.

அதுபோன்று முதல் அலையின் போது, கடற்றொழிலாளர்களால், மீன்பிடிக்கவும், அதனை விற்கவும் ஏற்றுமதி செய்வதற்குமான பொறிமுறைகளில் பாதிப்பு இருக்கவில்லை.

பேலியகொட மீன்சந்தை கொத்தணியில் தொடங்கிய தொற்று அந்த துறையை முற்றாகவே படுக்கச் செய்துள்ளது.

பிடிக்கப்பட்ட இலட்சக்கணக்கான கிலோ மீன்களை சந்தைப்படுத்த முடியாத நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் அவர்களினதும், மீன் வியாபாரத்தை தொழிலாக கொண்டவர்களினதும், குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

மீன் ஏற்றுமதியும் இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று கூற முடியாது.

ஆனால் அவ்வளவு இலகுவாக இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்பதை உணர முடிகிறது. சுனாமிக்குப் பின்னர் ஏராளமானோர் கடலுணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தனர். சுனாமியின் போது கடலில் மிதந்து வந்த சடலங்களை கண்டவர்களால் நீண்ட காலத்துக்கு மீன்களைச் சாப்பிட முடியவில்லை.

அந்த அச்சத்தில் இருந்து அவர்கள் மீளுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அதுபோலத் தான், பேலியகொட மீன்சந்தை கொத்தணியும் மீன் நுகர்வோரை மிரள வைப்பதாக இருக்கிறது. இந்த அச்சத்தில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் செல்லலாம்.

இது ஒட்டுமொத்த நாட்டினதும் இந்த துறை சார்ந்த தொழில்களை நம்பியிருப்போர் மற்றும் நிறுவனங்களையும் நடுத்தெருவுக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலாவது அலையின் போது, நாட்டின் பொருளாதார இலக்குகள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. மொத்த வர்த்தகம் தடையின்றி நடந்து கொண்டிருந்தது. துறைமுகப் பணிகளில் தடங்கல்கள் ஏற்படவில்லை.

ஆனால் இப்போது அப்படியில்லை. மொத்த வர்த்தக மையம் கூட, முடங்கிப் போகின்ற நிலை தோன்றியிருக்கிறது. புறக்கோட்டை மொத்த வர்த்தகச் சந்தை பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இது சில்லறை வர்த்தகத்தையும் பாதிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும்.

இறக்குமதிகளும் கூட சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஏனென்றால் துறைமுக பணியாளர்களும், சுங்க அதிகாரிகளும் கூட தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையானது, சீரான இறக்குமதி மற்றும் சுங்க நடைமுறைகளில் தடங்கல்களை ஏற்படுத்தும். இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் போது, சில்லறை வியாபாரி மூலம் சாதாரண மக்களை சென்றடையும் பொருட்களின் சுழற்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது ஒரு புறத்தில் தட்டுப்பாடு, விலை உயர்வு, கறுப்புச் சந்தை போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.

அதேவேளை, மற்றொரு புறத்தில், இந்த துறையை சார்ந்த ஏராளமானோர் வருமான இழப்பைச் சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்படும்.

இவ்வாறான நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் அரசாங்கமும் பங்களிக்க முடியாமல் போகும்.

ஏனென்றால் அரசாங்கமே வங்குரோத்து நிலையில் தான் இருக்கிறது. சேவைத் துறையினருக்காக செலவிடும் தொகையும் அதிகரித்து விட்டது,

இவ்வாறான நிலையை அரசாங்கம் நினைத்துக் கூடப் பார்த்திருக்காது. இந்த நிலையில் இருந்து மீள்வதற்கான உடனடித் திட்டங்களும் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை

முதல் அலையில் தப்பியவர்களைக் கூட கொரோனா இரண்டாவது அலை எப்படி அள்ளிக் கொண்டு போகிறதோ, அதுபோலத் தான், முதல் அலையில் பொருளாதார ரீதியாகத் தப்பியவர்களும் கூட, இரண்டாது அலைக்குள் அகப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அலை ஓயும் போது, உயிரிழப்புகளுக்கு அப்பால், பெரும பொருளாதார இழப்புகளும் மிஞ்சியிருக்கும். அதனை ஈடுகட்டுவதற்கே அரசாங்கம் அடுத்த சில ஆண்டுகள் கடுமையாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.

https://www.tamilwin.com/community/01/260083?ref=home-top-trending

Link to comment
Share on other sites

மிகவும் கவலையான விடயம். யாழ்ப்பாணத்தில் இருக்கும் என் நெருங்கிய உறவுகள் பலர் தின்னைவேலி சந்தையில் வியாபாரம், சைவ உணவுக் கடை, தொலைபேசி திருந்தும் கடை போன்றவற்றின் ஊடாக நாளாந்தம் வருமானம் ஈட்டுபவர்கள். அவர்களை போல பல ஆயிரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக போய்க் கொண்டு இருக்கு. வடக்கில் நிலமை இப்படி என்றால் படுவான்கரை போன்ற இடங்களை நினைக்க பயமாக இருக்கு.

போரால் நேரிடையாக பாதிக்கப்பட்ட எங்கட சனம் தான் தெற்கை விட அதிகமாக பாதிக்கப்படப் போகின்றனர். கடந்த முறை இடம்பெற்ற தன்னார்வலகர்களின் கூட்டு முயற்சிகளைப் போன்று இந்த முறை அதிகமாக காணக் கிடைக்குதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பெரும் பொருளாதார பிரச்சனை. வேலை இல்லை.

எனது நண்பரின், நண்பர் குடும்பம் இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டது. மீண்டு வீடு வந்திருக்கிறார்கள். 

வைத்தியசாலை, உருவு, உருவு என்று உருவி விட்டார்கள். அவர்கள் நண்பரிடம் உதவி கேட்டுள்ளார், நண்பருக்கோ வேலை இல்லை. 

அங்கு இங்கு என்று காசு மாறி அனுப்பி உள்ளார். இதுதான் பலர் நிலை. இலங்கையில் பலர் பாதிப்புக்குள்ளாக்கப் போகின்றனர். மத்திய கிழக்கில் இருந்து வருமானமும் பெரிதாக வரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியில் கொண்டுவந்து கொரோனா நோயாளிகளை வைத்து இருக்கிறார்கள் 
எல்லாம் பாதுகாப்பாக தான் இருக்கிறது ஒரு சிக்கல் அங்கு வேலை செய்பவர்களால்தான் 
அவர்கள் வெளியில் வந்து வந்து போகிறார்கள் கடைகள் வங்கிகள் என்று 
சிலர் வீட்டில் இருந்து வேலைக்கு போய்  வந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஒரு உறவினர் திட்டி தீர்க்கிறார் 
ஒருவர் வேலை செய்கிறார் அவர் அழுகிறார்  முன்பு எய்ட்ஸ் நோயாளிகளை பார்ப்பதுபோல 
வேலைக்கு போகும் என்னை பார்த்து ஓடுகிறார்கள் என்று.  எல்லாம் ஒரு மாயையாக இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி நன்றி

எனது கருத்தை நீக்கியதற்கு மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்.

இலங்கையில் நடப்பது கொத்தபாய ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது அவர்களது ஜால்ராக்களதும் ஆட்சியாகும். 

Link to comment
Share on other sites

நாட்டில் மழைவீழ்ச்சி இல்லை விதைத்த வயல்கள் இன்னும் முளைக்கவில்லை (எங்க ஊரில்)  நெல்லு ஒரு மூடை 7500 என்கிறார்கள் அரிசி 130 முன்னர் பின்னராக போய்க்கொண்டிருக்கிறதாம் வரலாறு காணாத தொற்று நோய் அதன் பின்னரான வரட்சி காரணமாக இலங்கை பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இம்முறை வெளிநாட்டிலுள்ளோரின் உதவியும் மட்டுபடுத்திய   அளவிலேயே இருக்க கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தினக் கூலிகள் தான். என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.