Jump to content

பாணந்துரையில் கரையொதுங்கிய சுமார் 100 திமிங்கலங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாணந்துரை கடற்கரையில் இன்று சுமார் 100 திமிகங்கலங்கள் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை பொலிஸார், இலங்கை கடலோர காவல்படையினரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

spacer.png

கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்கள் 10 முதல் 25 அடி நீளமுடையவை என்றும் கூறப்படுகிறது.

இந் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் திமிங்கலங்களை பார்வையிட மக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/93493

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பாடசாலை காலங்களில் இவ்வாறான திமிங்கில வருகை எல்லாம் நடந்து நினைவில்லை. இருபது முப்பது வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள். சூழல் மனிதனால் எவ்வளவு சீர்குலைந்து விட்டது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுக்கள் ஆகலாம். இனி வேறு என்ன எல்லாம் வருமோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய 120 திமிங்கிலங்கள்

 
af_whales-sri-lanka_031120_afp-696x464.j
 21 Views

கொழும்பு கடற்கரையில் திடீரென 120 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு கடற்கரைக்கு தெற்கே 25 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (02) பனடூரா பகுதியில் குட்டை துடுப்புகளைக் கொண்ட  சுமார் 120 ‘முன்னோடித் திமிங்கிலங்கள்’  கரை ஒதுங்கின. 6மீற்றர் நீளமும் ஒரு தொன் எடையும் கொண்ட இந்தத் திமிங்கிலங்களை கடலில் விட கடற்படையினர் முடிவெடுத்தனர்.

இதற்காக கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் இன்று காலை (03) அவற்றை கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 3 திமிங்கிலங்கள் கரையை அடையும் போது ஏற்பட்ட காயத்தினால் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான மிகப்பெரிய எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரையை அடைவது அசாதாரணமானது” என்று இலங்கையின் கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/கொழும்பு-கடற்கரையில்-கரை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாருக்கு தெரியும்.... கடலுக்க.... கலவரமோ... காயப்பட்டு.... அகதியா ஓடி வந்ததுகளோ....  🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2020 at 05:34, Nathamuni said:

தாருக்கு தெரியும்.... கடலுக்க.... கலவரமோ... காயப்பட்டு.... அகதியா ஓடி வந்ததுகளோ....  🥴

கூட்டு கடற்படைப் பயிற்சியினாலேயே பாணந்துறையில் திமிங்கலங்கள் கரையொதுங்கின – நயனக ரன்வெல்ல

af_whales-sri-lanka_031120_afp.jpg

இந்தியப் பெருங்கடலில் பல நாடுகள் நடத்திய கூட்டு கடற்படைப் பயிற்சியின் காரணமாகவே அண்மையில் பாணந்துறை கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கியதாக தற்போது சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய “மலபார்” என்ற கடற்படை பயிற்சியால் திமிங்கலங்கள் சிக்கித் தவித்ததாகவும், இதன் காரணமாகவே அவை கரையொதுங்கியதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்தார்.

2 ஆம் திகதி மதியம் பாணந்துறை கடற்கரையில் சுமார் 100 திமிங்கலங்கள் கரையொதுங்கி இருந்தன.

பின்னர், கடற்படை, காவல்துறை, மக்கள் என அனைவரும் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thamilkural.net/newskural/news/88837/

டிஸ்கி 

வாயில்லா சீவனை வதம் செய்கினம் . 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிட்ட குடுத்திருந்தா வெட்டி கறியாவது. வச்சிருப்பான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

சீனாவிட்ட குடுத்திருந்தா வெட்டி கறியாவது. வச்சிருப்பான் 

அதுதான் அவர்களை இந்த விளையாட்டில் சேர்க்கவில்லை.......!   😂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.