Jump to content

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸின் வெற்றிக்கு உதவிய எனது மருமகள்: சத்ருகன் சின்ஹா

shatrughan-sinha-reveals-niece-preeta-was-closely-associated-with-kamala-harris-shares-pic  
 

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றிக்கு தனது மருமகள் உதவியதாக பாஜக முன்னாள் எம்.பி. சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “ மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜோ பிடனின் அற்புதமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது. அதேபோல், கமலா ஹாரிஸின் வெற்றியும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த புகைப்படத்தில் கமலா ஹாரிஸுடன் இருப்பவர் பிரீத்தி சின்ஹா எனது மருமகள். இவர் கமலா ஹாரிஸ் கட்சியின் இளைஞர் அணியுடன் இணைந்து வெற்றிக்காக பாடுபட்டார்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் எங்களது பிரீத்தியின் பங்கு அதிகமாக இருந்தது.வெற்றிக்கு பாடுபட்ட ப்ரீதாவுக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

promoting & encouraging our own kamala & her people for this outstanding mega win. Our daughter, Preeta too deserves Kudos! Well done! God Bless! pic.twitter.com/MY4FSLl3Rv

— Shatrughan Sinha (@ShatruganSinha) November 8, 2020

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

https://www.hindutamil.in/news/india/600133-shatrughan-sinha-reveals-niece-preeta-was-closely-associated-with-kamala-harris-shares-pic-1.html

Link to comment
Share on other sites

  • Replies 203
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரோஹிணி ரவீந்திரன்  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இவர்தான் கமலா ஹாரிஸின் 
சீவ் ஒப்பி ஸ்டாவ் இவர் 2016இல் இருந்து கமலாவுக்கு வேலை செய்து வருவதோடு 
முழு டீமையும் வலி நடத்துவது இவர் தான். கமலா காரிஸ் ஜனாநாயக கட்சி ஜனாதிபதி வேட்ப்பாளராக 
நின்றபோதும் முழு பிரச்சார வேலைகளையும் செய்தவர் இவர்தான். 

இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாட்களில் இருந்து பல ஜனநாயக கட்சி மேஜர் செனட்டர் களின் 
பிரச்சார குழுக்களில் வேலை செய்து வந்தவர். 

In announcing Kosoglu's elevation to chief of staff, Harris said in a statement that 'Rohini has been an invaluable leader on our team as we've fought for our shared values and the best of who we are during these first two years.

'Californians, and All Americans, are looking to their leaders in Washington, D.C. to protect our families and communities, and I'm proud to continue that fight with Rohini,' Harris said.

முன்னணி சிங்கள ஊடங்களில் இவரை பற்றிய செய்தி வருகிறது 
இவரது தாய் தந்தையர் பற்றி எல்லாம் அவர்கள் விரிவாக எழுதுகிறார்கள் 
எங்கள் கூமுட்டி தமிழ் ஊடகங்கள் கண்ணுக்கு இன்னமும் படவில்லை என்று எண்ணுகிறேன். 

Sri Lankan-American Rohini Lakshmi Kosoglu breaks barriers on way to  Capitol Hill | Indian-Americans | indiaabroad.com

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

ரோஹிணி ரவீந்திரன்  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இவர்தான் கமலா ஹாரிஸின் 
சீவ் ஒப்பி ஸ்டாவ் இவர் 2016இல் இருந்து கமலாவுக்கு வேலை செய்து வருவதோடு 
முழு டீமையும் வலி நடத்துவது இவர் தான். கமலா காரிஸ் ஜனாநாயக கட்சி ஜனாதிபதி வேட்ப்பாளராக 
நின்றபோதும் முழு பிரச்சார வேலைகளையும் செய்தவர் இவர்தான். 

முன்னணி சிங்கள ஊடங்களில் இவரை பற்றிய செய்தி வருகிறது 
இவரது தாய் தந்தையர் பற்றி எல்லாம் அவர்கள் விரிவாக எழுதுகிறார்கள் 
எங்கள் கூமுட்டி தமிழ் ஊடகங்கள் கண்ணுக்கு இன்னமும் படவில்லை என்று எண்ணுகிறேன். 

Sri Lankan-American Rohini Lakshmi Kosoglu breaks barriers on way to  Capitol Hill | Indian-Americans | indiaabroad.com

Image

எங்களுடைய கூமுட்டி ஊடகங்கள்.... ரஜனி, அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா என்ற ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

ரோஹிணி ரவீந்திரன்  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இவர்தான் கமலா ஹாரிஸின் 
சீவ் ஒப்பி ஸ்டாவ் இவர் 2016இல் இருந்து கமலாவுக்கு வேலை செய்து வருவதோடு 
முழு டீமையும் வலி நடத்துவது இவர் தான். கமலா காரிஸ் ஜனாநாயக கட்சி ஜனாதிபதி வேட்ப்பாளராக 
நின்றபோதும் முழு பிரச்சார வேலைகளையும் செய்தவர் இவர்தான். 

இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாட்களில் இருந்து பல ஜனநாயக கட்சி மேஜர் செனட்டர் களின் 
பிரச்சார குழுக்களில் வேலை செய்து வந்தவர். 

யூதர்களை போல மூளைசாலிகள் எண்டது உண்மை தான் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

யூதர்களை போல மூளைசாலிகள் எண்டது உண்மை தான் 😁

ஆனால் ஒற்றுமை தான் குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

எங்களுடைய கூமுட்டி ஊடகங்கள்.... ரஜனி, அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா என்ற ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்.

 

45 minutes ago, குமாரசாமி said:

யூதர்களை போல மூளைசாலிகள் எண்டது உண்மை தான் 😁

 

33 minutes ago, ஏராளன் said:

ஆனால் ஒற்றுமை தான் குறைவு.

ஒரு ஈழத்தமிழர் துணை அதிபரின் மதியுரைஞராகவும் பாதுகாப்பு மற்றும் வேலை ஆட்களின் தலைமை பொறுப்பதிகாரியாகும் வெள்ளை மாளிகைக்கு போக போகிறார் என்றதும். சிங்களவர்கள் உசாராக இருக்கிறார்கள் இவரின் பூர்விகம் முதல் ஆய்வு செய்து எழுதுகிறார்கள் இவர்கள் புலிகளின் அபிமானிகள் என்ற கசப்பான எண்ணம் அவர்களுக்கு இன்னமும் கசப்பாகி இருக்கிறது. எதிரி மிகவும் உசாராக இருக்கிறான் எங்கள் தலைவர்கள் மக்களை ஏய்த்து பிழைப்பதில் கவனமாக இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dd

கமலா ஹாரிஸ் அவர்களுக்கு, ஸ்ராலின்... எழுதிய வாழ்த்துக் கடிதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பைடனின் அரசமைப்பில் இன்னொரு தமிழரும் வெள்ளை மாளிகை செல்கிறார் 
சின்ன கவுண்டரம்மா மருத்துவ (தோற்று நோய்) ஆலோசகராக பணியாற்ற இருக்கிறார் இவரது தந்தை ஈரோடு தமிழ் நாட்டை சேர்ந்தவர் இவர் பிறந்தது அமெரிக்காவில் ஜான் கோபின்சன் மருத்துவ பீடத்தில் பணியாற்றி வருகிறார் 

செலின் கவுண்டர்  

10454898_648680658599161_9182393844277817841_o.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=09cbfe&_nc_ohc=W1pcDzgJvgkAX9sa9SK&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=53851d35af19eb2951b53b172b8479ea&oe=5FD0598D

10535573_519635151503713_7546924548181717131_o.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=09cbfe&_nc_ohc=bM9LS89qrFsAX8OvPFL&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=69a1f11c0909923da0a0e4675d067007&oe=5FCEC5D1

 

Céline Gounder, MD, ScM, FIDSA

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ஆனால் ஒற்றுமை தான் குறைவு.

யூதனை போல தமிழர்களும் மூளைசாலிகள் எண்டு சொல்லி வாக்கு கேட்டது அமிர்தலிங்கம் கொம்பனி. அப்பிடியே ஈழத்தமிழர்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்தவர்களும் அதே அமிர்தலிங்கம் கொம்பனிதான்......அதிலை ஒண்டு இரண்டு இப்பவும் மிஞ்சியிருக்குதுகள். அதே வக்கிரத்தை தொடர்ந்து விதைக்குதுகள்.

4 hours ago, தமிழ் சிறி said:

dd

கமலா ஹாரிஸ் அவர்களுக்கு, ஸ்ராலின்... எழுதிய வாழ்த்துக் கடிதம்.

 அன்புள்ள சிறித்தம்பி! கடிதத்தின்ரை மிச்சத்தையும் இணையுங்கோ..... பொழிப்பு எக்கச்சக்கம் அதிலை கிடக்கு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை நாங்கள் யாழ்ப்பாணத்தார், தமிழர் என்றழைப்பதெல்லாம் முக்கியமல்ல! இவர்கள் தங்களை தமிழர், யாழ்ப்பாணத்தார் என்று அழைக்கிறார்களா என்பதே முக்கியம்😎 

(இது சத்தியமாய் என் சொந்தக் கேள்வியல்ல, எடப்பாடியாரைப் பார்த்து பலர் கேட்ட கேள்வி!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

இவர்கள் தங்களை தமிழர், யாழ்ப்பாணத்தார் என்று அழைக்கிறார்களா என்பதே முக்கியம்😎 


மிகச்சரியாக சொன்னீர்கள் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெ. புதிய தலைமை தமிழர்கள் நீதியைப் பெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்

 
suresh-premachandran-011.png
 3 Views

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன், “புதிய தலைவர்கள், இலங்கையில் பல தசாப்தகாலமாக தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் ஈழத் தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு தமது பரிபூரண ஒத்துழைப்பினை காத்திரமாகவும் வினைதிறனுடனும் அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:

அமெரிக்காவிற்கான 46ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோஸப் ரொபினட் பைடன் அவர்கள் ஜனாதிபதியாகவும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஷ் அவர்கள் துணை ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் இதயபூர்வ வாழ்த்துகள்.

ஆபிரிக்க கறுப்பின வழித்தோன்றலான ஒபாமாவை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்த அமெரிக்க மக்கள், தென்னாசியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை துணை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளனர். தேர்தலில் வென்ற அமெரிக்கத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பும் இலங்கையின் அரசியல் தலைவர்கள், இந்தப் புதுமைகளையும் பழகிக்கொள்ளவேண்டும். ஆனால் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இலங்கையில் அரசியல் செய்வோர் மிக மோசமான இனவாதிகளாக உருவெடுப்பது வெட்கக்கேடானதும் வேதனைக்குரியதுமாகும்.

இலங்கை அரசாங்கத்தால் ஈழத் தமிழ் மக்கள் மேல் யுத்தம் திணிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வகைதொகையின்றி கொன்றுகுவிக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச சாட்சியங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, சாட்சியமற்ற யுத்தம் ஒன்று நடாத்தி முடிக்கப்பட்டது. இதனால் மனித உரிமை மீறல்களும், யுத்தக்குற்றங்களும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களும் வகைதொகையின்றி அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு யுத்தத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பல தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா முன்னின்று உழைத்ததை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். ஆனால் இப்பொழுது, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு தன்னால் உடன்படவோ அல்லது அதற்குக் கட்டுப்படவோ முடியாதென கூறி இலங்கை அந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறியுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளையும், உறவுகளையும் தேடி ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் ஆயிரத்து ஐநூறு நாட்களைக் கடந்தும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். உலகமெல்லாம் மனித உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரும் அதன் தெரிவு செய்யப்பட்ட இன்றைய தலைவர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹரீஷ் போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மற்றும் நீதி கோரிநிற்கும் ஈழத் தமிழர்;களுக்காக குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர்களது இழப்புகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு சர்வதேச விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, அவர்களுக்கான நீதி மற்றும் நிவாரணம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தக் குற்றங்களை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மன்றங்களில் பாதுகாப்போம் என இலங்கைக்கு விஜயம் செய்த சீனத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்தவிதமான நீதி விசாரணைகளும் நடாத்த உலக நாடுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. மனித உரிமைகள் குறித்து பேசினால்கூட சீன அரசாங்கம் தாங்கள் அரசுகளுடன் மாத்திரம்தான் உறவுகளைப் பேணுவதாகவும் மனித உரிமைகள் என்பது உள்நாட்டு விவகாரம் என்று தட்டிக்கழிக்கும் போக்கையே காணமுடிகின்றது. இந்த நிலையில், அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதியும் மற்றும் துணை ஜனாதிபதியும் ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போககும்வகையில் அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டிநிற்கின்றோம்.

https://www.ilakku.org/அமெ-புதிய-தலைமை-தமிழர்கள/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்களை தமிழர்களாக அழைக்கிறார்களோ இல்லையோ 
இனத்துக்காகவும் இனத்தின் இருப்புக்கவும் தம்மை ஆதிகியாக்கிய 
வீரர்களையும் அடுத்த தலைமுறையாவது தலை நிமிர்ந்து வாழ வேண்டும்
என்ற எண்ணத்துடனும் உணர்வுடனும் தங்கள் உடலில் வெடிமருந்து சுமந்த 
போராளிகளையும் எதிரிகூட வியந்து பார்த்தவர்களை 
கொச்சையாக அபேசிக்கொண்டு திரிந்து தங்களை அறிவாளிகள் என்று 
காட்ட வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை என்று உறுதியாக கூறுகிறேன் 

நிறை குடங்கள் தளும்புவது இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி விசுவாசிகளை நியமித்தார்

தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி விசுவாசிகளை நியமித்தார்
 

டிரம்ப் நிர்வாகம் பாதுகாப்புத் துறையின் சிவில் தலைமைத்துவ கட்டமைப்பில் பெரும் மாற்றங்களைச் செய்து வைத்துள்ளது. அதன் மிக மூத்த அதிகாரிகளை நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக அதிபரின் விசுவாசிகளை மாற்றியுள்ளது.


அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை நீக்கிய சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகு, பாதுகாப்புத் திணைக்களம் ஒரு அறிக்கையில் அறிவித்த மாற்றங்களின் சீற்றம், பென்டகனுக்குள்  இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளிடையே வளர்ந்து வரும் எச்சரிக்கை உணர்வைத் தூண்டியுள்ளது. 

எஸ்பர், அவரது பணியாளர் தலைவர் மற்றும் கொள்கை மற்றும் உளவுத்துறையை மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகள் உள்பட நான்கு மூத்த சிவில் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு பதிலாக டிரம்ப் விசுவாசிகள் அங்கு மாற்றப்பட்டனர்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் பென்டகனுக்குள் குழப்ப உணர்வை அதிகரித்து உள்ளது. ஜோ பிடன் அதிபர்  தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கபட்டார். ஆனால் இந்த முடிவை டிரம்ப் ஏற்க மறுத்துவிட்டார். குழப்பமான இந்த நேரம் நாட்டின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.

https://www.dailythanthi.com/News/World/2020/11/11133759/Trump-administration-removes-senior-defense-officials.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸிடம் மன்னிப்புக் கோரிய மலேசிய தொலைக்காட்சி

 
1-59-696x365.jpg
 2 Views
கமலா ஹாரிஸ் தாயை சட்டவிரோத குடியேறி எனக் கூறிய மலேசிய தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.
 
அண்மையில் நடந்த அமெரிக்க தேர்தலில், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து செய்தியை வாசிக்கும் போது அவரை சட்டவிரோத குடியேறியின் மகள் எனக் குறிப்பிட்டதற்காக TV3 எனும் மலேசிய தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.
 
கமலா ஹாரிஸ் தந்தை ஜமாக்காவைச் சேர்ந்தவர் என்றும் தாய் இந்தியாவிலிருந்து வந்த சட்டவிரோத குடியேறி என்றும் அத்தொலைக்காட்சி குறிப்பிட்டமை பெரும் விமர்சினத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியிருந்தது.
 
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் மற்றும் கருப்பின துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது. இவரது தாய் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

அவர்கள் தங்களை தமிழர்களாக அழைக்கிறார்களோ இல்லையோ 
இனத்துக்காகவும் இனத்தின் இருப்புக்கவும் தம்மை ஆதிகியாக்கிய 
வீரர்களையும் அடுத்த தலைமுறையாவது தலை நிமிர்ந்து வாழ வேண்டும்
என்ற எண்ணத்துடனும் உணர்வுடனும் தங்கள் உடலில் வெடிமருந்து சுமந்த 
போராளிகளையும் எதிரிகூட வியந்து பார்த்தவர்களை 
கொச்சையாக அபேசிக்கொண்டு திரிந்து தங்களை அறிவாளிகள் என்று 
காட்ட வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை என்று உறுதியாக கூறுகிறேன் 

நிறை குடங்கள் தளும்புவது இல்லை. 

நல்ல மாட்டுக்கு  இல்லை நல்ல மாடுகளுக்கு ஒரு சூடு!! சூடு சுரணை இல்லாட்டி நாங்கள்  ஒன்றும் செய்ய இயலாது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல interesting விளையாட்டு தான். தங்களை தமிழர்களாக காட்டி கொள்ள விரும்பாதவர்களை எங்கள் தமிழன் என்று சொந்தம் கொண்டாடி பெருமை கொள்வது தன்னை தமிழர் என்று சொல்லி கொள்பவர்களை துரோகி, தெலுங்கன் என்று திட்டுவது  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது ஒரு நல்ல interesting விளையாட்டு தான். தங்களை தமிழர்களாக காட்டி கொள்ள விரும்பாதவர்களை எங்கள் தமிழன் என்று சொந்தம் கொண்டாடி பெருமை கொள்வது தன்னை தமிழர் என்று சொல்லி கொள்பவர்களை துரோகி, தெலுங்கன் என்று திட்டுவது  😂

சின்ன திருத்தம் . தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு முதுகில் குத்துபவர்களை அல்லது தமிழர் முதுகிலேறி சவாரிசெய்பவர்களை என்று வரவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது ஒரு நல்ல interesting விளையாட்டு தான். தங்களை தமிழர்களாக காட்டி கொள்ள விரும்பாதவர்களை எங்கள் தமிழன் என்று சொந்தம் கொண்டாடி பெருமை கொள்வது தன்னை தமிழர் என்று சொல்லி கொள்பவர்களை துரோகி, தெலுங்கன் என்று திட்டுவது  😂

இதுக்குள்ளை ஆரை இழுத்துக்கொண்டு வாறியள்?  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இதுக்குள்ளை ஆரை இழுத்துக்கொண்டு வாறியள்?  😎

தொடர்ந்தும் தூண்டில் போட்டபடி தான்.
போனால் மயிர்
வந்தால் மலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வெள்ளை மாளிகையில் முக்கிய பதவிக்கு ரான் கிளைன் தேர்வு - ஜோ பைடன் நடவடிக்கை

வெள்ளை மாளிகையில் முக்கிய பதவிக்கு ரான் கிளைன் தேர்வு - ஜோ பைடன் நடவடிக்கை
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய 77 வயது ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். அவர் ஜனவரி மாதம் 20-ந்தேதி அந்த நாட்டின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

ஆட்சி மாற்றத்துக்கான ஆயத்த நடவடிக்கைகளில் அவரும், அவரது குழுவினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லமான வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார். வெள்ளை மாளிகை நிர்வாகம், ரான் கிளைன் வசம் வரும். வெள்ளை மாளிகையின் மிக முக்கிய பதவி இது. ஜனாதிபதியின் அன்றாட செயல்பாடுகளை நிர்வாகம் செய்வார். வெள்ளை மாளிகையில் இவரது கவனத்துக்கு வராமல் ஒரு துரும்பு கூட அசைய முடியாது.

இவர் ஜோ பைடனின் மூத்த உதவியாளர் ஆவார். 1980-களில் இருந்து ஜோ பைடனிடம் இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது வெள்ளை மாளிகையின் மூத்த உதவியாளராகவும், துணை ஜனாதிபதி அல் கோரின் பணியாளர் குழு தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

ரான் கிளைன் பற்றி ஜோ பைடன் குறிப்பிடுகையில், “அவருக்கு ஆழ்ந்த, மாறுபட்ட அனுபவம் உண்டு. அரசியல் அரங்கில் அனைத்து தரப்பினருடனும் பணியாற்றும் திறனும் இருக்கிறது” என கூறினார். தனது தேர்வு பற்றி ரான் கிளைன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/World/2020/11/13044627/Ron-Klein-elected-to-key-post-in-White-House--Joe.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தொடர்ந்தும் தூண்டில் போட்டபடி தான்.
போனால் மயிர்
வந்தால் மலை.

என்ன செய்ய இப்படியே புலம்பிக்கொண்டு திரிய வேண்டியதுதான், இன்னும் கொஞ்ச நாளில் 

அரசியல் பைத்தியம் - வாழ்க்கை கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனுக்கு ஒருவாரத்திற்கு பிறகு வாழ்த்து தெரிவித்த சீனா..!

ஜோ பைடனுக்கு ஒருவாரத்திற்கு பிறகு வாழ்த்து தெரிவித்த சீனா..!

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஆனால், சீனா, ரஷியா, மெக்சிகோ போன்ற சில நாடுகள் வாழ்த்து தெரிவிக்காததுடன், எந்த கருத்தும் கூறவில்லை. டிரம்ப் நிர்வாகத்தின்கீழ், அமெரிக்க-சீன உறவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இருப்பினும், டிரம்பின் தோல்விக்கு மகிழ்ச்சி அடையும் விதத்தில் கூட சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


இந்நிலையில் ஒரு வழியாக இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம், ஜோ பைடன் மற்றும் ஹாரிஸுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

https://www.dailythanthi.com/News/World/2020/11/13155112/China-Congratulates-Joe-Biden-On-US-Election-Win.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.