Jump to content

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

பார்க்கலாம். 

பொருளாதார அறிவு  வரலாற்று கல்வி அறிவு உள்ள சிங்களவர்கள் 
ராஜபக்சே அரசுக்கு எதிராகவே பேசுகிறார்கள் இதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் 
காரணம் சீனா மெது மெதுவாக இலங்கையை கைப்பற்றிக்கொண்டு இருப்பதாலதான் 
ஒரு கையறு நிலைக்கு இலங்கை போய்க்கொண்டிருப்பதை அவர்கள் உணருகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 203
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் ட்ரம்ப் நூலிழையில் வென்றது போல மட்டுமே பைடன் வெல்லக் கூடிய வழிகள், (மிச்சிகன், விஸ்கொன்சின்) இருக்கின்றன. பென்சில்வேனியாவின் மீதமிருக்கும் 25% வாக்குகள் இப்போதிருக்கும் நிலையை மாற்றும் போல தெரியவில்லை. ஆனால், அரிசோனா நீலமாக வாய்ப்புண்டு. 

சுருக்கமாக: too close to call

ஆனால், உலகத்திற்கும் அமெரிக்காவிற்கும் ஆபத்தான ட்ரம்ப் வந்தால் எமக்கு நல்லம் என்ற மாதிரியான ஈழத்தமிழர் சிலரின் கருத்துகள், நாம் ஏன் சர்வதேச அரங்கில் இன்னும் தோற்றுக் கொண்டேயிருக்கிறோம் என்று விளக்குகிறது! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையவன் மடையன் என்றும் தன்னை மேதாவி என்றும் எண்ணும் தலைக்கணம் எதற்குமே உதவாது. நிற்க,

ட்ரம்புக்கு முன்னாலிருந்தவர்கள் எவரின் ஆட்சியிலும் உலகம் ஆபத்தினை நெருங்கவில்லை அல்லது ஆபத்தில் இருக்கவில்லையென்று ஒருவராலும் கூறமுடியாது. ஏதோ, ட்ரம்ப் வரும்வரையில் உலகம் அமைதிப் பூங்காவாக இருந்ததென்றும், இப்போதுதான் அது போர்க்களமாக மாறிவிட்டதாகவும் வியாக்கியானம் செய்வது வேடிக்கை. ட்ரம்ப்பின் எதிர்வினைகள் ஈரானினதும், சீனாவினதும், வடகொரியாவினதும், ரஷ்ஷியாவினதும் செயற்பாடுகளினாலேயே ஏற்பட்டது. 

சரி, எதுவும் வேண்டாம், இன்று ட்ரம்பினால் தொடங்கப்பட்ட போர் ஒன்றினை இங்கே மற்றையவர்களை எள்ளிநகையாடி தம்மைத்தாமே மேதாவிகள் என்று நாமம் சூட்டிக்கொள்ளும் சிலர் கூறலாமே? 

ஒபாமாவின் ஆட்சியில் பெருமளவு பொருளாதார சலுகைகளுக்காகவும், தம்மீதான பொருளாதார தடைகளை நீக்கவுமே ஈரான் அணுவாயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கு பெருமளவு அமெரிக்க நிதி கைமாறியது. ஆனால், ஈரானின் அணுவாயுத கனவு ஒருபோதுமே நிறுத்தப்படவில்லை, இது உலகம் அறிந்ததுதான்.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையினைத் தொடங்கியதே ட்ரம்ப்தான். ஆனால், வடகொரியாவின் பின்னாலிருந்து அதனை இயக்குவது சீனாதான் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். ட்ரம்ப் ஆட்சிக்கு வருமுன்னமே வடகொரியாவின் ஏவுகணை பரீட்சைகளும், அணுவாயுதம் மீதான அதன் ஆர்வமும் இருந்தன, இப்போதும் அப்படித்தான். 

சீனாவுடனான பொருளாதார பிணக்கில், அமெரிக்க உற்பத்திகளைப் பெருக்கும் நோக்கிலேயே சீன இறக்குமதிகள் மீதான தடையினை  ட்ரம்ப் அரசு கொண்டுவந்தது. அமெரிக்காவின் நலன்களே பிரதானம் என்று ஆட்சிக்கு வந்த ட்ரம்ப் , அதன் மக்களுக்காக செயற்படுவதென்பது கட்டாயமானது. அமெரிக்காவுக்கு ஆபத்தென்று கவலைப்படும் சிலர், அமெரிக்காவின் பொருளாதாரம் கொரொணா ஆரம்பமாகும்வரையிலும் சிறப்பானதாக இருந்ததென்பதை ஏன் பேசுவதில்லை? 

அன்று, ஹிலரியின் தோல்விக்கு ரஷ்ஷியாவின் கணிணிப் பிரிவே காரணம் என்று கூறிய ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களும், ட்ரம்ப் எதிர்ப்பாளர்களும், இன்று ட்ரம்பினால் ரஷ்ஷியாவுடன் மோதும் நிலை உருவாகிவிட்டதென்று கூறுவது வேடிக்கை. 

சரி, இவை எதுவுமே வேண்டாம். ட்ரம்பின் ஆட்சிக்கு முன்னர், ஈழத்தமிழரின் வாழ்வில் அமெரிக்காவின் அரசியல் செலுத்திய தாக்கம் என்ன? அவ்வரசியல் ஈழத்தமிழருக்கு எந்தவிதத்தில் அனுகூலமாக இருந்தது? அது தற்போது எந்தவிதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது? 

இலங்கையில் சீனாவின் இருப்பினைக் காரணம் காட்டி, அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ தலையிடுவதோ, இலங்கைக்கெதிரான நிலைப்பாட்டினை தமிழர்களைப் பாவித்து எடுப்பதோ எந்தவிதத்தில் எமக்குப் பாதிப்பானது? ஆதரிப்போர் எவருமற்று, ஆக்கிரமிப்பாளனின் கருணையில் மட்டுமே உயிர்வாழும் ஈழத்தமிழருக்கு, உயிரற்றிருக்கும் அவர்களின் விடுதலைக்கான அரசியலுக்கு வெளியில் இருந்து வரும் சக்தியொன்றிலிருந்து ஏதாவது ஒரு ஆறுதல் கிடைப்பது ஏன் அவர்களுக்கு ஆபத்தானது? இன்று அசைவற்ற நிலையில் தேங்கி நிற்கும் எமது அரசியல் போராட்டம், ஏதோ ஒருவகையிலாவது மீள ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு நம்பிக்கை நோக்கிப் பயணிப்பது எப்படி எமக்கு ஆபத்தானது? 

சரி, இவை எதுவுமே வேண்டாம், பைடன் ஜனாதிபதியாக வரட்டும். சீனாவுடனும், ரஷ்ஷியாவுடனும் சமாதானம் செய்யட்டும். இதனால் எமக்கு என்ன ஆகிவிடப்போகிறது? 

மற்றையவனை எப்போதுமே மடையன் என்றும் தன்னை மட்டுமே படித்தவன் என்றும் எண்ணிக்கொண்டு கருத்தெழுதுவதை விட்டுவிட்டு, மற்றையவனும் தன்னைப்போலவே படித்தவன் அல்லது விடயம் தெரிந்தவன் என்று ஏற்கின்ற பக்குவம் வரவேண்டும். படித்தவனுக்கு அதுதான் அழகு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Justin said:

2016 இல் ட்ரம்ப் நூலிழையில் வென்றது போல மட்டுமே பைடன் வெல்லக் கூடிய வழிகள், (மிச்சிகன், விஸ்கொன்சின்) இருக்கின்றன. பென்சில்வேனியாவின் மீதமிருக்கும் 25% வாக்குகள் இப்போதிருக்கும் நிலையை மாற்றும் போல தெரியவில்லை. ஆனால், அரிசோனா நீலமாக வாய்ப்புண்டு. 

சுருக்கமாக: too close to call

ஆனால், உலகத்திற்கும் அமெரிக்காவிற்கும் ஆபத்தான ட்ரம்ப் வந்தால் எமக்கு நல்லம் என்ற மாதிரியான ஈழத்தமிழர் சிலரின் கருத்துகள், நாம் ஏன் சர்வதேச அரங்கில் இன்னும் தோற்றுக் கொண்டேயிருக்கிறோம் என்று விளக்குகிறது! 😁

அப்போ எல்லோரும் ஒத்து ஊதிறமாதிரி நாங்களும் பைடேன் வந்தால் நல்லது என்று கூவுவம். இதைத்தானே 11 வருடங்களாய் சிறிலங்காவிலும் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஏதாவது நன்மை? சும்மா வந்து சர்வதேச அரங்கு அது இது என்று பாடமெடுக்க வேண்டியதுதான்.

அதுசரி, பைடேன் வென்றால் அதனால் இலங்கை தமிழருக்கு வரக்கூடிய நன்மையொன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம்? ஒன்றே ஒன்று உங்களையெல்லாம் திரும்பிபோவென்று கலைக்கமாட்டான் அவ்வளவுதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

படித்தவனுக்கு அதுதான் அழகு. 

நீங்கள் கூறுவதெல்லாம் படித்தவர்களுக்கானது ரகு, நான்தான் புத்திசாலி மேதாவி என தம்பட்டமடிக்கும் மேட்டுக்குடிகளுக்கு இது என்றுமே பொருந்தாது, உறைக்காது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Eppothum Thamizhan said:

அப்போ எல்லோரும் ஒத்து ஊதிறமாதிரி நாங்களும் பைடேன் வந்தால் நல்லது என்று கூவுவம். இதைத்தானே 11 வருடங்களாய் சிறிலங்காவிலும் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஏதாவது நன்மை? சும்மா வந்து சர்வதேச அரங்கு அது இது என்று பாடமெடுக்க வேண்டியதுதான்.

அதுசரி, பைடேன் வென்றால் அதனால் இலங்கை தமிழருக்கு வரக்கூடிய நன்மையொன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம்? ஒன்றே ஒன்று உங்களையெல்லாம் திரும்பிபோவென்று கலைக்கமாட்டான் அவ்வளவுதான்!

இப்பிடி முகத்திலை அடிச்சமாதிரி பதிலே இல்லாத கேள்வியை கேட்டால் அவையள் எங்கை போவினம்?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Eppothum Thamizhan said:

அப்போ எல்லோரும் ஒத்து ஊதிறமாதிரி நாங்களும் பைடேன் வந்தால் நல்லது என்று கூவுவம். இதைத்தானே 11 வருடங்களாய் சிறிலங்காவிலும் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஏதாவது நன்மை? சும்மா வந்து சர்வதேச அரங்கு அது இது என்று பாடமெடுக்க வேண்டியதுதான்.

அதுசரி, பைடேன் வென்றால் அதனால் இலங்கை தமிழருக்கு வரக்கூடிய நன்மையொன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம்? ஒன்றே ஒன்று உங்களையெல்லாம் திரும்பிபோவென்று கலைக்கமாட்டான் அவ்வளவுதான்!

இங்கே சர்வதேசம் எங்களுக்குப் புரியவில்லை, சர்வதேசம் எங்களுக்குத் தெரியவில்லை என்று அடிக்கொருதரம் பாடமெடுக்கும் அதிமேதாவிகள் அந்தச் சர்வதேசம் என்று தாங்கள் விளங்கிவைத்திருப்பது என்னவென்பதையாவது இங்கு கூறலாம். ஆனால், அதைச் செய்யமாட்டார்கள், அதுகூட யாரோ சொல்லித்தான் பாடமாக்கி இங்குவந்து உமிழ்கிறார்கள். இவர்கள் கூறும் சர்வதேசம் இவர்களுக்கே வெளிச்சம். 

என்னைப்பொறுத்தவரையில் இவர்கள் சர்வதேசம் என்று பேசுவதே தம்மை மற்றையவர்களிலும் மேலானவர்கள் என்று காட்டவும், எம்மை ஏளனம் செய்யவும் மட்டும்தான். அப்படியென்ன படித்துவிட்டார்கள்? நாம் எவரும் காணாத படிப்பா அல்லது எட்டாத அறிவா? ஏன் இந்த அகம்பாவம்? இங்கே கருத்தெழுதும் பலர் ஏதோவொரு புலம்பெயர் நாட்டில் ஏதோவொரு துறையில் அறிவாளிகளாக, நிபுணர்களாக, அனுபவஸ்த்தர்களாக , கல்வியறிவில் நன்குமுன்னேறியவர்களாகத்தான் இருக்கிறோம். இங்கே எவருக்குமே எவரும் சளைத்தவர்களோ, கீழானவர்களோ, மேலானவர்களோ கிடையாது. அப்படி யாரும் நினைத்தால் அது அவர்களது அறிவீனமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இவர்கள் பீற்றிக்கொள்ளும் இந்த சர்வதேசம் எங்களுக்கு என்ன நன்மை செய்தது புலம்பெயர்ந்தோருக்கான அடைக்கலத்தைவிட? எல்லோரும் ஒன்றாய் சேர்ந்துதான் எம்மவர்களை அழித்தார்கள் அல்லது அழிப்பதற்கு உடந்தையாக இருந்தார்கள்.

எதிரிக்கு எதிரி எமக்கு நண்பன் இதுவே இனி எமக்கான பாதை!

Link to comment
Share on other sites

 Nevada, Arizona, Wisconsin, Michigan ஆகிய மாநிலங்களில் biden முன்னணி வகிப்பதினால் 
அவர் வெல்வதற்கு சாத்தியங்கள் அதிகம் உள்ளது.

Link to comment
Share on other sites

1280px-Electoral_map_2012-2020.svg.pngமாநிலத்தித்துக்குரிய  தேர்தல் கல்லூரி  வாக்குகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரஞ்சித் said:

இவர்கள் சர்வதேசம் என்று பேசுவதே தம்மை மற்றையவர்களிலும் மேலானவர்கள் என்று காட்டவும், 

ஸ்ரீலங்காவில் ரணில் இவ்வளவுகாலமும் அடிச்சுவிட்டமாதிரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

 Nevada, Arizona, Wisconsin, Michigan ஆகிய மாநிலங்களில் biden முன்னணி வகிப்பதினால் 
அவர் வெல்வதற்கு சாத்தியங்கள் அதிகம் உள்ளது.

கடைசில மிக்ஸிகன் வோட்டுக்களை கபளீகரம் செய்றம் அப்புறம் வெல்றம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரஞ்சித் said:

Biden 238 - Trump 213

(Early votes and Absentee ballets)முதல் இருந்தே போட்ட வாக்குகளை ஒழுங்காக எண்ணவிட்டால் பைடன் வெல்லலாம்.
ஆனால் குடியரசுக்கட்சியினர் தேர்தலன்றே வாக்களிக்கிறவர்கள் என்பதால் முதல் போட்ட வாக்குகளை எண்ணவிடாமல் தடுப்பார்கள்.
இதற்கு உதவியாக ஜனநாயககட்சி நீதிபதிகள் உள்ள நீதிமன்றில் நீதி நிஞாயத்தை விட கட்சிக்கே முன்னுரிமை கொடுத்து தீர்ப்பு வரும்.

போததற்கு சுப்றீம்கோட் 9 பேரைக் கொண்ட நீதிமன்றில் கூடுதலானவர்கள் ஜனநாயக கட்சியினர்.

ஆனபடியால் ரம் தான் திரும்பவும் வருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறைய இடங்களில் இப்போதும் வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் MI மற்றும் WI அதிஷ்டவசமாக பெய்டன் பக்கம் திரும்பாதவரை, ரப்புக்குதான் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, theeya said:

இங்கு நிறைய இடங்களில் இப்போதும் வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் MI மற்றும் WI அதிஷ்டவசமாக பெய்டன் பக்கம் திரும்பாதவரை, ரப்புக்குதான் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. 

வாக்களிப்பா? வாக்கெண்ணலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

வாக்களிப்பா? வாக்கெண்ணலா?

பல இடங்களில் வாக்கெண்ணல் முடிந்து விட்டது ஆனால் இன்னும் சில இடங்களில் வாக்களிப்பு நடக்கிறது. உதாரணமாக விஷ்கன்ஷனில் இப்போதும் விடிய விடிய வாக்களிப்பு நடக்கிறது. பென்சில்வேனியாவில் முன்கூட்டிய வாக்களிப்பை எண்ணக்கூடாது என்று வாதிடுகிறார்கள். இறுதியில் எதுவும் நடக்கலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் முடிவுகள் வர இருக்கும் இடங்கள் ரம்புக்கு மிகவும் சாதகமான இடங்கள். ஆனால் விஷ்கன்சன் மற்றும் மிக்ச்சிகனில் பெய்டனுக்கு மெதுவான ஒரு தற்காலிக முன்னேற்றம் தெரிவது போல இருக்கிறது. 

இதுவரை பெய்டன் 238 + விஷ்கன்சன் மற்றும் மிச்சிகன் வென்றால் (26) = 264 (கிட்ட நெருங்கலாம் ) Win இதில் ஒன்றில் பெய்டன் தோற்றாலும் டிரம்ப் வெல்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போங்கய்யா நீங்களும் உங்கடை தேர்தலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

போங்கய்யா நீங்களும் உங்கடை தேர்தலும்.

நோ டென்ஷன் சுவை....இவ்வளவு பொறுத்தனீங்கள் இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்கக்கூடாதா.....!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

போங்கய்யா நீங்களும் உங்கடை தேர்தலும்.

Vadivelu Memes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, theeya said:

சார்! இரண்டு கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்து ஆளுக்கு இரண்டு வருசம் நல்லாட்சி செய்து அதிபராக இருக்கலாம் தானே எண்டு என் நண்பன் கேட்கிறான் சார் 😎

என்னத்தை சொல்ல......தன்ரை மனுசியே பைடனுக்கு வோட் பண்ணிடும் எண்ட மனப்பயம் போல....😜

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

சார்! இரண்டு கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்து ஆளுக்கு இரண்டு வருசம் நல்லாட்சி செய்து அதிபராக இருக்கலாம் தானே எண்டு என் நண்பன் கேட்கிறான் சார் 😎

கல்லோ, புட்டினோ,

இஞ்சை டிரம்ப்.... ம்....ம்..... நடக்கட்டும், நடக்கட்டும்....

பிடனை.... ஓட, ஓட திரத்தோனும்... நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கல்லோ, புட்டினோ,

இஞ்சை டிரம்ப்.... ம்....ம்..... நடக்கட்டும், நடக்கட்டும்....

பிடனை.... ஓட, ஓட திரத்தோனும்... நடக்கட்டும்.

இல்லை பாருங்கோ இஞ்சை ஜேர்மனியிலை ட்ரம்ப் வந்திட்டால் என்ன செய்யிறதெண்டு இப்பவே மூக்காலை அழ வெளிக்கிட்டாங்கள்......😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.