Jump to content

விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு


Recommended Posts

http://maridhasanswers.com/wp-content/uploads/2018/12/f-indonesia-forests-a-20160405-870x582.jpg

விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு

விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு. இரண்டையும் குழப்பும் சமூகத்திற்கு என் இந்தப் பதிவு சமர்ப்பணம்:

விவசாயம் – விவசாயி என்றால் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் மாணவர்கள் இளையவர்கள் கவனத்திற்காக இந்தப் பதிவை வெளியிடுகிறேன். தவிர நான் விவசாயத்திற்கு எதிரானவனோ விவசாயிகளுக்கு எதிரானவனோ அல்ல. ஆனால், நிலத்தடி நீரைப் பாதுகாக்க, கண்மூடித்தனமாக பயன்படுத்துவதை முறைப்படுத்த விரிவான திட்டத்துடன் நரேந்திர மோடி அவர்கள் மேற்கொள்ள இருக்கும் முயற்சியை எடுத்த எடுப்பில் தவறாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர் அற்பன் நக்ஸல்வாதிகள், பிரிவினைவாதிகள்.

எனவே விவசாயத்தின் இன்னொரு உண்மை முகத்தை மக்களுக்கும் மாணவர்களுக்கும் உணர்த்துவதே இந்த பதிவின் நோக்கம்.
————————————————————————– 
01) விவசாயம் செய்கிறேன் பேர்வழி என்று மழைக்காடுகள் அழிக்கப்பட்டது உண்மை:

பூமியின் மொத்த நிலப்பரப்பில் பெரும் பகுதி இயற்கையை அழித்தது விவசாயம் செய்ய போகிறேன் என்று மனிதன் கிளம்பிய கடந்த 1000 ஆண்டுகளில் தான். இன்று எதை எல்லாம் விவசாயம் பூமி என்று நீங்கள் பேசுகிறீர்கள் அது எல்லாம் ஒரு காலத்தில் நல்ல காடுகள். அந்தக் காடுகளை அழித்துத் தான் விவசாயம் பூமிகளை மனிதன் உருவாக்கினான். முக்கியமாக நதிக்கரைகளில் அமைந்த அனைத்துக் காடுகளையும் பெரும்பாலும் அழித்து விவசாய நிலங்களாக மாற்றினான். மிக சமீபத்திய காலம் வரை அது உண்மை.

சமீபகாலம் வரை காடுகளை அழிக்கிறார்களா? என்று நீங்கள் ஆச்சரியப்படத் தேவை இல்லை. ஆம் உண்மை.

தென் அமெரிக்க நாடுகளில்:

இந்த உண்மையை உணர நாம் Global Forest Watch கொடுக்கும் ஆய்வு தகவல்களை பார்க்கவேண்டும் – அதன்படி 1970களுக்கு பின் கடந்த 40வருடங்களில் சுமார் 750,000 Square kilometers அமேசான் காடுகளை அழித்து இன்று அந்த இடம் முழுவதும் செழிப்பான விவசாயம் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 3,420 Square meters. அப்படி என்றால் எத்தனை ஆயிரம் சென்னை அளவு காடுகள் அழிக்கப்பட்டு அங்கே இன்று விவசாயம் நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறதா? 

தோராயமாக அமேசான் மழைகாடுகளின் சுமார் 18,53,29,036 Acres பரப்பளவு உள்ள காடுகள் விவசாயம் செய்யப் போகிறோம் என்று அழிக்கப்பட்டுள்ளது. அங்கே இன்று விவசாயம் நடக்கிறது. பிரேசில், பெரு, கம்போடியா, வெனிசுலா, கயானா என்று தென் அமெரிக்க நாடுகள் என்னவோ விவசாயத்தைக் காப்பாற்றுவதாகவும், விவசாயத்தை விரிவுப்படுத்துவதாகவும் நினைத்துக் கொண்டு இந்த மழை காடுகளை அழித்து நாசம் செய்துவிட்டு மழைவளம் குறைவதற்கு முக்கிய வேலையைச் செய்து முடித்தனர். தெளிவாகக் கூறினால் 60-70% காடுகள் அழித்து அந்த இடத்தை மாடுகள் ஆடுகள் பண்ணைகள் உருவாக்கியுள்ளனர்; 25-35% காடுகள் அழித்து அங்கே முழு நேரம் விவசாயம் செய்கிறார்கள்; மீதி இடங்களில் வீடுகள், சுரங்கங்கள் இருக்கின்றன. 

நம்ம ஊர் போராளிகள் போல அங்கே இருக்கும் போலி இயற்கை ஆர்வலர்கள் எல்லாரும் அந்த 2% காரணமான சுரங்கங்கள் தான் அதன் உரிமையாளர்கள் தான் மழை வளம் குறைவுக்கு காரணம் என்று போராட்டம் நடத்த மக்களைத் தூண்டினார்கள். இது எப்படி இருக்கு?

தெற்காசிய பிராந்தியத்தில் ஈவு இரக்கம் இல்லாமல் பாமாயில் (Palm Oil) விவசாயம் என்ற பெயரில் காடுகள் அழிக்கும் வேலையை முக்கியமாக தெற்காசியா முழுவதும் நடந்தது. மலேசியா, இந்தோனேசியா இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு மழைக்காடுகளை அழித்து பாமாயில் மரங்கள் வைத்து தோப்புகள் உருவாக்கினார்கள். {ஒருவேலை இங்கே உலகம் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேவை இது போல் அதிகம் ஆகி இருக்கும் என்றால் நாம் காடுகளை அழித்து தென்னை மரங்கள் நட்டு இருப்போம். இன்று இங்கே இருக்கும் தென்னம் தோப்புகள் போல் தான் பாமாயில் தோப்புகள். இந்த இரண்டு நாட்டு பாமாயில் விவசாயத்தால் அழிக்கப்பட்ட காடுகள் அளவு சுமார் 2,22,39,484 ஏக்கர். மனசாட்சி தொட்டு கூறுங்கள் யார் பூமியில் இந்த அளவிற்குக் கொடூரமாக காடுகளை அழித்தது?}

Mighty Earth அமைப்பின் ஆய்வு தகவல்படி உலகத்தில் ஒட்டுமொத்த கோகோ சாகுபடி உற்பத்தியில் ஆப்பிரிக்கா பிராந்தியம் ஐவரி கோஸ்ட் மட்டும் 40% கோகோ உலகத்தின் தேவைக்கு ஏற்றுமதி செய்கிறது. இதற்கு அது கொடுத்துள்ள விலை? கொஞ்சம் நஞ்சம் அல்ல – Etelle Higonnet வெளியிட்ட Chocolate’s Dark Secret ஆய்வு தகவல் வரை கூறும் உண்மை இது தான் Single Origin Dark Chocolate அதாவது மிகத் தரமான சாக்கலேட் செய்வதற்குத் தேவையான கோகோ பிசினஸ் என்று உச்சத்தை எட்டியதோ அதற்காக சுமார் 3,44,79,332 ஏக்கர் நிலப்பரப்பில் 80% அழித்து இன்று அங்கே கோகோ மரங்கள் விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள். அதாவது யானைகள், சிம்பன்சி குரங்குகள் நீர் யானைகள் பெரும் முதலைகள் என்று பல 1,000 உயிர்கள் வாழ்விடம் இன்று விவசாயிகளால் அழிக்கப்பட்டுள்ளது. எவனாவது இந்த விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் அவர்களைத் தூக்கில் ஏற்றினாலும் தகும். இது போல் பெரு ஈக்குவேட்டர் என்று பல நாடுகளில் விவசாயிகள் ஆடி இப்போது தான் கொஞ்சம் புரிந்துக் கொண்டுள்ளார்கள்.

இன்னும் ஒவ்வொரு நாடுகளிலும் விவசாயம் என்ற பெயரில் மனிதன் இயற்கையை என்ன என்ன செய்கிறான் என்ற தகவலை என்னால் முழுமையாகத் தரமுடியும். கொஞ்சம் யோசிக்கவும் இது எந்த வகையில் ஆபத்தானது?

01) ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு நீங்கள் வண்டி ஓட்டினால் சுமார் 2.3 kg கார்பன்டை ஆக்சைடு வெளிவரும். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் ஆண்டுக்கு சுமார் 2.6 tons கார்பன்டை ஆக்சைடை சுத்திகரிப்பு செய்யும். ஆனால் அந்த காடுகளை அழித்து ஒரு ஏக்கர் நிலத்தில் நீங்கள் நெல், கோதுமை பயிரிடுவதால் என்ன ஆகும்? உங்களுக்கு உணவு கிடைக்கும். ஆனால் கார்பன் சுத்திகரிப்பு?

02) அடுத்து, மழைக்காடுகள் என்று ஏன் கூறுகிறோம் என்றால் அந்தக் காடுகளில் உள்ள மரங்கள் தொடர்ந்து நீர் மூலக்கூறுகளை நீராவியாக்கல் மூலம் வெளியேற்றும் அதன் காரணமாக மேகங்கள் மிக எளிதாக மழைக்காடுகள் அதன் சுற்றுப்புறங்களில் வெகுவாக உருவாவதும், கவர்ந்திழுக்கப்படுவதும் நடக்கும். இது நேரடியாக மழை வளத்தைக் கொடுக்கும். மலைக்காடுகள் கொண்ட மரங்களை நீங்கள் அகற்றிவிட்டு அங்கே விவசாயம் செய்தால் மேகங்கள் எப்படி உருவாகும்? உருவாக மேகங்கள் எப்படி கவர்ந்திழுக்கப்படும்? மழைவளம் குறைய காரணம் மழைக்காடுகள் அழிப்பது தான்.

பிரச்சனை புரிகிறதா? ஆக விவசாயம் செய்வதை ஒருபக்கம் முக்கியம் என்றால் – அதை விட அதிக முக்கியம் மழைக்காடுகள் பாதுகாப்பு. கடந்த 70 வருடத்தில் மட்டும் அமேசன் காடுகளில் ஏற்பட்ட பாதிப்பு மட்டும் 18,53,29,036 Acres பரப்பளவு என்றால். உலகம் முழுவதும் எத்தனைக் கோடி ஏக்கர் நிலத்தை நாம் விவசாயம் செய்கிறோம் என்று அழித்தோம்? கொடுமை என்னவென்றால் இயற்கை விவசாயம் என்று பேசும் நபர்கள் கூட உரங்கள், அது இது என்று கூறுகிறார்களே தவிர இயற்கையை அழித்து விவசாய பூமிகளை உருவாக்கிய வரலாற்றைப் கூற மறுக்கிறார்கள்.

சரி உலகத்தை விடுங்கள் நம்ம ஊர் விவசாயிகளைப் பற்றி பேசுவோம். இப்படி உலகத்தில் விவசாயம் என்ற துறைமூலம் நடக்கும் நாசங்களை அந்த அந்த நாடுகளில் கேள்வி எழுப்பி விவாதம் ஆக்கி அவர்களைக் கண்டித்து சரியான மாற்றத்தை கொண்டுவர முயற்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டில் மட்டும் விவசாயம் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்ற கெட்ட பழக்கம் இருக்கும் என்றால் அது இந்தியா தான். விவசாயம் என்ற போர்வையில் 10 லட்சத்திற்கு டிராக்டர் வாங்கியவன் எந்தக் காசும் திருப்பிக் கட்டாமல் – 40% தள்ளுபடி மானியம் கொடுத்தும் கட்டாமல் முழுமையாக அரசைத் தள்ளுபடி பண்ணுங்கள் நான் விவசாயி என்று மிரட்டலாகக் கூற முடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆக இனி நம் நாட்டில் விவசாயிகளால் நடக்கும் தவறுகள் காண்போம்.
———————————————————————
02) விவசாயம் என்ற பெயரில் நிலத்தடி நீர் கொள்ளை:

நீர் என்பது ஆக அவசியமான ஒன்று. அதன் ஒவ்வொரு துளியையும் சரியாகப் பயன்படுத்த நாம் சிந்திக்க வேண்டும். ஆனால் என்ன இங்கே நடக்கிறது என்றால் கொக்கோ கோலா நிறுவனமா தண்ணீர் எடுக்கிறது என்று அவர்களைக் குற்றம்சாட்டும் நம் இணையப் போராளிகள் அந்த கொக்கோ கோலா நிறுவனம் தண்ணீரை எடுத்து ஒன்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவில்லை. அந்த அந்த மாநிலங்களில் சர்பிலஸ் தண்ணீரை எடுத்து அந்த மாநில மக்களுக்குத் தான் விற்கிறது.

ஆனால் விவசாயம்?

அரபிய நாடுகளுக்கு மட்டும் நாம் ஆண்டுக்கு 9,97,22,300 கிலோ கோதுமை ஏற்றுமதி செய்கிறோம். ஒரு கிலோ கோதுமை உற்பத்தி செய்ய சராசரியாக 410 முதல் 945 லிட்டர் தண்ணீர் தேவை. அப்படி என்றால் சவுதி அரபியாவிற்கு மட்டும் 49,86,10,00,000 லிட்டர் தண்ணீரை மறைமுகமாக ஏற்றுமதி செய்கிறோம். 124.6 மில்லியன் டன் கோதுமையை நாம் ஏற்றுமதி செய்கிறோம். அப்போ எவ்வளவு நீர் ஏற்றுமதி செய்கிறோம்? அட நீங்களே கணக்கு போடுங்கள். மிக எளிமையாக உங்களுக்குப் புரியும் படி கூறினால் 1,76,600 குடும்பங்களின் ஆயுள் முழுவதும் தேவையான தண்ணீரைத் தான் ஒரே ஆண்டில் சவுதி அரேபியா என்ற நாட்டுக்கு மட்டும் ஏற்றுமதி செய்கிறோம்! காரணம் மறைமுகமாக இந்த விவசாயம் தானே! அப்போ மற்ற தானியங்கள் பலங்கள் காய்கறிகள் எல்லாம் சேர்த்தால்? மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் அளவைச் சேர்த்தால்? உண்மையில் இந்த நாட்டில் இருந்து தண்ணீர் ஏற்றுமதி செய்வது விவசாயிகள் தானே தவிர வேறு எந்த பெரும் நிறுவனமும் அல்ல.

Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)

2016-17 ஆண்டின் புள்ளிவிவரபம் கொடுக்கும் தகவல் படி:

– பாஸ்மதி அரிசி = 405,67,58,620 கிலோ (1 கிலோ பாஸ்மதி அரசி விளைச்சலுக்கு 2,000-5,000 லிட்டர் தண்ணீர் தேவை) 
– பிற அரிசிகள் = 864,84,88,580 கிலோ (1 கிலோ பிற அரசி விளைச்சலுக்கு 2,000-4,000 லிட்டர் தண்ணீர் தேவை) 
– வெங்காயம் = 158,89,85,000 லட்சம் கிலோ (1 கிலோ வெங்காயம் விளைச்சலுக்கு 159-200 லிட்டர் தண்ணீர் தேவை)

இப்படி எடுத்து நீங்கள் கணக்கிட்டுப் பாருங்கள் இந்த நாட்டில் இருந்து யார் தண்ணீரை ஏற்றுமதி செய்கிறார்கள் – யாரால் தண்ணீர் கொடூரமாக கண்மூடிதமாக பயன்படுத்தப்படுகிறது என்று புரியும். நாம் ஏற்றுமதி செய்யும் முக்கிய விவசாய பொருட்கள் 1.பாஷ்மதி அரிசி 2.இதர அரிசிகள் 3.காய்கறிகள் 4.பழங்கள் 5.பழங்கள் மூலம் கிடைக்கும் ஜூஸ் போன்றவை 6.கடலை 7.தேங்காய் இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். இவை அனைத்திற்கும் நீர் தேவை இருக்கிறது. அந்த நீர் ஆதாரம் எது? மழை பொழிந்து அந்த நீரில் விவசாயம் என்றால் சரி , ஆறுகளில் கிடைக்கும் தண்ணீர் கொண்டு விவசாயம் என்றால் சரி – ஆனால் நிலத்தடி நீரை எடுத்து விவசாயம் செய்து ஏற்றுமதி என்பது எவ்வளவு பெரிய தவறு? அனைத்துக் கிணறுகளையும் இன்று நீர் இல்லாமலேயே போகிக்கொண்டிருக்கிறது. பின் அடுத்த தலைமுறைக்கு?

இந்த நிலத்தடி நீர் சிக்கலை உணராது போனால் உங்கள் அனைவருக்கும் எமனாக நிற்கப் போவது இதே விவசாயம் தான் நான் இதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏன்? உலகம் முழுவதும் எங்கெல்லாம் விவசாயிகள் நிலத்தடி நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த ஆரம்பித்தனரோ அங்கே எல்லாம் இன்று பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடுகள் உருவாகி வருகிறது. காரணம்? நிலத்தடி நீர் என்பது மீண்டும் அதன் மட்டத்தை அடைவதற்கும் எந்த அளவிற்கு ஆதாரம் இருக்கோ அந்த மட்டத்தில் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது?

எடுத்துக்காட்டுக்கு:

நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் கிடைக்கும் என்ற கணக்கு வேண்டும் Depth to Water Level. அத்தோடு மழைக்காலத்திற்கு முன் மழைக்காலத்திற்குப் பின் அந்த அளவு எவ்வளவு என்ற கண்காணிப்பு வேண்டும். இதைச் செய்வது CGWB (Central Ground Water Board, Ministry of Water Resources). அதன் படி தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் 14 பிளாக் இருக்கிறது. அதில் ஒரு பிளாக் திருமங்கலம் என்ற பகுதி (திருமங்கலம் பார்முலா ஞாபகம் உள்ளதா அந்தப் பகுதி தான்).

இந்த திருமங்கலத்தை நீர்வளத்துறை தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை (longitude and latitude) வைத்து 24 பகுதிகளாகப் பிரித்துள்ளது. எந்த இடத்தில் எவ்வளவு நிலத்தடி நீர் உள்ளது என்பதை மழைக்காலத்திற்கு முன் பின் என்று தெளிவாக எடுக்கிறார்கள். ஒரு இடத்தில் நிலத்தடி நீர் மீண்டும் கூடவில்லை என்றால் அந்தப் பகுதிகளில் எச்சரிக்கையாக அரசு செயல்பட வேண்டும். இது நிர்வாக விவரம். ஆனால் இந்த நிலத்தடி நீர் வரத்து இருபதை விட எடுத்து அதைப் பயன்படுத்தும் அளவு அதிகமாக இருக்கிறது. இதை அதிகம் செய்வது விவசாயிகள் தான் – 1996களுக்கு பின் இது வேகமாக வளர்ந்து இன்று தண்ணீர் வறட்சி மெல்ல உருவாகி வருகிறது.

இந்த இடத்தில் நன்கு புரிந்து கொள்ளுங்கள் :

நாட்டின் மொத்த தண்ணீரில் 85.3% தண்ணீர் யார் பயன்படுத்துகிறார் தெரியுமா – விவசாயிகள் தான். வீடுகளில் குளிக்க குடிக்க ஆரம்பித்து பெரும் நிறுவனங்கள் எல்லாம் சேர்த்தால் 15 முதல் 18% அளவில் தான் தண்ணீர் பயன்படுத்துகிறார்கள். விவசாயிகள் தான் நாட்டின் 85% அளவிற்கான தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். (உலகத்தின் 97% தண்ணீர் கடல்களில் இருக்க – 2.5% அளவிற்கு நிலத்தடி நீர்தான் உள்ளது.}. அதில் பாதிக்கும் மேல் நிலத்தடி நீர். ஆக நிலத்தடி நீரை எடுத்து விவயசம் செய்து பல லட்சம் டன் அரிசி காய்கறி பழம் என்று ஏற்றுமதி மூலம் தண்ணீரை அதுவும் நிலத்தடி நீரை ஏற்றும் மதிசெய்யும் செய்வது எந்தத் துறை? இதே விவசாயம் தான்.

{இதை ஒழுங்குப்படுத்தவில்லை என்றால் – அதுவும் நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்தவில்லை என்றால் நாளை தண்ணீருக்கு அலைந்த இந்த மக்கள் கொடூரமான ஒரு உலகத்தைச் சந்திப்பர். அதாவது தண்ணீர் முடிவுக்கு வந்துவிட்டது என்றால் ஆப்ரிக்காவை விட மோசமான வருமையைச் சந்திப்பீர். எனவே இருப்பதைக் காப்பாற்றி கொள்ள 85% தண்ணீரைப் பயன்படுத்தும் இந்த விவசாயத்தை முறைப்படுத்துவது என்ன தவறு இருக்கிறது. நிலத்தடி நீரை முறைப்படுத்த நரேந்திர மோடி அவர்கள் ஆலோசனை வழன்கியுள்ளார் அதற்கான திட்டமும் தயார். ஆனால் இங்கே அதை நக்சல் ஆதரவாளர்கள் இப்போதே நிலத்தடி நீருக்கும் அரசு கட்டுப்பாடு கொண்டுவந்து விவசாயிகளை அடிமையாக்கப் பார்க்கிறது என்று குழப்பும் வேலையை ஆரம்பித்துவிட்டனர். திருமுருகன் போன்றவர்கள் கலத்தில் இதைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

இதை என்ன சொல்லி இப்போ புரியவைப்பது மக்களிடம்? படித்தவனே புரிந்துக்கொள்ள மாட்டான் – இதில் படிக்காத மக்கள்?
——————————————————- 
03) விவசாய கடன் தள்ளுபடி என்னும் தற்கொலை முடிவு:

Sowing (விதைப்பதற்கு), Transplanting (நாத்து நடவு), Weeding (களையெடுத்தல்), Fertilizer Application (உரம், பூச்சிகொல்லி மருந்து தெளிப்பு), Irrigation (தண்ணீர் பாசனம் செய்வது), Harvesting (அறுவடை) என்ற அனைத்து விவசாய வேலைக்கும் காலம் காலமாக வேலை செய்தவர்கள் விவசாய கூலிகள் இவர்கள். இவர்களிடம் பெரும்பாலும் நிலம் கிடையாது. அடுத்தவரது நிலத்திற்குக் கூலி வேலை செய்து கொடுப்பவர்கள். தின கூலி , மொத்தமாக வாங்கிய கடனுக்கு கூலி என்று பலர் உண்டு. இவர் எந்தக் காலத்திலும் வங்கியில் கடன்வாங்கியவர் கிடையாது. கடன் வாங்கின நம்ம வட்டிக்கு விடும் நபர்களிடம் தான் வாங்கவேண்டும். வசதி இல்லாதவனுக்கு எதை நம்பி கடன் கொடுப்பான்? அதிகபட்சம் தவணையாக 1,000 ரூபாய் 2,000 ரூபாய் வாங்கும் ஏழைகள் இவர்கள். இவர்கள் தான் 60% மேல் விவசாயத்தில் இருப்பவர்கள். இவர்களுக்குக் கடன் தள்ளுபடியால் என்றுமே எந்த பலனுமே கிடைத்தது இல்லை.

இரண்டாவது 4,5 ஏக்கர் வைத்துள்ள நடுத்தர விவசாயி. பொதுவாகக் குடும்பமாக தங்கள் நிலத்தில் வேலை செய்பவர்கள் இவர்கள். இவர் அதிகபட்சம் 15,000 , 20,000 ரூபாய் வாங்கும் நடுத்தர விவசாயி. அதுவும் அவசர தேவைக்கு மட்டுமே என்பதால் அதிகம் வங்கிகள் பக்கம் வருவதை விடத் தெரிந்தவர்கள், கமிசன் மண்டி போன்றவற்றில் வாங்கிவிட்டுத் திரும்ப கொடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இவர்களில் மிகக் குறைவான வர்கத்தினர் வங்கிகளில் கடன் வாங்குவது உண்டு.

மூன்றாவதாக வருவது நம்ம நாட்டாமைகள். 50 ஏக்கர், 200 ஏக்கர் என்று இவர்கள் பெரும் விவசாயிகள் தான் அதிகம். இந்த டிராக்டர் வாங்குவது முதல் அனைத்து வகையிலும் வங்கியைப் பயன்படுத்தும் கூட்டம் இது. 5 லட்சம் 10 லட்சம் எல்லாம் இவர்கள் தான் வாங்குவது. ஆக அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறுவது நியாயமே இல்லாத கோரிக்கை. இது முதலில் புரிகிறதா?

2008-09 மொத்தம் ₹60,000 கோடி மத்திய அரசு தள்ளுபடி செய்தது. எப்படி மீண்டும் வெறும் 8 வருடத்தில் இவ்வளவு பெரிய கடன் உருவாகிவிட்டது? இப்போ 2010ல் இருந்து வாங்கிய வங்கிக் கடனை எல்லாம் தள்ளுபடி செய்யக் கூறி மீண்டும் விவசாயிகள் போர்வையில் போராட்டத்தைத் தூண்டி விடுகிறார்கள். இன்று தள்ளுபடி கொடுத்தால் 2010முதல் 2030 வரை கடன் வாங்கி அதைத் தள்ளுபடி செய்ய கூறி 2030ல் போராட்டம் நடத்துவர். ஆகக் கடன் வாங்குவோம் அதைக் கட்டாமல் அடுத்த பத்தாண்டுகளில் போராட்டம் நடத்தி தள்ளுபடி செய்யக் கூறுவோம்? இது எப்படி இருக்கு?! அனைவரும் நஷ்டம் ஆகிவிட்டனர்? 50 ஏக்கரில் 10 லட்சம் 20 லட்சம் டிராட்க்டர் வாங்கி அதையும் கட்டமாட்டேன் தள்ளுபடி செய்யுங்கள் என்று வந்து நிற்பது எல்லாம் அயோக்கியத்தனம்.

அப்படி என்றால் நம்ம கொஞ்சம் புள்ளி விவரம் பார்க்க வேண்டும்:

Ministry of Agriculture & Farmers Welfare 
Department of Agriculture, Cooperation & Farmers Welfare 
Directorate of Economics and Statistics

இவர்கள் கொடுக்கும் தகவல்படி என்ன நமக்குப் புரிகிறது என்றால் 2010 முதல் 2016 வரை எப்படியான நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.

2010-11 ஆண்டு புள்ளிவிவரப்படி:

அரசி 96.0 Million Tonnes 
கோதுமை 86.9Million Tonnes 
பருத்தி 330.0Million Tonnes 
மற்ற தானியங்கள் 43.4Million Tonne 
மொத்த தானியங்கள் உற்பத்தி என்றால் 226.3 Million Tonnes

பால் உற்பத்தி : 116.4Million Tonnes 
முட்டை : 60267(Million Nos.) 
மீன் : 7998(000’ Tonnes)

2015-16 ஆண்டு புள்ளிவிவரப்படி:

அரசி 104.8 Million Tonnes 
கோதுமை 88.9Million Tonnes 
பருத்தி 354.8Million Tonnes 
மற்ற தானியங்கள் 41.8Million Tonne 
மொத்த தானியங்கள் உற்பத்தி என்றால் 235.5 Million Tonnes

பால் உற்பத்தி : 137.7Million Tonnes 
முட்டை : 74752(Million Nos.) 
மீன் : 9574(000’ Tonnes)

பெரிய வளர்ச்சி இல்லை. விவசாயம் 5% கீழ் தான் இருக்கிறது (4.1%வளர்ச்சி). ஆனால் பெரிய வீழ்ச்சி நிச்சயம் கிடையாது. இது புரிகிறது தானே? {தொடர் விவசாய வேலை ஆட்கள் குறைவு, வேலை ஆட்கள் பணி கூலி அதிகம் போன்ற காரணங்களும் விவசாயம் பலர் விட்டுவிட.} ஆக நமக்கு ஒன்று புரிகிறது. விவசாயம் செய்பவர்களில் ஒருசாரார் தற்கொலை செய்யும் நிலையில் இருக்க இன்னொரு பக்கம் நல்ல விவசாயம் நடக்கிறது. ஆக அனைவருக்கும் விவசாய கடன் தள்ளுபடி என்பது முட்டாள்தனமான பேச்சு. உண்மையில் வருமையில் வாடுபவர்களுக்குக் கூட விவசாய தள்ளுபடி நிரந்தர தீர்வாகாது. 
——————————————–
04) சிந்தனையில் என்ன மாற்றம் தேவை:

கிராமப்புற மேம்பாடு என்பது விவசாயத்தை நம்பிதான் இருக்க வேண்டும் என்று எதுவும் விதி இருக்கிறதா என்ன? எதற்கெடுத்தாலும் கிராமம் என்றால் விவசாயம் சார்ந்து தான் பொருளாதாரம் இருக்க வேண்டும் என்று எண்ணுவது சரியான பார்வை இல்லை. 6,000 கோடி போட்டு நீங்கள் இலவச டீவி மிக்சி கொடுத்து அது 1 ஆண்டில் பழுதாகி குப்பையாக – அதற்குப் பதிலாக மாநிலம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாத அளவு பின்தங்கிய 1,000 கிராமங்களைத் தேர்வு செய்து அந்தப் பகுதி மக்களுக்குச் சிறு குறு தொழில் செய்யும் மெசின்ஸ் கொடுத்திருந்தால் நாட்டின் உற்பத்தித் திறனை கூட்டி இறக்குமதியைக் குறைத்திருக்கலாமே?! {கேட்டால் படிக்காத மக்கள் என்று எதாவது சொல்வது. இன்று கிராமங்களில் படித்து மாணவர்கள் வந்துவிட்டனர். அவர்களை நம்பி களத்தில் இறங்கி இருக்க வேண்டும். எதற்குச் சென்னை தேடி வந்து வேலை செய்யவேண்டும்? அவன் ஊரிலேயே சின்ன சின்ன உற்பத்தி செய்ய அதைக் கொள்முதல் செய்து சந்தை படுத்தச் சரியா திட்டமிடல் எதாவது நாம் செய்தோமா? 70,000 கோடி கொண்டு போய் குப்பையில் வீசினோம்.

“பொருளாதாரம் மேம்பட விவசாயத்தை விட்டு வெளியேறி வேறு வேலைகளைத் தேடலாம் தவறு இல்லை”. உடனே ஒரு கூட்டம் சோறு சோறு சோற்றுக்கு எங்கே போவேனு சாப்ஃட்வேர் நிறுவனத்தில் 80,000 ரூபாய் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டு அடுத்தவன் கஷ்டம் புரியாமல் நாட்டின் கஷ்டமும் விழங்காமல் – நான் பாருங்கள் விவசாயத்திற்குக் குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று எதையாது கருத்து தெரிவிப்பது. அப்படி ஆட்களுக்கு, உலக வங்கியின் தகவல்படி:

ஆஸ்திரியா : 1983ல் 9.92%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 4.53% மட்டுமே. 
பிரேசில் : 1981ல் 29.25%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 10.29% மட்டுமே. 
கனடா : 1963ல் 8.2%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 1.64% மட்டுமே. 
பிரான்ஸ் : 1969ல் 14.28%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 2.9% மட்டுமே. 
அமேரிக்கா : 1960ல் 9%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 1.61% மட்டுமே.

ஆசியாவில் :

பிசிப்பென்ஸ் : 1971ல் 50.39%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 29.15% மட்டுமே. 
சீனா : 1978ல் 70.53%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 28.3% மட்டுமே. 
தாய்லாந்து : 1971ல் 76.72%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 32.28% மட்டுமே.

ஆக உலகம் முழுவதும் விவசாயம் சார்ந்து இருப்பவர்கள் குறைகிறார்கள்? அது தவறே இல்லை. உணவு உற்பத்தி என்று பார்த்தால் எல்லா நாடுகளுமே வளர்ச்சியில் தான் உள்ளன. 

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்: 1950களில் வெறும் 50million tonnes உணவு உற்பத்தி மட்டுமே செய்த நாம் – இன்று 264 million tonnes உணவு உற்பத்தி செய்கிறோம். அதே போல் தான் சீனாவும் 1950களில் வெறும் 110million tonnes உணவு உற்பத்தி என்றால் இன்று அது 500million tonnes மேல் சென்றுவிட்டது. அதாவது sowing (விதைப்பதற்கு) , transplanting (நாத்து நடவு), weeding (களையெடுத்தல்), fertilizer application (உரம், பூச்சிகொல்லி மருந்து தெளிப்பு), irrigation (தண்ணீர் பாசனம் செய்வது), harvesting (அறுவடை) என்று அனைத்துக் கூலி வேலைகளுக்கும் இயந்திரங்கள் வந்துவிடக் கூலி ஆட்களாக கஷ்டப்பட்ட சமூகம் படித்து வெளியேறுவது தான் நல்லது. அதனால் தான் அதிகம் விவசாயம் சார்ந்து இருப்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது.

இப்போது படித்து விட்டு வெளியேறும் அனைவருக்கும் சென்னை, கோவை நகரத்தில் வேலைக் கொடுத்துவிட முடியாது. அரசு வேலையும் 1% கூட கிடையாது. இப்படி ஒரு பக்கம் இருக்க, நாட்டில் ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக் என்று அனைத்து உதிரிப் பாகங்களும் இறக்குமதி ஆவது என்ன சரி? உங்களுக்கு தேவையானதை உற்பத்தி செய்து கொள்ள உங்களுக்கு ஏற்பாடு இல்லை. அந்த உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் மெசின் எல்லாம் சுமார் 2 , 5 , 10 லட்சம் தான் ஆகும். அதிகப்படி போனா 20 – 30 லட்சம் ஆகும். 7,000 கோடி கலர் டீவி கொடுத்ததற்கு 70,000 பேருக்கு 10,000 லட்சம் மதிப்பில் இப்படி உற்பத்தி Small Scale Industries Machine வாங்கிக் கொடுத்திருந்தால் அவன் அவன் அவனது பொருளாதாரத்தை முன்னேற்றி இருக்க முடியுமே? லெதர் பேட்ஜ், சின்ன சின்ன அலங்கார விலக்குகள் ஆரம்பித்து உங்களைச் சுற்றி பாருங்கள் குட்டி குட்டி பொருட்கள் நிறைய இருக்கு. அதில் பாதி இறக்குமதி தான் ஆகுகிறது – அதை எல்லாம் உற்பத்தி செய்ய கிராமங்களை நாடுவது தான் நலம். 
———————————————————– 
இறுதியாக:

மனிதன் முதலில் விவசாயத்தைப் பெருக்குவதை விட – உணவை வீணடிக்காமல் இருந்தாலே போதும் பூமி குளிரும். Food and Agriculture organization (FAO) கொடுக்கும் தகவல்படி மனித உணவு உற்பத்தி செய்து அதில் மூன்றில் ஒரு பங்கை வீணடிக்கிறான். ஆனால் உணவு உற்பத்தியைக் கண்மூடித்தனமாக அதிகரிக்க விரும்புகிறான். ஆண்டுக்கு இந்தியாவில் 88,800 கோடி மதிப்பிலான உணவுப் பொருட்களை வீணடித்துவிட்டு “விவசாயம் கூட்ட வேண்டும்” என்று வெக்கம் இல்லாமல் மீம்ஸ் போடுகிறான்? இதில் எவ்வளவு பெரிய தவறு? கோயம்பேடு மார்கெட் போங்க தாராளமாக ஒரு கணக்கு எடுங்கள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் ஒவ்வொரு நாளும் இவ்வளவு உணவு வீணாகிறதா என்று.

ஆக மாணவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டிய விசயம் இதுவே “விவசாயம் வேறு – இயற்கையை காப்பாற்றுவது என்பது வேறு. விவசாயம் மனிதன் தன் உணவு தேவைக்காக உருவாக்கிக் கொண்ட துறையே அன்றி இயற்கையைக் காப்பாற்ற அல்ல. ஆறுகளின் படுக்கைகளில் இருந்த மலைக்காடுகள் பலவும் அழித்து விட்டு விவசாய நிலங்களாக மாற்றியவனும் இவனே. வேறு எந்தத் துறையைவிடவும் விவசாயத்தால் தான் இயற்கை கடந்த காலங்களில் உலகம் முழுவதும் அழிவை அதிகம் சந்தித்தது என்பது எதார்த்தமான உண்மை.

SBI வங்கி இப்படி அறிவித்தது “25 லட்சம் மேல் ட்ராக்டர் போன்ற விவசாய கருவிகள் வாங்கிய கடனை ஒரே தவணையாக கட்ட 40% வட்டி சலுகை அறிவித்தது – ஆனால் கட்டுவதற்கு தான் மனசு இல்லை இந்த நாட்டாமைகளுக்கு. காரணம் ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் மொத்தமாகக் கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அது யாருடைய காசு? ஒரு வீடு வாங்க 2 EMI ஓட்டுத் தனக்கென்று ஒரு சொந்த வீடு வாங்கி அதைத் தக்கவைத்து கொள்ளப் போராடும் நடுத்தர வர்க்கத்தினர் கட்டும் வரிப்பணம் அது. தண்ணீரை ஏற்றுமதி செய்வதை விட உன் அறிவை – அதன் மூலம் உருவான தொழில் நுட்பத்தை , உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதுவே நாட்டிற்கும் எதிர்கால சந்ததிக்கும் நல்லது. கிரமாபுறங்களுக்கு மாற்று பொருளாதார சிந்தனையை சிந்திக்கும் நேரம் இது. விவசாயம் மட்டுமே கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு காரணம் என்று நினைப்பதே ஒரு வியாதி பிடித்த சிந்தனை.

நான் கண்மூடித்தனமாக விவசாயத்தை ஆதரிப்பேன் என்று நீங்கள் இருந்தால் – நிலத்தடி நீரை பாதுகாக்க நீங்கள் முயற்சி செய்யவில்லை என்றால் ஆம் ஆப்ரிக்கா நாடுகள் போல வறட்சி வந்து இந்த நாட்டில் அனைவருமே தண்ணீர் பஞ்சத்தைச் சந்திப்போம். அன்று அதற்குக் காரணம் அரசு, ஆட்சியாளர்கள், கார்ப்பரேட் என்று யாரும் இல்லை – நாட்டின் 80% தண்ணீரைப் பயன்படுத்தும் விவசாயத்தை – அவர்கள் நிலத்தடி நீரை எடுப்பதை முறைப்படுத்தாமல் விட்டதே காரணம் என்று உணர்வீர்.

இது உண்மை இதை ஏற்பதும் ஏற்காததும் இயற்கைக்கு ஒரு விசயமே அல்ல – நீ உணராது போனால் கொடூரமான எதிர் விளைவை உன் குழந்தைகள் சந்திக்கும்.

“நிலத்தடி நீரைப் பாதுகாக்க, கண்மூடித்தனமாக பயன்படுத்துவதைத் தடை செய்ய விரிவான திட்டத்துடன் நரேந்திர மோடி அவர்கள் மேற்கொள்ள இருக்கும் முயற்சியை எடுத்த எடுப்பில் தவறாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர் அற்பன் நக்ஸல்வாதிகள், பிரிவினைவாதிகள். வெறும் மத காரணத்தால் அந்த மனிதரை எதிர்க்கும் சில மதவெறியர்கள். மேலே இருப்பதைப் படித்தவனுக்கே சொல்லிப் புரிய வைப்பது கடினம் – இதில் மக்களுக்கு எப்படி?”

-மாரிதாஸ்

http://maridhasanswers.com/2018/12/27/விவசாயம்-வேறு-இயற்கை-என்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.