Jump to content

‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது எதற்காக? அதன் அரசியல் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும்?


Recommended Posts

‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது எதற்காக? அதன் அரசியல் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும்?

US-potitics.pngமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான். இந்தப் பின்னணியில், “பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசு அமெரிக்காவிடம் இருந்து தப்ப முடியாது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கின்றார்.

kuna--150x150.jpgசம்பந்தன் எதற்காக அவ்வாறு சொன்னார்? அவரது நோக்கம் என்ன? இதனால் உருவாகப்போகும் அரசியல் விளைவு என்ன? தமிழ் தலைவர்கள் இப்போது என்ன செய்யவேண்டும்? என்பது குறித்து பிரபல எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளருமான குணா கவியழகன் முக்கியமான சில கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். அவரது கருத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.

“சம்பந்தன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். பொறுப்புக் கூறல் விடயத்தில் இனிமேலும் அமெரிக்காவிடம் இருந்து இலங்கை தப்ப முடியாது என்று அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதனால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் என்ன என்ற கேள்வி இந்த இடத்தில் அனைவரிடமும் எழுகின்றது.

அமெரிக்க நிகழ்ச்சி நிரல் என்ன?

ஏனெனில் பூகோள அரசியலைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கியமான காலகட்டம். புதிய கதவுகளைத் திறப்பதோ; பூட்டுவதோ என்ற காலகட்டம். இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சம்பந்தன் வெளியிடக்கூடிய அறிக்கைகள் – பேட்டிகள் – தெரிவிக்கக்கூடிய கருத்துகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இப்படியான ஒரு அறிக்கை வெளியிட வேண்டிய தேவை சம்பந்தனுக்கு எதற்காக ஏற்பட்டது?

gota-mike.600.pngபொம்பியோவின் இந்த வருகையின்போது யாருமே எதிர்பார்க்காத வகையில், “அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாங்கள் வரமாட்டோம்” என்ற ஒரு கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த போதும் அதனை முடிந்தளவிற்கு தாமதித்து, 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்து தங்களுடைய ராஜபக்ஷ வம்சத்தின் ஆட்சியைப் பலப்படுத்திய ஒரு பின்னணியிலேயே அமெரிக்க இராஜாங்க அமைச்சரை அவர்கள் அழைத்திருந்தார்கள். இதுவும் ஒரு முக்கியமான இராஜேந்திர நிகழ்ச்சி. தங்களை சட்டரீதியாக – அரியலமைப்பு ரீதியாகப் பலப்படுத்தி கொண்டுள்ள ஒரு பின்னணியிலேயே அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வருகையை அவர்கள் எதிர் கொண்டார்கள்.

ராஜபக்‌ஷக்களின் உள்நாட்டுப் பலம்

சிங்கள – பௌத்த மக்களுடைய தலைமைத்துவமாக அவர்கள் இருப்பதுதான் உள்நாட்டு ரீதியாக அவர்களுடைய பலம். அதாவது சிங்கள பௌத்த மக்களுடைய உணர்வுகளை அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். அதுதான் அவர்களுடைய பலம். இது உள்நாட்டில் அவர்களுடைய பலம். அவருடைய சர்வதேச பலம் சீனா.

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது இலங்கையின் பிரதான கொடையாளி நாடாக இருந்தது ஜப்பான் தான். ஜப்பான் – இலங்கை உறவு மிகவும் பலமானது. ஜப்பான் கொடுக்கக்கூடிய உதவிகளை கொண்டுதான் இலங்கை தன்னுடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடிய நிலைமை காணப்பட்டது.

இருந்தபோதிலும் அண்மைக் காலத்தில் அந்த நிலை மாறிவிட்டது. கடந்த 10 வருட காலத்தில் சீனா அந்த இடத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த முறையில் சர்வதேச ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு சீனாவின் உதவி அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது.

உள்நாட்டு ரீதியில் சிங்கள பௌத்த ரீதியான மன உணர்வு தங்களைப் பாதுகாக்கும் என்ற நிலைமையும், சர்வதேச ரீதியாக சீனாவுடனான உறவு தம்மைப் பாதுகாக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் ராஜபக்சக்களிடம் உள்ளது.

இந்த நிலைமையில் சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கும் கருத்து எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? உள்நாட்டு ரீதியாக பார்க்கும்போது சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச வம்சத்தைப் பலப்படுத்த வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை இது ஏற்படுத்தக்கூடியது. இந்த வகையில் தமிழ் மக்களுக்கு எதிரானதாக இந்த மன உணர்வுகள் கட்டி அமைக்கப்படலாம்.

Easter-Attack-768x432.jpgகடந்த ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த பதட்ட உணர்வும் அச்சமும், முஸ்லிம் பயங்கரவாதம் ஒன்று வரப்போகின்றது என்ற பீதியும்தான் ராஜபக்ச வம்சத்தை பலமான முறையில் மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்திருந்தது. படித்த சிங்களவர்கள் கூட ராஜபக்ஷக்கள் பலமான முறையில் வந்தால் தான் இந்த நிலைமையில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியும் என்ற ஒரு கருத்தை கொண்டிருந்தார்கள்.

சிங்கள மக்களின் அச்சம்

தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான மன உணர்வுகள் சிங்கள பௌத்த திரட்டப்பட்ட கூட்டு உணர்வாக இருக்கிறது. அதுதான் அவர்களது பலம். இந்த நிலைமையில் சம்பந்தன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தமிழ் மக்கள் தங்களுக்கு எதிராக சர்வதேச சக்திகளுடன் கூட்டணி அமைத்து நாட்டை பிளவுபடுத்த போகின்றவர்கள், சிங்கள மக்களுடைய வாழ்க்கையைச் சிதைக்கப் போகின்றார்கள் போன்ற உணர்வுகளை – அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடியது.

அமெரிக்கா மற்றும் அதனோடு இணைந்து செயற்படக்கூடிய நாடுகளுடன் இணைந்து இந்த நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு தமிழர்கள் செயற்படுகிறார் என்ற உணர்வு ராஜபக்ஷ வம்சத்தை மேலும் மேலும் பலப்படுத்துவதுவதாக அமையும். அந்த வகையில் இந்த நாட்டு ஆட்சியாளர்கள் மேலும் பலம் அடைவதும் – அதிலும் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளுடன் அவர்கள் பலம் அடைவது என்பது தமிழ் மக்களுக்கு விமோசனமா? அல்லது அழிவா?

அப்படியானால், ஏன் இவ்வாறான அறிக்கையை சம்பந்தன் வெளியிட்டார்?

sampanthan-010.pngமுள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும்போது இனப்படுகொலை என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து, இதனை போர்க்குற்றம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினார்கள். அதன் பின்னர் சர்வதேச விசாரணை என்பதை மாற்றி அமைத்து கலப்பு விசாரணை என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின்னர் உள்ளக விசாரணையை ஏற்றுகொள்வது என்ற நிலைப்பாட்டுக்கு வந்தார்கள். அதன் பின்னர் ஐநா சபையின் விசாரணைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கொடுப்பது என்பதை இரண்டு தடவைகள் ஏற்றுக் கொண்டவர்களும் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான்.

கூட்டமைப்பு செய்தவை என்ன?

முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சினையை – அதனுடைய கொதி நிலையை – அதனுடைய வாய்ப்புகளை தரமிறக்கிவந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். அவ்வாறு இருக்க கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்ட கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் ஒத்துழைத்த கூட்டமைப்பு, சர்வதேச சக்திகளின் தேவைக்கு ஏற்ற நடந்து கொண்ட கூட்டமைப்பு, இப்போது இவ்வாறான ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது, அதுவும் எந்த சர்வதேச சமூகம் இந்த அழிவுக்கு காரணமாக இருந்ததோ – இந்த அழிவுக்கு பின்னர் பௌத்த சிங்கள அரசு வளர்ச்சிக்கு அவர்கள் ஒத்துழைத்து அவர்களுடைய நலன்களைப் பெற்றுக்கொண்டார்களோ, அவர்கள் சிங்கள தரப்பினை தண்டிக்கப் போவதாக அறிக்கை வெளியிடுவது சிங்கள பௌத்த மத உணர்வை தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்புவதாக அமையும் என்பது மட்டுமன்றி, ராஜபக்ஷ வம்சத்தை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாகவே அமையும்.

அதேவேளையில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு, சீனாவுடன் இணைந்து செல்வது சரியானதுதான் என்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் இது உதவுவதாக அமையும்.

சம்பந்தன் கருத்தும் சிங்கள உணர்வும்

இல்லையென்றால் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தவறானது என்ற ஒரு கருத்து சிங்கள மக்கள் மத்தியில் உருவாகியிருக்கலாம். சிங்கள எதிர்க்கட்சிகளும், அரசுக்குள் இருக்கக்கூடிய அதிருப்தியாளர்களும், “ராஜபக்‌ஷ வம்சம் தமது நலன்களுக்காக வெளியுறுவுக்கொள்கையைக் கையாண்டது தவறானது” என்ற ஒரு கருத்து உருவாகியிருக்கும்.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுத்தாமல் சம்பந்தன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சிங்கள சக்திகளை ராஜபக்ஷ வம்சத்தினுடைய வெளியுறுவுக் கொள்கை -அதாவது சீனாவை கையாளுவதற்கான அவருடைய வழி சரியானதுதான் என்று ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கின்றது.

இந்த அரசாங்கத்தினுடைய உள்நாட்டு பலத்தையும் சர்வதேச பலத்தையும் மேலும் அதிகரிப்பதாக இந்தக் கருத்து அமைந்திருக்கின்றது. அதன் மூலமாக எந்த ஒரு நல்ல விளைவையும் நாங்கள் எதிர்பார்க்க முடியாது. அதாவது தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான ஒரு கொதி நிலைமையை மீண்டும் ஏற்படுத்துவதாகவும், அரசாங்கத்தை பலம்பெற வைப்பதற்கும் உதவுவதாகத்தான் இந்தக் கருத்து அமைந்திருக்கின்றது.

சம்பந்தன் எதற்காக அவ்வாறு சொன்னார்?

சம்மந்தன் ஐயா எதற்காக இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டார்? இது நிச்சயமாக கட்சி அரசியல் நலன்களை நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர வேறு எதுவும் இதில் இல்லை. கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவு ஒன்றைச் சந்தித்திருக்கின்றது.

இந்த நிலையில், நடைபெறக்கூடிய ஒரு காரியம் தங்களுடைய இராஜதந்திர நகர்வுகள் மூலமாக தங்களுடைய வீராவேசச் செயற்பாட்டின் மூலமாகத்தான் நடைபெறுகின்றது என்பதைக் காட்டிக்கொள்வது ஒன்றுதான் சம்பந்தனின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். தவிர இதில் எந்த விதமான இராஜதந்திர நகர்வும் இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ் மக்களுடைய எதிர்காலம் என்று பார்த்தால் இந்த அறிக்கை அவர்களுக்கு ஆபத்தே தவிர இதன் மூலமாக எந்த ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.

இந்த இடத்தில் கூட்டமைப்புத் தலைமை என்ன செய்திருக்க வேண்டும்?

 

மௌனமாக இருப்பதே தந்திரம்

தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த இடத்தில் மௌனமாக இருப்பதன் மூலமாகவே எங்களுடைய பேரத்தை நாங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கமுடியும். இரண்டு சக்திகள் மோதும் நிலையில் அதுதான் எமக்கு இருக்கக்கூடிய இராஜதந்திரம். சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முற்படும். அவ்வறான நிலையில், இலங்கை அரசாங்கம் தமிழர்களை நோக்கித் தான் வரவேண்டியிருக்கும். அதாவது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இனப்படுகொலை போன்றவற்றை அடிப்படையாக வைத்துத்தான் அதற்கான அழுத்தத்தை சர்வதேசம் கொடுக்க முற்படும். அவ்வாறான நிலைமையில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை நோக்கி தான் வர வேண்டி இருக்கும்.

அதேபோல சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொடுக்க வேண்டுமாக இருந்தால், அவர்களுக்கும் இலங்கை தமிழர்களுடன் ஆதரவுதான் அவசியம். ஏனென்றால் தமிழ் மக்கள் தங்களுடைய தலையீட்டை வேண்டி நிற்கின்றார்கள் என காட்டிக் கொள்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு அது தேவையானதாக இருந்திருக்கும். அந்த வகையில் இரண்டு தரப்புக்களுக்குமே தமிழ் மக்கள் தேவையாக இருக்கும் நிலை உள்ளது. இந்த நிலைமையில் மௌனமாக இருப்பதும், எந்தத் தரப்பு தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய முற்படுகிறது அவர்கள் மூலமாக நம்முடைய நலன்களைப் பேணிக் கொள்வது தான் தற்போது இருக்கக்கூடிய ஒரு இராஜதந்திரம்.

தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச தரப்பின் பக்கத்தில் நாம் நிற்பதாக காட்டிக் கொள்வதன் மூலமாக எதனையும் சாதித்துவிட முடியாது. அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான போட்டி அதிகரிக்கும் நிலைமையில் தமிழ் மக்களுடைய பேரம் அதிகரிக்கும். அதற்காக பொறுமையாக இருப்பது தான் தற்போது கையாளக்கூடிய இராஜதந்திரம். கட்சி அரசியலை இப்போது தூக்கி எறிந்துவிட்டு மக்கள் நலன்களுக்காக இவர்கள் செயற்பட வேண்டும்.

https://thinakkural.lk/article/85828

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியலிலும் உள்னாட்டு அரசிலிலும் சிங்கள அரசின் தமிழர் சார்ந்த அணுகு முறையிலும் செயற்பாடுகளினதும் பின்னணியில் எப்போதுமே ஒரு மறைந்த செயல்திட்டமும் இராஜதந்திரமும் இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இந்த கூற்று சரிதான் என்பதை உணர கடந்த காலங்களில் எங்களுக்கு பலமுறை அனுபவ வாயிலாக சந்தர்ப்பங்களும் கிடைத்துள்ளது.

சிங்கள அரசியல் தலைவர்களின் இந்த உயர் மட்ட அரசியல் நகர்வுகளை சாதரண பாமர ஜனங்களும் அரசியல் அறிவற்றவர்களும் புரிந்து கொள்வது கடினம் என்பது போன்ற பொதுவான ஒரு கருத்தும் இங்கே உள்ளது.

மாறாக எமது தமிழ் தலைவர்கள் அல்லது பொதுவாக சொல்லபோனால் தமிழ் தரப்பு என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் பின்னணியில்  தமிழ் மக்களுக்கு (ஏன் சிங்கள மக்களுக்கும் கூட) இலகுவில் புரியாத ஆனால் தமிழினத்துக்கு நன்மைபயக்கும் மறைமுகமான நிகழ்ச்சி நிரலோ உயர் மட்ட இராஜ தந்திரமோ வேறு ஏதாவது தொலை நோக்கு திட்டமோ இருந்து அதை அரசியல் ஆய்வாளர்கள் எடுத்து விளக்கினால் மட்டுமே பாமர ஜனங்களுக்கு புரியும் என்ற நிலை இதுவரை இருந்ததுண்டா?

வேறு விதமாக சொல்வதாகின் ஒரு பாமர சிங்களவர் இலங்கையில் தமிழ் தரப்பின் அரசியல் நகர்வுகளை சாதாரண பத்திரிகை செய்தியை வைத்தே புரிந்து கொள்ள முடியும் என்பதும் சாதாரண தமிழர்கள் சிங்கள அரசின் அரசியலை புரிந்து கொள்வதாயின் ஒரு அரசியல் ஆய்வாளர் வந்து விளக்கி சொன்னால் தான் உண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.