Jump to content

வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

அப்படியல்ல பிள்ளையான் ரெஜிமென்ற்
கருணா ரெஜிமென்ற்  டக்ளஸ் ரெஜிமென்ற்
இப்படித்தான் வரும்

அதைவிட ஆலோசனையில் இருப்பது சுமந்திரன் ரெஜிமென்ற் 

சரியாகச் சொன்னீர்கள் வாத்தியார். ஒட்டிக்கொண்டிருந்து காட்டிக்கொடுத்ததுகள், கூட்டிக்கொடுத்ததுகள்  எல்லாம் தொண்டர் அடிப்படையில் செய்த பணி இனிமேல் உத்தியோக பூர்வமாக்கப்படும்.

Link to comment
Share on other sites

51 minutes ago, உடையார் said:

நீங்கள் தான் பனை உற்பத்திக்கு நல்ல கேள்வியிருக்கு என்று சொன்னீர்கள், இப்ப இப்படி கேட்கின்றீர்கள்,

என் மனதிலும் ஆசையை விதைத்துவிட்டு. ஒருவரை இப்படி ஏமாற்றலாமா?😁

தோலகட்டி வயினும் புகையிலையும் பனை உற்பத்தியல்ல. பனையோலை பொருட்களுக்கு, முக்கியமாக பாய்க்கு உள்ளூரில் நல்ல சந்தை உள்ளது. அதன் உற்பத்தி செலவை குறைப்பது பற்றியும் தொழில்மயமாக்குவது பற்றியும் கலந்துரையாடினோம். செயற்திட்டம் பற்றி பின்னர் பேசுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இந்த வாய்ப்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கீழ்நிலை உழியர்களாக இருந்தாலும் பரவாயில்லை, உயர் இரணுவ அதிகரிகளுடன் நெட்வோர்க் செய்து, பல அதிகாரிகளுடன் ந்ல்லுறவை வளர்த்து கொள்வதனால் சிறையில் வாழும் பல அப்பாவி அரசியல் கைதிகளை தாங்கள் சிறு முயற்சியினூடாக விடுதலை செய்ய முயலலாம். ஆனாலும் தமிழர்கள் அப்படி செய்வார்களா தெரியவில்லை. அதற்கும் பணம் கேட்பார்கள்.

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 போர் முடிவுற்ற காலப்பகுதியில் பேசப்பட்ட 2 விட்யங்கள்
1. தமிழர்களை கொண்ட இராணுவ பிரிவு
2. சீனாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்
இவ்விரண்டு விடயங்களில் உள்ள ஒரு ஒற்றுமைத்தன்மை பற்றி பலர் அப்போது பேசியிருந்தனர், இன்றைய காலகட்டத்தில் இரண்டாவது தெரிவிற்கு இலங்கை செல்லாது, ஆனால் இந்த தமிழ் இராணுவப்பிரிவில் தமிழர்கள் இணைவது தமக்கு தாமே குழி பறிப்பதற்கு ஒப்பாகும், அத்துடன் வரலாற்று ரீதியாக இலங்கை தனது இந்திய எதிர்ப்பை பல வடிவங்களில் காட்டி வந்துள்ளது ஆரம்பத்தில் அமெரிக்காவினது மன்னாரில் இயங்கிய வானொலி இந்திய தொலை தொடர்புகளை கண்காணிப்பதற்கு உதவி செய்த இலங்கை அரசு, கிழக்கு பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானிற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதித்தது,
ஆனால் இந்த தமிழ் இராணுவப்பிரிவு என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், இதனால் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீழ முடியாத புதை குழிக்குள் தள்ளப்படுவதற்கு இந்த தமிழ் ஆளுனர் ஒரு கோடாரி காம்பு போல் பயன்படுத்தப்படுகிறார், தமிழ் மக்களின் அழிவு ஒரு நீண்ட தொடர்கதையாகிவிடும்,நாம் யாருடைய வம்புக்கும் போகமல் இருப்பதே நலம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

தோலகட்டி வயினும் புகையிலையும் பனை உற்பத்தியல்ல. பனையோலை பொருட்களுக்கு, முக்கியமாக பாய்க்கு உள்ளூரில் நல்ல சந்தை உள்ளது. அதன் உற்பத்தி செலவை குறைப்பது பற்றியும் தொழில்மயமாக்குவது பற்றியும் கலந்துரையாடினோம். செயற்திட்டம் பற்றி பின்னர் பேசுவோம்.

யாழில்IBC தமிழ் ஒரு பனம் பொருள் கைத்தொழில் பேட்டை நடத்துறகிது.அங்கு பல பொருட்க்கள் உற்பபதியாகிறது.அவர்களிடமும்
பெற்றுக் கொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

தோலகட்டி வயினும் புகையிலையும் பனை உற்பத்தியல்ல. பனையோலை பொருட்களுக்கு, முக்கியமாக பாய்க்கு உள்ளூரில் நல்ல சந்தை உள்ளது. அதன் உற்பத்தி செலவை குறைப்பது பற்றியும் தொழில்மயமாக்குவது பற்றியும் கலந்துரையாடினோம். செயற்திட்டம் பற்றி பின்னர் பேசுவோம்.

சும்மாதான் - உங்கள் முயற்ச்சி வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

தமிழ் இராணுவப்பிரிவு என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,

ஏற்கெனவே சில முன்னாள் போராளிகளை இராணுவத்தில் சேர்க்கிறோம் என்று சில முன்னாள் பெண்போராளிகள் இணைக்கப்பட்டனர். அவர்களில்  சிலர் பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாக கிளிநொச்சி வைத்திய அதிகாரி ஒருவர்  தெரிவித்திருந்ததாக அறிந்தேன். ஒருவேளை இலங்கையை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்  நோக்கில், புலிகளை தோற்கடிக்க முந்திக்கொண்டு உதவிய பல நாடுகள் முயற்சிக்கின்றன. அவர்களுக்கிடையில் போர் ஏற்படுமாயின் சீனாவின் உந்துதலோடு நம்மவர் பலிக்கடாவாக்கப்படலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை அவ்வளவு கேனையா மட்டம்தட்டிடக்கூடாது சும்மவே போலீஸ் அதிகாரங்களை தருகிறான் இல்லை ஆளுநரின் கற்பனையான கருத்து அவ்வளவே .

 

Link to comment
Share on other sites

On 5/11/2020 at 14:51, அக்னியஷ்த்ரா said:

இவர்கள் அப்படியெல்லாம்  இராணுவத்திலிருந்து கொண்டு ஆடினால் இராணுவத்திற்கே  கெட்ட பெயர் 
வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையாகப்போயிடும் என்று சிங்களவனுக்கே தெரியாதா, போட்டு முறிக்கும் முறியில் குடல் வாயால் வரும் , பல்கலை போன பார்ட்டிகளுக்கே தலைமைத்துவ பயிற்சி என்று கொடுத்த ட்ரைனிங்கில்  ICU  இல் வாரக்கணக்கில் கிடந்த கதைகளும் உண்டு 

வசதியாக வாழபவர்களுக்கு இதெல்லாம் விளங்காது. விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதுவார்கள். எதாவது உதவி செய்துவிட்டு எழுதினால் பரவாயில்லை. இது அவர்களது வாழக்கை பிரச்சினை. உரிமை பிரச்சினை இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.