Jump to content

9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட்

pslv-c49-with-latest-earth-observation-satellite-eos-01-9-others-lifts-off சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்வி- சி49 ராக்கெட் : படம் உதவி |ட்விட்டர்
 

ஸ்ரீஹரிகோட்டா

இஓஎஸ்-1 உள்பட 9 செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி- சி49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இஸ்ரோ சார்பில் பிஎஸ்எலவி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை 7-ம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

 

இதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று நண்பகல் 1.02 மணிக்குத் தொடங்கியது. இந்த ராக்கெட்டுடன் சேர்ந்து வணிக ரீதியாக 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டது. ஒரு செயற்கைக்கோள் லிதுவேனியாவைச் சேர்ந்தது; 4 செயற்கைக்கோள் லக்சம்பர்க்கைச் சேர்ந்தவை; மற்றவை அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

1604744277756.jpg

இஓஎஸ்-1 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளைத் துல்லியமாக மேற்கொள்ளும்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை மக்கள் காணும் வகையில், ட்விட்டரில் நேரலை செய்ய இஸ்ரோ ஏற்பாடு செய்தது.

இதன்படி இன்று பிற்பகல் 3.02 மணிக்கு திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட வேண்டும். ஆனால், விண்ணில் செலுத்துகையில் சில இடையூறுகள் இருந்ததால், 10 நிமிடங்கள் தாமதமாக 3.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டிலிருந்து இஓஎஸ்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்து புவிநீள்வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது. அதேபோல, மற்ற வணிகரீதியான 9 செயற்கைக்கோள்களும் பிரிந்து புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டன.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு திட்டமிட்டபடி எந்தவிதமான செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. பிஎஸ்எல்வி ராக்கெட் வகையில் இது 51-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/india/599325-pslv-c49-with-latest-earth-observation-satellite-eos-01-9-others-lifts-off-1.html

10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்

10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி வருகிறது.

பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக நம் நாட்டுக்குச் சொந்தமான செயற்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இவற்றுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் திட்டமிட்ட இலக்குகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி வருகிறது.
 
தற்போது பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.


 
இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களையும் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

இந்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து ஏவ ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

26 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் பிற்பகல் 3.02 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கவுண்ட்டவுன் நேரம் 5 நிமிடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட் புறப்படும் நேரம் 3.12 மணியாக மாற்றப்பட்டது. அதன்படி 3.12 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. 

இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட், செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/07151950/2049934/PSLVC49-lifts-off-successfully-from-Satish-Dhawan.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.