Jump to content

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு!

கொரோனா தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி  யாழ்.மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில்  ஆலயத்தில்  கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் யாழ் மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் பெரியகுளம் நாகவிகாரை யில் விசேடவழிபாடு நடாத்தப்பட்டது.

குறித்த வழிபாட்டில் யாழ் மாவட்ட  அரசாங்க அதிபர் , யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ,வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ,யாழ்மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும்  பொலிஸார் கலந்து கொண்டனர்.

தற்போதுள்ள  சுகாதார நடைமுறைக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த  வழிபாடு சிறப்பாகஇடம் பெற்றது.

http://athavannews.com/யாழ்-மாவட்டச்-செயலகத்தி-4/

Link to comment
Share on other sites

மஹாதேனமுத்தாவின் வழித்தோன்றல்களின் புதிய முயற்சி:
 
களனி ஆற்றுக்குள் நீர்ப்பானைகளை வீசி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஹெலிகொப்டரில் இருந்து மந்திரித்த நீரை தெளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தப் பதிவு மற்றவருடைய மத நம்பிக்கைகளை விமர்சிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதல்ல. மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி அரசியல் வியாபாரம் செய்பவர்களை அம்பலப்படுத்துவதற்காக பதியப்பட்டது. தனி நபருக்கு ஒரு கஷ்டம் வரும் போது அல்லது அவருடைய அன்பானவருக்கு கஷ்டம் ஏற்படும் போது நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம், நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறோம், பல்வேறு சடங்குகளை கடைபிடிக்கிறோம் அனைத்து மதங்களிலும் காணப்படும் இந்த நம்பிக்கைகளை விமர்சிப்பது தவறானதாகும். ஆனால் இங்கே மக்களை ஏமாற்றுவதற்கும் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கும் ஊடகங்களை அழைத்து பொதுமக்களின் நன்மைக்காக செய்கிறோம் என்ற பெயரில் பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செயல்களை செய்து அவற்றை விளம்பரப் படுத்துவது ஏற்றுக் கொள்ளப்படமுடியாதது என்பதுடன் இவ்வாறான மூடநம்பிக்கைகள் மக்களை விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்ட நோய் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதில் இருந்து திசைதிருப்பி நோய் பரவும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இவற்றை அம்பலப்படுத்துவது மனிதகுலத்துக்கு செய்யும் சேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் அற்ற சுதேச மருந்துகளை பயன்படுத்துவது கடந்த காலத்தில் அமெரிக்க அதிபர் ஆதாரம் அற்ற hydroxy chloroquine என்னும் மருந்தை பயன்படுத்த அனுமதி அளித்து அதன்காரணமாக அதிகளவு உயிராபத்து ஏற்பட்டதுக்கு இணையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கீழ் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மருந்தியல் துறை சார் வைத்தியநிபுணர்களினால் சுதர்ஷன என்ற பெயரில் அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆயுர்வேத மருந்தானது பயனுள்ளது என்பதற்கான விஞ்ஞான ஆதாரம் எதுவும் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசியல் அனுகூலம் பெறுவதற்காக ஆற்றில் பானையை போடுவது உலங்கு வானூர்தியில் இருந்து மந்திரிக்கப்பட்ட நீரை வீசுவது போன்ற நாடகமாடும் செயல்கள் 21ம் நூற்றாண்டில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களை உண்மையான நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து கவனத்தை திசை திருப்பி உள்ளது. நோய்ப்பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தாதியர்களுக்கு நோய் தொற்று ஏற்படவில்லை என்பதால் அதுபோல நாமும் கொரோனவுடன் அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. தாதியர்கள் நோயாளிகளை பராமரிக்கும் போது முழு உடலையும் மூடி பாதுகாப்பு அங்கி அணிந்தே தம்மை பாதுகாத்துக் கொள்கின்றனர். அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தொடர்ந்து இவ்வாறான பாதுகாப்பு அங்கி அணிந்து வாழமுடியுமா ? எனவே கொரோனவை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஏனைய நாடுகளின் உதாரணங்களில் இருந்தும் மற்றும் ஆமாம் சாமி போடாத சுயாதீனமாக சிந்தித்து முடிவெடுக்க கூடிய துறைசார் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையையும் பெற்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் நிலையை எதிர்கொள்ள வேண்டும். உரியநேரத்தில் முழு நாட்டையும் அல்லது நோய் அதிகரித்துள்ள நாட்டின் பகுதிகளை lock down நிலைக்கு எடுத்துச் செல்வதன் மூலமாகவே பல நாடுகளில் வைத்தியசாலை அனுமதியையும் உயிரிழப்புகளை குறைக்க முடிந்துள்ளது. இலங்கையில் தீவிரசிகிச்சைப் பிரிவு சுவாச உபகரணங்கள் (ventilators ) மிகவும் குறைந்த குடித்தொகை வீதத்தில் உள்ள நிலையில் (படம் 2) lock down நிலையே உயிரிழப்பை குறைக்க ஒரே வழியாக உள்ளது. அதை உரிய நேரத்தில் செய்யாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த நோய் பரவலும் உயிரிழப்புகளும் ஏற்பட வழிவகுக்கும்.
 
-Dr. முரளி வல்லிபுரநாதன்( சமுதாய மருத்துவர்) இன் முகநூலில் இருந்து 
 
இப்பதிவு யாழ் கள விதிமுறைகளுக்கு உட்படாவிடில் அகற்றிவிடவும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.