Jump to content

தொட வரவோ..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture2.png

மூன்று வருடங்களுக்கு முந்தைய நினைவு.. :innocent:

பல வருட கனவான சென்னையில் சொந்தமாக நிலம் வாங்கி தனிவீடு கட்ட வேண்டுமென விருப்பம்..

கடும் வெயிலில் உழைத்து சேகரித்த செல்வத்தைக் கொண்டு சிறிய மனை ஒன்று வாங்கிப்போட்டு, பின்னர் ஓய்வு பெற்ற பின் அங்கே வீடு கட்டிகொள்ளலாமென முடிவெடுத்தேன்.

மனையை தேடினேன்..தேடினேன்..!

சென்னை நகரத்திற்குள் குறிப்பிட்ட பணத்திற்குள், காலி மனை வாங்குவது கடினம்தான்.. பெருகி வரும் புறநகர் பகுதிகளில் தேடும்போது பம்பல், திருநீர்மலை பகுதிகளுக்கும் சென்று வந்தேன்..

டீசன்டான ஒரு பகுதியில் தேடும்போது ஒரு மனை பிடித்துப்போனது.. tw_heart: விலையும் கொஞ்சம் மலிவாக இருந்தது.

கூட்டிச்சென்ற நிறுவன ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்..!

திடீரென தலைக்கு மேலே காதைக் கிழிக்கும் சத்தம்..!!

நானும், வீட்டம்மாவும் பயந்தே போனோம்..:shocked:

'என்னடா..'வென அன்னாந்து பார்த்தால், மிக தாழ்வாக பறந்து செல்லும் விமானம்..! சில நிமிடங்களில் அடுத்தடுத்து விமானங்கள் வந்தன.

விசாரித்ததில், சென்னை மீனம்பாக்கம் விமான ஓடுதளத்தை அண்மித்து விமானங்கள் தரை இறங்கும் வழிப்பாதையில் அந்த காலி மனை அமைந்திருந்தது..!

ஓய்வு பெற்று அந்த மனையில் புதிதாக கட்டும் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியுமா..???  tw_heartbreak:

அங்கு பிடித்த ஓட்டம், அதன்பிறகு அப்பகுதிக்கு போகவே இல்லை..! :(

 

ஆனால் மேலே இணைத்துள்ள காணொளியில் பாருங்கள்.. !

லண்டன் ஹீத்துரூ விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அண்மித்த பகுதியில் விமானங்கள் தரையிறங்கும் வழிப்பாதையில் வீடுகள் கட்டி வாழ்கிறார்கள்..

எப்படி இவர்களால் தூங்க முடிகிறது..? :shocked:

ஆச்சரியமே..!

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

லண்டன் ஹீத்துரூ விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அண்மித்த பகுதியில் விமானங்கள் தரையிறங்கும் வழிப்பாதையில் வீடுகள் கட்டி வாழ்கிறார்கள்..

 

அந்த சத்தம் இல்லாவிட்டால் இவர்களால் தூங்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ராசவன்னியன் said:

லண்டன் ஹீத்துரூ விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அண்மித்த பகுதியில் விமானங்கள் தரையிறங்கும் வழிப்பாதையில் வீடுகள் கட்டி வாழ்கிறார்கள்..

எப்படி இவர்களால் தூங்க முடிகிறது..? :shocked:

இரவு 11 ல் இருந்து விடிகாலை  5 மணிவரை எந்த பயணிகள் கார்கோ விமானம்கள் இறங்குவது தடை . குறிப்பிட்ட டிரக்ஸன் அநேகமாக பாவிப்பார்கள் விடிகாலை ஐந்து மணியானதும் வரிசையில் விமானம்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து இறங்குவது பார்த்துக்கொண்டே இருக்கலாம் .

அப்படி தாழ்வாக இறங்கும் நேரம்களில் விமானத்தில் ஒட்டியுள்ள ஐஸ் விழுந்து அங்குள்ள வீடுகளின் கூரைகள் உடைவது உண்டு இன்சூரன்ஸ் கூட அந்த பகுதி வீடுகளுக்கு கூடுதலாக அங்கிருப்போர் விமான நிலையத்தில் வேலை  செய்பவர்களாக இருப்பினம் வாரமுடிவில் தங்கள் பண்ணை வீடுகளை நோக்கி ஓடிவிடும்கள் .

தற்போது தொழில் நுட்பம் மூலம் அந்த ஐஸ் படிவை  தடுக்கிறார்கள் மருதங்கேணியிடம் மேலதிக விளக்கம் இருக்கலாம் .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமான சத்தம் பெரிது என்பவர்கள் கொன்கோர்ட் பிளைட்  சத்தம் எப்படி என்று தெரிந்து கொள்ளணும்  தற்போது பறப்பதில்லை  பாரிஸில் நடந்த விபத்துடன்  அத்தனை  விமானத்தையும் ஏறக்கட்டி விட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இந்த விமான சத்தம் பெரிது என்பவர்கள் கொன்கோர்ட் பிளைட்  சத்தம் எப்படி என்று தெரிந்து கொள்ளணும்  தற்போது பறப்பதில்லை  பாரிஸில் நடந்த விபத்துடன்  அத்தனை  விமானத்தையும் ஏறக்கட்டி விட்டார்கள் .

ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்கும் கன்கார்ட் சூப்பர் சோனிக் இங்கிலாந்து-பிரான்ஸ் கூட்டு முயற்சியான தொழிற்நுட்பம் வியக்கத் தக்கது..

நான் பலமுறை இந்த விமானம் பற்றிய குறிப்புகளை படித்துள்ளேன்.

கன்கார்ட் மூலம் லண்டன் to நியுயார்க் விமான பயண நேரம் 3 1/3 மணி நேரம் மட்டுமே..

'கன்கார்ட்' தரையிறங்கும்போதும் மேலெழும்பும்போதும் அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடி சட்டங்கள் ஒலி அதிர்வுகளால் உடைந்துவிடுவதுண்டு என் கேள்விப்பட்டுள்ளேன்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சாரை பாம்பு அல்லது பருந்து போல வானை ஆக்கிரமித்து மேக் 2.04 அதாவது மணிக்கு 2,180 கி.மீ வேகத்தில் செல்லும் கன்கார்ட் கம்பீரம் மீண்டும் வருமா..?

கன்கார்ட் விமானத்திலிருந்து பார்த்தால் பூமியின் வளைவு தெரியும் என்கிறார்கள்..மேலே பறக்கும் உயரம் தரையிலிருந்து 18,300 மீட்டர்களுக்கு (60 ஆயிரம் அடி) மேல்.

கன்கார்ட் விமானத்தை விட அதிக வேகத்தில் பறக்கும் விமானங்களின் வடிப்பை பொறியாளர்கள் ஆராய்ந்துகொண்டிப்பதாக தகவல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ராசவன்னியன் said:

கன்கார்ட் விமானத்திலிருந்து பார்த்தால் பூமியின் வளைவு தெரியும் என்கிறார்கள்..மேலே பறக்கும் உயரம் தரையிலிருந்து 18,300 மீட்டர்களுக்கு (60 ஆயிரம் அடி) மேல்.

அந்த உயரம்தான் அதன் முடிவுக்கு முக்கிய காரணம் அங்கு காணப்படும் கதிர்வீச்சு பயணிகளிடம் தோல் புற்று நோயை உருவாக்கும் வேகம் கூட அதிக கதிர் வீச்சு  உள்ள இடங்களில் உயரம் 12 ஆயிரம் அடி  குறைத்து பறத்தலை மேற்கொண்டனர் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.