Jump to content

விண்வெளிக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட உயிரினம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளிக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட உயிரினம்.!

FB_IMG_1604816368016.jpg 

லைக்கா என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் “குதிரியாவ்க்கா” (Kudryavka) என்பதாகும்.

பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3 1957 இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1957 இல் உலகின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ற முதலாவது விலங்காக லைக்கா திகழ்கின்றது. இப்பயணம் மனிதர்களின் விண்வெளிப் பயணத்திற்கு வழிவகுத்தது. இப்படத்தில் அது விமானக் கவசத்துடன் உள்ளது.

1959 ஆம் ஆண்டைச் சேர்ந்த லைக்காவுடனான உருமேனிய முத்திரை (சுருக்கமான விளக்கத்தில் “லைக்கா, பிரபஞ்சத்தினுள் சென்ற முதற் பயணி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)

விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்ததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது.

சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர். லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது.

FB_IMG_1604816354165-1.jpg 

FB_IMG_1604816361237-1.jpg FB_IMG_1604816375105.jpg FB_IMG_1604816381936.jpg

https://puthusudar.lk/2020/11/08/விண்வெளிக்கு-முதன்-முதலி/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விண்வெளிக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட உயிரினம்.!

 லைக்கா என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் “குதிரியாவ்க்கா” (Kudryavka) என்பதாகும்.

புரட்சி,   விண்வெளிக்கு முதலில் சென்றது.... 
"லைக்கா" என்ற நாய் என்று அறிந்திருந்தாலும்,
அது,  தெரு நாய் என்ற தகவல், இன்று தான் தெரியும். :)

டிஸ்கி: அந்தத் தெரு  நாய்க்கு, முதன்முதலாக  விண்வெளிக்குப் போய்...
உலக சாதனை படைக்க வேண்டும் என்று, உடம்பில்... "மச்சம்"  எங்கையோ இருந்திருக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

புரட்சி,   விண்வெளிக்கு முதலில் சென்றது.... 
"லைக்கா" என்ற நாய் என்று அறிந்திருந்தாலும்,
அது,  தெரு நாய் என்ற தகவல், இன்று தான் தெரியும். :)

டிஸ்கி: அந்தத் தெரு  நாய்க்கு, முதன்முதலாக  விண்வெளிக்குப் போய்...
உலக சாதனை படைக்க வேண்டும் என்று, உடம்பில்... "மச்சம்"  எங்கையோ இருந்திருக்குது. :grin:

அனாதிய செத்து போய்விட்டதல்லொ தோழர்.😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அனாதிய செத்து போய்விட்டதல்லொ தோழர்.😢

தோழர்... ஒரு உலக சாதனையை படைத்து விட்டு, ...இறந்ததால்,
60 வருடங்களின் பின்பும்... அதன் பெயர் நிலைத்து நிற்கிறது.

தெருவில் நின்று.. இறந்திருந்தால், "கல்லடி"  வாங்கியே.. செத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

புரட்சி,   விண்வெளிக்கு முதலில் சென்றது.... 
"லைக்கா" என்ற நாய் என்று அறிந்திருந்தாலும்,
அது,  தெரு நாய் என்ற தகவல், இன்று தான் தெரியும். :)kuடிஸ்கி: அந்தத் தெரு  நாய்க்கு, முதன்முதலாக  விண்வெளிக்குப் போய்...

உலக சாதனை படைக்க வேண்டும் என்று, உடம்பில்... "மச்சம்"  எங்கையோ இருந்திருக்குது. :grin:

 

13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அனாதிய செத்து போய்விட்டதல்லொ தோழர்.😢

 

13 hours ago, தமிழ் சிறி said:

தோழர்... ஒரு உலக சாதனையை படைத்து விட்டு, ...இறந்ததால்,
60 வருடங்களின் பின்பும்... அதன் பெயர் நிலைத்து நிற்கிறது.

தெருவில் நின்று.. இறந்திருந்தால், "கல்லடி"  வாங்கியே.. செத்திருக்கும்.

லைக்காவின் இறந்த உடல் இப்போதும் மாஸ்கோ கிரேம்ப்ளினில் இருக்கிறது 
1990இல் சென்று பார்த்தேன் .... இப்போதும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன்.

லெனின் உடலும் இருக்கிறது இப்போதும் நகம் வளருவதாக சொல்வார்கள் 
உண்மையா பொய்யா என்று தெரியாது. 

அதன் பின்புதான் சோவியத் யூனியன் உடைந்தது 
கொம்யூனிச போக்கு இல்லாமல் போன பின்பு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை 

கோர்பச்சேவை தூக்கி சிறையில் அடைத்தபோது நான் மோஸ்க்கோவில்தான் இருந்தேன் 

Link to comment
Share on other sites

26 minutes ago, Maruthankerny said:

 

கோர்பச்சேவை தூக்கி சிறையில் அடைத்தபோது நான் மோஸ்க்கோவில்தான் இருந்தேன் 

சர்வதேசப் புலனாய்வு அமைப்புகள் எல்லாம் கொர்பசேவ் சிறைக்கு போக வேண்டி வந்தமைக்கு ஒரு ஈழத் தமிழரும் காரணம் என்று சொல்லும் போது நான் நம்பவில்லை. இப்பதான் தெரியுது அந்த சிங்கன் யார் என்று😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்டு 18, 1991: மருதர் இருந்தது மாஸ்கோவில் (கனம் கோட்டார் கவனத்திற்கு!)😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.