Jump to content

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் – ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆய்வு


Recommended Posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் – ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆய்வு

கொரேனாவைரசினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 20 வீதமானவர்கள் 90 நாட்களுக்கு மனோநலம் பாதிக்கப்பட்டுள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ள நிலையிலேயே விஞ்ஞானிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

mental_health-300x169.jpeg
கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர் மனோநிலை பாதிப்பு உளநல பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நோயாளிகள் மத்தியில் கவலை மனச்சோர்வு உறக்கமின்மை போன்றன காணப்பட்டுள்ளன என பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் டிமென்சாவினால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் உளநல பாதிப்புகளை எதிர்கொள்வார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது எமது ஆய்வு இதனை உறுதி செய்துள்ளது என ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக பேராசிரியர் போல் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

Coronavirus-India-300x198.jpg
உலகநாடுகளின் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் இதற்கான காரணத்தை உடனடியாக கண்டுபிடித்து புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் ஆராய்ச்சி உண்மையில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் குறித்த எண்ணிக்கையை சரியாக வெளிப்படுத்தவில்லை என்பதால் மருத்துவ உலகம் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண தயாராகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 69 மில்லியன் மக்களின் சுகாதார ஆவணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது. இவர்களில் 62,000 நோயாளிகளும் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் ஐந்தில் ஒருவர் மூன்று மாதங்களில் பதற்றம் விரக்தி உறக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/88011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா: குணமடைந்தவர்கள் உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாவார்களா?

 
1-60-696x364.jpg
 32 Views

கொரோனாவிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்று ஒரு ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் 20 சதவீதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The Lancet Psychiatry journal இது குறித்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கூறபட்டு இருப்பதவது:-

“அமெரிக்காவைச் சேர்ந்த 6.9 கோடி மக்களின் மின்னணு சுகாதார பதிவுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் பதிவுகளும் அடங்கும்.

கொரோனாவில் இருந்து தப்பிப் பிழைத்த ஐந்தில் ஒருவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நோயாளிகளுக்கு கவலை மனச்சோர்வு தூக்கமின்மை போன்றவை இருக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து (Paul Harrison, a professor of psychiatry at Britain’s Oxford University) பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் பால் ஹாரிசன் கூறுகையில், கொரோனாவிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் மனநல பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள்.

எங்களது கண்டுபிடிப்புகளும் இது சாத்தியம் என்றே காட்டுகின்றன. கொரோனாவுக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அவசரமாக காரணங்களை ஆராய்ந்து மனநோய்க்கான புதிய சிகிச்சையை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

https://www.ilakku.org/கொரோனா-குணமடைந்தவர்கள்/

Link to comment
Share on other sites

கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கமும் நீண்டகால மனநலப் பாதிப்பும் -கலாநிதி க.கஜவிந்தன்

  • கலாநிதிக.கஜவிந்தன்

‘கொரோனா வைரஸ்’ என்னும் தொற்று நோயானது இன்று உலகெங்கிலும் பல உயிர்களை காவு கொண்டு வருகின்றது. சீன நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தொற்றி தாக்கத்தினை தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இன்று உலகளாவிய ரீதியாக பரவிக்கொண்டிருக்கும் ஒரு தொற்று நோய்க் கிருமியாக உருவெடுத்து அரசாங்கங்களும்,மக்களும் சுதாரிப்பதற்கு முன்னரே வெகு விரைவாக பல வழியிலும் உலக நாடுகளில் ஏதோவொரு வழியில் உள் நுழைந்து பலரின் இறப்பிற்கு காரணமாகி வருகிறது. இதனை உடல் நோயாக நாம் பார்த்தாலும் இந்நோயின் தாக்கமானது எதிர்காலத்தில் சமூகத்தில் குறுங்கால, நீண்ட கால உளப் பிரச்சினையும், உளப்பாதிப்பினையும் ஏற்படுத்தப் போகின்றன என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகளாவிய ரீதியில் மருத்துவத்துறையும்,விஞ்ஞானமும் எவ்வளவு முன்னேறினாலும் கொரோனா வைரஸ் பாதிப்பானது வல்லரசு நாடுகளுக்கும், அபிவிருத்தி அடைந்த ,அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கும் ஒரு சவாலாக காணப்படுகின்றது.என்ன தான் விஞ்ஞான வளர்ச்சி வானத்தை தொட்டாலும், இக் கொரோனா வைரஸ் இன்று மனிதனின் விஞ்ஞான கண்டுபிடிப்பினதும், மருத்துவ வளர்ச்சியினதும் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளதென்பது வெளிப்படையான உண்மை. இது இன்று விஞ்ஞானத்துறைக்கும் மருத்துவத்துறைக்கும் ஏற்பட்ட ஒரு சவாலாக காணப்பட்டுள்ளது.இக் கொரோனா வைரஸ் பற்றி மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், சமய , புராண கதைகள் வாயிலாகவும் ஆன்மீக ரீதியாகவும்,புனை கதைகளையும் விளக்கம் கொடுத்தாலும், அது எந்த அளவிற்கு உண்மை என்பது கேள்விக் குறியாகக் காணப்படுகின்றது.பொதுவாக ஏனைய தாக்கம் கூடிய, தாக்கம் குறைந்த உடல் நோய்கள் போல் அல்லாது, இதன் தொற்றும் தாக்கமும் வேகமானதும்,வீரியமானதாகவும் பரவி வருகின்றது.இன்று படித்தவர் தொடக்கம் பாமரர் வரை இதன் தாக்கத்தின் பாதிப்பை ஓரளவு அறிந்தவராகவே காணப்படுகின்றனர்.

வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு ஒவ்வொரு நாளும் இதன் தாக்கத்தால் ஒவ்வொரு நாடுகளும்,நாட்டு மக்களையும் சுயநலமாக சிந்திக்கத் தூண்டிவிட்டது என்றே கூற வேண்டும். இதன் காரணமாக ஒவ்வொரு நாடும் தங்கள் எல்லைகளை மூடியும்,தம் நாட்டு மக்ககளை காக்கவும் முனைப்புடன் நடவடிக்கைகளை செயற்படுத்தும் இதேவேளை மேலைத்தேய நாட்டவர்களை நோய் கிருமி தொற்றுக்குள்ளானவர் என்ற சந்தேகத்தையும், மனப்பீதியையும் சமூகத்தில் ஏற்படுத்திவிட்டது. இதனால் நாட்டுக்குள் முடங்கிய மக்கள், இன்று வீட்டுக்குள் முடங்கும் ஓர் மனநிலையை மக்கள் மத்தியில் இக்கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்திவிட்டது.

இது மட்டுமன்றி ஒரு இயல்பான வாழ்க்கை வாழ்ந்த மக்களின் போக்குவரத்து, பொருளாதாரம், உணவு, கல்வி,நிர்வாகக் கட்டமைப்பு, சமூக ஒன்று கூடல் போன்ற அடிப்படை அம்சங்களையே இன்று கொரோனா வைரஸ் இன் தாக்கமானது கேள்விக் குறியாக்கியுள்ளது. இதனால் சமூகத்தின் ஓர் பயங்கலந்த வாழ்க்கை முறைமையும், அடுத்து என்ன நடக்குமோ என்று எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற தன்மையும் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதனால் சமூகத்தின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு எதை செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்ற பல கேள்விக்குறியோடும்,சந்தேகத்துடனும் கூடிய நடத்தை கோலங்களை சமூகத்தில் மக்கள் மத்தியில் காணமுடிகின்றது.இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதித்தது மட்டுமன்றி, மனநிலைகளையும், மனப்பாங்குகளையும் கூட கொரோனா வைரஸ் பாதிப்பு மாற்றிவிட்டது என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட சமுதாயமானது கொஞ்சம் கொஞ்சமாக மனவடுக்களில் இருந்து மீட்சி பெற்று வரும் இந்த வேளையில், இந்த கொரோனா வைரஸ் இன் தாக்கமானது மீண்டுமொரு போர் சூழலில் வாழ்வதை போல் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறான தாக்கமானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆழ்மனதில் புதைந்துள்ள பல பிரச்சினைகளுக்கு தீனி போட்டு வெளியே கொண்டுவந்து மனப்பாங்குகளையும், நடத்தைக் கோலங்களையும் கணிசமான அளவு பாதிக்கும். இந்த வகையில் இழப்பு, துயரம், பிரிவு, காணாமற்போன உறவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்ட இச் சமுதாயம் மீண்டும் ஒரு அழிவை சந்திக்க போகின்றோமா? என்ற பயம் ஒவ்வொருவர் முகத்திலும் காணக்கூடியதாக உள்ளது. இதனை ஒரு பொருட்டாக சிலர் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஆழ்மனதில் இந்த வைரஸ் தாக்கம் பற்றிய பயம் ஒவ்வொரு மனிதனையும் பீடிக்காமலும் இல்லை. இதற்கு காரணம், இந்த நோயின் அடிப்படையை கண்டறியாததும் அதற்குரிய மருத்துவ முறைகளும்,கொரோனா நோயாளிகளை கையாளும் முறைகளும் பல்வேறுபட்ட வதந்திகளும் முக்கிய காரணங்கள் எனலாம்.

இந்த வகையில் மக்கள் மத்தியில் இனம் புரியாத பதற்றத்தினை கொரோனா ஏற்படுத்தி விட்டாலும் இது எதிர்காலத்தில் சில உளப்பிரச்சினைக்கும், மனப்பாங்கு மாற்றத்திற்கும் அடிப்படையாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இன்று சாதாரண தடிமன், காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு பலர் மருத்துவரை நாடாமல் வீட்டிலேயே தங்களால் இயன்ற வைத்தியத்தை செய்து வருகின்றனர்.இதற்கு காரணம் மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனா பாதிப்பு என முத்திரை குத்திவிடுவார்கள் என ஆழ்மனதில் காணப்படும் பயம் தான் முக்கிய காரணமாகும். சாதாரண காய்ச்சல், தலை வலிக்கு கூட மருத்திவரிடம் செல்லாது மருந்தகத்தில் தமக்கு தெரிந்த மருந்துகளை மக்கள் வாங்கி உபயோகித்து வருகின்ற சூழ்நிலைக்கு மக்கள் மனப்பாங்கினை இது மாற்றிவிட்டது.

இன்று சாதாரணமாக தும்மினால், இருமினால் கொரோனாவாக இருக்குமோ என்ற தானாக உருவாகும் எண்ணங்களால் (யுரவழஅயவiஉ வுhழரபாவள) மக்களுக்கு இயல்பாக வருகிறது. இதற்கு காரணம் இதன் மரண எண்ணிக்கையே. உண்மையில் இது மக்கள் மத்தியில் குறுகியகால,நீண்டகால மனப்பாதிப்பினையும், மனப்பாங்கு மாற்றத்தினையும் ஏற்படுத்த போகின்றது.

உதாரணமாக- ஓர் குழந்தை ஒவ்வாமையாலோ , தடிமனாலோ தும்மினால் கூட கொரோனா பாதிப்பாக இருக்குமோ? என்ற பயத்தினை தாய்க்கு ஏற்படுத்திவிடும். இதனால் இன்று ஒருவர் சாதாரணமாக இருமினாலோ, தும்மினாலோ மற்றவர்கள் சந்தேகத்தோடு, கோபத்தோடு, எரிச்சலோடும், பயத்தோடும் குறித்த நபரை பார்க்கும் ஓர் எதிர்மறையான மனப்பாங்கையும்,நடத்தை கோலங்களையும் இது உருவாக்கி விட்டது.இந்தவகையில் பெரிய உடல் நோய்க்கு பயப்படாதவர்கள் கூட இருமலுக்கும், தும்மலுக்கும் பயந்து ஒதுங்கும் ஓர் மனப்போக்கினையும் எண்ணக்கட்டமைப்பில் மாற்றத்தினையும் கொரோனா பாதிப்பு சமூகத்தில் உருவாக்கியுள்ளது.

இதன் பாதிப்பு ஏற்கனவே மனச்சோர்வு, மன அழுத்தம், பதட்டம்,கட்டுக்கடங்கா நினைவு நடத்தை, கோபம், பயம், எரிச்சல், வாழ்க்கையில் நம்பிக்கையின்மை, குற்ற உணர்வு, பழிவாங்கும் தன்மை போன்ற உள நோயினாலும், உளப்பிரச்சினையினாலும் பாதிக்கப்பட்டவர்களையும் சாதாரண மக்களையும் இதன் தாக்கம் தூண்டிவிட்டு பல உளம் சார், நடத்தை சார் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

01) மனச்சோர்வு

மனச்சோர்வானது மனிதனை விரக்தி நிலைக்கு இட்டுசென்று தற்கொலைக்கு தூண்டும்; அத்துடன் இது தற்கொலை மனப்பாங்கு, எண்ணங்களை (ளுரiஉனைந ஐனநயவழைnஃவுhழரபாவள) கணிசமாண அளவு கொண்டுள்ள ஒருவகையான உளநோயாகும். இந்நோயால் தீவரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இக் கொரோனா தொற்று பாதித்தால் வாழ்க்கையில் நம்பிக்கையற்றவர்களாய், வாழ்க்கை முடிந்து விட்டது என்று எண்ணி, தற்கொலைக்கு முயற்சிப்பார்கள். இதனால் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டாமென்ற விரக்தி மனநிலைக்கு செல்வதுடன் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். அத்துடன் இவர்களுக்கு வாழ்க்கையை முடித்துவிட வேண்டும் அல்லது முடிந்துவிட்டது என்ற மனநிலை காணப்படும்.ஆனாலும் சிலருக்கு ஓர் குழப்பமான மனநிலை காணப்படும்.

02) மன அழுத்தம்

மன அழுத்தமானது இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கும், கொரோனா பற்றிய பயம் உள்ளவர்களுக்கும் அதிகளவு காணப்படும். இந்நோய் மாறாது என்ற எண்ணம். இதனை நாம் எவ்வாறு எதிர் கொள்ள போகின்றோம் என்ற பயமும் இவர்களின் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும்.இதனால் நிம்மதியற்றவர்களாய், சிந்தனை குழப்பத்துடன் காணப்படுவார்கள். இவர்களின் மனநிலை எனக்கு ஒன்றும் வேண்டாம். இந்த நோயிலிருந்து தப்பித்தால்,விடுபட்டால் போதும் என்ற மனப்பாங்கும் காணப்படுவதுடன் அமைதியற்றும் காணப்படுவர்.

03) பதகளிப்பு; இனம் புரியாத கவலை,பதற்றம்

நோய் தொற்றியவர்களை விட, தொற்றாதவர்களுக்கு பதகளிப்பு , இனம்புரியாத கவலை அதிகமாக காணப்படும். இதனால் எந்நேரமும் அந்நோய் தம்மை தாக்கலாம் என்ற பயமும் பீதியும் இவர்களிடையே காணப்படுவதுடன் அவர்களது ஒவ்வொரு செயற்பாட்டிலும் நிம்மதியற்றும் இருப்பர்.

04) கட்டுக்கடங்கா நினைவு நடத்தை

கட்டுக்கடங்கா நினைவு நடத்தை என்பது ஓர் வகையான கட்டுப்படுத்த முடியாத , தீவிர செயல்வடிவம் பெறும் எண்ண அல்லது சிந்தனை ஆக்கிரமிப்பு நடத்தையாகும். இதனால் சிலர் சில விடயங்களை அல்லது செயல்களை திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருப்பார்கள். உதாரணமாக:- அடிக்கடி கை கழுவுதல், அடிக்கடி குளித்தல், அடிக்கடி துணிதோய்த்தல், அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். இதற்கு காரணம் சிலருக்கு கிருமி தொற்று பற்றிய அதீத பயமும் அது தொடர்பான தீவிர எண்ணங்களுமே ஆகும். ஆனாலும் ஓர் சிலருக்கு இது அதிகமாக காணப்படும்.

உதாரணமாக இதனால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் சமைக்கும் அடுப்பிற்கு பாவிக்கும் விறகுகளை கூட கழுவி வெயிலில் உலர வைத்து சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.சீனி என்பவற்றை கழுவிய பிறகே தேநீருக்கு பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் எதை தொட்டாலும் அடிக்கடி கை கழுவுவார்கள்.ஒரு சிலர் தமக்கென்றே சாப்பாட்டு தட்டுக்களையும், தேநீர் குவளைகளையும் போகும் இடமெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்துவார்கள். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களின் பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். அதனால் இவர்கள் சமூகத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன், குடும்ப வாழ்க்கையில் ஓர் திருப்தியற்ற வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.இவ்வாறாக கட்டுக்கடங்கா நினைவு நடத்தையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இக் கொரோனா தொற்றின் பாதிப்பானது கட்டுக்கடங்கா நினைவு நடத்தைகளை (தீவிரமான சுத்தம் பார்த்தல்) மேலும் ஊக்குவிப்பதாக அமைவதுடன், ஒரு நிம்மதியற்ற பதட்டமான நடத்தைக் கோலங்களை ஏற்படுத்திவிடும்.

இதுமட்டுமன்றி, ஓரளவு சுத்தம் பேணுபவர்களை அல்லது கட்டுக்கடங்கா நினைவு நடத்தை பாதிப்பினால் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை கூட இக் கொரோனா தொற்றின் தாக்கமானது எதிர்காலத்தில் கட்டுக்கடங்கா நினைவு நடத்தைக்கு ஆளாக்கிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.இதனால் எதை தொட்டாலும்,பார்த்தாலும் கொரோனா கிருமி அல்லது வைரஸ் இருக்குமோ? என்ற எண்ண ஓட்டமும், பயமும், பதட்டமும் காணப்படும். அவர்களை எந்த பொருளை தொட்டாலும், யாருடன் பழகினாலும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற மனநிலை அல்லது எண்ணம் காணப்படும். அவ்வாறு செய்யாவிடின் உடல் ரீதியாக தான் பாதிக்கப்படுவதாகவும் ஓர் மனப்பிரம்மை அல்லது கற்பனை செய்வதுடன்,சிலர் அவ்வாறே பாதிப்புக்களை எதிர்கொள்வார்கள்.உதாரணமாக சுடவைத்து வடிகட்டிய தண்ணீர் அல்லாத சாதாரண தண்ணி குடித்தால் இருமல், காய்ச்சல், உடல், உபாதைகள் ஏற்படும் என்ற எண்ணம் ஆட்டுவிக்கும். ஆனால் சிலருக்கோ உடல் உபாதைகள் அவர்கள் நினைப்பது போல் ஏற்படும்.இதனால் அதிகளவான பாதிப்பினை கட்டுக்கடங்கா நினைவு நடத்தை (ழுஊனு) உள்ளவர்களையும் மன ரீதியாகவும்,நடத்தை கொரோனா பற்றிய பயம் அதிகம் பாதிக்கும்.

மனவெழுச்சிப் பிரச்சினைகள்

• கோபம்

கொரோனா தொற்று பாதிப்புள்ளானவர்கள் அதிகளவு கோப உணர்வுடன் காணப்படுவதுடன், அக்கோபமானது தன்னை பற்றியும் தன் அலட்சியப் போக்கால் கொரோனா வந்ததென்ற எண்ணமும், சமூகத்தில் உள்ள கோபமும் இவர்களிடத்தே மாறி மாறி காணப்படும்.இதனால் தன்மீதும் சமூகத்தின்மீதும் ஓர் கோப மனப்பான்மை காணப்படும். கொரோனா தொற்று பற்றிய எண்ணம் உள்ள ஒருவருக்கு யாரெனும் ஒருவர் சுத்தம் பேணாது காணப்பட்டாலோ,கூட்டத்தில் இருமினாலோ,எச்சில் துப்பினாலோ சிலருக்கு அதிகளவு கோபம் வர வாய்ப்புள்ளது.இது சமூகப் பொறுப்பணர்வினால் கோபம் வந்தாலும் தானும் பாதிக்கப்பட்டுவிடுவேன் என்ற மனப்பாங்கும் கோபத்திற்கு ஒர் காரணமாகும். இது கொரோனா பற்றிய பாதிப்பின் அனுபவங்களினது ஆழ்மனப்பதிவுகளின் மனவெழுச்சியுடன் கூடிய மனப்பாங்கு மாற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

• பயம்

கொரோனா பாதித்த ஒருவர் அதிகளவு பயத்துடன் காணப்படுவர். இந்த நோயால் தான் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற பயமும், அவ்வாறு தப்பித்துக் கொண்டாலும் எதிர் காலத்தில் தன்னை மீண்டும் பாதிக்குமோ என்ற வகையிலும் சிந்திப்பதுடன், எப்ப வேண்டுமானாலும் இறந்துவிடுவேனோ? என்ற பயத்துடன் கூடிய ஓர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பர். மேலும் கொரோனா பற்றிய பயமானது மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுவதால் எங்கு சென்றாலும், இந்த நோய் தொற்றிவிடுமா? தொற்றிவிடாதா? என்ற பய உணர்வுகளுடன் இவர்கள் காணப்படுவதால் அதிகளவு வெளியில் செல்வதைக் குறைத்து பயத்தினால் வீட்டினுள் முடங்கிவிடுவார்கள்.

சிறுவர்களது மனநிலை பாதிப்புக்கள்

சிறுவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பற்றி நோக்கும் போது இதனை சிலர் பேய்,பூதம் என்றவாறாக கற்பனை பண்ணி பீதியடைவர். சிலர் பெற்றோரின் பக்குவமான கொரோனா வைரஸ் பற்றிய விளக்கத்தினால் ஓரளவு பயமற்று காணப்படுவதுடன், பெற்றோர் கடைப்பிடிக்க சொல்லும் வழிவகைகளை பின்பற்றுவார்கள்.ஆனாலும் பெற்றோரும் சமூகத்தவரும் இது தொடர்பான அதிகளவு பயத்தினை அவர்களுக்கு உண்டுபண்ணினால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டு நித்திரைக் குழப்பம்,கெட்ட கனவு காணுதல்,படுக்கையில் சிறுநீர் கழித்தல், நித்திரையில் பயந்து கத்துதல்,பெற்றோரின் கையை இறுகப் பிடித்தல், தனியாக இருக்க,தூங்க பயம் போன்ற பாதிப்புக்கள் ஏற்பட வாய்புண்டு. இதனால் அவர்களது ஆளுமை வளர்ச்சி எதிர்காலத்தில் பாதிக்கப்படும்.இதனால் பெற்றோரும்,சமூகத்தவரும் பொறுப்புடன் சிறுவர்களை கையாள வேண்டும்

எனவே ஓர் நோய் பற்றிய அதிக பயமே அந்நோய் வர காரணமாக அமைந்து விடுகிறது என்பது சில ஆராய்ச்சிகளின் முடிவாகும். இது அந்நோய் பற்றிய தீவிர சிந்தனையால் ஏற்படுவது உண்டு. ஒரு வகையில் கொரோனா அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை தாக்குவதில்லை என குறிப்பிடுகின்றனர், இதனால் எமது மனநிலைகளிலும் (யுவவவைரனந)வாழ்க்கை முறைகளிலும் (டுகைந ளவலடநள) மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.இந்த வகையில் எமது நேர்முகமான உளதிறனை அதிகரிப்பதுடன் நேர்முகமான சிந்தனைப் போக்கினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எம்மை பற்றிய ஓர் நம்பிக்கையை நாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் உடலுக்கு சக்தி தரக்கூடிய பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுவதுடன், எமது சுகாதாரத்திலும் நாம் அக்கறை காட்ட வேண்டும். மேலும், இயற்கையோடு ஒட்டிவாழும் வாழ்க்கை முறைக்கு எம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.உண்மையில் இவ்வாறான பிரச்சினைக்கு காரணம் மனிதன் இயற்கையாக நியதிகளை, விதிகளை மாற்றியமைக்க முற்பட்டதேயாகும்.இந்த வகையில்,இயற்கை விதிகளையும்,நியதிகளையும் மனிதன் மாற்றி அமைத்தால் இவ்வாறானதொரு நிலைதான் ஏற்படும் என்பதனை இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து இருந்து மனிதன் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்;
முதுநிலை உளவியல் விரிவுரையாளர்
உளவியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இலங்கை

https://thinakkural.lk/article/88063

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.