Jump to content

பொண்ணுங்களுக்கு படிப்புதான் முக்கியம்”


Recommended Posts

ஆம்பளைங்களை நம்பாத..!
------------------------------------------------
தீபாவிற்கு ஒரு நொடியில் உடல் நடுங்கி விட்டது. சித்தியினை அவள் இங்கு எதிர்பார்க்கவில்லை. என்ன பேசுவது எனத் தெரியாமல் உறைந்து நின்றிருந்தாள். சித்தியேதான் “என் தங்கம்” என்று அழுதபடி வந்துக் கட்டிக் கொண்டாள். உணர்வு திரும்பவும் தானும் அழத் தொடங்கிய தீபா சித்தியைக் கட்டிக் கொள்ள, சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வந்த ராஜேஸ்வரி நிலைமையைப் புரிந்துக் கொண்டு இருவரையும் வீட்டினுள் அழைத்து சென்றாள். சித்திக்கு குரல் அடங்கவில்லை.

“இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி ஓட வச்சுட்டானுகளே பாவிங்க”

அந்த வார்த்தை தீபாவிடம் அடங்கி இருந்த அழுகையை மேலும் தூண்டியது. அதைப் புரிந்துக் கொண்ட ராஜேஸ்வரி அதை திசை திருப்ப தீபாவிடம் சாந்தனுக்கு போன் செய்து உடனே வரச்சொல்லும்படி சொன்னாள். பின் உள்ளே சென்று ஒரு சொம்பில் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து சித்திக்கு கொடுத்தாள். குடித்து விட்டு சாதாரணக் குரலில்

“நல்லாருக்கியா சாமி?” என்றாள்.

“ம், நல்லாருக்கேன் சித்தி”

“அந்த தம்பி?”

“அவரும் நல்லாருக்கார் சித்தி”

உண்மையில் வீட்டை விட்டு ஓடி வந்த இந்த 3 மாதத்தில் இருவரும் படாத துன்பமில்லை. ஒரு பிரச்சனை என்று வரும்பொழுதுதான் எத்தனை மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறோம் என்பது தெரியவரும். சாந்தனுக்கு தீபாவுடன் ஊரை விட்டு கிளம்பும் சூழல் வந்த பொழுது அத்தனை நாள் உயிராக பழகிய நண்பர்களின் கண்களுக்கு புதிதாய் அவன் சாதி தெரிந்தது. தீபாவின் உறவினர்களுடன் சேர்ந்துக் கொள்ளவில்லை என்றாலும் அவன் பக்கம் யாரும் சேரவில்லை.

முன்கூட்டி திட்டமிட்டெல்லாம் எதுவும் செய்யவில்லை. இம்மாதிரி காதலர்களுக்கு எப்போதும் இப்படித்தான் நடக்கும். எதிர்பாராத சூழலில் உறவினருக்குத் தெரிய வரும். பெண்ணை வீட்டுச்சிறையில் வைப்பார்கள். முடிந்த வரையில் சீக்கிரமாக சொந்த சாதியில் மணம் முடிப்பார்கள்.  ஆனால் தீபா படித்தவள் மட்டுமன்றி சிந்திக்கத் தெரிந்தவளும் கூட. இந்த தாலி, திருமணம் போன்ற எந்த சம்பிரதாயமும் என்னை  தடை செய்ய இயலாது என்பதைத் தெளிவாக அவள் குடும்பத்தினருக்கு புரிய வைத்திருந்தாள்.

அதற்காக தம் சாதிப்பெண் வயிற்றில் வேறு சாதிக்கரு வளர அனுமதிக்க முடியுமா என்ன? மொத்தக் குடும்பமும் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதைப் போல் இரவோடு இரவாக சென்று கோவில் கிணற்றில் தள்ளி இவளைக் கொல்ல முடிவு செய்திருந்தது. அதை தெரிந்துக் கொண்டிருந்த தீபாவின் சித்திதான் முன் கூட்டியே எச்சரிக்க, இத்திட்டம் எதுவும் தெரியாதது போல் கிளம்புவதாகக் காட்டிக் கொண்டு சாந்தனுடன் ஊரை விட்டு ஓடி வந்திருந்தாள்.

கோவிலுக்குக் கிளம்புவதற்காக கட்டியிருந்த புடவை மட்டும்தான். செல்போனை கூட எடுக்க முடியவில்லை. சாந்தனின் நண்பர்கள் பலரைக் கேட்டு, உதவி கிட்டாமல், இறுதியாக ஒரு நண்பன் உதவ முன்வந்தான். கோவிலில் தாலிக் கட்டிக் கொண்டார்கள். நண்பனின் அண்ணன் வீட்டிலேயே குடித்தனம் நடத்த துவங்கினார்கள். சாந்தனுக்கு வேலை கிடைத்து சென்று வந்துக் கொண்டிருக்கிறான். மூன்று மாதங்கள் கடந்தாலும் எப்போது வீட்டினர் கண்டறிந்து வருவார்களோ, வந்தால் என்ன செய்வார்களோ என்று அஞ்சி நடுங்காத நாள் இல்லை. ஆனால் சித்தியை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

“நீ எப்படி சித்தி இங்கே வந்த?”

“பஸ்லதான் கண்ணு வந்தேன்”

“அதில்லை, நாங்க இங்கே இருக்கோம்னு எப்படி தெரிஞ்சது?”

“அதை ஏன் கேக்கற? நீ போன நாள்ல இருந்து மொத்த பயலுகளும் உன்னை தேடாத ஊர் இல்லை, ஒருத்தனுக்கும் மூஞ்சி இல்லை, உங்கப்பன்லாம் தலைமுழுகிட்டேன், யார் என்ன பண்ணாலும் கேக்கமாட்டேன்னுட்டார். உங்க பெரியப்பன் தான் எப்படியாவது உன்னைய பிடிச்சுப்பிடனும்னு ஏத்தி விட்டுட்டு இருக்கறது, அவங்க ஒருபக்கம் தேடுனா, நான் ஒரு பக்கம் தேடுனேன்”

“எதுக்கு சித்தி?”

“இதோ இதுக்குத்தான்” என்று தான் கொண்டு வந்திருந்த கட்டைப்பையில் இருந்து ஒரு ஃபைலை எடுத்துக் கொடுத்தாள். தீபாவின் சான்றிதழ்கள் அத்தனையும் அதில் அடங்கி இருந்தன.

“நீ போன அன்னைக்கே யாருக்கும் தெரியாம உம்பீரோல இருந்து எடுத்து வச்சுக்கிட்டேன். கொளுத்தறதுக்கு தேடுனானுங்க, அவ கையோடு எடுத்துட்டு போயிருப்பா, இல்லை முன்னாடியே கொடுத்து விட்டுருப்பான்னு சொல்லி சமாளிச்சுட்டேன்”

சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக பதினாறு வயதிலேயே பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தப்பட்டு, கல்யாணம் பண்ணி வச்சா சரியாப் போயிருவான் என்று குடிகார தாய்மாமனுக்கு சித்தியைக் கட்டி வைக்க, இரண்டு ஆண் பிள்ளைகளை வயற்றில் கொடுத்து விட்டு, திருமணமான ஆறாவது வருடம் குடித்து குடித்து குடல் வெந்து செத்துப் போனார் சித்தப்பா. 

அப்போது தீபாவிற்கு பனிரெண்டு வயது. இதுதான் நடக்கப் போகிறது என சித்திக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தது. ஒரு நாட்டு மாடும் ஒரு எருமை மாடும் கூட்டுறவு வங்கி உதவியுடன் வாங்கி பால் கறந்து விற்க தொடங்கி இருந்ததால் சித்தப்பா இல்லாமலும் குடும்பம் ஓடியது.

ஆனால் தன்னை தொடர்ந்து படிக்க விட்டுருந்தால் ஒரு நல்ல வேலைக்கு சென்று கௌரவமாக வாழ்ந்திருப்போம் என்று நினைக்காத நாளில்லை. தன் பிள்ளைகளையாவது  ஒழுங்காக படிக்க வைக்க வேண்டும் என்று முயற்சிக்கையில் அதற்கு பெரிதும் உதவியாய் இருந்தவள் தீபாதான். அவளிடம் தன் எந்த கஷ்டத்தையும் பெரிதாக சொல்லாத சித்தி, பொண்ணுங்களுக்கு படிப்புதான் முக்கியம் என்பதை மட்டும் அடிக்கடி சொல்லி வருவாள். 

சொந்தக் குடும்பத்தின் சாதி வெறியில் இருந்துத் தன்னைக் காப்பாற்றிய சித்தி, தன் படிப்பையும் காபந்து செய்து கொண்டு வந்திருப்பதை பார்க்கையில் ஒவ்வொரு முறையும் படிப்பு முக்கியம் என்று சித்தி சொன்னது வெறும் வார்த்தை அல்ல, தான் இழந்த வாழ்க்கையின் மீதான ஏக்கம் என்பது புரிந்தது. தீபா பேச்சற்று இருக்க, ராஜேஸ்வரி பேச்சைத் தொடர்ந்தாள்.

“எப்படி கண்டு பிடிச்சிங்கன்னு இன்னும் சொல்லலையே?”

“இவ படிச்ச காலேஜ்ல விசாரிச்சங்கண்ணு”

“என் காலேஜ்க்கா? தனியாவா போனிங்க? நீங்க எங்கே போறிங்க வரிங்கன்னு வீட்ல யாரும் கேக்கலை?”

“கண்ணுல பூ விழுந்தாப்ல இருக்கு, சாயந்திரத்துக்கு மேல பார்வை மங்கலா இருக்கு, அதுக்கு தர்மாஸ்பத்திரில போய் பாக்கறன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடறது, அங்கேயும் போவேன், ஆனா உங்காலேஜ்க்கும் போய் விசாரிச்சேன். எடுத்ததும் யாரும் சொல்லலை கண்ணு, இது மாதிரி உன் சட்டிபிகெட்லாம் கொடுக்கனும்னு சொல்லி, கெஞ்சித்தான் உன் சினேகிதக்காரங்க விவரம்லாம் வாங்குனேன்”

“வாங்கி? என்ன சித்தி சொல்ற? எல்லார் வீட்டுக்குமா போன?”

“வேற என்ன பன்றது? அதுலயும் உங்கூட படிச்சதுல எல்லாரும் பட்டிணத்துப் பசங்களேதான் போல, நம்ம ஊர் பக்கம் அதிகம் இல்லை”

“எப்படி சித்தி, அது பெரிய ஊர் ஆச்சே, எப்படி வழி கண்டு பிடிச்சு ஒவ்வொரு வீடா போனிங்க?”

“அதை ஏன் கேக்கற, ஆட்டோ சத்தம் கொடுக்க எங்கிட்ட ஏது காசு, டவுன் பஸ்தான், அப்புறம் நடைதான், நடந்து நடந்து கால்லாம் ஓஞ்சு போச்சு, வெய்ய காலம் வேறயா, கண்ணுல்லாம் மயமயன்னு ஆகிரும். முக்காடு போட்டுக்கிட்டு திரிவேன். சாயந்திரத்துக்குள்ள ஊருக்கு போகனுமே, பையன் பால் கறந்துருவான், இருந்தாலும் பக்கு பக்குன்னு இருக்கும். ஆனா ஒன்னு, உங்க ரெண்டு பேரை தவிர பட்டிணத்துல எல்லாரையும் பார்த்துட்டன்னு சொல்லலாம். எண்ண முடியாத நச்சத்திரங்க கணக்கா எத்தனை சனங்க அந்தூர்ல?”

“அப்புறம்?”

“அப்புறம் ஒருவழியா ஒரு தம்பி, உங்கூட்டுக்காரனை இந்த ஊர்ல சமீபத்துல பார்த்தாதா சொன்னுச்சு, எங்கேன்னு விசாரிச்சேன், இந்த தெருவ சொன்னுச்சு, நான் பையத் தூக்கிட்டு வீடு வீடா எட்டிப் பார்த்துக்கிட்டே வந்தேன். நல்லவேளை நீ வெளிய இருந்த, இல்லைன்னா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்”

சித்தி தன் பொருட்டு பட்ட சிரமங்களை எண்ணிப் பார்க்கையில் தீபாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நன்றி சொல்லி இது தீருமா? சித்தியில் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்கள் மீண்டும் கலங்கின. 

“ஸ்ஸ்சூ, நீ இப்படி அழறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைத் தேடிப் பிடிச்சேன்?”

“......”

“இங்கே பாரு கண்ணு, பொம்பளைப் புள்ளை காலாகாலத்துக்கும் யாராவது ஒருத்தனுக்கு சேவகம் செஞ்சு, அவங்கிட்ட வாங்கித் தின்னுத்தான் பொழைக்கனும்னு இருக்கறதுலாம் எங்க காலத்தோட போகட்டும். அப்பனோ, புருசனோ, புள்ளையோ, யாரா இருந்தாலும் அவங்க இஷ்டப்படி நடக்கலைன்னதும் ஆம்பளைப் புத்திய காட்ட ஆரம்பிச்சுருவாங்க. அவங்களை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. சொந்தக் கால்ல நிக்கனும், அதுக்கு படிப்பு முக்கியம், நீ இத்தனை வருசம் கஷ்டப்பட்டு படிச்சது இப்படி விட்டுட்டு போறதுக்கு இல்லை. இது கடைசி வரைக்கும் உங்கூட இருக்கும். நீ அதை மட்டும் மறந்துறாத. உனக்கும் பொம்பளைப்புள்ள பொறந்ததுன்னா அதுக்கும் தெளிவா சொல்லி வளர்க்கனும், என்ன சொல்லி வளர்க்கனும்?”

இத்தனை ஆண்டுகளாக சித்தி தம்மிடம் திரும்ப திரும்ப சொன்னதை, இம்முறை உறுதியாக தீபா சொன்னாள்.

“பொண்ணுங்களுக்கு படிப்புதான் முக்கியம்”

FB 

Link to comment
Share on other sites

அவசியமான ஒரு தகவல்.என் அம்மாவும் இதைத்தான் எங்களிற்கு சொல்லுவா.பெண்பிள்ளைகளிற்கு கொடுக்கக்கூடிய ஒரு சொத்து கல்விதான்.நல்ல கதை வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.... படிப்புதான் முக்கியம் என்று சொன்ன சித்தி காதல் முக்கியமல்ல என்றும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.இப்ப பாருங்கோ படிப்பை விட காதல்தான் முக்கியம் என்று பிள்ளை சேர்டிபிகேட்டுகள் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்திருக்கு......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியும் விளையாட்டும் மாணவர்களிற்கு மிக அவசியம்.
உடலுழைப்பிற்கு தயாரில்லாதவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை விரைவாக இழப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை பகிர்விற்கு நன்றி தோழர் ..👍

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடிய ஒரே அழியாச் சொத்து கல்வி மட்டுமே. அதிலும் பெண்கல்வி மிகவும் முக்கியம். இக்கதையில் தம் மகளையே கிணற்றில் தள்ளி கொல்லத் துணிந்த பெற்றவர்களின் சாதிய வெறி மிகவும் கேவலமானது. நல்லதொரு  பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் அபராஜிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ...பெண்களுக்கு கல்வி முக்கியமோ இல்லையோ கட்டாயம் சொந்தக் காலில் நிற்க தெரிய வேண்டும் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 29/11/2020 at 22:48, Kavallur Kanmani said:

நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடிய ஒரே அழியாச் சொத்து கல்வி மட்டுமே. அதிலும் பெண்கல்வி மிகவும் முக்கியம். இக்கதையில் தம் மகளையே கிணற்றில் தள்ளி கொல்லத் துணிந்த பெற்றவர்களின் சாதிய வெறி மிகவும் கேவலமானது. நல்லதொரு  பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் அபராஜிதன்.

 

On 1/12/2020 at 03:07, ரதி said:

இணைப்பிற்கு நன்றி ...பெண்களுக்கு கல்வி முக்கியமோ இல்லையோ கட்டாயம் சொந்தக் காலில் நிற்க தெரிய வேண்டும் .

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் 
கண்மணி அக்கா  மற்றும் ரதி அக்கா  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.