-
Tell a friend
-
Topics
-
0
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
நாலு தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அதென்னமோ தெரியல தமிழர்களால் மற்றவர்கள் கொல்லப்பட்டால் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் தமிழர்கள் கொல்லப்படும்போது வேறு வழியில்லை என்கிறார்கள் இவ்வளவு தான் தமிழரின் உயிர் மதிப்பு????
-
By பிழம்பு · பதியப்பட்டது
`குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டுமானால், கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்க வேண்டும்’ என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கொய்யாப்பழம் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பின்னர் அந்தப் பெண்ணின் ஆடையைக் கழற்ற முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. சிறார் வதை ஆனால், அச்சிறுமி கத்தி கூச்சல்போட, அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அந்தச் சிறுமியின் வாயைப் பொத்தி அந்தக் கொடூரத்தைச் செய்துவிட்டு சிறுமியை வீட்டுக்குள் அடைத்துவிட்டு வெளியில் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார் அந்த நபர். சிறுமியை அவரின் தாயார் தேடியபோது எங்கும் கிடைக்காத நிலையில் பக்கத்து வீடு அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் உள்ளேயிருந்து அவரது மகளின் அழுகைச் சத்தம் வந்ததால், கதவைத் திறந்தபோது, சிறுமி நடந்த சம்பவத்தை தாயிடம் தெரிவித்தார். உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஸ்பா கனடிவாலா வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருக்கும் விளக்கம் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. ``குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டுமானால் கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்க வேண்டும். இவ்வழக்கில் சிறுமியின் ஆடையைக் குற்றவாளி கழற்றிவிட்டு மார்பகத்தைத் தொட்டாரா அல்லது அப்படியே ஆடையுடன் தொட்டாரா அல்லது கையை ஆடைக்குள்விட்டுத் தொட்டாரா என்று தெளிவாக குறிப்பிடப்படப்படவில்லை. எனவே இந்தச் செயல் பாலியல் தாக்குதலில் வரவில்லை. சிறுமி உட்பட இந்த வழக்கில் அனைவரின் வாக்குமூலத்திலும் எந்தவித முரண்பாடும் இல்லை. அதோடு குற்றம்சாட்டப்பட்டவர் சிறுமியின் மார்பகத்தைத் தடவியிருக்கிறார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், சட்டப்பிரிவு 7-ன் கீழ் தோல்மீது தோல்பட்டு செய்யப்படும் அத்துமீறல்கள்தான் பாலியல் தாக்குதலாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 7-வது சட்டப் பிரிவுப்படி பாலியல் நோக்கத்தோடு பிறப்புறுப்பு, மார்பகம் போன்றவற்றைக் கையால் தொட்டதாக இருக்க வேண்டும்” என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு 7-வது சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக வரவில்லை” என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆனால், சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பாலியல் தாக்குதலாகக் கருத வேண்டும் என்ற அரசு வழக்கறிஞரின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். தண்டனை, குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு இந்த வழக்கில் சிறுமியை மானபங்கப்படுத்தியதாகக் கருதி, 354-வது சட்டப்பிரிவின் கீழ் ஓராண்டு மட்டும் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பு மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் இந்தத் தீர்ப்பு அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், இதைப் பாலியல் தாக்குதலாகக் கருத முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பது, இது போன்ற மற்ற வழக்குகளுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். `சிறுமியை ஆடையின் மேல் தொடுதல் போக்சோவில் வராது!’ - மும்பை உயர் நீதிமன்றம் | Touching a girl with a dress cannot be accepted as sexual assault: Mumbai high Court verdict (vikatan.com) -
By பிழம்பு · பதியப்பட்டது
நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா, விரைவில் விடுதலை ஆவார் என கூறப்பட்ட நிலையில், டி.டி.வி. தினகரன் அது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், ``நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சசிகலா நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாகக் குறைந்து, அவர்கள் உடல்நிலை தேறிவருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையிலிருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ட்வீட் செய்திருக்கிறார். `சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்திருக்கிறது!’ சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சையிலிருக்கும் சசிகலா உடல்நிலை குறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சசிகலா அதில், ``சசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு கொரோனா தொற்று குறைந்திருக்கிறாது. சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதால் இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. தற்போது அவரால் சிரமமின்றி அமர முடிகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சசிகலா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா!’ - டி.டி.வி.தினகரன் ட்வீட் #NowAtVikatan | 25-01-2021 just in live updates -
By பிழம்பு · பதியப்பட்டது
-எஸ்.நிதர்ஷன் ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, ஐ.நாவுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும், சர்வஜன வாக்கெடுப்பை கNஐந்திரகுமார் விரும்பவில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார். இந்நிலையில், இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய ஊடக சந்திப்பின் போது சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, அந்தக் குற்றச்சாட்டக்களை கஜேந்திரகுமுhர் நிராகரித்தார். அது மட்டுமல்லாமல் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது பல்வெறு குற்றச்சாட்டகளையும் சுமத்தியிருந்தார். Tamilmirror Online || ’சுரேஷ் ஓர் அரசியல் விபச்சாரி’
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.