Jump to content

தொலைபேசியில் பேசிக்கொண்டே திடீரென வீழ்ந்து மரணித்த மாணவன்; வெளியான புகைப்படம்!!


Recommended Posts

தொலைபேசியில் பேசிக்கொண்டே திடீரென வீழ்ந்து மரணித்த மாணவன்; வெளியான புகைப்படம்!!

94aee71d-625.0.560.350.160.300.053.800.6

தன்னை மறந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கனடாவின் ரொரண்டோ நகரில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பன்யம் அகில் என்ற மாணவனே உயிரிழந்ததாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மாணவர் அங்கு தங்கியிருந்து ஹோட்டல் முகாமைத்துவம் படித்துவந்த நிலையில் கடந்த எட்டாம் திகதி தான் தங்கியிருக்கும் இருப்பிட பல்கனியிலிருந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபகரமாக பலியாகினார்.

குறித்த மாணவரின் நண்பர்கள் அவரது வீட்டுக்காரரிடம் தகவல் தெரிவித்ததுடன் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.