Jump to content

முதல் பார்வை: சூரரைப் போற்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: சூரரைப் போற்று

soorarai-pottru-movie-review

 

ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே 'சூரரைப் போற்று'.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா ஆறுவிரல் வாத்தியார் (பூ ராமு) மனு எழுதிப் போட்டு மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுபவர். அவரின் அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேசிய பாதுகாப்பு அகாடமியில் விமானப் படை அதிகாரியாகத் தேர்வாகிச் செல்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்புகிறார்.

தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், உழைக்கும் தொழிலாளர்கள், ஏர் ஓட்டும் விவசாயிகள், விமானத்தில் பறப்பதையே பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை, ஆசையை நிறைவேற்றும் விதமாக 1000 ரூபாயில் ஏன் 1 ரூபாயில் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்கப் போராடுகிறார். இதற்காக விமான சேவை நிறுவன அதிபரிடம் உதவி கேட்கிறார். அவரோ உதாசீனப்படுத்துகிறார். மத்திய அரசு அலுவலகங்கள், ஏவியேஷன் அகாடமி என எல்லா இடங்களிலும் அலைக்கழிக்கப்படுகிறார். லைசென்ஸ் சிக்கல், பெரும் பணக்கார விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி, நம்பிக்கைத் துரோகம், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் விரிசல், கடன் பிரச்சினை என அடுத்தடுத்து அதிகமான நெருக்கடிகளைச் சந்திக்கிறார். அவரின் கனவு எப்படி நனவானது, ஏழை மக்களுக்கு மிக மிகக் குறைந்த விலையில் விமானப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை உயிரோட்டத்துடன் சொல்வதே 'சூரரைப் போற்று' படத்தின் திரைக்கதை.

1605122116751.jpg

 

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய 'சிம்பிள் ஃப்ளை' நூலை அடிப்படையாகக் கொண்டும் 'சூரரைப் போற்று' படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் ஷாலினி உஷாதேவியுடன் திரைக்கதை அமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். படத்தின் மேக்கிங்கில் கச்சிதத்தைக் கொண்டுவந்துள்ளார். அதுவும் அவரின் கதாபாத்திரக் கட்டமைப்புகள் ஆஸம். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களையும் மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். ஹீரோயிசப் படத்தில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் விதம் வெல்டன். யாருக்குமே லேசுபாசான கேரக்டர் இல்லை. அத்தனை பேரும் தங்கள் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

கொடுமை கண்டு பொங்கி எழுந்து பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசும் சூர்யாவைப் படத்தின் ஒரு பிரேமிலும் பார்க்கமுடியாது. கையில் அருவா, வேல் கம்பு, கத்தி, துப்பாக்கி என எதுவும் கிடையாது. நான் இதைச் சொல்லியே ஆகணும் என்று ரொமான்ஸிலும் ஒரே மாதிரியான சூர்யாவைப் பார்க்க முடியாது. ஹரி வெர்ஷனாகவும், கௌதம் மேனன் வெர்ஷனாகவும் இல்லாமல் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கமாக ராஜபாட்டையில் நடந்திருக்கிறார். நடித்திருக்கிறார். அழுதுகொண்டே தன் இயலாமையை, ஆற்றாமையை, கையறு நிலையை வெளிப்படுத்தும் சூர்யாவைப் பார்க்க முடிகிறது. ஆனால், சின்னதாய் புன்னகையைக் கூடச் சிந்தாத அளவுக்கு சிரிப்பென்றாலே என்ன என்று தெரியாத, கதாபாத்திரத்துடன் ஒன்றிய சூர்யாவைப் பார்ப்பது புதிதாக உள்ளது. இதுவரை சூர்யா நடித்த எந்தப் படத்தின் நடிப்புச் சாயலும் இதில் இல்லை. அழுத்தமாக தன் நடிப்பில் தடம் பதித்து இதயத்தைத் தொடுகிறார்.

1605122135751.jpg

 

அப்பாவுக்கு நேர்ந்ததை உணர்ந்து ஊருக்கு வர முடியாமல் விமானக் கட்டணத்துக்கு வழியில்லாமல் அங்கு இருப்பவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பிச்சையாகக் கேட்கும்போதும், ஊருக்கு வந்து அம்மாவைப் பார்த்த கணத்தில் அழுது தன் நிலையை விளக்கும்போதும் கண்ணீரில் நனைய வைக்கிறார்.

ஒரு முன்னணி நட்சத்திர நடிகர் ஓடிடியில் படத்தை வெளியிடுவது துணிச்சல் என்றால், அதிலும் பரிசோதனை முயற்சிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்திருப்பது வேற லெவல். சூர்யாவின் இந்த முயற்சிகள் என்றும் தொடர வேண்டும் என்று வாழ்த்துவோம். வரவேற்போம்.

1605122216751.jpg

அபர்ணா பாலமுரளி, கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து அட்டகாசமான நடிப்பை நல்கியுள்ளார். அவர் திருமணத்துக்குப் போடும் கண்டிஷன்கள், சூர்யா உடனான உரசலுக்குப் பிறகான நடவடிக்கை, ரூ.16 கோடி டீலை சூர்யா புறக்கணித்ததற்கான ரியாக்‌ஷன் என பக்குவமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரின் கதாபாத்திரத் தன்மைக்கு அந்தக் கண்கள் பெரிய பிளஸ்.

சுதா கொங்கரா அளவுக்கு யாரும் காளி வெங்கட்டை அவ்வளவு சரியாகப் பயன்படுத்துவதில்லையோ என்னவோ. இறுதிச்சுற்றில் ரித்த்கா சிங்கின் தந்தையாக நடித்தவர், இதில் சூர்யாவின் நண்பனாக மனதில் இடம் பிடிக்கிறார். கருணாஸின் வெள்ளந்தி மனசால், பளிச் நடிப்பால் பசை போல் ஒட்டிக் கொள்கிறார். 'உன்னை நம்பி இருக்கோம்டா. ஜெயிச்சிருடா' என்று சொல்லும் ஊர்வசியின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். மகனின் தாமத வருகையை அவர் கண்ணீரும் கம்பலையுமாக கரித்துக் கொட்டும் விதம் தேர்ந்த நடிகையின் உச்சம். 'பூ' ராமு மகன் மீதான பாசத்தை அப்படியே கடத்தியிருக்கிறார்.

சூர்யாவின் உற்ற நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். மோகன்பாபு ஆச்சர்ய மறுவரவு. வினோதினி வைத்தியநாதன், பரேஷ் ராவல், அச்யுத்குமார், ஆர்.எஸ்.சிவாஜி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பில் மிளிர்கிறார்கள்.

 

1605122240751.jpg

நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது. டெல்லி, மதுரை, விமானங்களின் ஓட்டம் என்று சுற்றிச் சுழன்று விதவிதமான கோணங்களில் ஈர்க்கிறார். ஜி.வி.பிரகாஷின் இசையில் பருந்தாகுது ஊர்க்குருவி என்ற மாறா தீம் செம்ம. காட்டுப்பயலே காதலின் ராகம் என்றால், மண்ணுருண்ட மேல தத்துவத்தில் ததும்பி நிற்கிறது. ஏகாதசியின் பாடல் வரிகளும், செந்தில் கணேஷின் குரலும் மண்ணுருண்ட மேல பாடலுக்கு இன்னும் அதிக அர்த்தங்களைக் கொடுத்துள்ளன. கதையோட்டத்துக்குத் தகுந்தபடி பின்னணி இசையில் பிரகாசிக்கிறார் ஜி.வி. சதீஷ் சூர்யாவின் கட்ஸில் நேர்த்தி.

உண்மைக் கதையில், ஜி.ஆர்.கோபிநாத் தன் நிறுவனத்தை கிங்ஃபிஷர் மல்லையாவுடன் இணைத்தார். ஆனால், திரைப்படத்தில் அப்படி இல்லாதது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. திரைக்கதை சுதந்திரம் எனும் விதிப்படி, ஷாலினி உஷாதேவியும், சுதா கொங்கராவும் மல்லையாவுக்குப் பதில் ஒரு பாலய்யாவைக் காட்டுகிறார்கள். ஆனால், அந்த டீல் வேறு மாதிரி அமைத்திருப்பது படத்துக்கு பாசிட்டிவ் பலம் சேர்க்கிறது.

''ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை''. ''நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ். பேசாம ஊருக்குப் போய் மாடு மேய்க்கிற வேலையைப் பாரு'' என்ற அலைக்கழிப்புகளை, புறக்கணிப்புகளை, ஏமாற்றங்களை ஒவ்வொன்றாய்ச் சொல்லி அடுத்தகட்டத்துக்கு சூர்யா நகரும் விதத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் எமோஷனல் கலந்து சொன்ன விதம் எடுபடுகிறது. உயர்ந்தவன் தாழ்ந்தவன், பிசினஸ் கிளாஸ் டிக்கெட் உள்ளிட்ட ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பொருட்டு சமூக அக்கறையுடன் சொன்ன விதம் பாராட்டுக்குரியது.

குடியரசுத் தலைவரை அப்படி அசால்ட்டாகச் சந்திக்க முடியுமா, விமானத்தை அசாதாரணமாக ராணுவப் பயிற்சி மையத்தில் அத்துமீறித் தரையிறக்க முடியுமா, தொழிலதிபர்களுக்காக அரசு அதிகாரிகள் அவ்வளவு ரிஸ்க் எடுப்பார்களா போன்ற கேள்விகளும், செயற்கையான சில சினிமாத்தனங்களும் படத்தில் இருப்பதை மறுக்கமுடியாது. அதேசமயம் அதையே பெருங்குறையாகச் சொல்லிவிடவும் முடியாது.

மொத்தத்தில், சூரரை மட்டுமல்ல, பரிசோதனை முயற்சிக்காக சூர்யாவையும், மேக்கிங் மூளைக்காக சுதா கொங்கராவையும் போற்றலாம்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/600828-soorarai-pottru-movie-review-4.html

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“சூரரை போற்று” என்ற திரைப்படம்... சூர்யாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று, என்று பல இடங்களிலும் சொல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம் என்ன அவங்க அப்பன் வீட்டுச் சொத்தா? | சூரரை போற்று | அரசியல் விமர்சனம் |

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேசனில் பார்த்துக்கொண்டே இருக்கின்றன் தொடக்கமே அந்த மாதிரி விறுவிறுப்பு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா என்னவொரு விறுவிறுப்பான படம், கடைசிவரை அசத்தல் நடிப்பு, தொய்வேயில்லை👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரரைப் போற்று குறித்து கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்: “பல இடங்களில் சிரிக்கவும், அழுகவும் செய்தேன்”

3 மணி நேரங்களுக்கு முன்னர்
கோபிநாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்தேன். எனது குடும்ப நினைவுகளை கண்முன் கொண்டுவந்த பல தருணங்களில் சிரிக்கவும் அழுகவும் செய்தேன்," என கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் தெரிவித்துள்ளார்.

இவரின் கதையை தழுவிதான் சூரரைப் போற்று திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

"சூரரைப் போற்று திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன், கதையில் பெரும் கற்பனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் எனது புத்தகத்தின் சாராம்சம் தத்ரூபமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நிஜ ரோலர் கோஸ்டரை போல. எனது குடும்ப நினைவுகளை கண்முன் கொண்டுவந்த பல தருணங்களில் சிரிக்கவும் அழுகவும் செய்தேன்," எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கோபிநாத்.

அடுத்தடுத்து பதிவிட்டுள்ள ஐந்து ட்விட்டர் பதிவுகளில், திரைப்படத்தையும், அதில் நடித்த சூர்யாவையும், அபர்ணாவையும் மற்றும் இயக்குநர் சுதா கோங்குராவையும் வெகுவாக பாராட்டியுள்ளார் கோபிநாத்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"தனது கனவை நினைவாக்கியே தீர வேண்டும் என்ற அசாத்திய எண்ணம் கொண்ட, தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற உறுதி கொண்ட கதாபாத்திரத்தை சூர்யா வலுவாக நடித்திருந்தார். இந்த இருள் சூழ்ந்த காலத்தில் ஊக்கமளிக்கும் ஒரு திரைப்படமாக இது உள்ளது."

சூரரைப் போற்று

பட மூலாதாரம்,AMAZON

"முழுக்க முழுக்க ஒரு ஆணை மையப்படுத்திய கதையில் சூர்யா நாயகனாகவும், அதே சமயம் அதற்கு வலுவாக ஈடுகொடுக்கும் கதாபாத்திரத்தில் அவரின் மனைவியாக அபர்ணாவை நடிக்க வைத்து கதையை ஒரு உத்வேகமளிக்கும் நல்லுணர்வு வழியில் சமன்நிலை படுத்தியதற்கு இயக்குநர் சுதாவுக்கு பெரும் பாராட்டுக்கள்."

"அபர்ணாவால் நடிக்கப்பட்ட எனது மனைவி பார்கவியின் கதாபாத்திரம், நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனக்கென சுயமான சிந்தனைகளை கொண்ட, வலுவான பெண்மணியாக அதே நேரம் மென்மையான மற்றும் அச்சமற்ற பெண்மணியாக, கிராமத்து பெண்களுக்கு ஒரு முன்னோடியாக அது அமைந்துள்ளது. குறிப்பாக தங்களின் முயற்சியால் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு இது ஒரு உத்வேகம்."

 

"பல முரண்பாடுகளை கொண்ட கிராமப்புறத்திலிருந்து வரும் ஒரு தொழில்முனைவோரின், தடைகள் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான நம்பிக்கை சற்று நாடகத்தன்மையுடன் பதியப்பட்டிருந்தாலும் உண்மையை பிரதிபலிக்கிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த கோபிநாத்?

கோபிநாத்

பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP VIA GETTY IMAGES

சூர்யா நாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமெஸான் ப்ரைமில் நவம்பர் 11ஆம் தேதியன்று வெளியானது.

இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம்.

 

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணங்களை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள். ஆனால், ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கேப்டன் கோபிநாத் செய்த சாதனைகளும் சாகசங்களும் மகத்தானவை.

அவர் இந்தக் கதைகளை சில ஆண்டுகளுக்கு முன்பாக Simply Fly: A Deccon Odyssey என்ற பெயரில் சுயசரிதையாகவே எழுதிவிட்டார். இந்தப் புத்தகத்தை தமிழிலும் வானமே எல்லை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் உள்ள கொரூர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்த கோபிநாத், துவக்கக் கல்வியை வீட்டிலேயேதான் பெற்றார். பிறகு நேரடியாக பள்ளிக்கூடத்தில் 5ஆம் வகுப்பில் சேர்ந்தார்.

அங்கு படித்துக்கொண்டிருந்தபோது, சைனிக் பள்ளியில் சேர்வதற்கு தேர்வெழுதி, அதில் வெற்றிபெற்றார் கோபிநாத். அப்போது அவருக்கு வயது வெறும் 11தான். இந்த முதல் வெற்றிதான் அவரது வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றியது என்று சொல்லலாம். சைனிக் பள்ளியில் இருந்து நேஷனல் டிஃபன்ஸ் அகாடெமி, அங்கிருந்து இந்திய ராணுவம் என அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பறந்தார் கோபிநாத்.

புத்தகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோபிநாத் ராணுவத்தில் கேட்பனாகப் பணியாற்றும்போதுதான், 1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிழக்கு பாகிஸ்தான் தொடர்பாக யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் முன்னணி அதிகாரியாக செயல்பட்ட அனுபவமும் கோபிநாத்துக்கு இருக்கிறது.

ஆனால், யுத்தத்திற்குப் பிறகு தான் வாழ்வைத் தொடர்ந்து ராணுவத்திலேயே கழிக்க கோபிநாத் விரும்பவில்லை. 28 வயதிலேயே ராணுவ வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார்.

ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்த காலகட்டம். நாம் ஏன் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை ஆரம்பிக்கக்கூடாது என நினைக்கிறார் கோபிநாத். அப்போது அவ்வளவு பெரிய நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான முதலீடு ஏதும் அவரிடம் இல்லை.

இருந்தபோதும் முயற்சிகளைத் துவங்குகிறார் அவர். அது ஒரு இமாலயப் பணியாக அமைகிறது. குறிப்பாக, அரசின் ஒவ்வொரு துறைகளிடமும் அனுமதி வாங்குவதென்பது ஒரு சாகசக் கதையாகவே இருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-54930740

Link to comment
Share on other sites

நல்ல படம். பிள்ளைகளுடன் இருந்து பார்க்க கூடிய, பார்க்க வேண்டிய படம். 

எந்தப் பெரிய கனவும் தகுந்த முயற்சிகளும் தோல்விகளை கடந்து வரும் தைரியமும் இருந்தால் நிறைவேறும்  என்பதை நல்ல காட்சியமைப்புகள் மூலம் காட்டியுள்ளார்கள். சூர்யாவினதும், அபர்ணாவினதும் (அகன்ற விழிகளும்) நடிப்பு அருமை. பாடல்களும் பின்னனி இசையும் நல்லா வந்துள்ளது.

கொவிட் காலத்தில் எதிர்மறை சிந்தனையை வலுப்படுத்தாமல், நேர்மறை எண்ணத்தை வலிமையாக தூண்டுகின்றது சூரரை போற்றி.

ஒன்றும் மட்டும் விளங்கவில்லை, இதற்கு ஏன் சூரரை போற்றி என பெயரிட்டார்கள் என. இதன் அர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்ச நேரம் படம் பார்த்தேன்..! :innocent:

அப்புறம்..? 🤗

தூங்கிட்டேன்..! 🙃

Link to comment
Share on other sites

அண்மைக்காலமாக பெண் இயக்குனர்கள் தமிழில் தரமான படங்களை தந்து கொண்டு இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

ஆத்திசூடி வரிகள்:

 

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்

ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்

ஓய்த லொழி
ஒளடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளை
பல தாங்கேல்

கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில்

கத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்துநில்
கோல்கைக் கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திரத் தோ¢ச்சி கொள்

சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளத்திடேல்
சூரரைப் போற்று

செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேலுல்
கைகையிற் பொருளுணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தனையிகழ்

சௌரியந் தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்

ஞேயங் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்

துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்

தொன்மைக்கு அஞ்சேல்¢
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாளெலாம் வினைசெய்

நினைப்படு முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்

நேர்படப் பேசு ...........................

 

                       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிடித்தது, படத்தின் தலைப்பு "சூரரைப் போற்று" 👌

தீபாவளி அன்றாவது தூங்காமல் பார்க்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

----ஒன்றும் மட்டும் விளங்கவில்லை, இதற்கு ஏன் சூரரை போற்றி என பெயரிட்டார்கள் என. இதன் அர்த்தம் என்ன?

நிழலி... 💖  நாங்கள், திராவிடர்... அசுரர்...‼️  அரக்கனாகிய,    இராவண வம்சத்தை சேர்ந்தவர்கள். ⁉️
அது...  ஆரிய, பிராமணருக்கு பிடிக்காது. 😎
(சில வேளை.. யாழ் களத்திலும், சிலருக்கும் பிடிக்காது.)
இதனையே... சீமான், "நாம் , தமிழர்... என்று, தமிழகம் எங்கும்... சொல்கிறார்"  :)

அதனை.. வெற்றிகரமாக செயல் முடிப்பவன்... 
இந்த... மண்ணின், சொந்த உரிமையாளர்களே... தவிர,
வடக்கு... இந்தியனினதும், தெலுங்கன், கர்நாடகன், மலையாளத்தவன் போன்றவர்களின்  
அற்ப சுய ... லாபங்களுக்காக...  விட்டுக் கொடுக்காமல், ஊரோடு.. சேர்ந்து போராடினால்...
எந்த... உச்சத்தையும், தொட  முடியும் என்றே.. அந்தப் படத்தின்... கதை சொல்கின்றது.

"நாம் தமிழர்"   என்று... ஒற்றுமைப்  படாவிட்டால்,   
இந்தியாவில்... தமிழர் என்ற இனமே... அழிந்து  விடும் நிலையில்...
மத்திய அரசு... கீழடியில்  இருந்து,  அனைத்து தகவல்களையும்... 
மற்றைய மாநிலங்களின்... ஒத்துழைப்புடன்,  
மிக.. கச்சிதாமாக  நிறைவேற்றிக் கொண்டு இருப்பதை...
நாங்கள்.. தடுக்கவில்லை, என்றால்... எனது பிள்ளைகள் தடுப்பார்கள் என நம்புவது...
காலம் கடந்த.. செயல்.

இன்றுள்ள... சந்தர்ப்பத்தை, நாங்களே.. அந்தத் தலைவனுக்கு.. 
ஒத்துழைப்பு கொடுத்து... எமது, ஆசையை நிறை வேற்றுவதே... சிறப்பு.... என்பதனை...
அந்தப் படம், அழகாக சொல்கின்றது.

டிஸ்கி: இந்தப் படம்... ஈழப் போராட்டத்தின் தோல்வியை... 
உங்கள் கண் முன்னே.. கொண்டு வந்தால்... நீங்களும், தமிழன் தான்.
மாறாக.... எது வந்தாலும்....  நீங்கள், எமது இனத்தவரே...
அந்தப் பக்குவம், எமக்கு என்றும்... வேண்டும்.  :)

Link to comment
Share on other sites

50 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி... 💖  நாங்கள், திராவிடர்... அசுரர்...‼️  அரக்கனாகிய,    இராவண வம்சத்தை சேர்ந்தவர்கள். ⁉️
அது...  ஆரிய, பிராமணருக்கு பிடிக்காது. 😎
(சில வேளை.. யாழ் களத்திலும், சிலருக்கும் பிடிக்காது.)
இதனையே... சீமான், "நாம் , தமிழர்... என்று, தமிழகம் எங்கும்... சொல்கிறார்"  :)

அதனை.. வெற்றிகரமாக செயல் முடிப்பவன்... 
இந்த... மண்ணின், சொந்த உரிமையாளர்களே... தவிர,
வடக்கு... இந்தியனினதும், தெலுங்கன், கர்நாடகன், மலையாளத்தவன் போன்றவர்களின்  
அற்ப சுய ... லாபங்களுக்காக...  விட்டுக் கொடுக்காமல், ஊரோடு.. சேர்ந்து போராடினால்...
எந்த... உச்சத்தையும், தொட  முடியும் என்றே.. அந்தப் படத்தின்... கதை சொல்கின்றது.

"நாம் தமிழர்"   என்று... ஒற்றுமைப்  படாவிட்டால்,   
இந்தியாவில்... தமிழர் என்ற இனமே... அழிந்து  விடும் நிலையில்...
மத்திய அரசு... கீழடியில்  இருந்து,  அனைத்து தகவல்களையும்... 
மற்றைய மாநிலங்களின்... ஒத்துழைப்புடன்,  
மிக.. கச்சிதாமாக  நிறைவேற்றிக் கொண்டு இருப்பதை...
நாங்கள்.. தடுக்கவில்லை, என்றால்... எனது பிள்ளைகள் தடுப்பார்கள் என நம்புவது...
காலம் கடந்த.. செயல்.

இன்றுள்ள... சந்தர்ப்பத்தை, நாங்களே.. அந்தத் தலைவனுக்கு.. 
ஒத்துழைப்பு கொடுத்து... எமது, ஆசையை நிறை வேற்றுவதே... சிறப்பு.... என்பதனை...
அந்தப் படம், அழகாக சொல்கின்றது.

டிஸ்கி: இந்தப் படம்... ஈழப் போராட்டத்தின் தோல்வியை... 
உங்கள் கண் முன்னே.. கொண்டு வந்தால்... நீங்களும், தமிழன் தான்.
மாறாக.... எது வந்தாலும்....  நீங்கள், எமது இனத்தவரே...
அந்தப் பக்குவம், எமக்கு என்றும்... வேண்டும்.  :)

தமிழ் சிறி, நீங்கள் சூரர் என்பதை சூத்திரர் என்று நினைத்து விட்டீர்களோ என நினைக்கின்றேன்.

இப்படத்தின் இயக்குநர் சுதா சூரர் என்றால் அறிவாளி என்று அர்த்தம் என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இன்னொருவர்  லிங்க் தந்து உதவினார்

https://tamilminutes.com/entertainment/soorarai-potru-title-explained-by-sudha/cid1258012.htm

ஆனாலும் சூரன் என்றால் வீரன் என்ற பொருளில் தான் பாரதியார் பயன்படுத்தி இருக்கின்றார். வீரனை போற்று என்று. நாங்கள் தமிழில் அசகாயசூரன் என்று எவரது துணையும் இன்றி வெல்பவரை குறிப்பிடுவதுண்டு.

இக் கதை கர்னாடகத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த கோபினாத்தின் சொந்தக் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட கதை. பிராமண குலத்தில் இருக்கும் ஒரு பிரிவு தான் அய்யங்கார் பிரிவு. இப் படம் மலையாளம், கர்னாடகம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்து இருக்கு, 

இதைப் பார்த்து விட்டு "நான் கன்னடன்' என்று கொலரை தூக்கிப் பிடிக்க சிலர் கன்னடர்கள் முனையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

மிகவும் பிடித்தது, படத்தின் தலைப்பு "சூரரைப் போற்று" 👌

தீபாவளி அன்றாவது தூங்காமல் பார்க்கணும்.

ஏற்கனவே ரிலீஸ் ஆகிட்டுது இணையத்தில் hd  தரத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

தமிழ் சிறி, நீங்கள் சூரர் என்பதை சூத்திரர் என்று நினைத்து விட்டீர்களோ என நினைக்கின்றேன்.

இப்படத்தின் இயக்குநர் சுதா சூரர் என்றால் அறிவாளி என்று அர்த்தம் என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இன்னொருவர்  லிங்க் தந்து உதவினார்

https://tamilminutes.com/entertainment/soorarai-potru-title-explained-by-sudha/cid1258012.htm

ஆனாலும் சூரன் என்றால் வீரன் என்ற பொருளில் தான் பாரதியார் பயன்படுத்தி இருக்கின்றார். வீரனை போற்று என்று. நாங்கள் தமிழில் அசகாயசூரன் என்று எவரது துணையும் இன்றி வெல்பவரை குறிப்பிடுவதுண்டு.

இக் கதை கர்னாடகத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த கோபினாத்தின் சொந்தக் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட கதை. பிராமண குலத்தில் இருக்கும் ஒரு பிரிவு தான் அய்யங்கார் பிரிவு. இப் படம் மலையாளம், கர்னாடகம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்து இருக்கு, 

இதைப் பார்த்து விட்டு "நான் கன்னடன்' என்று கொலரை தூக்கிப் பிடிக்க சிலர் கன்னடர்கள் முனையலாம்.

URGENT: Leaked documents show White House is planning executive order to  censor the Internet

இப்படி... பண்ணீட்டிங்களே...... நிழலி / சூர்யா.....  ‼️

நிழலி... ஒவ்வொருவர் பார்வையிலும்,  திரைப்படங்கள்... 
வித்தியாசமான பார்வையில்.... நோக்கப் படும் என்பதனை, 
நீங்கள்.. நன்கு, அறிந்து இருப்பீர்கள் என, நம்புகின்றேன்.

சினிமாவில்...  பல சொற் பிரயோகங்களை, "சென்சார்" குழுவினரின் பார்வையில் தப்பி... 
நாசூக்காக... பாமர  மக்களிடம், கொண்டு சேர்க்க வேண்டும் என்றே...
சில... படங்கள், வெளியே வெற்றிகரமாக வலம்,  வருகின்றது. 

அதிலும்... இந்திய ஊழல், அதிகார, பிராமண  கொழுப்பை... 
இந்தப் படத்தில்.... கிழித்து... எறிகின்றான், படத்தின்.. கதாநாயகன்  மாறன்.

அதிலும்... இந்தியாவின்,  பெருமைக்குரிய...  ஜனாதிபதியாக இருந்த....
அப்துல் கலாம் அய்யா... அவர்கள்... 
"மதுரைப் பையனா....."   உள்ளே... அனுப்புங்க...
என்று சொல்லிய... காட்சி, இந்தப் படத்திற்கு ஒரு வெற்றி. 

சீமான்... என்றால், உங்களுக்கு.. அலர்ஜி என்று... எமக்கு தெரியும் நிழலி...
பீறிட்டு... கிளம்பும், தமிழ் எரிமலையை, 
சாதா... போர்வையால்.. மூட முடியாது.  என்பது தான்...  உண்மை. :)

 

காணொளியை... பார்த்த, அனைவருக்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே ரிலீஸ் ஆகிட்டுது இணையத்தில் hd  தரத்தில் 

நன்றி, தகவலுக்கு திரு.பெருமாள்.

அமேசான் ப்ரைமில் தான் 12 ந் திகதி நள்ளிரவில் 1080p தரத்தில் பார்த்தேன்.

பார்த்த சில நிமிடங்களில் அப்படியொன்றும் சுவாரசியம் இல்லாததால், அப்படியே தூங்கிவிட்டேன்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

நன்றி, தகவலுக்கு திரு.பெருமாள்.

அமேசான் ப்ரைமில் தான் 12 ந் திகதி நள்ளிரவில் 1080p தரத்தில் பார்த்தேன்.

பார்த்த சில நிமிடங்களில் அப்படியொன்றும் சுவாரசியம் இல்லாததால், அப்படியே தூங்கிவிட்டேன்..! :)

சார்!  நீங்கள் கடைசியாய் பார்த்த சுவாரசியமான பத்து  தமிழ் படங்கள் கூறவும்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சார்!  நீங்கள் கடைசியாய் பார்த்த சுவாரசியமான பத்து  தமிழ் படங்கள் கூறவும்? 😎

"தூங்காமல் பார்த்த" என்ற வாக்கியத்தையும் சேர்த்து கொள்ளவும்....!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சார்!  நீங்கள் கடைசியாய் பார்த்த சுவாரசியமான பத்து  தமிழ் படங்கள் கூறவும்? 😎

கைதி
தீரன் அதிகாரம் ஒன்று
மாநகரம்
இமைக்கா நொடிகள்
இரும்புத் திரை
தடம்
இரவுக்கு ஆயிரம் கண்கள்
ராட்சசன்
வேலையில்லா பட்டதாரி
அசுரன்
வெள்ளை பூக்கள்
யாகாவராயினும் நா காக்க
துப்பாக்கி
யுத்தம் செய்
மாயவன்
அடங்க மறு
காக்க முட்டை
பசங்க
நெஞ்சில் துணிவிருந்தால்
பாண்டிய நாடு
குள்ள நரிக் கூட்டம்
ராஜதந்திரம்
இன்று நேற்று நாளை
அதிதி
டிமான்டி காலனி
வட சென்னை
ஈட்டி
ஈரம்
தலைமுறைகள்
வெற்றிவேல்
சுந்தரபாண்டியன்
கே.டி. (எ) கருப்புத் துரை

...

இன்னும் சில படங்கள் இருக்கிறது சார்..! :)

4 hours ago, suvy said:

"தூங்காமல் பார்த்த" என்ற வாக்கியத்தையும் சேர்த்து கொள்ளவும்....!  😎

நல்லா உசுப்பேத்தி விடுறீங்கள்..😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

நல்ல படம். பிள்ளைகளுடன் இருந்து பார்க்க கூடிய, பார்க்க வேண்டிய படம். 

எந்தப் பெரிய கனவும் தகுந்த முயற்சிகளும் தோல்விகளை கடந்து வரும் தைரியமும் இருந்தால் நிறைவேறும்  என்பதை நல்ல காட்சியமைப்புகள் மூலம் காட்டியுள்ளார்கள். சூர்யாவினதும், அபர்ணாவினதும் (அகன்ற விழிகளும்) நடிப்பு அருமை. பாடல்களும் பின்னனி இசையும் நல்லா வந்துள்ளது.

கொவிட் காலத்தில் எதிர்மறை சிந்தனையை வலுப்படுத்தாமல், நேர்மறை எண்ணத்தை வலிமையாக தூண்டுகின்றது சூரரை போற்றி.

ஒன்றும் மட்டும் விளங்கவில்லை, இதற்கு ஏன் சூரரை போற்றி என பெயரிட்டார்கள் என. இதன் அர்த்தம் என்ன?

எல்லாம் சரி. ஆனால் தலைப்பு பிழை. அப்படியா ... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2020 at 12:01, Kapithan said:

எல்லாம் சரி. ஆனால் தலைப்பு பிழை. அப்படியா ... 😁

திரைப்பட விமர்சனங்களும் ஒருவித விளம்பரங்கள் தானே? அது எந்த கோட்பாட்டில் இங்கே எப்படி?
நாம் தமிழர் கட்சி திரி விளம்பரமெண்டால் இந்த திரி என்ன மாதிரி.....🤣
ஐயோ கடவுளே நான் இதை கேக்கேல்லை. ஒரு சில  அடியார்மட பக்த்தர்மார் கேக்கினம்...🧐

ஏனைய திரிகளில் தட்டி கேட்பவர்கள் இங்கே வந்து தட்ட மாட்டார்களா? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல படம் என்று அறிந்தேன்! அரசியல் அமைப்புகளின் வன்முறை, பிரிவினை தூண்டும் காணொளிகள் போல் அல்லாமல் நல்ல கருத்துக்களை விதைக்கும் படம் என்பதால் குடும்பத்தோடு பார்க்க வேண்டுமெனப் பரிந்துரை செய்யலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

மிக நல்ல படம் என்று அறிந்தேன்!

நான் ஒழுங்காக படம் பார்க்கும் இரசிகன் இல்லை.ஆனால் இந்த படம் பற்றி இவர் சொன்னதே எனக்கு சரியாக தெரிகிறது.

On 13/11/2020 at 22:22, ராசவன்னியன் said:

பார்த்த சில நிமிடங்களில் அப்படியொன்றும் சுவாரசியம் இல்லாததால், அப்படியே தூங்கிவிட்டேன்..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

மிக நல்ல படம் என்று அறிந்தேன்! அரசியல் அமைப்புகளின் வன்முறை, பிரிவினை தூண்டும் காணொளிகள் போல் அல்லாமல் நல்ல கருத்துக்களை விதைக்கும் படம் என்பதால் குடும்பத்தோடு பார்க்க வேண்டுமெனப் பரிந்துரை செய்யலாம்!

சோவியத் யூனியன், நிக்கரகுவாவின் சன்ரனிஸ்ரா(?), பலஸ்தீனம், கியூபா, எரிற்றியா, வட அயர்லாந்து, பற்றிஸ் லுமும்பாவின் கென்யா, தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம், இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற முயன்றது போன்ற பிரிவினைப் போராட்டங்களைக் குறிப்பிடுகின்றீர்கள் போல...... 🤔

 

ஹி..ஹி..ஹி.... 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.