Jump to content

இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட ‘க்ரியா’ அகராதி: கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட ‘க்ரியா’ அகராதி: கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன்

kriya-dictionary  

வையாபுரிப்பிள்ளை ஆசிரியராகப் பங்கெடுத்து வெளிக்கொண்டுவந்த ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) எக்காலத்துக்குமான ஒரு பெரும் சாதனை என்றால், தற்காலத் தமிழுக்கான ‘க்ரியா’ அகராதி நாம் வாழும் காலத்தில் ஒரு முக்கியமான சாதனை. அகராதிக்கான இலக்கணங்களை முழுமையாகக் கொண்டு, கச்சிதமான எழுத்துருக்களோடும் வடிவத்தோடும் அமைந்த ‘க்ரியாவின்’ தற்காலத் தமிழ் அகராதி இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறது; அது மேலும் விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

இன்றைய தலைமுறையினரையும் நம்முடைய மொழி முழுமையாகச் சென்றடையும் வகையிலான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் முதல் பதிப்பு 1992-ல் வெளியானது. பின்னர் 16 ஆண்டுகள் கழித்து, இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கி மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2008-ல் வெளிவந்தது. அடுத்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர், இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கியதாக இப்போது மூன்றாவது பதிப்பு வெளியாகியிருக்கிறது.

 
 
 

சிறப்பு என்ன?

இந்திய மொழிகள் ஒன்றில் சமகாலத்துக்கான அகராதிகளில் இப்படி மூன்றாவது முறையாகப் பதிப்பக்கப்பட்டு வெளியாகியிருக்கும் அகராதி அனேகமாக இதுதான். மேலும், இதன் ஆசிரியரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் இது ஒரு சாதனை. மூன்று முறை இப்படி அகராதியை ஒருவர் தொடர்ந்து விரிவாக்கித் திருத்திக் கொண்டுவருவது ஒரு முக்கியமான செயல்பாடு ஆகும். இதை ‘க்ரியா பதிப்பகம்’ அல்லது எஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்பிடத்தக்கச் செயல்பாடாகப் பார்ப்பதைக் காட்டிலும் சமகாலத் தமிழில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான செயல்பாடாகவும் விரித்துப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது இந்த அகராதி. சுமார் 23,800 தலைச்சொற்கள், 40,130 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 2,632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள், 311 படங்களோடு வெளியாகியிருப்பது இப்போதைய பதிப்பின் முக்கியமான அம்சங்கள். திருநர் வழக்குச் சொற்களும், தொடர்புச் சொற்களும் இந்தப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். கிட்டத்தட்ட ஒரே பொருள் தொனிக்கும் வெவ்வேறு சொற்களின் தனித்துவமான குணாம்சம் என்ன என்பதை இந்தத் தொடர்புச் சொற்கள் பகுதி கொண்டிருக்கிறது.

கரோனாவுடனான போராட்டம்

இப்போது 76 வயதாகும் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த அகராதியை எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று கடுமையாகப் பணியாற்றிவந்தார். சில மாதங்களாகவே சீரான உடல்நலத்தில் இல்லாத அவர் 20 நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்றுக்கு ஆளானார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆளாகி செயற்கை சுவாசத்தின் உதவியோடு சுவாசிக்கும் நிலையிலும், தன்னுடைய பணிகளை மருத்துவமனையில் மேற்கொண்டுவந்தார். இத்தகு சூழலில், நவ.13 அன்று ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் மூன்றாவது பதிப்பை மருத்துவமனையில் இருந்தபடியே அவர் வெளியிட்டார்.

“தாய்மொழிக்கு அகராதி கட்டாயம் தேவை என்பது பல சமூகங்களிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழுக்கு அகராதி தேவையில்லை என்றுதான் பொதுவாக இங்கே எல்லோரும் நினைக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், அகராதி என்பதே ஆங்கிலம் தெரிந்துகொள்வதற்கான ஒரு கருவி என்று நினைக்கிறோம். இந்தப் பின்னணியில் பார்த்தால், ஓர் ஆங்கிலேயர் ஆங்கில அகராதி வாங்குவதற்கான தேவையே இல்லை, இல்லையா? ஆனால், ஒவ்வொரு ஆங்கிலேயர் வீட்டிலேயும் அகராதி இருக்கும்” என்பார் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன். ஏனெனில், அவர் சொல்வதைப் போல அகராதி என்பது வெறுமனே மொழிக் கருவி மட்டுமல்ல; அது ஜனநாயகத்துக்கான சாவியும்கூட. மொழித் தெளிவைக் கொடுப்பதோடு அறிவையும் கொடுப்பதாக அகராதி இருக்கிறது. அந்த வகையில் தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மொழிக் கருவி என்று ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யைச் சொல்லலாம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கிய அகராதிப் பணியைத் தன்னுடைய 76-வது வயதிலும் தளராது மேம்படுத்திக்கொண்டுவந்திருக்கும் ராமகிருஷ்ணனின் பணி போற்றுதலுக்குரியது. சீக்கிரம் நலம் பெற்று தன் தமிழ்ப் பணியை அவர் தொடரட்டும்!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

-----------------------------------------------

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

க்ரியா வெளியீடு

திருவான்மியூர், சென்னை-41.

விலை: ரூ.895

தொடர்புக்கு: 72999 05950

https://www.hindutamil.in/news/literature/601681-kriya-dictionary-2.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.